வியாழன், 10 மே, 2012

ஜென் மனம்



சூட்சுமமான முடிச்சுகளில் தான் 
சுவாரசியம் தங்கியிருக்கும்,

திறந்திருக்கும் பைகளை
எட்டிப் பார்க்க யாரும் இலர் .


பசி என்ற ஒன்றில்லாத பொழுது
ருசி என்ற ஒன்றும் ;

மௌனம் என்ற ஒன்றில்லாத பொது
இசை என்ற ஒன்றும் ;

துயரம் என்ற ஒன்றில்லாத பொழுது
கடவுள் என்ற ஒன்றும்

ரசனை என்ற ஒன்றில்லாத பொது
கவிதை என்ற ஒன்றும் ;

மரணம் ஒன்றில்லாத பொழுது
ஞானம் என்ற ஒன்றும் ;

காமம் என்ற ஒன்றில்லாத பொழுது
காதல் என்ற ஒன்றும் ;

நமக்குத் தேவையேயில்லை ....

அவை கண்களுக்கு புலப்பட்டும் ,
அறிவுக்குள் -
மறைந்திருக்கும் புதையல்களே !!

சூன்யத்தில் காலூன்றும் மனமே !!
நீ முழுமையின் பிம்பத்தை
அதில் உணர்வாயா ??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக