அசுரன் ஆளும் உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அசுரன் ஆளும் உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 பிப்ரவரி, 2014

பஜ்ஜி - சொஜ்ஜி - 61 ; அசுரன் ஆளும் உலகு

        


ஆதார் தேவையில்லை
முந்தைய பதிவுகளுக்கான சுட்டி இங்கே

ஆதார் அட்டை இல்லை என்ற காரணத்தினால், யாருக்கும் அரசின் சலுகைகளை மறுக்கக் கூடாது. சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டவர்க்கு ஆதார் அட்டை வழங்கப்படக் கூடாதுஎன ஆதாருக்கு எதிரான வழக்கில் செப்.23 அன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்றம்.  ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு என்று அத்தியாவசியமான அடையாள அட்டையாக இருக்க வேண்டிய ஆதார் கார்டு நாட்டின் ரகசியங்களை உலகிற்கு விற்கப் பயன்படும் கருவியாகவும், மக்களைச் சுரண்டுவதற்குத் தேவைப்படும் கருவியாகவும் மட்டுமே செயல்படும் என்பது மட்டும் உண்மை.

ஆதார் அட்டையை எதிர்ப்பது நாட்டின் பாதுகாப்பை எதிர்ப்பது என்று ஒருபோது ஆகிவிடாது, மாறாக உலகின் வளரும் நாடுகளின் மக்களை, மக்களின் சேமிப்புகளை, அந்நாட்டின் ரகசியங்களை எல்லாம் உலக வங்கியின் நிர்பந்தம் என்ற பெயரில் நேட்டோ நாடுகள் போன்ற ஒரு சில நாடுகள் மற்றும் அந்நாட்டின் பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவதில் இருந்து மீட்டெடுத்து நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகும்.

சமீபத்தில் உலக வங்கி நடத்திய கருத்தரங்கில் பேசிய நந்தன் நிலேகனி, 19-ஆம் நூற்றாண்டில் வட அமெரிக்க கண்டத்திற்கு பிழைக்க வந்த ஐரோப்பியர்களை, கனடாவின் எல்லிஸ் தீவைச் சேர்ந்த குடியேற்றத் துறை அதிகாரிகள் அங்கு குடிவந்த வெவ்வேறு நாட்டினரின் பெயர்களையெல்லாம் ஆவனங்களில் இருந்து நீக்கி விட்டு, ஒவ்வொருவருக்கும்  அந்த அதிகாரிகளே ஒரு பெயரை சூட்டி, இனி இந்த நாட்டில் இதுதான் உன் பெயர் என்று அறிவித்தார்கள். ”ஆதார் என்பது உலகின் பிரம்மாண்டமான பெயர் சூட்டும் விழாஇது 21-ஆம் நூற்றாண்டின் எல்லிஸ் தீவுஎன்றார் நிலேகனி
வெவ்வேறு மொழி பேசும், இனம், மதம், கலாச்சாரம் கொண்ட மக்களை பார் கோடு ஆக்கும் முறை தான் ஆதார் கார்டு என்று விளங்குகிறது.

சென்ற மாதம் கூட மதுரை ஹைகோர்ட்டு, ஒரு குடும்பத்திற்கு சமையல் எரிவாயு மானியம் பெற ஆதார் அட்டை அவசியமில்லை என்று தீர்ப்பளித்தது. உண்மையில் ஆதார் அட்டையின் தொழில்நுட்பம் அத்தனை பாதுகாப்பானதா?? ஒரு நிபுணரிடம் விசாரித்தேன்.

