சிற்பம்/ஓவியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிற்பம்/ஓவியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 நவம்பர், 2015

Virtual Exhibition



http://timesofindia.indiatimes.com/india/Man-hurls-footwear-at-former-national-security-adviser-M-K-Narayanan-in-Chennai/articleshow/49663203.cms




Image 1
Medium: Oil on canvas
Dimensions: 18 x 21 3/4 in. (45.7 x 55.2 cm)
Classification: Paintings
Artist : Vincent Van Gogh
Title : Shoes











Image 2
Medium: Online user friendly app
Dimensions: Flexible
Classification: Fake Art 
Artist : Polling Joker
Title : Common Man's Politics







http://www.business-standard.com/article/current-affairs/i-have-a-file-on-you-m-k-narayanan-114070400684_1.html

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

பஜ்ஜி சொஜ்ஜி - 76 * நைட்டி அணிந்த தேவதை

சிவகாசி  கந்தகபூமியை குட்டிஜப்பனாக்கி வைத்திருக்கும் மண்ணில், அங்கிருந்து 35 மைல் தூரத்தில் பிறந்த எனக்கு கலைச்சின்னங்கள் பாதுகாப்பு பற்றி பேச வாய்ப்பு கிடைத்திருக்கும் போது, இடிக்கப்பட்ட என் சொந்த வீட்டின் சிதிலங்கள் பற்றிய நினைவு எழாமலில்லை  வெங்கலத்திலான கலைநயமிக்க பல பானைகளும், வித விதமான பாத்திரங்களும் எவர்சில்வர் என்று எளிமையாய் கையாளப் பழகியிருந்த பாத்திரங்களுக்கு விற்கப்பட்டதும் வேறு எந்த அடுக்குமாடி நாகரிக அங்காடிகளிலோ நினைத்துப் பார்க்க முடியா விலைக்கு வாங்கி  என் அடுத்த தலைமுறைக்கு கொடுக்கும் கொடுக்காய் புளியோடு ஒப்பிட்டுப் பேசுவதும் ஒன்று தான். கலையுணர்வு அகன்று விட்ட சமூகத்தில் மிஞ்சியிருக்க ஒன்றுமில்லை. ஆம் இப்போது எங்கள் வீடிருந்த இடம் வெற்று நிலம்.
*
ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு அருங்காட்சியகம் இருப்பது  அரசாங்கம் அமைக்கும் போது உறுதிமொழியாகச் சொல்லப்படும் ரகசியக் காப்பு பிரமானங்களிலும் வைத்திருப்பார்கள் போல, நான் இருபது வருடமாக வாழ்ந்து வந்த ஊரில் அப்படி ஒரு அரங்கம் இருந்தது எனக்குத் தெரியாமலே போனது. அப்படி அந்த ஊரை விட்டு மாற்றலாகிப் போன பின்பு அவ்வரங்கம் பற்றி அறிய வந்ததும், ஒரு திருமணத்திற்காக அதே ஊருக்கு விடுப்பில் சென்ற போது  அந்த மியூசியத்தின் அரங்க அதிகாரியும் அதற்குப் பக்கத்து மண்டபத்திலுள்ள அவரது நெருங்கிய உறவின் திருமணத்திற்கு சென்றிருப்பதாக அந்த அரங்கத்தின் காவலாளி சொன்னான் சார் !! அப்படி அங்க ஒன்னுமில்லை சார்  வெறும் தூசி தான் படிஞ்சுகிடக்கு” – அரங்கம் பூட்டப்பட்டிருந்தது.

