என் வெற்றுக் காதலைக் கொண்டு
உருவகம் தொலைந்து போன
கவிதை படைத்து,
உண்டு,
செறித்து,
வீசியெறிந்த, என் மொழிச் சேறு
யாரோ ஒருவனின் காதலிலும்
படிந்திருந்தது
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காதலென்ற வேதியல்
சமன்பாட்டில் மறைந்திருக்கும்
உப்பு - காமம்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvXnW1UJINWsCl5gkdRiqNnnK2gaRWKLVf2uz2I9jQE-0EmU5gW7o0kNYQLARuqTBWVnq31Ff-J0qjZpCvzkVM7VlzzA5RQbMwpV4dMokaHMowYeVFikFZ0HIVmrDpzNF5z7RFKqkPhToT/s200/uppu.jpg)
முன்பு
என் கனவுகளில்
மொத்தமாய் குடியிருந்த அவள்,
இப்போதெல்லாம் நிமிடங்களில்
தேய்ந்து விடுகிறாள் - ஆனாலும்
நொடிகளில் கரைந்துவிடும் அவளைத்
தொடர்ந்திட யாருமில்லை.
அவள் மறைகின்ற
ஒரு சூட்சும கணத்தில் தான்
நான் பூரணமான சூன்யத்தில்
கால் கொள்கிறேன்.
அவள் கரைந்து கொண்டே
இருக்கட்டும் .....
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கட்டுகளற்ற
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjq0cYRdlWdwMZywz_V78z5yJfAqHvA5cXUQMXpxiLzAdKLCymkezjk3lD4RDBeSPU-p6VXUAQUFKqtzmJlKkFpkoHXT3eBiYmDKj8joH0IkUMhkc0cHJqVKnsTvmNUIMJtbWt0pa-52yi-/s200/paw.jpg)
தனிமை வனத்தை
உன் மிருகம் மட்டுமே
ஆள முடியும்.
சமூகம் உனக்கு கொடுத்த
உன் பண்பு,
மதிப்பு,
மதம்,
அறிவு,
அன்பு,
காதல்
என்பனவெல்லாம் அம்மிருகத்தின்
கால் நகங்களில் படிந்திருக்கும்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உணர்வன்றி
வேறு ஆடை புணையா
ஏதுமற்ற எல்லாம்தான் காமம்
அதைச் சடங்காக்கி,
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMpUOy5F6nnuL3Z7dpA6kX0Gw5n1SAK26lPb5wjOpVH-VJxF6cVNQdHAv5TS5y0o1XbHgx9imWKemsz1iglueyVSqE3LClU1PJ8zdnWnRF_EActc4IHq0vUrbvGbm5COp1DaoVXYaJTj74/s200/bonza+sheila.jpg)
காதலாக்கி,
சித்திரமாக்கி,
கவிதையாக்கி,
புனிதமாக்கி,
போர்வை போர்த்தி ஒழுக்கம் கற்பித்த உலகம்
பின்னர் தன் அறிவைக் கொண்டு
அதன் மூலம் தேடும் போதெல்லாம்
பாறையில் முட்டிச் சாகும்
மனித வரலாறு
தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உடலுக்கும் எனக்கும்
உண்டான பௌதீக வேற்றுமைகளை
சொல்லிட முயலும் போதெல்லாம்
தோற்றே போகின்றேன் !!
அவை மொழியைக்
கடந்த நிசப்தக்
கூட்டினுள் மட்டுமே
புலனாகின்றன
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அவள் முறையாகப் பயின்றாளா?
"தெரியவில்லை ",
ஆனால் அவள் கோர்த்ததும் ,
வாசிப்பதும் எனக்கான ராகம்.
அவள் மீட்டி வரும் செல்லோ
தந்தியின் தடம்,
என் முதுகுத் தண்டில் தெரிகிறது.
நான்கு டைட்டானியத் தந்திகளைக்
கொண்டு என் மூளையை
கட்டுக்குள் வைத்து விட்டாள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUVERj2LJh8MnLFLQ1EA-Vzi8f7Cc9KHV1Ew2GaRP9cjTvPejYIkrd4J_R9nfFm2_ANYByYXyCaSyfUQgpprCJ8jxbiua5vnH1F81Wfw5JLqEJVhp77fYUPwROI87dqELFB5nK246yLnDF/s320/leonid_afremov_art_work_2.jpg)
இறங்கி ஏறும் மீட்டல்கள்
சப்தங்களால் என்னைப்
புணர்ந்து முடிக்கும் வேளையில்
முற்று பெற்ற இசைக்கு
கரம் தட்டும் ஒலிகள் கூட
கேட்க இயலாமல் நான்
நான் செவிடென்பதை
மறக்க வைத்துவிடக்
காரணம் யார்
அவளா அவள் செல்லோவா?...