நுகர்வோர் நல ஆர்வலரான திரு.விசுவநாதன் பகிர்ந்து கொண்ட தகவலின் படி
ஆதார் கார்டு நாட்டின் பாதுகாப்பிற்கு மிக அவசியமானது என்ற போதிலும், அந்தப் பாதுகாப்பு அம்சத்தை ஒப்படைத்திர்க்கும் கைகள் தான் பிரச்சினைக்குரியதாகத் தெரிகிறது. WWW போர்டலில் இருக்கும் நமது அரசாங்க இனையங்களின் பாதுகாப்பிற்கே உத்தரவாதம் இல்லாத நிலைமையில் இது போன்ற பாதுகாப்பு அம்சங்களில் எந்த உத்திரவாதமும் இல்லை.
·         அடிப்படையில் ஆதார் கார்டு மூன்று அம்சங்களைத் தகவலாகத் திரட்டுகிறது:1. பயோ மெட்ரிக் எனப்படும் கண்கள் மற்றும் விரல்களின் ரேகைகள் ஆகியவற்றின் தகவல்கள், நிழற்படம் மற்றும் குடிமகனின் இதர் ஆவனங்களின் தகவல்கள். இதில் ஒரு குடிமகனின் கைரேகைகள் எந்த ஒரு குற்றமும் இன்றி பதியப் படுவது ,ஒரு தனி மனிதனுக்கான அடிப்படை உரிமை மீதான அத்துமீறல் என்று அரசியல் சாசனமே கூறுகிறது. ஒவ்வொரு குடிமகனின் பயோ மெட்ரிக் தகவல்களையும் சேமித்து வைத்திருப்பதற்கு முன்பு நீதிமன்றத்தின் ஒப்புதலை பெற்றிட வேண்டும், ஆனால் இதற்கான சட்ட திருத்தம் இன்னும் செய்யப் படவில்லை.
·         உண்மையில் தொழில்நுட்பத்தில் இருக்கும் பிரச்சினையாக இதில் வரும் உறுதியளிப்பு எவ்வளவு தூரம் நடை முறையில் இருக்கிறது என்றால் அதற்கு பதிலில்லை தான். இந்த திட்டத்தின் படி ஒவ்வொரு குடிமகனுக்கும் தன்னால் அளிக்கப்பட்ட தகவல்களை உறுதிப் படுத்த அவருக்கு 4 நாட்கள் வரை அவகாசம் கொடுக்கப் பட்டிருக்கிறது, ஆனால் இதைத் திருத்துவதெற்கென்ற சிறப்புக் கவுண்டர்களோ, இந்த தகவல்களை (முக்கியமாக பயோ மெட்ரிக்) உறுதிப்படுத்திக் கொள்வதற்கு எந்த ஒரு குடிமகனுக்கும் வாய்ப்பு வழங்கப் படுவதில்லை. இதனால் வரும் ஆபத்து தான் DATA MIS-MATCH, ஒரு குடிமகன் சங்கேத எண்ணாகப் பதியப் பட்ட பின் அவனாக நினைத்தாலும் தவறான தகவல்களை மாற்றிவிட முடியாது.
·         ஒருவர் தன் தகவல்களை ஆதார் மூலம் பதிவு செய்தால், இணையத்தில் சென்று அதை சரிபார்த்துக் கொள்ள இடமிருந்தும், வழங்கப்பட்ட பல அட்டைகளுக்கு இன்னமும் இணையத்தில் தகவல்கள் சேமிக்கப்படவில்லை.
·         பல ஊர்களின் ஏற்கனவே வழங்கப்பட்ட ஆதார் கார்டு, திரும்பப் பெறப்பட்டு, புதிய அட்டையாக வழங்கப்பட்ட விதம் தான் இது குறித்த சந்தேகத்தை எழுப்பியது. அதாவது இந்த அட்டை 2010ல் வழங்கப் பட்ட போது வெறும் அடையாள அட்டையாகவும், இப்போது SMART CARD ஆகவும் மாறிவிட்டது என்று சொல்கிறார்கள்.
·         50% சதவீத மக்களின் அடையாளங்கள் இந்த திட்டத்திற்காக சேமிக்கப்பட்டாலும், பொதுவாக குடும்பத் தலைவருக்கு மட்டும் இந்த அட்டை வழங்கப்படுவதற்கு தாமதம் ஆவதாகத் தெரிகிறது, இதற்காக நடைபெற்ற ஒரு சிறிய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த தாமதம் குடிமைப்பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு போன்றவை குடும்பத் தலைவரின் பெயரிலேயே வழங்கப் படுவதால், இதில் சின்ன சிக்கல் ஏற்பட்டாலும் அரசு தரும் மானியங்கள் -குடிமகனைச் சேர்வதற்கு வழியில்லாமல் போய் விடும்
·         எல்லாவற்றிற்கும் மேலாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பிற்கும் குடிமக்களுக்கு மட்டுமின்றி அதில் வேலை செய்யும் ஊழியர்களுக்குமே இதில் பிரச்சினைகள், உறுதியளிக்க இருக்கும் அவகாசம், அட்டை வழங்கப்படும் முன் இணையத்தில் ஏற்றப் பட வேண்டிய தகவல்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பது தான் கவலைக்குரிய விசயம். இதனால் பாதிப்படையப் போவது நடுத்தர மற்றும் ஏழை ஜனங்களே.

  எல்லா வகையிலும் ஆதார் அட்டைக்கான எதிர்ப்புகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

நன்றி

-ஜீவ.கரிகாலன்



செவ்வாய், 15 அக்டோபர், 2013

அசுரன் ஆளும் உலகு (பஜ்ஜி - சொஜ்ஜி 42 )

                    தண்ணீர் காட்டும் எண்ணெய் நிறுவனங்கள்

சுப்ரீம் கோர்ட் கடந்த செப்டம்பர் 23ம் தேதி ஒரு முக்கியமான திர்ப்பை வழங்கி மத்திய அரசுக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது தான் பொதுமக்கள் தங்கள் மானியத்திற்காக ஆதார் கார்ட் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தியது தான். ஆதார் கார்ட் இல்லாதவர்களுக்கும் மானியம் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் சொன்ன தீர்ப்பு ஒரே நாளில் அரசின் 50,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்தின் பெரும் தோல்வியாக நாம் பார்க்க இடமளிக்கிறது.

இந்த தீர்ப்பினை எதிர்த்துப் போராட மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்கள் அவர்களுக்கு விலை போன மீடியாக்கள் என்று ஒரு குழுவாக களத்தில் இறங்கி இந்த தடையை தளர்த்த போராடுகிறார்கள்

எதற்காக இந்த தடை?

சுப்ரீம் கோர்ட் கீழ்கண்ட அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த தீர்ப்பினை வழங்கியிருக்கிறது.

