சனி, 25 செப்டம்பர், 2010

கல்மாடி என்றொரு களவானி

Suresh Kalmadi


இந்தியாவின் மதிப்பு வெளிநாட்டில் ஒளிரும் மற்றொரு சமாசாரம் தான் இது.
1 . Indian Rupee symbol.svg11,494 கோடி ரூபாய் செலவில் இந்தியாவின் மானத்தை வாங்கிய சுரேஷ் கல்மாடிக்கு தான் இன்றைய வசை
2 .மொத்தம்  Indian Rupee symbol.svg 30,000 கோடி ரூபாய் செலவு எல்லா கட்டுமானங்கள்,தண்ட செலவீனங்களையும் சேர்த்து 
3 .ஒரே ஒரு ஆறுதல் டெல்லி வாசி மக்களுக்கு மெட்ரோ ரயில் கிடைத்தது .
4 .285 event கொண்ட இந்த தொடரில், 495 பேரை களம் இறக்குகிறது இந்தியா, சீனா நடத்திய 639 பேரை களம் இறக்கியது.இது போல் இன்னும் கொஞ்ச பேரை கலந்து கொள்ள செய்திருக்கலாம்.
5 .பாதுகாப்பு(ஆப்பு): நம் நாட்டின் பாதுகாப்பே எப்படி உள்ளது என்பதற்கு இது ஒரு அத்தாட்சி, ஆஸ்திரேலிய டிவி நிறுவனம் ஒன்று நடத்திய நிகழ்ச்சி, ஒரு dummy bomb-உடன் நம் எல்லா பாதுகாவையும் மீறிச் சென்று நமக்கு ஒரு அவமானம் கிடைத்தது. நன்றி களமாடி அவர்களே !!
சொடுக்கவும்:http://www.guardian.co.uk/sport/2010/sep/22/explosives-commonwealth-games-tv-sting
6.மத்திய புலனாய்வு துறை சொல்லும் குற்றசாட்டு! மொத்தம் 14 project-களில் முறைகேடுகள் நடந்து உள்ளன என்கிறார்.
7 . நடைபாதையில் உள்ள பாலம் உடைந்து 23-27 பேர் காயமடைந்துள்ளனர், இன்னும் பனி முழுதாக முடிவடையவில்லை.மல்யுத்தம், குத்து சண்டை நடக்கும் இடங்களில் உள்ள போலிக் கூரைகள் திடீரென்று உடைந்து விழுந்தன. (பார்க்க : கீழே உள்ள படத்தினை)
8.கட்டுமானப் பனி ஒப்பந்தங்களில்
   அ.மிகவும் அதிகமான தொகைகளில் ஒப்பந்தம் கை எழுத்தாகியுள்ளது 
   ஆ.இப்பணிகளை மேற்கொள்ள தகுதியே இல்லாத நிறுவனங்களுக்கு ஒப்பந்தம்       வழங்கப்பட்டது.
   இ .மிகவும் மோசமான தரக் கட்டுப்பாடு கொண்ட பணிகளே நடந்துள்ளன.
நன்றி அதிசா -twitter
   ஈ .இது வரை 2 ,௩ உயர் அதிகாரிகள் தங்கள் சொந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கொடுத்து, இந்த நடத்தை வெளி வந்தவுடன் ராஜினாமா செய்துள்ளனர்.T S Darbari (joint director in the organising committee) and Sanjay Mahendroo (deputy director general in the organising committee),Anil க்ஹன்ன. எல்லாவற்றிற்கும் மேலாக நம் அண்ணன் கல்மாடி, அப்புறம் விளையாட்டு துறை அமைச்சர்    M .S .கில்.(no :1  டுபாகூர்; 2 டுபாகூர்) மேலயும் சர்ச்சைகள் கிளம்பிக் கொண்டு தான் இருக்கு 
  உ.வீண் செலவு, அதாவது வாடகைக்காக கொடுக்கும் செலவில் வாங்கியிருக்கலாம்,வாங்கியிருக்கும் செலவில் சிலவற்றை வாடகைக்கு எடுத்திருக்கலாம்.(உதாரணம்) 72 golf cart ஒன்றுக்கு  Indian Rupee symbol.svg4.23 lacs கொடுத்து 45  நாட்கள் வாடகைக்கு எடுத்திருக்கும் ஆணையம் Indian Rupee symbol.svg 1.84 lacs கொடுத்து உடமை ஆக்கி இருக்கலாம் 


9 .  இங்கிலாந்தின் பிரபல நாள் வெளியிட்டிருக்கும் மிகக் கேவலமான செய்தி, கட்டுமான பணிகளில் அதிக அளவில் (ஒருத்தன் இருந்தாலும் கேவலம் தான்) குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர் என்பது தான்.
10 .நியுசிலாந்து,இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் பலர் புறக்கணிக்க ஆரம்பித்தாகி விட்டது.
11 .எல்லா நாட்டு பத்திரிக்கைகளும் கிழிக்க ஆரம்பித்தாகி விட்டது.
கப்பலேறி போயாச்சு- என்று பாட வேண்டிய அவசியம் இல்லை.


நீங்கள் கீழ்க்கண்ட எவையேனும் செய்யலாம்.
1 .செய்திகள் கேட்காமல் இருக்கலாம் 
2 .வழக்கம் போல் கிரிகெட்டையோ இல்லை எந்திரன் ரெலீசையோ கொண்டாடலாம் 
3 .அட அப்படி துப்பிட்டு  போங்கப்பா என்று நம்ம வேலைய பார்க்கலாம் 


எனக்கு என்ன தோணுதுன்னா? இந்தியாவின் தலை (காஷ்மீரில்)-யில்  ஒடுக்கப்படும் அப்பாவி மக்களுக்கு நேரும் கொடுமையை விட,இந்தியாவின் பாதங்களில் (தமிழ் நாட்டில்)  ஒரு இன மக்களின் உணர்வு முழுவதுமாக புறக்கணிப்பதை விட இந்த காமன் வெல்த் விளையாட்டுச் சறுக்கல்கள் ஒன்றும் மானத்தை வாங்கவில்லை.






----கரி  
   





















































வெள்ளி, 17 செப்டம்பர், 2010

நீதி தேவன் மயக்கம்

இலங்கை அரசுக்கு தமிழர் நலனுக்காக சென்ற சிறப்பு இலங்கை தூதர் நிருபமா ராவ் அவர்களும், அவரின் உல்லாசப் பயணமும்.

1 .ஆமாம் , உல்லாச பயணம் தான் 4 நாட்களில் 1100 கீ.மி பயணத்தில் என்ன வெங்காயம் கிடைத்தது. ராஜ பக்சே -எனும் நாயிடம் டீ பார்ட்டி. அரசாங்க விருந்தினராய், இலங்கை ராணுவம் காண்பிக்கும் பகுதிகளுக்கு போவது, சிரிப்பது போட்டோவுக்கு pose கொடுப்பது .

2.என் இனப் பிரச்சனையினை உணர இந்த அம்மாளுக்கு எப்படி முடியும்?, இந்திய பார்லிமேண்டிலேயே தமிழக மீனவருக்கு பாதுகாப்பு என்று தானே மத்திய அரசாங்கம் சொல்கிறது. தமிழ் மக்களை இந்திய நாட்டில் இருந்து பிரிக்கும் இனவாதம் யாருக்கு( கண்டிப்பாக நடுவன் அரசு தான்)??

அம்மணி தன் சுற்று பயணத்தினை முடித்துவிட்டு தங்கள் கருத்தினை பதிவு செய்கிறார் - பின்வருமாறு .(எல்லாம் ஆங்கிலத்தில் தான் - அந்த கன்றாவியை மொழிபெயர்க்க வேறு செய்யனுமா?)
“While the focus on development and rehabilitation is very welcome, a long term perspective that also includes the issues relating to the political settlement that would meet some of the needs of the minorities should also be kept in mind,”she said.


“He [Rajapaksa] has constantly said that he is focused on that [political solution] need. And that he plans to move on it. He has his sight set on that. And this point about the need to be more than just focused on the economic issues and the development issues and to look beyond. Everybody in the government got a sense of how we look at it. From that point of view I think they know how India is approaching or looking at this issue,”she added  this  டூ.


என்ன கொடும சரவணா இது ?????

இந்த நேரத்தில் ஒரு இடுகை ஞாபகம் வருகிறது .

வனத்தின் நாலா பக்கத்திலும் சிங்கம் தன்  
முதுகைசொரிந்தபடி படுத்திருக்கிறது ...


துரோக நரிகளின் துணையோடு 
அனைத்து வனமும் பெருங் கூட்டத்திற்கு


 தாரை வார்க்கப்பட்ட தெம்பில் தனக்கான 
உணவை வாங்கி விடலாம் என்ற கனவோடிருந்த்தது..


இன்னும் மிச்ச மிருக்கிற வனத்தின் 
நாயகன் புலிக்கு எல்லாம் தெரியும்..
வனத்தின் மீள்வை கருத்தில் கொண்டே 
அது அமைதியாக இருக்கிறது..


ஆயினும் வனமும் வனத்தின் ஆதிகளும் 
தொலைந்து போவது கண்டு மரங்கள் கண்ணீருடன்..




1 .கச்சத்தீவை மீட்க முடியாதென்று சொல்லும் மத்திய மந்திரி S.M. Krishna அவர்களே !! நீங்கள் கச்சத் தீவு ஒப்பந்தம் ரத்து  செய்ய முடியாது என்பது சரி தான் - நம்ம கௌரவ பிரச்னை. ( மீனவனின் உயிர் அவ்வளவு மட்டமானது).ஆனால் ராஜீவ் - ஜெயவர்தனே ஒப்பந்தத்தினை ரத்து செய்ததே இலங்கை நீதி மன்றம். நம்ம என்ன அவுங்க ம****கு( கனி இருப்ப காய் கவர்ந்தற்று)  சமானமா??

