வெள்ளி, 2 செப்டம்பர், 2011

அம்மா - நீ செய்த பிழை தான்
என்ன ??

பெண்ணாகப் பிறந்தது
மட்டுமே பிழையாக,
அதிலும் தமிழ்
பெண்ணாக பிறந்தது ...

அதுவும் மானமுள்ள
ஈழத்தின் குடிமகளாய்
பிறந்தது

உன் உடல் தின்ற
பிணந்தின்னும் கழுகுளால்
உனக்கு களங்கம் ஏற்படவில்லை

உனக்காக ஒரு துளி கண்ணீர்
சிந்திய ஓராயிரம் பேருக்கு
தாய்மை கொண்டு
பேரொளி பெற்றதம்மா
உன் வாழ்க்கை !!!

உன்னைப் போன்ற பெண்கள்
பலர் கொடுத்த ரணங்களின்
விலை !!!!
ஈடு கொடுக்க முடியாததாயினும் - அது
ஈழம் எனும் தேசம் கொடுக்கும்..

அச் சுதந்திரக் காற்றின்
ஒவ்வொரு சுவாசங்களிலும்
எம் மக்கள் உமது
கற்பினை உணர்வர்...