1. பொது மக்கள் எல்லோராலுமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த ஆதார் அட்டையினை வாங்கிட முடியாது,
  - இது அரசின் புள்ளியல்  மற்றும் கணக்கெடுப்புத் துறையின் பலவீனமான செயல்பாட்டை சுப்ரீம் கோர்ட் சரியாகக் கணக்கில் கொண்டுள்ளதைக் காட்டுகிறது.

2. ஆதார் அட்டை வழங்குதலில் உள்ள முறைகேடு மற்றும் குழப்பங்கள்
- போலியான அட்டைகள், பணம் வாங்கிக் கொண்டு முறைகேடாகத் தரும் அட்டைகள் (ஆந்திராவின் ஒரு பகுதியில் ரூ.200/-க்கு முறைகேடான் ஆதார் அட்டை வழங்கிய கும்பல் போன மாதம் கைது), குளறுபடியாக பிரிண்ட் செய்யப்பட்ட அட்டைகள்(பெயர், போட்டோ மாறியிருத்தல் மிகச்சாதாரனமாக காணப்படுகிறது)
- எத்தனை பேருக்கு ஆதார் அட்டைக்கான சான்றுகள், விண்ணப்பிப்பதற்கான விடுப்புகள், வங்கிக் கணக்குகள் இருக்கின்றன? எத்தனை கிராமங்களில் வங்கிகள் இருக்கின்றன?

3.ஆதார் அட்டையினால் லாபம் அடைபவர்கள் யார் யார்..

மூன்றாம் கேள்விக்கான விடை சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வந்தவுடன் காலில் வெந்நீர் ஊற்றியது போலே குதித்துக் கொண்டு எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாட்டை கவனித்தால், இவர்களுக்கு இருக்கும் நிஜ ஆதாயம் என்ன என்று புரியும்.

Economic Timesல் இந்த தீர்ப்பினால் ஏற்படும் விளைவுகளைச் சுட்டிக் காட்டுகிறது, கள்ளச் சந்தையில் எல்.பி.ஜி சிலிண்டர்களை கட்டுப்படுத்தத் தவறினால் அரசுக்கு 01 பில்லியன் டாலர் வரை இறக்குமதி அதிகரிக்கும் என்று சொல்கிறது. இங்கே ஒரு லாஜிக்: ஆதார் கார்ட் உபயோகிப்பதால் எண்ணெய் இறக்குமதி குறையும் என்று எண்ணெய் நிறுவனங்கள் சொல்வதில் இந்நிறுவனங்களுக்கு என்ன லாபம் இருக்கிறது?. 

லாபம் இருக்கவே செய்கிறது!! அதாவது ஆதார் கார்டு வினியோகத்தில் உள்ள சாத்தியக் கூறு, இருக்கும் வாடிக்கையாளர்களில் ஒரு பத்து சதவீதம் பேரையாவது வடிகட்டி அவர்களுக்கு மானியம் இல்லாமல் சந்தை விலைக்கு கொடுக்க முடியும் என்பது அரசிற்கு ஒரு Extra Bonus. உங்கள் மாநகரங்களில் திடீரென்று முளைத்துள்ள சில தனியார் எல்.பீ.ஜி. கடைகளின் பெயர்கள் உங்களுக்கு ஞாபகம் வருகிறதா?? Total Gas, Super Gas..இவர்களுக்கான புதிய சந்தைக்கு பயன்படும் ஒரு முக்கிய நபர் இந்த ஆதார்.  

அப்படியென்றால் அரசினால் ஆதார் கார்டு இல்லாமலேயே கள்ளச் சந்தையைக் கட்டுப்படுத்த வேறு வழிகள் இல்லையா?? அரசு மட்டும் நினைத்திருந்தால் பத்து ஆண்டுகளுக்கும் முன்பாகவே RFID தொழில்நுட்பம் மூலம் வீட்டு நுகர்வுக்கு வரும் சிலிண்டரினை கள்ளச் சந்தையில் விற்பதை தடுத்திருக்க முடியும். ஏன் ஒட்டுமொத்த CIVIL SUPPLIESஐயும் கட்டுப்படுத்திட இந்த தொழில்நுட்பம் உதவும், ஆனால் அரசுக்கு இதன் மீதான் அக்கறை இல்லை என்பது மட்டும் உறுதி.

சரி இப்படி வைத்துக் கொள்வோம், முதலில் எல்.பீ.ஜிக்கான மானியத்தை இப்படி ஆதார் மூலம் வங்கிகளில் டெபாசிட் செய்தால், அடுத்ததாக ஒட்டு மொத்த CIVIL SUPPLIESன் மானியங்களும் வங்கிகளுக்குமே வரவு வைக்கப் படும், நாம் அதை எடுத்துக் கொண்டு ரிலையன்ஸ் ஃப்ரஸ் போன்ற சூப்பர் மார்க்கெட்டிலோ அல்லது தீபாவளிக்கு வெளி வரும் திரைப்படத்தைக் கான் முன்பதிவோ செய்யக் கூடும்.