2.தகவல் உரிமை சட்டத்தின் படி , ஒரு தகவலைப் பெறலாமா ?? எத்தனை தமிழன் தமிழக எல்லையோர கப்பல் படையில் உயர் அதிகாரி இருக்கான் என்று?

3 .சர்வதேச அரசியலில் தமிழ்நாட்டின் இன உணர்வுக்காக இந்தியப்  பாதுகப்பிலோ, வெளியுறவுக் கொள்கையிலோ அப்படிப் பட்ட மாற்றங்கள் எதிர்ப் பார்க்க முடியாது என்று , இலங்கையுடன் தோழமை புரிந்து வந்த இந்திய அரசை எந்த அளவு மதிக்கின்றது இலங்கை. பாகிஸ்தான், லிபியா எல்லாவற்றிற்கும் மேல் சீனா என்று பாசக்கரம் காட்டி தங்கள் நாட்டின் மறு காட்டுமானப் பணிகளில் அந்த நாடுகளை உதவிக்கு அமர்த்தியது யாருக்கு ஆபத்து ? நமது தேசிய பாதுகாப்பு (முக்கியமாக கடல் வழி) எப்படி இருக்கின்றது என்று.

4 .எல்லாத்துக்கும் மேல, உங்கள சொல்லி குற்றம் இல்லைங்க,சும்மா அரசியலுக்காக ஈழ உடன்பிறப்பே என்றழைக்கும் குப்பை கட்சிகளும், கூட்டணிக்காக பொத்திக் கொண்டு உக்காரும் மற்ற கட்சிகளும் ,மத்தியில் ஆட்சியில் இருந்தும் (உட்கட்சி பிரட்சனைக்குள்ளே மூழ்கி) ஒரு மண்ணுக்கும் உதவாத சப்பைக்கட்சிகளும் இருக்கும் நாட்டில் நாம் என்ன செய்ய முடியும்.

( அ ) வலைப்பூ பதியலாம்
(ஆ ) டீ கடையிலாவது விவாதம் நடத்தலாம் (சபைகளில் தான் முடியாதே)
(இ )  எந்திரன் ரிலீசுக்கு காத்திருக்கலாம்/ சாம்பியன்ஸ் ட்ராபியில் மூழ்கலாம்
 (ஈ ) அரசுக்கும்,கோர்ட்டுக்கும் செலவழித்த பணத்தினை பிள்ளைகளிடமே spcl term fees-ஆக வசூலிக்கும் பள்ளியினை நொந்து பட்ஜெட்டில் விழும் வேஷ்டியை கணக்கு பண்ணலாம்.

நீங்க இந்த நாளில் ஏதாவது பண்ணினாலும் சரி , எல்லாத்தையும் பண்ணினாலும் சரி ....ஒன்னே ஒன்னு சொல்லுறேன் .

சத்தியம் நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ??



----கரி

திங்கள், 13 செப்டம்பர், 2010

ஆட்டோகிராப் -3; (என் வானம் உன்னை தேடுதே!!! )

பிரபாகரனுக்கு இந்த நாள் நன்றாக விடியவில்லை, காலையில் முதல் பேருந்திலேயே கோவை வருவதாக அவன் தங்கைக்குச் சொல்லி இருந்தான். காலை தூங்கி எழும்போதே மணி ௬ ஆகி விட்டது.அவசர அவசரமாக கிளம்பினான். 


               தன் போனில் ஏற்கனவே 4 மிஸ்டு கால்கள் இருந்தன, அவன் தங்கையிடமிருந்து தான். அவளைச் சமாதானப் படுத்துவது அவ்வளவு எளிதல்ல. "sorry i'll be late 4 an hour..." என்று ஒரு குறுந்தகவலை அனுப்பிவிட்டு பேருந்து நிலையம் சென்றான். அவன் பாட்டியும், அவன் தங்கையும் மட்டும் கோயம்புத்தூரில் இருக்க, இவன் ஒரு வங்கி கணக்கை முடிப்பதற்காக, திருச்சி வரை சென்றான்.

                    திருச்சியில் இருந்து அவன் மாற்றல் ஆகி ஒரு மாதம் தான் ஆகிறது, புது ஊரில் அவர்களைத் தனியாக விட்டு வருவதும் கஷ்டம் தான், இருந்தாலும் தவிர்க்கவே முடியாத முக்கியமான வேலை என்பதால் தான் திருச்சிக்கு வந்திருந்தான். வங்கியில் கணக்கு முடித்து விட்டு வரத் தாமதம் ஆனதால் தவிர்க்க முடியாத சூழலில் அவன் நண்பனின் வீட்டில் தங்கி, அடுத்த நாள் (இன்று) காலையிலேயே வருவதாக நேற்றைக்கேச் சொல்லியிருந்தான். இன்று அவன் எழுந்ததே தாமதம் தான், பேருந்தும் ஆமை போல் ஊர்ந்துக் கொண்டிருந்தது.

                          சன்னல் ஓரமாக அமர்ந்து, காற்றிலே முகம் கழுவிக் கொண்டிருந்தான். திருச்சிக்கு இனிமேல் அவன் வரும் அவசியம் இல்லை, இனி அவனுக்கு எல்லாம் கோவை தான். தனது 10ஆம் வகுப்பு வரை கோவையில் தான் படித்து வந்தான். பிறகு,அவனுக்கு நேர்ந்த சில பேரிழப்புகள் ,அவனை அந்த ஊரை விட்டு பிரித்தது. பட்டம் வாங்கி முடித்த பின் தனது வாழ்கையினை திருச்சியில் தொடர மனமின்றி, மீண்டும் கோயமுத்தூருக்கு மாற்றலானான்.

           அவனது பெரும்பான்மையான இனிய நாட்கள் திருச்சியில் தான் கழிந்தது. அவன் கோவைக்கு செல்லும் போது எந்த எதிர்பார்ப்பும் இன்றி இருந்தான்.

             சரியாக 12.00 மணி கோவையினை சென்றடைந்தது,அங்கிருந்து அவன் வீட்டிற்கு செல்ல town பஸ்-ஐ பிடித்தான். மெதுவாக கிளம்பிய பேருந்து, கோவை நகரத்தின் தலைவலி சிக்னல்-ஆன G.P சிக்னலில் சிக்கிக்கொண்டது. உச்சி வெயலில் காதோரம் வழிந்த வியர்வையினை துடைத்துக் கொண்டே, ஜன்னலின் வழியே பார்வையினை நுழைத்தான், தன்னை யாரோ பார்ப்பது போல் தோன்றியது. சட்டென்று திரும்பி பார்க்கையில் ஒரு வெள்ளை சுடிதாரில்,கண்ணாடி அணிந்தபடி scooty-இல் இருந்து தன்னை ஒரு பெண் பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்தான்.

            அவள் தன்னைத் தான் பார்க்கிறாளா ? இல்லை வேறு யாரையாவது பார்க்கிறாளா என்று சுற்று முற்றும் பார்த்த பொழுது தான். அவனுக்கு பொறி தட்டியது,ஒருவேளை அவள் தீபாவாக இருப்பாளோ!! என்று தோன்றியது. உற்று நோக்கினால் அவளே தான்!!தீபா தான்.ஆயிரம் வாட் மின்சாரம் பாய்ந்தது போல் தனை உலுக்கி கொண்டான். பிரபாகரன் பரபரப்புடன் பார்த்து கொண்டே, கை அசைக்க விளைந்தான்.ஒரு வேலை அவள் அவனை மறந்து இருப்பாளோ என்ற சந்தேகம் வந்தது.

                   அவளை பார்த்து லேசாக புன்னகைத்தான். அவள் அதை அடுத்த கணத்திலேயே புரிந்து கொண்டாள். ஆனால், பதில் ஏதும் தாராமல் சற்று தயக்கத்துடன் பார்க்க ஆரம்பித்தாள். அவள் கண்கள் சற்று தாழ்ந்து இருந்தது.எதோ அவனிடம் மன்னிப்பு கேட்பது போல் இருந்தது.பிரபாகரனுக்கு இதயத் துடிப்பு ஆயிரம் மடங்கு அதிகரித்தது .

அவன் என்ன செய்யலாம் என்று நினைப்பதற்குள் பச்சை சிக்னல் அந்த பேருந்தை அங்கிருந்து அழைத்தது. "தீபா !!" என்று கத்த முயற்சித்தான், காற்று மட்டும் தொண்டையில் இருந்து வெளியேறியது  .எல்லாம் சில நொடிகளில் தான், அவள் அவன் கண்களில் இருந்து மறைந்து விட ,அவன் நினைவுகளில் மலர ஆரம்பித்தாள்.அவன் கண்களுக்கு முன் ஒரு சாக்லேட்-ஐ பிரித்து கொண்டிருந்தான் ஒரு சிறுவன் .

-------------------------------------------------------------------------------------------------------------------------(flash back)
அவன் அப்பொழுது 9-ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தான்.காதல் என்றால் என்ன என்று கூட சொல்லத் தெரியாது,ஆனால் அவன் தன் காதலை தீபாவிடம் வெளிப்படுத்தி 2 நாள் ஆகி இருந்தது.இருவரும் வெவ்வேறு பள்ளியில் படித்தாலும், ஒரே டியூசனில் படித்தனர்.பிரபாகரன் 9ஆம் வகுப்பும்,தீபா 10 -ஆம் வகுப்பும் படித்து வந்தனர் .2 நாளைக்கு முன்னர்,அவனுக்கு" 1997 தீபாவளி கிரீடிங் "கொடுத்தாள் தீபா ,பதிலுக்கு அவன் ஒரு இதயம்,ஒரு ரோஜா இருந்த வாழ்த்து அட்டையினை நீட்டினான் (எப்படியும் 50 ரூபாய் இருக்கும்).அவள் அதை பிரிக்க கூட இல்லை ,ஆனால் புரிந்து கொண்டாள்.முறைத்து கொண்டே வாங்கி ,அதை திறந்து பார்த்தாள். "I love U " என்று கோழி கிறுக்கலில் எழுதி இருந்தான்.

"டேய் !!! என்னடா இது ??" என்று கேட்டாள்.பின்னர்," கிவ் மீ சம் டைம்" என்று சொல்லிக் கொண்டு போய் விட்டாள்.அதற்கு அடுத்த நாள் வரவில்லை. இன்று அவள் எப்படியும் வருவாள் என்று தெரியும் (அவள் வீடு வரை சைக்கிளில் சென்று அவள் கிளம்புவதை ஊர்ஜிதம் செய்தான்).அதனால் இன்று தனக்கு விடை தெரியும் என்று நம்பினான்.

ஒரு lady bird சைக்கிள் வரும் ஓசை கேட்க, சற்று எட்டி பார்த்தான், வெள்ளை நிற T-ஷர்ட்ம் ,மிடியும் அணிந்து கொண்டு மெதுவாக வந்து கொண்டிருந்தாள் தீபா.

பகுதி -2

தீபா பிரபாகரனை முறைத்துக்கொண்டே வகுப்பில் நுழைந்தாள். பிரபாகரனுக்கு ஒன்னும் வியர்க்கவில்லை ஆனால் வியப்பாய்  இருந்தது. "உண்மையிலேயே கோபமடைந்தால், ஒன்னு வீட்டில இருந்து யாரையாவது கூப்பிட்டு வந்திருக்கணும், இல்லயெனில் டியுசன் மிஸ்ஸிடமாவது சொல்லி இருக்கலாம். ஆனால் என்னைப் பார்த்தபடி அமர்ந்துக் கொண்டிருக்கிறாளே கடவுளே இது உண்மைதானா ? "என்று மனதிற்குள் கேட்டுக்கொண்டே, அவளிடமும் தைரியமாய் கேட்டான் ,"ஹை, தீபா யு ஆர் லுகிங் மோர் ப்ரெட்டி இன் திஸ் டிரஸ்" என்றான்.

தீபா இப்போது முறைக்கவில்லை,ஏளனமாக பார்த்தாள் அவனை, அவன் அதை விட ஒரு படி ஏளனமாய் "எனக்கு என்ன ரேச்போன்சே?" என்று கேட்டான்.சட்டென்று தன் bagல் கை விட்டு எதோ தேடினாள்.பிரபாகரனுக்கு கொஞ்சம் பயம் வந்தது 'அந்த கிரீடிங் கார்டினை கிழித்து எறியப் போகிறாளோ?' என்று நினைத்தான்.தீபா, பையிலிருந்து ஒரு சின்ன coffee bite சாக்லேட்டை எடுத்தாள்.அவனோ இவள் என்ன செய்கிறாள் என்று புரியாமல் விழித்து கொண்டிருக்க,தீபா அந்த சாக்லேட்டை பாதியாக கடித்து மீதியை அவனுக்கு நீட்டினாள்.

பறவைகள் ஆயிரம் பறக்கவில்லை, தட்டிலிருக்கும் சில்லறை சிதறவில்லை, மண்பானை உடையவில்லை, அலைகள் அடிக்கவில்லை, புல்லாங்குழல் சத்தம் கேட்கவில்லை .இவர்கள் வயதுக்கு காதல் என்ற ஒரு விளையாட்டு நிறைவேறினால் என்ன ஆகும் ??? ஒருத்தரை பார்த்து ஒருத்தர் அசட்டு சிரிப்புடன் சிரித்து கொண்டிருந்தனர்.அங்கு அவர்களை தவிர இருந்த அத்தனைபேரும் மறைந்தனர்.

தீபாவுக்கும்,பிரபாகரனுக்கும் உள்ள இடைவெளி குறைந்து கொண்டே வந்தது.இவர்கள் இருவர் வீட்டிலும் டெலிபோன் பில் எகிறிக் கொண்டிருந்தது.இருவரும் தங்கள் பெற்றோரிடையே இருந்த நெருக்கமோ குறைந்தது. இரண்டு பேரும் டியூசனுக்கு முதல் ஆளாக வந்து கடைசியாக செல்வதை வழக்கமாக கொண்டிருந்தினர். ஞாயிறு அன்று ஒளிபரப்பாகும் alif லைலா சிந்துபாத்தாக தீபாவுக்கு அன்று தெரிந்தான். பிரபாகரனுக்கோ ,அதே ஞாயிறு ஒளிபரப்பாகும் சின்ட்ரெல்லாவாக தீபா தெரிந்தாள்.

February 14 ,உலக காதலர் தினம் என்று தமிழ் நாட்டில் அப்பொழுது தான் பிரபலமாக வந்தது.தீபாவுக்கு கார்ட் வாங்கி கொடுக்க பணம் சேமித்து கொண்டிருந்தான்.அதே சமயம் மார்ச்சுடன் பள்ளி முடிவடைவதால் ,அடுத்த வருடம் வேறு பள்ளிக்கு செல்பவர்கள் slam book எனும் ஆட்டோக்ராப் வாங்குவதும் பிரபலமாகி கொண்டிருந்தது.இவர்கள் படித்ததும் கோயம்புத்தூரில் உள்ள ஒரு பிரபல பள்ளி என்பதால் கொஞ்சம் trend updates எல்லாம் அங்கு ரொம்ப முன்னதாகவே வந்துவிடும்.

அப்படி பூர்ணிமாவும் ஒரு slam book -ஐ வாங்கி எல்லோரிடமும் நிரப்பிக் கொண்டிருந்தாள்.
அப்படியே பிரபாகரனுக்கும் கொடுத்தாள். அதில் இரண்டாவதாக கேட்கப் பட்ட கேள்வி,
2. The Person Who Like U Most ?
 என்ற கேள்விக்கு "தீபா" என்று எழுதி தன் காதல் கதைக்கு முற்று புள்ளி வைத்தான் பிரபாகரன்.

அடுத்ததாக அந்த slam புக் அவனுடைய டியுசன் மிஸ்ஸிடம் சென்றது.பிரபாகரன், ஏற்கனவே அந்த வகுப்பில் படு சுட்டி என்பதால் அவனுடைய பதில்காலி படித்தாக வேண்டும் என்ற நிலை வேறு. சாதரணமாக அவன் எழுத்து கோழி கிறுக்கலாய் இருக்கும்,  தீபா அவள் பெயரை மட்டும் மிக அழகாக அவளுக்கு பிடித்த purple கலரில் எழுதியிருந்தான்.


அன்று வகுப்பு முடிந்தவுடன் இருவரை மட்டும் காத்திருக்க சொன்னார், அந்த டியுசன் மிஸ். இருவரின் ஸ்கூல் பாக்கையும் வாங்கி பார்த்தார்.இருவருக்கும் புரிந்து விட்டது, என்ன நடந்திருக்கும் என்று.இருவர் பையிலும் ஏராளமான கிரீடிங் கார்டுகளும், கடிதங்களும் இருந்தன.அந்த மிஸ்ஸின் இதயம் அப்படியே நின்றது.


"டேய்!  பிரபாகர் ! என்னடா இது உன் வயசுக்கு இதெல்லாம் எப்படிடா தோணுது ? இதென்னடா கருமம்?" என்று ஒரு க்ரீடிங்கை நீட்டினார் அவனிடம்.அந்த வாழ்த்து அட்டையில் கையெழுத்திற்கு பதிலாக உதடு ரேகை பதிந்திருந்தது.அதை பார்த்தவுடன் அவனுக்கு மீண்டும் அந்த பொங்கல் விடுமுறை ஞாபகம் வந்தது.
--------------------குட்டி flash back--------------------------
அன்று , அவன் தீபா வீட்டுக்கு சென்றிருந்தான்.தீபாவின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்தனர்.அன்று அவனுக்கு கிடைத்ததை அவன் வாழ்நாளில் மறக்கவே முடியாது . அது என்னவென்றால், போனவுடன் அவனுக்கு தீப கொடுத்த pineapple squash-ம் அல்ல; வீட்டில் எவ்வளவு அடம்புடித்தாலும் அப்பா வாங்கிதராத வீடியோ கேம் - super mario -வும் அல்ல;மத்தியானம் அவள் செய்து கொடுத்த maggi-ம் அல்ல;மாலை நாலரை மணி அளவில் he-man பார்க்க இருவரும் சோபாவில் அமர்ந்து டீ.வீ. பார்க்கும் போது, தீடீரென்று அவன் கன்னத்தில் அவனுக்கு அவள் கொடுத்த முத்தம்.....
-------------------------------------------
"டேய் !! நான்பாட்டுக்கு கத்திக்கிட்டு இருக்கேன்? என்னடா சிரிச்சுகிட்டு இருக்க" என்று அந்த டீச்சர் கத்தும் போது தான் அவன் சுய நினைவுக்கு வந்தான்."எங்க! இந்த பிரபாகரப் பாருங்க! முளைச்சு மூணு இழை விடல, என்ன பண்றன்னு நீங்களே கேளுங்க. தீபா நான் உன்னை எப்பிடியோ நெனச்சேன், i'm desirously disappointed on you" என்று தீபா பக்கம் திரும்பினார்.அவள் ஏற்கனவே நடுங்கியபடி இருந்தாள்.டீச்சரின் கணவர் என்னிடம் கேட்டார்,"உன்ன பத்தி எனக்கு நல்ல தெரியும் டா! அக்கா! அக்கான்னு கூப்பிட்டே கரெக்ட் பண்ணிட்ட? " நக்கலடித்தவாறே.அடுத்தநாள் அவர்களுடைய அம்மாக்கள் இரண்டு பேரும் டியுசனில் வைத்து சந்தித்தனர்.


எல்லாம் முடிஞ்சு போச்சு, தீபாவை அடுத்த வருஷம் ஹாஸ்டலுக்கு அனுப்புறாங்க என்று கேள்விப் பட்டான். வீட்டில் ஏக கெடுபிடி.போன் பண்ணவே விடவில்லை.இவனை அந்த டியுசனுக்கும் அனுப்பவில்லை.அவளிடமிருந்தும் எந்த போன் காலும் வரவில்லை.அவள் ஞாபகமாய் வைத்திருந்த போட்டோவைக் கூட அவன் தங்கை சௌமி அம்மாவிடம் காட்டிக் கொடுத்தாள்.எல்லாம் விதியின் செயல்.


என்ன ஆனாலும் பரவாயில்லை என்று யாரும் அருகில் இல்லாத நேரத்தில் அவள் வீட்டுக்கு அழைத்தான்.வேறு யாரும் எடுக்க கூடாது என்று கண்களை மூடிக் கொண்டே இருந்தான் யாரும் எடுக்கவில்லை.1 ,2 ,3 தடவை அழைத்தான் பதில் இல்லை.கண்கள் இரண்டும் குளமாகின.அந்த போனை வைத்த அடுத்த வினாடி டெலிபோன் மணி அடித்தது,ஒரு ரிங் முடிவதற்குள் அதை எடுத்தான் , அவள் தான்.இருவரும் 2 ,3 தடவை அவர்கள் பெயரை அழைத்து கொண்டிருந்தனர்.


பிரபாகரன் கேட்டான்,"ம்ம் ..நீ உண்மையாவே ஹாஸ்டல்க்கு போறியா? "என்றான்."ம்ம் "என்று பதில் வந்தது."அப்போ நம்ம பாக்கவே முடியாதா" என்றான்.தீபா ,"நாம ரெண்டு பேரும் படிச்சு,பெரிய ஆளா வர்ற வரைக்கும் " என்றாள்.யாரோ வரும் சத்தம் கேட்டது,"ஒகே..தீபா நான் வரும் 14ம் தேதி உன்ன பார்க்க டியுசன் வர்றேன். கடைசியா நான் உனக்கு ஒரு கார்ட் கொடுக்கணும். ப்ளீஸ்  "என்றான் பிரபாகரன்."ஆனா ......நா "
என்று பேசி முடிப்பதற்குள்.அவன் போனை வைத்து விட்டான்.


அப்பாவிடம் இருந்து ஒரு நூறு ரூபாய் வாங்கி ஒரு Music கார்ட் வாங்கினான். I LOVE YOU TILL I DIE என்று எழுதி மறைத்து வைத்துக் கொண்டான்.அன்று FEBRUARY  14 ,கோவை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தனது ரேஞ்சர் சைக்கிளை வேகமாக ஓட்டிக்கொண்டே அவன் படித்த டியுசனுக்கு சென்றுகொண்டிருந்தான். பையில் வைத்திருந்த கிரிட்டிங் கார்டை தடவிக்கொண்டே சைக்கிளை அழுத்திக்கொண்டிருந்தான்.


அன்று அவனுக்கு எதோ ஒரு வித்தியாசமாய் இருந்தது.திடீரென்று ஒரு சத்தம், அவனுக்கு மிக அண்மையில் உள்ள தெரு ஒன்றிலிருந்து கேட்டது.அந்த நிலமே அதிர்ந்தது ,பதட்டம் நிலவியது,கூச்சலும் புழுதியும் பரவலாய் கிளம்பியது, சைரன் ஒலித்தது.அந்த கோவை குண்டுவெடிப்பு நடந்த அந்த பெப்ரவரி 14 அவனுக்கு மட்டுமில்லை தமிழ் நாட்டிற்கே மறக்க முடியாத நாள் ஆகியது.


அவன் செல்ல வேண்டிய டியுசன் இருக்கும் இடத்திற்கு செல்ல தடை செய்யப் பட்டது. கண்ணீருடன் வீட்டிருக்கு திரும்பினான் .
-------------------------------------------------


அன்று அவன் கொடுத்திருந்தால் அவள் என்ன செய்திருப்பாள்? ஒருவேளை அவள் அன்று டியூசன் வந்திருப்பாளா? என்று அவன் பல வருடங்களை கடந்தும் தனக்குள் கேட்டுக் கொண்டிருப்பான். 


இன்றும் அவன் படித்த டியூசன் இருக்கும் தெருவிலோ ,இல்லை அவள் வீடு இருந்த தெருவிலோ அவன் தன் வண்டியில் அடிக்கடி ஏக்கத்துடன் செல்வதைப் பார்க்கலாம்.


அவன் எழுதிய ஒரே கவிதை 
நீ தந்த முத்தத்தின் எச்சிலாய் ,
கனவு மழையில் நிதமும் நனைகிறேன் 

















----கரி

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

ஆட்டோகிராப்-2 ( அந்தி மாலை மயக்கம் )

  


கதை ஆரம்பிக்கும் இடம்,பாண்டிச்சேரியில் பிரபலான அந்த கடற்கரை ஓட்டலின் ஒரு டீலக்ஸ் அறையில்.


அருள் மொழி வேலை பார்க்கும் அலுவலகத்தில் இருக்கும் அனைத்து ஆண்களும்,(அவுங்க boss உட்பட) எகூடி இருந்தனர். அவர்களுக்கு முன் ஒரு குவியல் ஒன்று இருந்தது.
(மது நாட்டுக்கும், வீட்டுக்கும்,உடல் நலத்திற்கும் கேடு).  


அந்த கம்பெனி தொடங்கி பத்து ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி அந்த கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.பார்ட்டி ஆரம்பமானது, கம்பெனியிலே மிகவும் அமைதி பூச்சியான அருள் மொழியும் அவர்களுடன் அமர்ந்து இருந்தான்.


புகை மூட்டம் அந்த அறையினை சூளஆரம்பித்தது, அந்த அலுவலகத்தின் சீனியர் ஒருவன் பாட்டிலை திறந்து ஊற்றினான்.எல்லோருக்கும் ஒரு ஸ்மால்  வந்தது "காஸ்ட்லி சரக்கு டா!! பார்த்து அடிங்க, எகிறுடும் " என்று எச்சரிக்கை விடுத்தார் பாஸ். மேலும் அவர், "டேய் அருள்!! இன்னிக்காவது எங்களோட கரெக்டா மின்கிளாகு, சும்மா ஊமை மாதிரி இருக்காத " என்றார்.


எல்லோரும் fanta ,coke ,மினரல் வாட்டர் ஊற்றினர்,முதல் ரவுண்டு முடிந்தது.
இரண்டாம் ரௌண்டும் அவ்வாறே முடிந்தது. அப்போது யாரும் சரியாக கவனிக்கவில்லை அருள் "mixing" எதுவுமே கலக்கவில்லை.மூன்றாம் ரௌண்டும் ஆரம்பித்தது,அப்போது அங்கிருந்த சீனியரில் ஒருவன் , "டேய் !! இந்த அருள் ஊமை மாதிரி இருந்துக்கிட்டு ராவா அடிக்கிறான் டா " என்று கத்தினான். 


எல்லோரின் பார்வையும் அவன் மீது திரும்பியது, " டேய் என்னடா கிளாச கையில வச்சுக்கிட்டு முத்தமாட கொடுக்கிறிங்க ------------------" என்று ஒரு செந்தமிழ் வார்த்தை விட , அதற்கு பின்னர் ஒரே நிசப்தம் தான், அருள் மொழியின் குரல் மட்டுமே அங்கு ஒலித்துகொண்டிருந்தது .அப்பொழுது , "உன்ன விட இந்த உலகத்தில் உசந்தது ஒன்னும் இல்ல" என்ற பாட்டு ரிங் டோனாய் ஒலிக்க, தன் பாக்கெட்டிலிருந்து எடுத்தான்,அருள்.


அவன் முகம் சற்று மாறியது,அதை கண்ட அனைவரும் "என்ன ஆச்சு" என்று கேட்டனர்."என் friend க்கு accident ஆயிடுச்சு, ரொம்ப சீரியஸ் " என்று சொல்லிக்கொண்டே ,அறையினை விட்டு வெளியே சென்றான்.அங்கிருப்போர் யாவரும் தன அனுபத்தினை அவனுக்கு காண்பிக்கும் பொருட்டு "உச்" கொட்டினர். அருள் கதவைச் சாத்திக்கொண்டு வெளியே சென்று, ஒன்று குத்தாட்டம் ஒன்று போட்டான்."மவனே செத்தடா நீ , உனக்கு சீக்கிரமா ஊத்தறேண்டா பால் ".


அங்கு தான் ஆரம்பமாகிறது ஒரு சின்ன ப்ளாஷ்பேக், இந்த வஞ்சத்தின் காரணம் அவனது 14 ம் வயதில் உள்ளது.அதன் பெயர் தான் "சந்திர வதனா".








part -2


"சந்திரவதனா", இந்த பெயரை அருள் மொழி அந்நாளில் ஒரு நாளைக்கு ஆயிரம் முறையாவது சொல்லிக்கொள்வான்,அப்பொழுது அவன் 9ம் வகுப்பு படித்து கொண்டிருந்தான்.அவன் படித்தது "B" செக்சன்-ல் , அந்த பள்ளிக்கூடம் சதுரமாக கட்ட பட்டிருக்கும்.அவனுக்கு நேர் எதிர் அறையில் ஒன்பதாம் வகுப்பு ''D'' பிரிவு இருந்தது.

அவன் 8 -ஆம் வகுப்பு வரை அவர் அப்பா வேலை பார்த்து வந்த ஒரு இடைநிலைப் பள்ளியில் படித்து வந்தான்.ரொம்ப பயந்த சுபாவம் கொண்ட அவனை வேறு பள்ளிக்கு அனுப்பினாலாவது கொஞ்சம் தயிரியமாய் இருப்பான் என்று அவன் அப்பா கணக்கு போட்டார் .அவனுக்கு யாரும் அதிகமாக பழக்கம் அதிகம் இல்லாததால், கொஞ்சம் தனியாக இருப்பான்.

ஒரு நாள் காலை இடைவேளையின் போது,வகுப்பிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தான், இடைவேளை என்றாலே ஒரு கூச்சலில் அந்த பகுதி முழுதும் மூழ்கி இருக்கும். அருகிலிருக்கும் எலிமெண்டரி ஸ்கூல் பிள்ளைகள் கத்திக்கொண்டும், ஓடிக்கொண்டும் ஒரே புழுதியை கிளப்பி கொண்டே இருந்தனர். அருள் தனியாக வந்து அங்கிருந்த ஒரு சிமெண்ட் பெஞ்ச் மீது அமர்ந்தான்.

பக்கத்தில் யாரோ பேசிக்கொண்டிருப்பது போல் தோன்றியது, அவள் தான் சந்திரா.அவளும் எட்டாம் வகுப்பு வரை அவர்கள் ஊரில் படித்து விட்டு, இந்த பள்ளி விடுதியில் தங்கி படிக்கிறாள். அதனால், அவளுக்கும் அருளைப் போலவே கொஞ்சம் தயக்கம் இருந்தது.

அருள் அவளை சில நாட்கள் கவனித்திருக்கிறான், அவன் வீடு வழியாக தான் போய் வருவாள். அவன் நினைத்தான் "ஒருவேளை இவள் வீடு நம் வீடு பக்கம் தானோ என்று."
இவளும் அவனை பார்த்தது போல் அருளை பார்த்து சிரிக்க யத்தனித்தாள்.அருள்,"இவள் வீடு எங்கே என்று கேட்கலாமோ ?'' என்று அவன் அமர்ந்த பெஞ்சில் ஒரு அரை அடி அவளை நோக்கி நகர்ந்தான்.அவன் எதிர்பார்க்கவே இல்லை ,அவளும் ஒரு அடி நகர்ந்தாள் ,அவனிடம் எதோ சொல்ல முற்பட்ட போது,ஒரு குரல் அருளை அழைத்தது.

"டேய் வாத்தி !!!"' என்று அவன் நண்பன் ஒருவன் அவனை பார்த்து கூப்பிட,அவள் அங்கிருந்து கலைந்து சென்றாள்.அதற்குள் அருகில் வந்து, "டேய் அருள் !! இந்த ஸ்கூல்ல சேர்ந்தே 1 மாசம் தான் ஆகுது ,அதுக்குள்ளே ரெண்டு பெரும் ஒரே பெஞ்சில் உக்கார்ந்து கிட்டு அப்படியே ஜோள்ளுரிங்க! " என்று அருள் தொழில் கை வைத்தான்.

"ச்சே அப்படி எல்லாம் ஒண்ணுமில்லடா!! ரெண்டு பெரும் ஒரே சமயத்துல அந்த பெஞ்சில உட்காந்தோம் அவ்வளவுதான்" என்று மழுப்பியவாரே கேட்டான்."ஆமாம் யாருடா இந்த பொண்ணு நம்ம தெருவுக்கு பக்கமா என்றான்".அப்படி கேட்டவுடன் ஓரக்கன்னாலே அருள் மொழியை பார்த்து,"ஓகோ கதை அப்படி போகுதா??!!?!"என்று இழுத்தான்.

அருளை பற்றி கிசு கிசு உடனே அரங்கேற்றமானது. ஆனால் அருள், அவளை தொடர ஆரம்பித்தான்.சந்திர வதனா அங்கிருக்கும் ஹாஸ்டலில் இருந்து படிக்கிறாள் என்பதை அறிந்தான்.அவன் தினமும் காலையில் டியூஷன் செல்ல அவள் இருக்கும் விடுதியைத் தான் கடந்து செல்வான்.கிட்ட தட்ட 3 வருடம் அவன் அவளை பின் தொடர்ந்தான்.

காலையில் டியுசனுக்கு சென்று திரும்பும் வேளையில் அவளும் பள்ளிக்கு நடந்து செல்வாள்.வெள்ளை சட்டையும், ஊதா பாவடையும் அந்த பள்ளியின் சீருடை.அவள் நடக்கும் போது அப்படியே ஒரு மயில் நடப்பது போல் தோன்றும்.மெதுவாக சத்தம் வாராமல் அவளுக்கு பின்னே ஓட்டி செல்வான் அவன் பின் வருவதை அவள் திரும்பாமலே புரிந்து கொள்வாள். அவன் வீட்டு வழியாக தான் அவளும் செல்ல வேண்டும் , அதனால் அவன் வீட்டருகே உள்ள பாலத்தில் நின்று விடுவான்.

சந்திரவதனா, காரணம் தெரியாமலே அருளை பார்த்ததும் ஒரு புன்னகையை பரிசளிப்பாள்.ஏன் என்று தெரியாது, தன் தோழியிடம் அரட்டை அடிக்கும் போது எவ்வளவு தான் சத்தம் போட்டாலும், சில சமயம் திடீரென தேய்ந்த டேப் ரெக்கார்டர் போல் தாழ்ந்துவிடும் -அந்த சுற்று முட்டும் பார்த்தாள் எங்கோ இருந்து அவளை பார்த்து கொண்டிருப்பான் இந்த அருள்.

அவன் நண்பர்களின் கேலியினை பொருட்படுத்தாது இவனால் போகவில்லை, அவர்கள் கேலி பண்ணுவது தெரிந்தால் ஆவலுடன் பேச முடியாது போகுமோ என்ற அச்சம், அவளிடம் இருந்து அவனை சற்று தள்ளியே வைத்தது.ஆனால் அவன் நண்பர்களோ அவனை "சந்திரா" என்றே அழைக்க ஆரம்பித்தனர்.ஒரு நாள் அவன் வீட்டுக்கு அருகில் உள்ள அந்த வாய்க்கால் பாலத்தில் நடந்து கொண்டே வந்து கொண்டிருந்தான், அருளின்  நண்பன் "டேய் வாத்தி!! சந்திரா எங்கடா?" என்று கத்த, அவன் தந்தை வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார்.

"மாட்டிக்கொண்டோம்" என்று நினைத்தாவறே வீட்டுக்குள் ஓடினான்.அடுத்த நாள் காலை, அருளின் அப்பா அவன் அருகில்,"தம்பி!! என்னடா தம்பி எதாச்சும் கனா கண்டியா? யாரோ நீயும் உன் நண்பன் சந்திரனும் எங்கேயோ ஊருக்கு போற மாதிரி உளறிக்கிட்டு இருந்தே????" என்றார்.


part -3
அருள் மொழி பயந்து கொண்டே, "அந்த நாயால தான் பயந்து ஏதேதோ தூக்கத்தில் உளறிட்டோம், நல்லவேளை என் அப்பா சந்திரவதனாவை - சந்திரன் என்று நினைத்தார். அந்த பயபுள்ளைய இன்னைக்கு ஏதாவது செய்யணும் " என்று வெறியோடு அன்று பள்ளிக்கு சென்றான்.நேராக வகுப்பிற்குள் சென்று அவனின் கன்னங்களை பழுக்க வேண்டும் என்று சென்றவன்,அன்று அவனிடம் இருந்து வேறு ஒரு இன்ப அதிர்ச்சியை பெற்றான் ,"டேய் பங்காளி!! உன் ஆளு சந்திரா!! டேய் முறைக்காதடா! உன் ஆளு இன்னைக்கு நம்ம ஸ்கூல்ல நடக்குற ஆண்டு விழாவில் பாட போகுதாம்"என்றான்.

'உன் ஆளு !! உன் ஆளு !!' என்று கத்துவது அவன் மீது வெறி ஏற்படுத்தினாலும் , அவனுக்கு அது ஒரு போதையினை ஏற்படுத்தியது.ஆண்டு விழா ஒரே ஆரவாரமாக ஆரம்பித்தது , முதலில் தமிழ் தாய் வாழ்த்து, பின்னர் வரவேற்பு -துணை தலைமை ஆசிரியர், பின்னர் சிறப்பு விருந்தினரின் மொக்கை, பரிசளிப்பு விழா என்று வழக்கம் போல் நடைபெற, பரிசளிப்பின் போது படிப்பிற்காக பரிசு வாங்க அருள் மொழி அழைக்கப்பட்ட சந்திராவை பார்த்தவுடன்.தன் நின்றிருந்த தரையிலிருந்து 2 அடி மேலே சென்றது போல் இருந்தது.

தலை முடியினை நன்றாக விரித்து அடியினில் ஒரு நுனிக்கொண்டையிட்டு , காதிலே லோலாக்கும், லேசாக மை தீட்டிய கண்களும்,சிவப்பு தாவணியும், மஞ்சள் பாவடையும் , சிவப்புச் சாயம் தேவைப்படாத உதடுகளில் ரெடிமேடாக வைத்திருந்த புன்னகையும் அவனை அப்படியே உயரத்தில் ஆழ்த்தியது. அவன் மட்டும் அல்ல அங்கிருந்த பல பேர்களும் வாய் பிளந்து இருந்தனர்.

கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின, பாரதமே ஆடத் தெரியாத இரு மயில்கள் வெள்ளிச் சலங்கைகள் பாட்டுக்கு ஆடின, அப்புறம் ஒரு வில்லு பாட்டு , அதற்கு அப்புறம் ஒரு மாரியம்மா பாடல், அடுத்ததாக சந்திரா வந்தாள்.

சந்திரா மேடையில் தோன்றியதுமே, அருளுக்கு அருகில் இருந்த அவன் நண்பன் ஒரு விசில் அடித்தான். சட்டென்று அந்த பக்கம் தன் பார்வையினை திருப்பினாள்.அங்கு அருள் இருப்பதை கண்டாள்.அவள் கண்களில் இருந்து எதோ ஒரு கனை அருளின் கண்ணில் தொடுக்க.அருள் புரிந்து கொண்டான் 'அவளை பார்த்து தான் விசில் அடிப்பதாக அவள் நினைத்து கொண்டாளோ?' என்று, 'ஒரு வேளை, அது கோபப் பார்வையாக இருக்குமோ ?' என்று சந்தேகித்து கொண்டே, அவன் நண்பனைப் பார்த்து ,"டேய்! விசில் அடிக்காதடா ''  என்று அதட்டினான். அவன் கேலியாக சிரித்து கொண்டே மேடையை கவனித்தான்.பாடல் ஆரம்பித்தது...

"ஒரு இனிய மனது இசையை அழைத்து செல்லும் .... இன்பம் புது வெள்ளம்" என்று அவள் பாட ஆரம்பிக்க, அவளை பார்ப்பதற்கு வெட்கப் பட்டு தலை குனிந்தான்.பாடல் முடியும் வரை தலை எழும்பவில்லை.பாட்டு முடிந்தவுடன் எல்லோரும் கை தட்டியது இவனுக்கே தட்டியது போல் அப்படி ஒரு பெருமை.எல்லாம் முடிந்து வீட்டுக்கு சென்று விட்டான்.அவள் பாடியது, சிரித்தது,முறைத்து, கண் மை, கொலுசு, போட்டு என்று அவ்வளவும் அவன் மனத் திரையில் மறு ஒலிபரப்பு ஆனது.

காமன் பண்டிகை, தஞ்சை மண்ணில் 1000௦ ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப் பட்டுவரும் பண்டிகை.இன்றளவும் இந்த பண்டிகை டெல்ட மாவட்டங்களில் கொண்டாடப்பட்டு வருவதை பார்க்கலாம்.(ஆழ்நிலை தியானத்தில் இருக்கும் சிவனை விரும்பிய பார்வதி காமனிடம் உதவி கேட்க , காமன் தன் பானத்தால் சிவனை எழுப்பி காதல் கொள்ள செய்கிறான்.ஆனால் சிவனோ தன் தவத்தை கெடுத்த காமனை எரித்து விடுகிறான். காமனின் காதலி ரதி இவ்விளக்கங்களை சிவனுக்கு சொல்லி காமனை மீட்டு வருகிறாள். காலப் போக்கில் இந்த பண்டிகை காமனை எரிப்பதையே முக்கிய நிகழ்வாக வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது).

அருள் மொழியால் அந்த காமன் பண்டிகையினை மறக்கவே முடியாது. அவன் 10ம்   வகுப்பு படிக்கும் போது நடைபெற்ற காமன் பண்டிகை அன்று.அந்த ஊரில் ஒவ்வொரு தெருவிலும் இப்படிப்பட்ட சடங்கு நடைபெறும்.அந்த அருள் மொழி வசிக்கும் தெருவில் தான் அந்த ஊரிலேயே மிகவும் விசேஷம்.அந்த தெருவில் உள்ள இரண்டு சிறுவர்களை பொறுக்கி எடுத்து ஒருத்தனை காமாண்டியாகவும்,ஒருத்தனை ரதியாகவும் வேடமிட்டு ஊர்வலம் இழுத்து வர, ஒரு பல்லக்கில் ரதி மற்றும் காமனின் படங்களை ஒட்டி தெருவெங்கும் ஊர்வலம் கிளம்பியது.எப்போதும் வேடிக்கை மட்டுமே பார்க்கும் அருள், இந்த வருடம் பல்லக்கு தூக்கும் வேலையே மேற்கொண்டான்.ஊர்வலம் அவள் தங்கி இருந்த விடுதிக்கு அருகில் சென்றது அப்படியே மேலே பார்த்துக் கொண்டே சென்றான்.கொட்டு மேளத்தின் சத்தம் அந்த விடுதியில் இருக்கும் அத்தனைபேரையும் எழுப்பியது.

அவள் எங்கிருக்கிறாள் என்று தேடிக்கொண்டே அங்கு நின்றான் , பல்லக்கை இன்னொருவனிடம் கொடுத்து விட்டு சற்று விலகி வந்து அந்த விடுதியையே பார்த்து கொண்டிருந்தான் அவள் அங்கு இல்லை. மிகுந்த களைப்புடனும்,மனச் சோர்வுடனும் காமன் எரிக்கும் மைதானத்திற்கு வந்தான்.

காமனை எரித்துவிட்டு,அங்கே அந்த நெருப்பு வெளிச்சத்தில் குறவன்-குறத்தி ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.அந்த குறவன்-குறத்தி பேசிய ரெட்டை அர்த்த வசனங்களுக்கு அர்த்தம் புரிந்தும் புரியாமலும் விழித்துக் கொண்டிருக்க, அவனுக்கு பழக்கப்பட்ட குரல் "டேய் அருள் !! டேய் அருள் !! என்று உரிமையுடன் இரண்டு முறை ஒலித்தது".

தன் அக்காவின் குரல் தான் அது அன்று குரல் வந்த திசையில் திரும்பிய அருளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.தான் அக்காவிற்கு மிக மிக அருகில் சிரித்துக் கொண்டே நின்றிருந்தாள் சந்திரா வதனா.






(தொடரும்)  




----கரி

வியாழன், 2 செப்டம்பர், 2010

ஆட்டோகிராப் - 1(அந்த நாள் ஞாபகம்)

         என் வாழ்க்கையிலே அப்படிப்பட்ட சங்கடமான நாளை நான் சந்தித்ததே இல்லை, எல்லோரும் என் கையைப் பிடித்து வாழ்த்துகள் என சொல்லும் போது எனக்கு அங்கே என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

         எட்டாம் வகுப்பு வரை நான் படித்தது ஆங்கில வழி தனியார் பள்ளிக்கூடம். ஒன்பதாம் வகுப்பிற்கு எங்கள் குடும்ப சூழல் காரணமாக, எங்கள் வீட்டிற்கு அருகே இருக்கும் ஒரு அரசுப் பள்ளியில் சேர்ந்தேன். இப்பொழுது நான் என்னுடைய குடும்ப சூழ்நிலையைப் பற்றி உங்களிடம் சொல்லி, புலம்பிக் கொண்டிருக்கத் தேவையில்லை. ஏனெனில், நான் இங்கே அவளைச் சந்தித்துவிட்டேன் -எனவே எனது கதையின் களம் தேர்வாகிவிட்டது, அந்த வகுப்பில் அது வரை அவள் தான் ஸ்டாராக இருந்தாள், படிப்பு, ஓவியம், ஆடல், பாடல், விளையாட்டு என்று எல்லா துறைகளிலும் மற்ற மாணவர்களுக்கு இரண்டாம் இடம் தான் கனவாகவே இருந்து வந்தது, நான் வரும் வரை.

                பள்ளி ஆரம்பித்த சில நாட்களிலேயே பெரும்பான்மையான ஆசிரியர்களின் அபிமானத்தைப் பெற்றேன்.அதிலும் ,குறிப்பாக பள்ளியில் நான் கொஞ்சம் கொஞ்சம் பேசிவந்த ஆங்கிலமே எனக்கு மிகப் பெரிய கௌரவம் அளித்து வந்தது. மற்றப் பசங்களுக்கும் 'ஆம்பிள ஜெயிச்சா பெருமை தான்னு' எனக்கு சப்போர்ட் பண்ணாங்க. ஆனால் நானோ? ஒருத்தனுடனும் நட்பு கொள்ளவில்லை, எல்லோரிடமும் சற்றுத் தள்ளியே இருந்தேன். அதனால் அந்த வகுப்பில் எல்லா மாணவர்களுக்கும் எதிரியின் எண்ணிக்கை இரண்டாக ஆனது. இரண்டு என்ற எண்ணிக்கை மிகவும் வசதியாகப் போனதால், என்னுடன் அவளை இணைத்துக் கதை சொல்ல ஆரம்பித்தனர். அப்பொழுதெல்லாம் காதல் என்ற வார்த்தை கெட்டவார்த்தை அகராதியில் மட்டுமே இருந்து வந்தது.  ஆனால் அவர்களுக்கோ எங்களை இணைத்து கிசு கிசுப்பதே பள்ளிக்கு வருவதன் நோக்கமாய் ஆகிவிட்டது. இனியும் அவர்களைப் பற்றி என்ன பேச்சு??!! ,அவளை பற்றி சொல்கிறேன் .. அவளோட அழகு பிரமிக்கதக்கது அல்ல . ஆனால் எனக்கு அழகான பெண் என்று தெரிஞ்ச முதல் ஆளே அவள் தான் !!!

         அந்த வட்ட முகம்,கன்னத்துல குழி, ரெட்டை ஜடை, ரெட்டைச் சரம் கொலுசு என இன்றுவரை தினம் ஒரு முறையாவது என் கண்ணில் வந்து போய்க் கொண்டிருக்கிறது . நல்ல பையன் என்கிற இமேஜ் இருந்ததால் , அவளாகவே என்னிடம் பேசினாள்; ஆங்கிலப் பாடங்களில் சந்தேகம் தீர்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது .கிசுகிசு உண்மையாகிவிடுமோ என்று பசங்கள் மத்தியில் புகைச்சல் ஆரம்பித்தது, 'இவள் சும்மாவே ரொம்ப அலட்டுவா, இவன் கூட சேர்ந்து இன்னும் ஆட்டம் ஜாஸ்தியா இருக்குமே 'என்று புலம்பினான் காளிமுத்து.(இவன் ஒரு குட்டி ரவுடி ). இதுவரை சேர்த்துவைத்துக் கதை பின்னியவர்கள்,பின்னர் எங்களைப் பிரிப்பதற்காக திட்டம் போட்டனர். ஆதலால் என்னை அவளுக்கு முன்பாக கேலி செய்யும் வழக்கத்தை கொண்டு வந்தனர். முதலில் என்னைக் கிண்டலடிக்கும் பொழுது அவளுக்கு கோபம் வந்தது. ஆனால், போகப் போக அவளும் என்னை கிண்டலடிப்பதை ரசிக்க ஆரம்பித்துவிட்டாள்.

        படிப்பில் மட்டும் தான் நான் கெட்டி, விளையாட்டுல, பசங்களோட சண்டை போடுறதுல எல்லாம் எப்போதுமே ஒதுங்கிச் செல்பவன். அதனால் என்னை அவர்கள் மட்டம் தட்டிக் கொண்டே இருந்தனர். அவளுக்காகவாது என்  இமேஜ் - ஐத் தூக்கி நிறுத்த வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தேன் . ஒரு நாள் விளையாட்டு வேளையில் கிரிகெட் ஆடினோம் ஆள் குறைகிறது என்பதனால் வெறும் அல்லக்கையாக நான் சேர்க்கப் பட்டேன். அன்றைய விளையாட்டில் டீம் ஜெயிக்கும் தருவாயில் கோட்டை விட, கடைசியாக என்னிடம் மட்டை அளிக்கப்பட்டது. அவளும் என்னை வேடிக்கை பார்க்கிறாள் என்பதை அறிந்துக் கொண்டேன், என் வீரத்தை காண்பிக்கும் நேரம் இதுதான் என்றாலும் -என் நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டிருந்தது.ஏனென்றால், எனக்கு பந்து போடுபவன் எங்க ஊரு வாசிம் அக்ரம். அவனும் என் பல்லைப் பெயர்க்கவேண்டும் என்மீது ஆக்ரோசமாக புல் டாசாக பந்தை எறிந்தான். கண்ணை மூடிக்கொண்டு ஓங்கி ஒன்று கொடுக்க, பந்து காணமல் போனது. அவ்வளவு தான் கதையின் திசை மாறியது. டீம் ஜெயித்ததால் என்னைக் கொண்டாடினர்.

      'அன்றைக்கு சாயங்காலம் வீட்டிற்கு போகும் வழியில் நாங்கள் இருவரும் சேர்ந்து பேசிக்கொண்டே சென்றோம்.15 நிமிஷத்தில் செல்ல முடியும் அவள் வீட்டிற்கு 40 நிமிசமாக பேசியபடி சென்றோம். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், அவள் என்னுடன் என்ன பேசினாள் என்று ஒரு வார்த்தைக் கூட என் ஞாபகத்தில் இல்லை. ஆனால், அவள் கைகளில் இருந்த ஊதா நிற வளையல் ஒன்று , நடந்து போகும் போது என் கை உராய்ந்தவுடன் பட்டென்று உடைந்த சத்தமும்; உடைந்துப் போன வளையலுக்காக பதறிய அவள் கண்களும்; உராய்ந்து நின்ற என் கைகளால் அவள் மெல்லக் கடித்த அவள் நாக்கின் நுனியும் கண்ட எனக்கு நெஞ்சிற்கு கீழே முதன் முதலாய் ஒரு அமிலம் சுரந்த ஞாபகம்.நித்தமும் என் படுக்கையறையிலே ரீவைண்ட்  பண்ணி பார்த்துக் கொண்டிருக்கும் முழு வண்ணக் கனவுப் பாடல்.



அடுத்த நாள் தான் எனக்கு ஒரு surprise காத்திருந்தது.

வழக்கம் போல் பள்ளிக்கு சென்றேன், வகுப்பில் இருந்த எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்த்தனர்.திடீரென்று எல்லோரும் என் கை பிடித்து வாழ்த்துகள் சொல்ல ,"டேய்! என்னடா ஆச்சு இப்போ !! ஏன்டா இப்படி சொல்லுறிங்க" என்றேன். என் வாழ்க்கையிலே அப்படிப்பட்ட சங்கடமான நாளை நான் சந்தித்ததே இல்லை, எல்லோரும் என் கையைப் பிடித்து வாழ்த்துகள் என சொல்லும் போது எனக்கு அங்கே என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

"என்னடா ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிற" என்று கேட்டான் ஒருவன். அப்புறம் மறுபடியும் ஒரு மூன்று நான்கு பேர் கூடி ஒன்றாக கத்தினார்கள்"டேய்!! உன் ஆளு வயசுக்கு வந்துருச்சு டா".....அவ்வளவுதான் ஒட்டு மொத்த வகுப்பும் என்னையே பார்த்தது...எல்லா பெண்களும் என்னை முறைத்த படி பார்த்தனர், அதில் ஒரு புன்னகை அரசி என்னைப் பார்க்கும் போதே தோன்றியது, அவள் நிச்சயமாக வீட்டிற்குச் சென்று என்னைப் போட்டுக் கொடுப்பாள் என்று. அதை அவள் முறைக்கும் கண்கள் தீர்க்கமாய் உண்மை என்று பறை சாற்றின.

எனக்கு சற்றைக்கெல்லாம் என்ன செய்வதென்றே தெரியவில்லை , பல நாள் திட்டம் தீட்டி என்னை மாட்டி விட்டுட்டாங்களோ என்று அப்போது உறைத்தது. என்னை வகுப்பறையில் கிண்டலடித்த விவரம் காட்டுத் தீ போல் பரவியது. நான் பயப்படுவதை கண்டு அவர்களுக்கு கொண்டாட்டம் ஆனது.

"ஐய்யோ!! இந்த விஷயம் அவளுக்கு தெரிந்தால் என்னை என்ன நினைப்பாளோ" என்று பதறினேன். நாட்கள் வேகமாகக் கரைந்தது, ஒரு பத்து நாட்களுக்கு பிறகு அவள் வருகிறாள் என்று கேள்விப் பட்டேன்.அவளை பார்க்கவே என் மனம் துடித்தாலும், என்ன பிரச்சனை வருமோ என்று பயந்து கொண்டே பதுங்கிப் பதுங்கி வந்தேன்.

      எப்பொழுதும் பள்ளி ஆரம்பிக்க கொஞ்சம் முன்னரே வரும் நான், அன்று மட்டும் சரியாக பள்ளி ஆரம்பிக்கும் போது தான் வந்தேன். காலை வழிபாட்டின் போது கூட, அவள் என் எதிரில் உள்ள பெண்கள் வரிசையில் நிற்பதை அறிந்து, குனிந்து கொண்டேன். எனினும் அவளை பார்க்கும் ஆவல் என்னை தூண்டியது. சற்று ஓரக்கண்ணால் அவளை பார்த்தேன், எப்பொழுதும் நிமிர்ந்த படி பராக்கு பார்த்து கொண்டே நிற்கும் அவள் சற்று கீழ் நோக்கி முகத்தை வைத்து கொண்டிருந்தாள். ஆனால் முகம் மட்டும் அளவுகடந்த பிரகாசமுற்றிருந்தது. இந்த அழகு அதற்கு பின்னர் அவளை நான் பார்த்த எந்த நாளிலும் அவளிடம் இல்லை.(இன்று வரை நான் தான் அவளின் மிக அழகான முகத்தின் ஒரே சாட்சி).

எனக்கு என்னவென்றுத் தெரியாதப்  புது புது யோசனைகளும் , எண்ணங்களும் அவளை பற்றி தோன்றின.காலை வழிபாட்டில் ஒரு காக்கா எச்சமிட்டால் கூட  துடைக்கும் உணர்வு இல்லாத அளவிற்கு என்னை மறைந்துக் கொண்டிருந்தேன் . சட்டென்று ஒரு உணர்வு, என்னை யாரோ பார்ப்பது போல் தோன்றியது,'அவள் தான், அவளே தான் '.

என்னை பார்த்தாள்,
புன்னகைத்தாள்,
கண்களால் எதோ கேட்டாள்!!
புரியவில்லை ..

நானும் கேட்டேன் என்
கண்களை கொண்டு
"எப்படி இருக்கிறாய் என் இளவரசி!! (அவள் பெயர் அது அல்ல)''என்று ,
பதில் வருமா ? அவளிடமிருந்து.