சென்னை அருங்காட்சியத்தில் எங்கள் சொந்தவூரில் வறட்சியின் காரணமாய் ஒரு புதிய கிணறுவெட்ட முனையும் போது கிடைக்கப்பெற்ற ஜக்கம்மாவின் சிலை,கட்டபொம்மனின் பாசறை அங்கிருந்ததற்கான சாட்சியாக கேள்விப்பட்டிருந்த நான், அந்த சிலை அகழ்ந்தெடுக்கப்பட்டதும் அதற்குப் பாத்தியமென்று உரிமை கொண்டாடிய கட்டபொம்மனின் இனத்தை சேர்ந்த மக்களின் கோரிக்கையான அச்சிலையை வைத்து ஒரு கோயில் எழுப்ப முயற்சித்த மக்களிடமிருந்து  தேசியம் மீது நம்பிக்கை கொண்ட கணவான்கள், சென்னை மியூசியத்தில் சேர்த்துவிட்டதாய் சொன்னார்கள். இன்று விசாரித்தால் அப்படியொரு ஆவனமே வரவில்லை என்ற பதில் எனக்கு ஆச்சரியமாகவோ, அதிர்ச்சியாகவோ இல்லை  ஏனென்றால் வேறென்னவொன்றை எதிர்பார்க்க முடியும். இதற்கு நானும் ஒரு காரணம் என்று என்னிடமிருந்து தான் எண்ணிக்கையைத் துவங்குகிறேன்.

பனமலை ஓவியம் பற்றி கேட்டுக்கொண்டிருந்த நான், அதைத் தேடுவதற்கான முகவரியை திருவண்ணாமலையில் இருந்து தேடிக்கொண்டிருந்த போது அதை இணையத்தில் பதிந்துவைத்தவர்களில் எந்த அகழ்வாராய்ச்சி நிபுணர்களின் அல்லது பயணக் கட்டுரை எழுத்தாளர்களின் கட்டுரைகளில் கிடைக்காத தகவலெல்லாம் வாரவழிபாட்டுக் கூட்டத்தில் அங்கத்தினராய் இருந்தவரின் வலைப்பதிவில் மட்டுமே கிடைத்ததும்; திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் பக்தர்களுக்கு சஞ்சலத்தை உருவாக்குமென்ற குரங்குச்சிலையின் ஆண்குறியை உடைத்துவிட்டு அதில் ஒரு மின் முரசை அமைத்தவர்கள் செயலும் முரண். அடிப்படைக்கலையுணர்வு என்பது துளியுமற்ற சமூகத்தில் இது போன்ற சம்பவங்களை எதிர்கொள்வது இயல்பு தான்.
சிவகாசியில் இருக்கும் நமக்கு ஊர் வரலாற்றைச் சொல்லித்தருவதற்கு கோயில் தல வரலாற்றைத் தவிர வேறொன்றுமில்லை என்பது ஆறுதலான சேதி தான். திருத்தங்கலில் இருக்கும் டெரகோட்டா மண்பாண்டங்கள் பற்றியோ அல்லது சிலப்பதிகாரத்தில் வரும் வார்த்திகன் கதை திருத்தங்கலில் வைத்து நடைபெற்ரது என்பது எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும். ஆறாம் நூற்றாண்டுக் குடைவரை என்று சொல்கிறார்கள், கோயிலின் நிழற்படங்கள் இணையத்தில் கிடைக்கும் பொழுது அது கவலையளித்தது. குறைந்தபட்சம் 1500 ஆண்டுகள் பழமையான கோயிலின் பழமை எவ்வாறெல்லாம் அழிக்கப்பட்டு வருகிறது என்று. ஒரு பக்கம் அகழ்வாராய்ச்சி அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவை கேட்பாரற்று சிதிலமாகிவிடுகின்றன என்பது ஒருபுறமும், மற்றொரு பக்கம் அப்படி அவர்களை கையில் சிக்காமல் மக்களோடு இணைந்திருக்கும் கோயில்களை நான் புது வர்ணப்பூச்சுகளாலும், கிராணைட்களைக் கொண்டும் முறையற்ற மறுவுருவாக்க வேலைகளில் தன் தொன்மையை இழக்கின்றது. எத்தனையோ முறையற்ற கிராணைட் குவாரிகளில் லாபக்கணக்கில் கல்வெட்டுகளும், வரலாற்றுச் சின்னங்களும் அழிந்து போகின்றன.