எல்லோரும் 1004 ரூபாய் கொடுத்து சிலிண்டர் வாங்கிவிட வேண்டும், அரசு நாம் வாங்கியவுடன் 410.50 ரூபாயினை நம் வங்கியில் வரவு வைத்து விடும், இங்கே நாம் கவனமாக இருக்க வேண்டும், சரியாக குறைந்த வைப்புத் தொகையினை நாம் வங்கியில் வைத்திருக்க வேண்டும், இல்லையென்றால் உங்கள் மானியம் அபராதமாக வங்கிகளால் சுவாஹா செய்யப்படும். இதில் எத்தனை பேருக்கு எல்லா வங்கிகளிலும் NO FRILLS ACCOUNT இருக்கும் என்று தெரியும்?? ஆனால் NO FRILLS ACCOUNTஇனை வையர் ட்ரான்ஸ்பருக்குப் பயன்படுத்த முடியுமா என்று தெரியாது? மானியத்திர்காக மட்டும் வங்கிகளுக்குள் முதன் முறை நுழைபவர்களுக்கெல்லாம் ATM கட்டணங்கள், இதர வங்கிச் சேவை கட்டணங்கள் குறித்த விளக்கங்கள் தெரிவிக்கப்படுமா??

ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல முடியும் ஆதார் கார்டு இந்திய அரசியல் சாசனத்தின் 14,20 மற்றும் 21ஆம் பிரிவுகளுக்கு எதிரானது (Right to equality, live and liberty) என்பதை, ஆக இதற்கெதிரான பிரச்சாரம் மிக அத்தியாவசியமாகிறது

மராட்டிய மாநிலத்தில் ஆதார் கார்டு இல்லையெனில் திருமணப் பதிவு ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது என்று அரசு கூறியுள்ளது ஒருவேளை மக்கள் தொகைப் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்தும் யுக்தியா என்று தெரியவில்லை.
வரும் அக்டோபர் 22ம் தியதியில் வரும் தீர்ப்பினைச் சார்ந்து தான் இதன் முடிவு எப்படி இருக்கும் என்று யோசிக்க இயலும். அதுவரை எண்ணெய் நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினைக் கண்டு அஞ்சப் போவதில்லை...

அடுத்தப் பகுதியில் தீர்ப்பினை வைத்து விவாதிப்போம் ...

ஜீவ.கரிகாலன்




வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

அசுரன் ஆளும் உலகு - 03 (All seeing eye - Aadhar card)


தகவல்கள் கடத்தப் படும் பாதை - ஆதார் கார்டு



{முழுத் தொடரையும் வாசிக்க இங்கே சுட்டவும் (கீழிருந்து வாசிக்கவும்)}

சென்ற பதிவின் தொடர்ச்சியாக இந்தப் பதிவில், சி.ஐ .ஏ-வுக்கும் ஆதார் அட்டைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்த திட்டம் போது  இதன் (UIDAI) தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டவர்  முன்னாள் இன்பொசிஸ் தலைவர் நந்தன் நில்கெனி. அவர் தலைமையில் நாடு முழுவதும் இந்தத் திட்டத்தினை அமுல் படுத்துவதற்கும் , செயல் படுத்தி, கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் இந்த வேலைகளை சில நிறுவனங்களிடம் ஒப்படைத்தார்.

அந்த நிறுவனங்களில் முக்கியமானவை மஹிந்திரா-சத்யம் , அக்சென்சர் மற்றும் ஹெச்.பி  நிறுவனங்கள் தான் பிரதானம், இந்த நிறுவனங்கள் தமது தொழில்நுட்பப் பங்குதாரர்களாக முறையே, Morpho,  Mindtree மற்றும்  L1 Solutions (4G identity) ஆகிய வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களோடு கூட்டு வைத்திருந்தது தெரிய வந்தது.

 L1 solutions, இந்த நிறுவனத்தின் வரலாற்றைப் பார்த்தோமேயானால்: 2006ல் துவங்கப்பட்ட இந்நிறுவனம் ஆஃப்கன் மற்றும் ஈராக் போரின் போது அந்நாட்டு மக்களின் மொத்த தகவல்களையும் தமது நாட்டின் பாதுகாப்பிற்காக சேமித்து வைக்க முடிவு செய்தது, இது போன்று திரட்டப் படும் தகவல்கள் அந்நாட்டிற்கு வரும்  ஆபத்தான் ஊடுறுவல் மற்றும் சதிச்செயல்கள் நிகழ்ந்திருப்பின் அல்லாது நிகழா வண்ணம் பாதுகாப்பதற்கு உதவக்கூடும் என்று உறுதியாக நம்பியது. அதன் விளைவாக இந்த் (bio-metric)உயிரியளவு அடையாளப்படுத்தும் (identification) முறை சரியான தொழில்நுட்பமாகக் கருதியது, L1 solutions இந்த நேரத்தில் மிகப் பெரிய அளவில் இந்த வேலையைச் செய்து தரும் இந்தப் பணியை பெற்றிருந்தது.

George Tenet, முன்னாள் CIAவின் மூத்த அதிகாரி, ஈராக் போரின் போது நிறைய ஊழல் புகாரால் குற்றம் சுமத்தப் பட்டவர், ஒரு வருடம் இந்நிறுவனத்தின் இயக்கனராக இருந்திருக்கிறார். அதற்குப் பின்னர் தான் L1 Solutions நிறுவனத்திற்கு ஈராக், ஆஃப்கன் மற்றும் அமெரிக்காவின் சிவில் அடையாள அட்டைக்கான பெரிய பெரிய தொழில் வாய்ப்புகள் எல்லாம் கிடைக்கின்றன. வலைதளங்களில் தேடினாலே கிடைக்கின்றன, L1 solutions மற்றும் அமெரிக்கப் புலனாய்வுத் துறை ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பைப் பற்றிய செய்திகள் எளிதாகக் கிடைக்கின்றன. அப்படித் தான் இந்திய நிறுவனமான சத்யம் நிறுவனத்தின் மூலமாக இந்தியாவிலும் தன் காலைப் பதித்தது இந்நிறுவனம்.

இந்தியா மட்டுமல்லாது, சீனாவிலும் தேசிய குடிமகன்களுக்கான் அடையாள அட்டை வழங்கும் பணியில் பெருவாரியான சதவீதத்தை பெற்றுக்கொண்டது இந்நிறுவனம். மார்ஃபோ எனும் நிறுவனம் L1 solutions நிறுவனத்தின் பங்குகளை வாங்கி தன்னோடு இணைத்த பின்னர் சாஃப்ரான் குழுமம் எனப்படும் மார்ஃபோ அறக்கட்டளை, உலக அளவில் தன் கிளை நிறுவனங்கள் மூலம் பெற்ற தரவுகளை ஒருங்கிணைத்தது. இதன் மூலம் உலகம் முழுமைக்கும் மிக முக்கியமான ஆவனமாக இந்த தரவுகள் ஒரே சர்வருக்குள் தகவல்களாக சேமிக்கப் பட்டன. லத்தீன் -அமெரிக்க, சீனா, இந்தியா, அரேபியா, வளைகுடா என பல நாடுகளின் மொத்த குடிமகன்களாக அந்தத் தரவுகள் இருக்கும் என்பது மற்றும் உறுதி.

உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஸ்நோடென் பற்றிய செய்தி உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா, அமெரிக்கப் புலனாய்வு ஏஜன்சியில் பார்த்து வந்த வேலையில் தெரிந்து கொண்ட தகவல்களின் படி பார்த்தால், அமெரிக்க மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் மற்ற நாடுகளின் டெலிபோன் ஒட்டுக் கேட்பு, இணையம் வாயிலாக தகவல்கள் திரட்டுதல் என மிக ஆபத்தான விளைவுகளைத் தரும் அளவிற்கு சேகரித்துள்ளது. அசட்டையான நமது இந்திய அரசின் செயல்பாடுகளில் இருந்து வரும் பல ஓட்டைகளில் ஒன்று தான் இந்த் ஆதார் கார்டு.

இதுவரை எப்படி இந்த தகவல்கள் திருட்டினால் ஏற்பட இருக்கும் ஆபத்துகள் குறித்துப் பார்த்தோம், இதற்கு முன்னர் நம் நாட்டிற்குள்ளேயே இந்த அட்டைகள் என்ன மாதிரியான விளைவுகளை எல்லாம் ஏற்படுத்தும் என்று பார்த்து விடுவோம்.


- ஜீவ கரிகாலன்





வியாழன், 8 ஆகஸ்ட், 2013

அசுரன் ஆளும் புதிய உலகம் -02 / All Seeing Eye

அசுரன் ஆளும் புதிய உலகம் -02 / All Seeing Eye

சென்ற பகுதியில் ஆதார் கார்டு ஒரு ஆபத்து என்று அறிமுகப் பகுதியாகப் பார்த்தோம்,  அது எப்படி நமது நலனுக்கு எதிரானது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இதன் அடிப்படைத் தன்மை மற்றும் வரலாற்றில் நடந்த வேறு சில தவறுகளையும் இதே நோக்கில் ஆராய வேண்டும். இதனை எதிர்ப்பது என்பது ஒரு தொழிற்நுட்பத்திற்கு எதிராக நிற்கும் செயல், ஒரு திட்டக் குழு பரிந்துரைத்த திட்டத்தின் வடிவத்தை எதிர்க்கும் கருத்துகள். இன்றைய நிலையில், தமிழ்ச் சூழல் ஏற்கனவே மிகப்பெரிய ஒரு தொழில்நுட்பத்திற்கு எதிராக தன் கருத்தை உலக அரங்கில் பதிவு செய்துக் கொண்டிருக்கிறது என்பதே என்னை எழுதத் தூண்டுகிறது.

ஆதார் கார்டு அல்லது UID (unique identification (UID) number) என்பது நாட்டிற்கே பொதுவான, குடிமகன்களுக்கான அடையாள அட்டை ஆகும். நாட்டிற்கே பொதுவான அட்டையாக வாக்கு அட்டை, கடவுச் சீட்டு, மாநில அரசு வழங்கும் குடும்ப அட்டை என எத்தனையோ அட்டைகள் இருக்க, ஆதார் அட்டை ஏன் அவசியம் ஆகிறது? என்றால். இன்றைய நாட்களில் பொதுவாக நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக இருக்கும் பயங்கரவாதம் மற்றும் குற்றங்களைத் தடுக்கும் முயற்சிக்கு உதவக் கூடிய தொழிற்நுட்பம் தான் UID எனப்படும் பயோ மெட்ரிக் அடையாள அட்டை.  இந்த அட்டையின் மூலம் ஒவ்வொரு குடிமகனின் முழு அடையாளங்கள் சேமிக்கப் படுகிறது, கைவிரல் ரேகை, விழி மற்றும் முகத்தோற்றம் போன்றன சேமிக்கப் படுகிறது. கார்கில் போருக்குப் பிந்தைய சூழலில் தேசிய அளவில் ஒரு பொது அடையாள அட்டை பாதுக்காப்பிற்கென நிதி ஒதுக்குவதன் அவசியம் சரியானது தான். ஆனால் அது நடைமுறைப் படுத்தப் படும் முறையில் தான் பெரிய சிக்கல் வந்திருக்கிறது.

இந்தச் சிக்கலைப் பற்றி கவனிப்பதற்கு முன் ஒரு சிறிய வரலாற்றைப் பார்க்க வேண்டும், அது 1992-இல் இந்தியாவில் தொலைத் தொடர்புத் துறையில் கட்டுமானப் பணிகளை முடுக்கி விட்டிருந்த ராஜீவ் காந்தி அரசின்(இன்று வரை -அதை சாதனையாகச் சொல்லி வரும் கட்சி அறிக்கைகள் ஒரு புறம்) திட்டத்தின் மூலம் தனது முதல் காலடியை எடுத்து வைத்தது ஒரு பிரபல நிறுவனம். எடுத்த எடுப்பிலேயே PPP மூலம் கால் பதித்ததால் தனது வளர்ச்சியை பத்து ஆண்டுகளுக்குள் மிகப் பிரபலம் ஆக்கிவிட்டது, அதன் பெயர் தான் HMTL (HUTCHISON MAX TELECOM LIMITED). இப்படி நம் நாட்டினில் நுழைந்த நிறுவனம் பத்து ஆண்டுகளில் நாடு முழுமைக்கும் பரவி, இறுதியில் BPLn பங்குகளை வாங்கி சந்தையில் பிரதான நிறுவனமாக வலம் வந்தது. அது ஹட்சிசன் எஸ்ஸார் டெலிகாம் லிமிடட்.
ஒரிஜினல் பில்லா -லி கா ஷிங்


ஹட்ச் என்று தும்மல் போடாத டீவி சேனல்களின் வணிக இடைவேளை ஏதேனும் ஒன்றை அந்நாட்களில் நீங்கள் கண்டதுண்டா?? அந்த ஹட்ச் நிறுவனத்தின் தலைவர் லி கா ஷிங் (Li ka Shing), உலகம் முழுவதும் பல்வேறு தொழில்கள் செய்யும் இவர் உலகின் எட்டாவது மற்றும் ஆசியாவின் முதல் பணக்காரர் என்றுக் கருதப்படுகிறார். ஹாங்காங் பங்குச் சந்தையின் 15%விதம் முதல், இவரது பங்கில் இருந்து தான் பரிவர்த்தனைக்குள்ளாகிறது. சீனாவிற்கு ஆதரவு நிலையில் இருக்கும் அவர், ஒரு வருடம் வரை சீன அரசின் நிதி நிறுவனமான CITIC இல் இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். அதன் மூலம் அவர் பாலி டெக்னாலஜீஸ் போன்ற உலகளாவிய ஆயுத வியாபாரிக்கு மறைமுகமாக உதவியுள்ளார் என்பது அவரைப் பற்றி அமெரிக்க உளவு நிறுவனங்கள் கண்டறிந்த ரிப்போர்ட். இது அவர் நேரடியாக சீன இராணுவத்தோடு (People's Legislative Army of China) தொடர்பு வைத்திருந்ததற்கு சமம். அப்படியென்றால் நம் படுக்கையறை வரை சீன இராணுவத்தின் கண்கள் வந்து போயிருக்கின்றன என்று தானே அர்த்தம்??!! அதில் சந்தேகமே இல்லை.


இப்போது புரிகிறதா இந்த நாய் ஏன் நம்மைத் தொடர்ந்து வருகிறது என்று!!


தன் வேலை முடிந்தவுடன் என்ன செய்ய வேண்டும் - விற்று விட வேண்டும். இப்போது உரிமம் யாருடைய குறுக்கீடுமின்றி மற்றுமொரு அந்நிய(இங்கிலாந்து) நாட்டு கம்பெனியிடம் விற்று விட்டு, ஹட்ச் நடையைக் கட்டிவிட்டது. இதில் நமது அரசுக்கு வரி என்ற பெயரில் ஒரு ரூபாய் தேறாத அளவுக்கு நம்து நாட்டு எல்லைக்கு வெளியிலேயே நமது அலைக்கற்றை, நிலம் என வர்த்தகம் செய்யப்பட்டது. மத்திய அரசு இதற்கு வரி விதித்த போது கூட நாட்டு நலனில் அக்கறை கொண்ட பா.சி அவர்கள் வழக்கில் போராடி வெற்றி பெற்றார். இதனால் நமது அரசிற்கு இழப்பு வெறும் 12,000 கோடிக்கான வரித்தொகை.

தகவல் தொழில் நுட்பத்தின் மிக உயர்ந்த கட்டத்தில் நாம் இன்று நிற்கிறோம், ஆனால் வளர்ச்சி என்கிற கொள்கையை அடிப்படையாய் வைத்து உருவான வழிமுறைகளைப் பார்த்தால் நம்மைச் சூழ்ந்திருக்கும் வலை என்னவென்று தெரியாது, ஐந்தாயிரம் ஊதியம் வாங்கும் ஒருவன் கைகளில் 20000 மதிப்புள்ள செல்போன் வளர்ச்சியின் அடையாளமா ? வீக்கத்தின் அடையாளமா? என்று யோசித்துப் பார்க்க இடமிருந்தால். 

ஆதார் அட்டையின் அடிப்படையாக நமக்கு வழங்கப் படுவதன் பின்னனி என்ன?, அதன் மேல கட்டமைக்கும் பொது மக்கள் நலனுக்கு அல்லது தேசத்திற்கு எதிரான ஆபத்து எப்படியிருக்கும்? இதை நடைமுறை படுத்துவது யார்? அவர்களின் பின்னணியென்ன என்றெல்லாம் ஆராய் விலகும் திரைக்குப் பின் நிற்பது யார்?? இதற்கு பீடிகை எல்லாம் போட வேண்டிய அவசியம் இல்லை. 

அவர்கள் உலகின் மீட்பர்களாக தன்னைப் பறைசாற்றிக் கொள்ளும் பீனிக்ஸ் பறவைகள் தான்



தொடரும்......

வியாழன், 25 ஜூலை, 2013

அசுரன் ஆளும் புதிய உலகம் -01 / All Seeing Eye

(புதிய தொடர்)

எல்லாவற்றையும் பார்க்கும் கண்கள் (All Seeing Eye)

 “நாம செய்றது எல்லாத்தையும் மேலெ ஒருத்தன் பார்த்துக்கிட்டு இருக்கிறான்ல அவன் பதில் சொல்லுவான்” என்று கடவுளை நோக்கி நாம் சொல்லுவோமே அந்தக் கண்களைப் பற்றியல்ல இந்தக் கட்டுரை. ஆங்கில திரில்லர் படங்களைப் போல அல்லது ஜேம்ஸ்பாண்ட் படங்களைப் போல உலகின் அத்தனைப் பகுதியினையும் ஒரே கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர விரும்பும் ஒரு அசுர சக்தியின் கண்களாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

எதற்காக இதைப் பற்றி பேச வேண்டிய அவசரம் என்றால், அவசரம் தான் இது பேச வேண்டிய நேரம் தான். ஒரு வகையில் எல்லா நாடுகளுமே தம்மை ஒரு வலிமையான நாடாக உலகில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரயர்த்தனம் பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்கா, ரஷ்யாவிடம் மட்டும் தான் அந்த சாத்தியம் இருந்தது. ஆனால் பொருளாதார ரீதியாகப் பெரிய முன்னேற்றம் அடைய முடியாத ரஷ்யாவை பின்னுக்கே தள்ளிவிட்டு சீனா எதிரில் நிற்கிறது, மற்ற ஐரோப்பிய, ஆசிய எல்லாமும் இதற்குப் பின்னர் தான் வருகிறது.

National Treasure படத்தில் வரும் இந்த  All Seeing Eye, அதாவது கட்டி முடிக்கப் படாத பிரமிட் ஒன்றின் முகட்டின் மீது அமைந்திருக்கும் இந்த ஒற்றைக் கண்ணானது அமெரிக்காவின் சின்னம் ஆனது. அது அமெரிக்கா கரன்சியான டாலர் நோட்டிலும் இருக்கும் அதன் அடியில் ஒரு வாக்கியம் Novus Ordo Seclorum அப்படியென்றால் "New Order of the Ages". அதாவது இது free mason என்று அழைக்கப்படும் ஐரோப்பிய சகோதர்கள் சபையின் முக்கிய குறிக்கோளான புதிய உலகை படைப்போம் (New Old Order) என்ற கொள்கையை ஒத்து இருக்கிறது. அதாவது இந்த சபையினரால் தான் கனவு தேசமான அமெரிக்கா எனும் நாடே உருவாக்கப்பட்டது என்றும் கூறுவார்கள் (G.W.வாசிங்டனில் இருந்து அமெரிக்கா Free Mason வசம் வந்தது என்று நம்பப்படுகிறது). அதற்கேற்றார் போல் இன்றைய அதிபரான ஒபாமா வரை தனது முதல் அதிபர் உரையில் உலகை நல்ல முறையில் ஆள வேண்டும் என்று தன்னை உலகின் பிரதிநிதியாக பாவிக்கும் வழக்கம் இருக்கிறது.



இங்கு மறுபடியும் அமெரிக்க சினிமாக்களைப் பற்றியும் பேச வேண்டும், பெரும்பான்மையான படங்களில் உலகிற்கு வரும் ஆபத்துகளை எல்லாம் அமெரிக்காவே ரட்சிப்பது போல இருக்கும். இந்த லட்சியத்தில் இன்றைய நிலையில் கிட்டதட்ட ஒரு நூறு ஆண்டுகள் வந்த அமெரிக்காவின் வெற்றிப் பயணத்தில் 2008 பொருளாதாரச் சரிவு மட்டும் அமெரிக்காவிற்கு ஏற்படாமல் இருந்திருந்தால் இன்னும் ஒரு 20 ஆண்டுகளுக்குள் உலகின் ஒரே நாட்டாமையாக அமெரிக்கா வந்திருப்பதற்கான வாய்ப்புகள் ஏராளம். ஆனால் அந்தச் சரிவில் அமெரிக்கா பெரிய அளவில் நிலை குலைந்துப் போனது. அங்கிருக்கும் பல குடிமகன்களுக்கும் நமது அரசு, நமது வாழ்க்கை முறை, நமது எதிர்காலம் குறித்த கேள்விகள் எழத் தொடங்கின.

ஒரு சில மனிதர்கள் தன் தேசமாக இருப்பினும் அது செய்யும் கேடுகளை உலகிற்கு வெளிக்கொணர முயற்சித்தனர். அதில் இரண்டு பேர்கள் மிக முக்கியமானவர்கள் :
அசாஞ்சே

ஸ்னொடென்
இந்த இருவரும் தங்கள் உயிருக்கு  இருக்கும் ஆபத்தினையும் பொருட்படுத்தாது அமெரிக்காவின் உண்மை முகத்தை ஆதாரத்தோடு வெளிப்படுத்தி மற்ற நாடுகளை எச்சரித்தனர். இது 2008ல் வந்தப் பொருளாதார சரிவிற்கு பின் இன்னும் எத்தனை தூரம் அமெரிக்கா தன் எதிர்காலத் திட்டங்களை வீரியத்துடன் கொண்டு வர இருக்கிறது என்பதை உணர்த்தியது. தமிழ் ஈழத்தை தகர்ப்பதிலிருந்து, தென் அமெரிக்க வளங்களைச் சுரண்டுவது, சீனாவை சமாளிப்பது, வடகொரியாவைக் கைக்குள் கொண்டு வருவது, இந்தியாவில் தன் கோட்டையை எழுப்புவது என்று பல திட்டங்களை வெளிக் கொணர்ந்தது. இதில் அமெரிக்கா - இந்தியாவில் வைத்திருக்கும் திட்டங்கள் எல்லாம் இதுவரை வெற்றிகரமாகவே செயல்படுத்தப் பட்டு வருகின்றன.

இந்தியா போன்ற மனிதவள மிக்க ஜனநாயக நாட்டினைக் கைபற்றுவதிலேயே தனது உலகை ஆளும் கனவில் ஒரு பெரும்பகுதி முடிந்து விடும் என்பது அமெரிக்காவின் நம்பிக்கை. அதற்கான திட்டத்தில் முதல் படியாக, அமெரிக்கா இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு கையினையும், பாதுகாப்பில் மற்றொரு கையினையும் வைத்து விட்டது.

முதலில் வால்மார்ட், டெஸ்கோ போன்ற சில்லறை வணிக முதலைகள் பத்து ஆண்டுகளுக்குள் நம் நாட்டில் ஒரு பெரிய கபளீகரம் செய்து விடும். அது நம் நாட்டின் பெரும்பானமையான மக்களை சொந்தத் தொழிலிருந்து, Salary class மக்களாக மாற்றிவிடும் என்பதால், நம் நாடு பின்னர் சுதாரித்தாலும் கூட திரும்பி எழுவதற்கு பல வருடங்கள் ஆகலாம், ஏன் அதுவும் கூட முடியாமல் போகலாம்.

மேலும் நடைமுறையில் இருக்கும் அமெரிக்க-இந்திய அணு ஆயுத ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா நம்மீது மேற்சொன்ன இரண்டு வகையான நெருக்கடியும் கொடுக்க முடியம், ஒன்று நம் ஆயுத பலத்தை அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும் (இது ஒப்பந்ததின் நேரடிச் செயல்பாடு), இரண்டாவது இதற்காக ஒரு பெரும் தொகையினை அமெரிக்க பாண்ட்களில் குறைந்த வட்டி விகிதத்தில் முதலீடு செய்தது மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது. அதாவது அந்த நாட்டின் பெரும் வணிக் மையங்களை அழைத்து வந்து நம் உள்ளூர் சந்தையை சூரையாடச் செய்வது.

அத்தனைக்கும் மேலே மொத்த இந்தியர்களின் கோப்புகளையும் அமெரிக்கா தன் வசப்படுத்தும் முயற்சி தான் All Seeing Eye என்று சொல்ல் வருகிறேன். அது எப்படி சாத்தியம் என்று சொல்கிறீர்களா?? அது தான் Aadhar அட்டை.
அந்நியன் படத்தில் விக்ரம் சொல்வது போலே “உங்க மொத்த Databaseம் எங்கிட்ட இருக்குது டா!!!” என்று அமெரிக்கா சொல்லாத செய்தியைத் தான் ஸ்நோடென் சொல்கிறார்.

அது எப்படி சாத்தியம்  என்கிறீர்களா ?? 

அதற்கு அடுத்த பகுதி வரை காத்திருங்கள்
ஜீவ.கரிகாலன்