பதில் மட்டும் இல்லை ,
குரலே வந்தது.
"தம்பி! அவள் நல்ல இருக்காளாம்!
Prayer முடிஞ்சது நாம் போகலாம்"என்றான்
ஒருவன்.
(அட !!நான் கண்களால் கேட்டது அத்தனை பேருக்கா புரிகின்றது)

                                வகுப்பிற்கு சென்றோம்,மறுபடியும் அவள் கண்ணில் படாமல் ஒளிந்து கொண்டேன். வகுப்பு ஆரம்பித்தது, அவளைப் பார்க்க தைய்ரியம் இல்லாமலோ அல்லது வெக்கத்தினாலோ காளிமுத்துவிற்கு அருகில் சென்று அமர்ந்தேன். அவள் என்னைத் தான் தேடுகிறாள் என்பதைப் புரிந்து கொண்டேன். அதே சமயம் நான் இடம் மாறி அமர்ந்ததால் காளிமுத்துவும் என்னிடம் சண்டைக்கு வந்தான். பசங்களுக்கு மத்தியில் ஒரே சலசலப்பு. "டேய் !! என்னடா சத்தம் அங்கே ?" என்று கணக்கு வாத்தியார் வேலுச்சாமி என்கிற மண்டையன் எங்களை அதட்டினார். காளிமுத்து தன கைகளை கட்டிக்கொண்டே எழுந்து சொன்னான்,"சார் ! சார் இவன் தான் சார் எப்பவும் அந்த ஓரத்துல உக்கார்ந்து இருக்கிற அவன் இன்னைக்கு என் இடத்துல உக்கார்ந்துகிட்டு , பாட வேளையில தூங்குறான் சார்! " என்று என் மீது பழி போட, வாத்தியார் என்னைப் பார்த்து ,"வர வர மாமியா!! கழுத போன மாதிரி இருக்குடா உன் பொழப்பு, காலாண்டுத் தேர்வில் நீ எவ்வளவு மதிப்பெண் தெரியுமா ?? வெறும் 45 தான் .என்ன ஆச்சுடா உனக்கு ?"  என்று காரமாக கேட்டார்..

         ஆம், இந்தக் காலாண்டுத் தேர்வு முழுதும் குறைவான மதிப்பெண்களை என் வாழ்க்கையில் முதன் முதலாகப் பெற்றிருந்தேன். எனக்கு ஏன் இப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை. கணக்கு வாத்தியார் மிகவும் கண்டிப்பானவர், அன்று பரீட்சை பேப்பர் திருத்தி கொடுத்தார். "பாசானவுங்க மட்டும் என்கிட்டே விடைத்தாளை வாங்குங்க , மத்தவுங்களுக்கு எல்லாம் வேட்டு வச்சுட்டு தான் கொடுப்பேன்" என்று சொன்னார்.

     முதலில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு கொடுத்தார், என் முறை வந்து நானும் திரும்பினேன், என் காது சிவந்து இருந்தது, கண்கள் கலங்கி இருந்தது. அடுத்தது fail ஆனவர்கள், அவர்களுடன் சேர்த்து பரீட்சைக்கு வராத அவளும் நின்று கொண்டிருந்தாள்.வாத்தியார் தன் மூங்கில் கம்பினை தரையில் ஒரு வட்டமிடுவது போலத் தேய்த்து எடுத்தார்.

"சார் !! "என்று எழுந்தேன் ."என்னடா?" -அவர்."அவள் பரீட்சைக்கு வராததால் தான் நிக்கிறா, அவள் fail ஆகல அதனால அவளை அடிச்சுராதிங்க " என்று சொல்ல விளைந்தேன் ஆனால் பேச்சு வரவில்லை, ஆதலால் ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு அப்படியே அமர்ந்தேன்.ஃபெயில் ஆனவர்களுக்கு அடி சரமாரியாக விழுந்துக் கொண்டிருந்தது. அந்த காளிமுத்துவும் நிறைய அடிகள் வாங்கினான். என் மனசுக்குள் அவ்வளவும் பயம் , ஐயோ இந்த மண்டையன் அவளையும் அடிப்பானோ ?? என்ற பயம், "அவள் எப்படி தான் வயதிற்கு வந்ததை சத்தமாகச் சொல்லுவாள்" என்ற பயம்.

     அவள் முறையும்  வந்தது, அவள் கண்களை மூடிக் கொண்டு கைகளை நீட்டினாள். மறுபடியும் நான் எழுந்து 'சார்' என்றேன். "என்னடா ??, உனக்கு என்ன ஆச்சு , என்னடா வேணும் ???'' என்றார்."ஒண்ணுமில்லை சார் !!" என்றேன். கண்டிப்பா மறுபடியும் கூப்பிட்டால் எனக்கு அடி விழும், ஆனா அவளை அடிக்கும் போது என்னால் சும்மா உக்காந்து வேடிக்கைப் பார்க்க முடியாது என்று கண்களை மூடிக்கொண்டேன்.

    அவர் கேட்டார், " உனக்கென்ன வந்துச்சு நீ நல்லா தான படிப்ப? ", "அது இல்ல சார்!! நான் லீவ் போட்டுட்டேன்" என்று சொன்னாள்.திடீரென்று கோபப்பட்ட வாத்தி," ஏய் களிசட !! அப்படியே மினுக்கிக்கிட்டு டிரஸ் பண்ற , உன்னை பார்த்த உடம்பு சரியில்லாத ஆள் மாதிரி தெரியவில்லையே!! பொய் சொல்லாதே என்னிடம் " என்று தொண்டை கிழியக் கத்தினார்." சார் !!! அது வந்து வந்து .."என்று இழுத்துக் கொண்டிருந்தாள் அவள்.

          இனிமேலும் என்னால் பொறுக்க முடியாது , மறுபடியும் எழுந்து ,"சார்..ர் ..ர் " என்று கத்தினேன்.அடுத்த வினாடி என்னை நோக்கி அவர் பிரம்பு வந்து விழுந்தது."உனக்கு கொழுப்பு ஜாஸ்தி ஆயிடுச்சு டா !!"என்று ஓங்கி என் கன்னத்தில்இரு பக்கங்களிலும் மாறி மாறி தன் கைரேகையினை பதித்தார்.

          வகுப்பு முழுதும் ஒரே சிரிப்பொலி, கண்ணீர் தாரை தாரையாய் எனக்குப் பெருக்கெடுத்தது, இருந்தும் அவள் reaction எப்படி இருக்குது என்று ஓரக்கண்ணால் பார்த்தேன். ஆனால், அவளோ என்னை முறைத்துக் கொண்டிருந்தாள். மதிய உணவு இடைவேளை மணி அடித்தது, அப்பொழுது, என்னிடம் கோபமாக பேச வந்தாள், அதற்குள் நான் வெளியே சென்று விட்டேன். பின்னர், மதிய இடைவேளையின் போது அரை நாள் லீவாக அப்படியே வீட்டுக்கு சென்றுவிட்டேன்.

           அந்த மாலை வேளை தான் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத மாலை. அடி வாங்கி அழுததால், காய்ச்சல் வந்திருந்தது, மூன்று விரல் பதிந்த என் கன்னங்களை ஒரு வாசமுள்ள கை ஒன்று தொடுவது போல் இருந்தது, அவள் தான். என் கனவுகளில் முதன் முதலாக ஒரு பெண் வந்த நேரம். நானும் வயசுக்கு வந்துவிட்டேனோ!! என்ற நினைப்பு.அந்தக் கனவினை மறுபடியும் , மறுபடியும் இழுத்து கொண்டே அந்த இரவைக் கழித்தேன். ஒவ்வொரு இரவும் அந்த கனவு தான் என்னைத் தூங்க வைக்கும் தூக்க மாத்திரையாக நான் பழகிக் கொண்டேன். என் கல்லூரியிலும், உயர் கல்வியிலும், அலுவலகத்திலும், சிலா நாள் மருத்துவமனையிலும் என் வழிகளை மறக்கச் செய்யும் அனஸ்தீசியா ஆனது. அந்த மருதாணிக் கைகள் என் கன்னம் வருடிவிட்டு வாழ்க்கையை எதிர்கொள்ளும் வழிமுறைகள் கற்றுத் தந்தது.

            வாழ்க்கையிலே அப்படிப்பட்ட சங்கடமான நாளை நான் இன்று மறுபடியும் சந்திக்கிறேன், எல்லோரும் என் கையைப் பிடித்து வாழ்த்துகள் என சொல்லும் போது எனக்கு அங்கே என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. எல்லோரும் என் கை பிடித்து வாழ்த்துகள் சொல்லும் போது ,எனக்கு மீண்டும் அவள் ஞாபகம் தான் வந்தது.மேற்கூறிய நிகழ்சிகளுக்குப் பின் எங்கள் நட்பு தொடங்கிய காலம், சண்டை வந்த காலம், சலனம் வந்த காலம் எல்லாம் கண் முன்னே ஒரு கணத்தில் வந்து போனது.

          சைக்கிளில் பறந்த அவள் தாவனியின் வேகம், தண்ணீர் பிடித்து செல்லும் போது தெரியும் "ந" போன்ற நளினம், ஓரக்கண்ணால் பார்த்த தருணம், அவள் சமைத்த உப்பில்லா உணவு, ஒரு நாள் அவள் கண்ணீர், லேசாக மோதிய அவள் விரல்கள், வாசம் பிடித்த அந்த துப்பட்டா, திருவிழாவில் அவள் கொடுத்த சந்தனம்,அவள் மீது பட்டு தெறித்த மழைச் சாரல், கீழே விழுந்த கண்ணாடி உடைசல்கள், எல்லாவற்றிற்கும் மேல் அந்த திமிர் பிடித்த அவள் குணம் என்று எல்லா ஞாபகமும் இன்று எனக்கு வாழ்த்துகள் சொல்கின்றன.

ஆம் இன்று எனக்கு திருமணம்.


Love is important in our life but not the everything






நன்றி !!!