 அர்ஜுனா நதி எனும் நதி இம்மாவட்டத்தில் தான் பாய்கிறது இன்று வரை அதில் அகழ்வாய்வுகள் நடந்தவண்ணம் இருக்கின்றன. அகழ்வாய்வுகளைப் பற்றி அவ்வப்போது செய்தித்தாள்களில் செய்திகள் வந்தாலும் அது நம்மைச் சேரப்போவதில்லை. ஏனெனில் நாம் தான் வைப்பாறு, அர்ஜுனா நதியை பாதுகாப்பதற்காக நிர்மாணம் செய்யப்பட்ட கோயிலான இருக்கண்குடியில் சாமியின் பெயர் சொல்லியே அதன் வழிகளை அடைத்து விட்டோமே. வேடந்தாங்கள் போன்ற புகழ்பெற்ற சரணாலயங்களுக்கு வரும் வாய்க்காலில் எப்படி புதிய வீட்டு மனைத்திட்டங்களின் வரவு பறவைகளை ஏமாறச் செய்தன என்பது புதிய செய்தி, நம் ஊருக்காக இறக்குமதி செய்யப்பட்ட சீமவேலி மரங்கள் அதையே செய்ய ஆரம்பித்து சில பத்து வருடங்கள் ஆகிவிட்டன.

கழுகுமலை தமிழகத்தின் எல்லோரா என்று சொல்லப்படுகிறது, அர்ஜூனா நதியின் ஆற்றுப் படுக்கைகளில் கிடைத்து வரும் டெர்ரகோட்டா (மண்பாண்டங்களின் சிதிலங்கள்) அது கலக்கும் வேம்பார் கடல் பகுதி வரை நீண்டிருக்கலாம் பெரிய பொக்கிஷங்கள் சீமைவேலிக் காடுகளுக்குள் இருக்கலாம் (அவை தான் கொற்கைத் துறைமுகம் வரை நீண்டிருக்கும் நாகரிகத்தின் சுவடுகளாக இருக்கலாம்) ஆனால் சுரண்டப்பட்ட மணல் மாஃபியக்களின் இயந்திர ஓந்திகளின் பெரிய சக்கரங்களில் நசுக்கப்பட்டிருக்கும். தங்கள் காதல் வரலாற்றைச் செதுக்காமல், வரைவதற்கு ஏதுவாய் - கழுகுமலையின் வெட்டுவான் கோயிலில் வெள்ளையடித்தது நற்செயலே என்று சொல்லலாமா??
திருத்தங்கலின் சுதைச் சிற்பங்களில் இருப்பது இயற்கையான வண்ணம் தானா ? என்று அந்தப் பச்சை வண்ணத்தைப் பார்த்தபடி, குடைவரையைத் தேடினேன். ஒருவேளை நமக்குக் கிடைத்தத் தகவல் பொய்தானா ??

அத்தனை பிரம்மாண்டக் கோயில் ஒரு குடைவரையைத் தொடர்ந்து எழுப்பப்பட்டது என்று எனக்குத் தந்த அந்த மனிதர் பொய் சொல்லிவிட்டாரா என்றபடு கதவுகள் பூட்டப்பட்டிருந்த தெப்பத்தின் சிதிலமடைந்துக் கொண்டிருக்கும் படித்துறையை கவனித்தபடி.. இது இயற்கையான குளம் தான், வணிகத்தூது செல்லப் புறப்பட்டிருக்கும் சமணத் துறவி இந்தக் குளக்கரையைக் கடந்திருந்தால், இங்கே நிச்சயம் ஒரு குடைவரையை வைத்திருப்பான் என்று தெப்பத்திற்கு எதிரே இருந்த பள்ளி கொண்ட பெருமாளை மீண்டும் தரிசிக்க சென்றோம். மேற்கூரை மண்டபத்தை பார்த்தபடி சென்றோம், உள்மண்டபம் ஒரு குடைவரையின் தோற்றத்தைத் தந்ததுஅது ஒரு கிராணைட் கோயிலாகப் புதிப்பிக்கப்பட்டிருந்தது. குடைவரைகான எந்தச் சுவடும் பெருமாளை அடித் தொழ வரும் பக்தர்களுக்குக் கிடைக்காது. “சமணன் வெற்றி கண்டான், கடைசியில் சிவகாசி வணிகர்கள் இயற்கையைச் சுரண்டிய பாவத்திற்கு பரிகாரம் தேடியிருப்பார்கள் போலஎன்று சொல்ல, மண்டபத்தின் முதல் தூணில் இருந்து ஒரு பெண் குரலில் சிரித்த ஒலி. அந்தச் சிற்பம் எந்த தேவியோ, யக்‌ஷியோ தெரியவில்லை ஆனால் அவளுக்கு நைட்டி அணிவிக்கப்பட்டிருந்தது.

