வியாழன், 10 மே, 2012

புத்தனாக செய்தல்



நீ அறுத்தெறிந்த உறவுகள்,
தாண்டிச் சென்ற உணர்வுகளை 
சாட்சியாய் வை !!
உன்னை புத்தனாக மாற்றும்
வேலையும் ஒரு ஒப்பனையே !!
கடமையைக் கடந்து, துறவில்
நாட்டும் வெற்றிக் கொடியும்
ஒரு மாய பிம்பமே ..
புத்தானக்கும் அறிவு பெற்றது
தான் நீ முதலில் கற்ற
தவறானப் பாடம் !!

ஆம்..
அறிவு அப்படித்தான் பேசும்
பாசத்தை மாயை என்றும்
நேசத்தை நிழல் என்றும்
பக்தியை பொய் என்றும்
காதலை கானல் நீர் என்றும்

துயரங்களில் அமிழ்ந்த
நம் புகையும் மனதில்
அறிவு என்ற சாமரம் வீசினால்
வாழ்க்கையே நெருப்பாய் மாறும்

அறிவியலும், எந்தச் சித்தாந்தமும்
சாம்பல் என்று பெயர் தான் சொல்லும் ,
அதன் விறகுகளின் உயிர்த் தியாகங்கள்
அதற்குத் தேவையில்லை..

எதுவும் மாயையில்லை !!!
இவை இல்லாமை தான் மாயை !!
புத்தனைச் செய்தல் புத்தன் ஆகாது ..

உலகம் உணர்வுகளின் விசையில்
தான் சுற்றி வருகிறது என்றுணர
இரு துளிக் கண்ணீர் போதும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக