வெள்ளி, 29 அக்டோபர், 2010

பக்தி மனம்



முத்தை  தரு  பத்தி  திருநகை
அத்துக்கிறை  சக்தி  சரவண
முத்திக்கொரு  வித்து  குரு  பர  என  ஓதும் 

முக்கட்  பர  மாற்கு  சுருதியின்
முற்பட்டது  கற்பித் - திருவரும்
முப்பத்து  முவர்க்கத் - தமரரும்  அடி  பேனா 

பத்துத் - தலை  தத்தக்  கணைதொடு
ஒற்றைக் - கிரி மத்தைப்  பொருதொரு
பட்டப்- பகல் வட்டத் - திகிரியில்  இரவாக 
பத்தற்கிர தத்தைக் கடவிய 

பச்சைப்புயல்  மெச்சத்  தகு  பொருள்
பட்சத்தொடு  ரட்சித்  தருள்வதும்  ஒரு  நாளே 
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிறத்த  படம் வைத்துப் பயிரவி
திக்கொட்க  நடிக்கக் கழுவொடு கழுதாட 
திக்குப்  பரி  அட்டப்  பயிரவர்
தொக்குத்தொகு  தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத்  த்ரிகடக  என  ஓத 

கொத்துப்  பறை  கொட்டக்  களமிசை
குக்கு  க்குக்  குகுகுகு
குத்திப்  புதை  புக்குப்  பிடியென  முதுகூகை 
கொட்புற்றெழ  நட்பத்ர்  அவுணர
வெட்டி  பலியிட்டுக்  குலகிரி 

குத்துப் பட  ஒத்துப்  பொரவல  பெருமாளே 

A real hero from Madurai

இமெயிலில் வந்த தகவல் 
 2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்
திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களேஅதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம்என்று மட்டும் நம்பி விடவேண்டாம்உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில்நேர்மையாகவும்தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும்உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராககாவல் துறைஅதிகாரியாகஆசிரியாராகசமுக சேவகராகதுப்புரவு தொழிலாளியாக மற்றும்நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம்அவர்களை சந்திக்கும்சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம்அவர்களில் யாரேனும் கவுன்சிலர்தேர்தலில் நிற்கக்கூடும்நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.
http://itsmeena.files.wordpress.com/2010/10/krishnan_quote.jpg?w=614&h=268
இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாகஅறிமுகபடுத்துகிறேன்இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலைசிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்ஒருதமிழனாகமதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன்இன்னும் வாக்கு பதிவுநடந்து கொண்டிருகிறதுஇதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில்நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒருபெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள்இது CNN தொலைகாட்சியில் இந்தியநேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலைஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறதுஇதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும்தமிழனும்பெருமை பட வேண்டும்ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.
பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29இருப்பு : மதுரை
அப்படி என்ன செய்து விட்டார்?அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.
தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறுகருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம்சில சமயம்காசு போடுவோம்அதற்கும் மேல் என்ன செய்வோம்அதை மறக்க முயற்சிப்போம்.ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார்.அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல்இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார்மழைபுயல்,தேர்தல்,கலவரம்,பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார்.தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லைஇது வரைஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்தவிருதுகள் வென்ற செப் சமையல்கலை வல்லுநர் இவர்சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலைகிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்குவந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும்அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்துமதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்றுஉணவு கொடுக்க ஆரம்பிக்கிறார்இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவைதொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும்இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார்இதற்காக இவர் தன்னுடையவாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார்இவரது அன்னை இவர் குறித்து கவலைபட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்கநான் என்ன செய்கிறேன் என்றுபாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்துபோயிருக்கிறார்இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களைபார்த்துக்கொள்நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்றுசொல்லிருக்கிறார்இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததைஅடக்க முடியாமல் தவித்தேன்எழுதும் இந்த கணமும் கூட.
நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லிதலையில் வைத்து கொண்டாடுகிறோம்பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரைஎண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம்முதல் நாள்அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம்இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லைசரிகொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள்தருகிறார்களாஅவர்கள் என்ன செய்தார்கள்நானும் கொடை செய்கிறேன் என்றுசொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள்.அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள்இவர் தான் உண்மையானஹீரோசாகசம் செய்வது சாதனை அல்லஇல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை.எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோஇவரை பார்க்கவும்இவருடன் புகைப்படம்எடுத்துகொள்ளவும்இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும்,பொருள் உதவி செய்யவும்இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல்கொள்கிறேன்பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன்என்பதில்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள்பொருளைப் பெற்றவன் சேமித்துவைக்கும் இடம் அதுவே.
ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்
http://www.akshayatrust.org/contact.php
Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India

Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : 
ramdost@sancharnet.in

மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம்ஒரு நல்ல விசயத்திற்கும்வோட்டு போடலாம் வாருங்கள்நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்
http://heroes.cnn.com/vote.aspx
இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லைஎன்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம்.இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன்கேட்டுகொள்கிறேன்