நைட்டி அணிந்த அந்த தேவதையிடம் விடை பெற்றேன்

திங்கள், 23 பிப்ரவரி, 2015

பஜ்ஜி-சொஜ்ஜி -- எத்தனையாவதோ??


ஒரு DISTORTED கவிதையும் - ஒரு ILLUSTRATIONம்
இளங்கோ - REDEFINED



என்னளவில் - கவிதை எழுத முயற்சித்தவைகளை எல்லாம் அடியோடு நிறுத்திய பின்பு தான் கவிதை மொழியுடனான நெருக்கம் அதிகரிக்க ஆரம்பித்தது. Xpress கமெண்டுகளைக் கேட்கும் மின்னுலகில் கவிதைகளைப் போகிறபோக்கில் வாசித்துச்செல்லுதலில் உடன்பாடு இல்லாததால் நிதானமாகவும், குறைவாகவும் வாசித்து வருகிறேன். இருந்தபோதும் கவிதையையோ அல்லது வேறு எந்த கலைவடிவங்கள் குறித்தும் பேசுவதற்கான குறைந்தபட்ச தைரியத்தை ஓவியங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன.
**

ஒருவனின் கவிதைச் செயல்பாடுகளில் இருக்கும் தொடர்ச்சி சுவாரஸ்யம் அளிப்பவையா?? சுவாரஸ்யம் என்ற அடிப்படையை தவிர்த்தால் கூட, தொடர்ச்சியான ஒரு வடிவம், தொனி, சொற்கள், ஏன் தத்துவங்கள் கூட நீர்த்து தான் போகின்றது. அவை STATIC ஆக இருந்தால்.

இளங்கோ (கவிதைக்காரன்), இவனுடைய கவிதைகளை தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். தொடர்ச்சியாக கேள்விகள் எழுப்பவும் - விவாதங்கள் செய்துவருவதும், எங்களுக்கிடையேயான வரவு – செலவுச் சிட்டை போலே அடிக்கடி மாற்றிக் கொள்ளப்படும். நிறையவே விமர்சனங்கள் செய்வதுண்டு, சில சமயம் அலுப்பூட்டும் படிமங்களில் நொந்து கொள்வதுமுண்டு – இந்தக் குதிரையை ஃபாலோ செய்யும் பாவ்ன்களின் மூன்று கட்ட நகர்வுகள் மீதும் குற்றச்சாட்டு வைப்பதுண்டு. ஆனால் அசலான ஒரு கலைஞனுக்கு நிகர்வது தான் இவையெல்லாம். இதுவரை தனிப்பட்ட வியாக்யானங்கள். இவரது கவிதை ஒன்றைப் பொதுவில் வைத்துப் பேசினால் என்ன என்று தோன்றியது.

**

இளங்கோவிடம் – நேற்று கேட்டேன், உங்களை உங்கள கவிதைகளின் தற்போதைய இருப்பிடத்தை Dislocate செய்ய முடியுமா என்று? 

மெட்ரோ கவிதைகள் எழுதிய இளங்கோவாக இல்லை என்று சிலர் இவரை விம்ர்சிப்பது போன்றே, இளங்கோ தற்பொழுது நிற்கின்ற இடத்தை திடுமென மாற்றிவிட்டால் எப்படியிருக்கும் என்று பார்த்தேன். இதற்கு முன் அவர் எழுதிய ஐ ஆம் சாரிகவிதைகளில் அதற்கான முயற்சி இருந்தது. சென்ற Pleats அமர்வில் அதுபற்றி விவாதித்தோம். நேற்றைக்கு இளங்கோ எழுதியிருந்த கவிதையைக் குறித்து நான் எழுத முனைவதற்கு காரணம் அவர் அப்படி தன்னை DISLOCATE செய்துவிட்டார் என்று நம்புகிறேன்.

கவிதை நல்லா இருக்கு – நல்லா இல்லை – என்பது போன்ற தீர்ப்புகள் இயங்கும் வெளி வேறு. இது ஒரு ஜீன் டெஸ்ட்.


ரொம்ப காலமா..
*
இந்த இரவை பசியோட கடத்தனும்னு தீர்மானம் செஞ்சப்போ
பசி என்னக் கொஞ்சங் கொஞ்சமா சாப்பிடத் தொடங்கிச்சு
இத வேடிக்கைப் பார்க்கிற 'நான்' வெளியே நிக்கனும்
உடம்போட பெயர் அழியறத மூளைக்குத் தகவல் அனுப்பனும்
ரெண்டுமே வெவ்வேற கருத்துங்கற கட்டளை எங்கருந்து வருதுன்னு ஞாபகத்தைக் கேக்கறேன்
கட்டுமானத்தைக் குலைக்கும்போது ஒரே சீர்ல அது சரியாது -ங்கற சமிக்ஞையின் திசையிலேருந்து வர்ற குரலை இதுக்கு முன்னாடி எங்கயோ கேட்டிருக்கேன்
பாதி நிரம்பின வயிறோட, 'கனவைத் தேடு - நிற்காதே போ 'ன்னு கையசைச்சு என்ன விரட்டுது, என் பசி
அய்யோ..! 'என் பசின்னு' சொல்லிட்டேனே-ங்கற பதட்டத்துல மொழிய மறக்கறேன்
சிக்மண்ட் ஃபிராயிடுன்னு ஒரு பெரியவர் இங்க பக்கத்து ஊருல நகுலன்ற புனைப்பேர்ல கடைசி காலத்துல தனியா வாழ்ந்திட்டிருந்தாரு
ஆனா அவரு என் மொழிக்காரர் கிடையாது
அவரோட வீடு இருக்கிற இடம் தெரியும்
பலமுறை கதவைத் தட்டிட்டு அது முழுசா திறக்கறதுக்குள்ள பயத்துல ஓடி வந்திருக்கேன்
வாசல்ல மௌனின்னு பேர் பலகை கூட இருக்கும்
இப்போ முழுசா மொழி மறந்து ஒரேயடியா தீர்ந்து போறதுக்குள்ள அந்த வீட்டோட கொல்லைப்புறத்துக்கு எப்படியாவது போயிடனும்
காஞ்ச சருகு சத்தங்கள உருட்டுற கனவோட அடையாளம் - அங்க வாசனை இல்லாம மட்கி கிடக்குதுன்னு ராமச்சந்திரன் சொன்னான்
எந்த ராமச்சந்திரன்?-ன்னு கேக்க கூடாதுல்ல..!
'பசிக்கு' வயிறு ரொம்பிருச்சு
காதுக்கு தான் சுத்தமா சாப்பாடே இல்ல
மே மாசம் ஆரம்பிச்சதும் கொளுத்த போற வெயில்ல தலையில துண்ட போட்டுக்கிட்டு
இத பொய்யின்னு எப்படி கத்தறது
சே..!
முதல் ஷிப்டு சங்கு சத்தத்தை நகலெடுக்குது இந்தப் பசியோட ஏப்பம்
வெளியே நிக்கிற 'நான் '-ஐ உள்ள கூப்பிட முடியல
உடம்பு மறந்து போச்சு
பசி சத்தம் காத அடைக்குதுன்னு இனி சொல்ல முடியாதே
சருகோட வாசனைல பேரு மட்கி போற அடையாளத்தை புதுசா அடுக்கி அத ஒரே சீர்ல குலைக்கிறதுக்கு
கனவையெல்லாம் தேடச்சொல்லி கிளாஸ் எடுக்க வேண்டாம்ன்னு
சிக்மண்ட் தாத்தாக்கிட்ட தகவல கடத்த
ராமச்சந்திரன அனுப்பி வச்சா..
அவன் மௌனியோட வாசல்ல போயி பேசாம உட்கார்ந்துட்டான் ரொம்ப காலமா

- கவிதைக்காரன் இளங்கோ

 *******

இளங்கோ என்ன செய்திருக்கிறான் இங்கே?? வேறு வடிவம், சொற்கள், படிமங்கள் இவற்றைக் குறித்து தனித்தனியாக பேசாமல் – ஒட்டுமொத்தமாக இந்தக் கவிதை எப்படிப் பார்க்கிறேன் என்றால் இது ஒரு DISTORTED FORM. அப்படியென்றால் ??

SKILL ஒரு தொந்தரவாக நவீன கவிஞனுக்கு இருக்கிறதா என்று ஒரு கேள்வி எழுந்தது. POST MODERN ERA – அதற்கான வெளியைத் தருகிறதா? ,  ஒரு ஓவியரோடு ஒர் இரவில் ஆரம்பித்த அவரது ஓவியமொன்றை பார்த்துக் கொண்டே இருந்தேன் – அவர் தொடர்ச்சியாக வரைந்த  17 மணி நேர உழைப்பில் உருவாக்கிய கான்வாசில் அவர் அதிகச் சிரமங்களை எடுத்துக் கொண்டது இதற்குத் தான் - DISTORTION... அங்கு ஒரு போலியான ட்ரிப்பிங்கை உருவாக்கினார். 

புரிந்து கொண்டேன்.
அதற்குப் பெயர் தான் Distortion.

இளங்கோவின் இந்தக் கவிதை ஒரு டிஸ்டார்சன் ஃபார்ம் தான், தனது கவிதைகளுக்கு இல்லஸ்ட்ரேஷனாக நவீன ஓவியங்களைத் தொடர்ந்து போடும் இளங்கோவின் இந்தக் கவிதைக்கு நான் ஒரு விபரணைப் படைப்பைத் தேர்வு செய்கிறேன். பிகாஸோவின் குவெர்னிகா ஓவியத்தின் தொடர்ச்சியாக அவர் வரைந்த அழும் பெண் (WEEPING WOMEN) ஓவியம். க்யூபிசம் பற்றிப் பேசும் போது எல்லோர் நினைவுக்கும் வருவது குவெர்னிகா ஓவியம் தான். அடுத்ததாக அவர் வரைந்த ஓவியம் இவற்றிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டிய அவசியம் பிகாஸோவுக்கு ஏன் வந்தது?? இதைச் செய்யாவிட்டால், குவெர்னிகா மாஸ்டர் பீஸ் ஆகியிருக்குமா?? 

ஒரு பெண் அழுகின்ற VISUAL , ஒரு போரின் நினைவுகளாகுமா?? நேரடியாக ஆகாது தான். ஆனால் ஒரு யூனிட் வலியை பிரபஞ்சப்படுத்தும் போது (பொதுத்தன்மைப் படுத்தும் போது) அது ஒரு ஊரின், நாட்டின், உலகின் வலியாக தன்னை represent செய்து கொள்கிறது.

தனிமனிதனின் ராட்சஸ, அகோரப் பசி அதைச் செய்கிறது – இதற்கு முன் எழுதிய அவர் கவிதையை மாஸ்டர் பீஸ் ஆக்குகிறது. தன்னை
DISLOCATE செய்து, தன் நண்பர்களுடன் (ஃபாலோயர்ஸ்) முரண்படுகிறது. 

ஒரு கவிதைக்கான விளக்கம் கொடுப்பதை விட துயரமான வேலை ஒரு கவிஞனுக்கு இருந்துவிடாது, இன்றைய முகநூல் பதிவேற்றங்களில் இரண்டைத் தவிர்த்தால் கவிதைக்கு நல்லது - ஒன்று விளக்கம் தருவது, அதை விட முக்கியமான ஒன்று கவிதைக்கு TAG செய்வது..

Well done Elango - உங்களுக்கு ஒரு முட்டை போண்டா, அப்புறம் ஒரு மசால் போண்டா. எனக்கு மசால் போண்டா மட்டும்.



---

பஜ்ஜி -சொஜ்ஜி இன்னும் வேற FLAVOR-இல்
ஜீவ கரிகாலன்