அம்மு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அம்மு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 அக்டோபர், 2016

மோன நிலையிலே - 2

தத்தை நெஞ்சம்




இந்த இரண்டு மூன்று வருடங்களில் துருப்பிடித்து முறிந்து விழுமளவு மனம் சோர்ந்து போகும் நேரமெல்லாம் மீட்டெடுப்பு நிகழ்கிறது அம்முவால் தான். 

குறுட்டுக் கற்பிதங்களும், சீழ் பிடித்த வரலாற்று அறிவும், நுனிப்புல் கோட்பாடுகளும், 90 கீமீட்டர் ஆரமே பயண அனுபவமும் கொண்டவனின் துலாபாரத்தில் கொழுப்பு, திமிர் இரண்டும் எடைக்கு சரிநிகர். ஆனால் எல்லாவற்றையும் நொறுக்கித் தள்ளியவள் அவள். அவள் கரிசனமிக்க அன்பு என்பது பாரபட்சமற்றது கீழத்தஞ்சையில் ஏதோ ஒரு பம்புசெட்டில் ஒற்றை நாளில் தன்னுடன் சேர்ந்து குளித்த ஒரு தோஸ்து(தோழி)க்கும் பல நாட்களாக இலக்கியம் குறித்து தீவரமாக தர்கம் புரியும் எந்த மானுடருக்கும் ஒரே அன்பு தான், அதே அளவு தான் பட்டாம்பூச்சிகளும் பறவைகளும் அவளுக்கு. செவ்வியல் இலக்கியங்களிலிருந்து, மேலை நாட்டு, மலையாள, மராட்டிய என ஏதாவது ஒரு இலக்கியத்துடன் தான் ஒரு உரையாடல் நிகழும், ஆனாலும் அவள் தன் சமையலில் மோர்க்குழம்பு வைத்த விதம் பற்றி ஒன்றொன்றாக விவரிக்கும் போதோ, வழக்கமான சுலைமானியை விடுத்து என்றாவது ஒரு ஏலக்காய் தேநீர் குடிக்கும் போதோ என்னிடம் பேசினால் என் நிலைமை உதறல் ஆகிவிடும்.

காக்கைகளற்ற ஊரில் தற்பொழுது வசிக்கிறாள் என்று சென்ற பதிவில் எழுதியிருந்தேன், அடுத்த பதிவிலும் அதே ஊர் தான் இதற்குள் கிடைத்த சில் நாட்கள் ஓய்வில் பல நூறு கி.மீட்டர்கள் அனுபவங்கள் சேர்ந்திருக்கும். காக்கைகளற்ற ஊரில் கிளிகளுக்கு பஞ்சமில்லையாம்.
போனில் பேச ஆரம்பிக்க வந்தாலே, ஒரு தத்தை அவளை பேச விடாமல் தடுக்கிறது. நான் பேசும்போது அவள் கேட்டுக்கொண்டிருக்கையில் எந்த சப்தமும் போடாமலிருக்கும் தத்தை, அவள் பேச ஆரம்பிக்கையில் சத்தம் போடுகிறது. ரொம்ப நேரம் அதே இடைஞ்சல் தான். பின்னர் அந்த தத்தைக்கு அவள் ஒரு பெயரை உச்சரிக்க சொன்னாள்.

ஆஹா டங் டிவிஸ்டரா என்று அலைவரிசையை மாற்றிவிட்டு அமைதியாக இருந்து கொண்டது. (என் பெயர் தான் அந்த டங் ட்விஸ்டர்)

அந்த தத்தைக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம் தான் தத்தை தனக்குப் பரிச்சயமில்லாத மொழியைப் பேச வேண்டும் என்று சொன்னதும் அமைதியாகி விடுகிறது. ஆனால் எனக்கு ஒரு மொழியைத் தவிர வேறொன்றும் தெரியாது என்பதால் சத்தம் போடுகிறேன், தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் நான் கூச்சல் போடுகிறேன். 50 வருடமாக எங்கள் ஊரில் எனக்கு முந்தைவர்களிடமிருந்து கற்றது இது தான், கூச்சல் போட. நான் எழுதினாலும் அது கூச்சலாகத் தான் இருக்கிறது. அந்த கூச்சலை விட உராய்ந்து போன பேனாவை காகிதங்களில் உராய்க்கும் சப்தம் மேலானது. பகுத்தறிவு என்று எழுத ஆரம்பித்த எங்கள் பேனாவின் கூச்சல் எழுத்துப்பிழையாக பார்ப்பனிய எதிர்ப்பை போதிக்க கூச்சலிட்டது.

இந்த இம்பொசிஷன் கூச்சல் ஒரு பக்கமிருக்க, இதற்குப் பழி வாங்கும் கூச்சல் இன்னொரு புறம். இடையில் அல்லேலூயா கூச்சல் வேறு.
இந்த கூச்சல் அருவருப்பாக மாற்றம் பெற்ற வரலாறு, இசையை கவின்கலையை ஒரு சமூகம் தொலைத்த வரலாற்றிட்கு இணையானது. 

ட்ராக்டர்களை எதிர்த்து பண்ணையார்களைக் கொன்றுபோட்டு மற்ற கணவான்களைத் துரத்திவிட்ட அரசியலின் வாரிசுகள் ட்ராக்டர் கடன் தள்ளுபடி கேட்டு அடையாள உண்ணாவிரதம் இருக்கும் மான்பு அரசியல் வரலாறுகளை உள்ளடக்கியது அந்த கூச்சலில் விளைந்தவை - கூச்சலின் மகசூல்களான இரைச்சல்கள். இரைச்சல்களாலும், கூட்டல்களாலும் கட்டியமைக்கப்பட்ட பெருங்குடும்ப கனவுக்கு அதிகாரம் இருந்தாலும் இல்லாவிடினும் எந்த பலகீனமும் ஏற்படவில்லை என்பது தாஜ்மஹால் வரை நீண்ட தூரப்பயணம் சென்று வந்த தத்தையின் கீச்ச் கீச்சு.

இப்போது தத்தைகளை அந்த கிராமம் இடைஞ்சலாகப் பார்க்கிறதாம், விவசாயத்திற்கு பெரும் எதிரியாம். இப்படித்தான் மயிலைக் கொன்று ஒரு கூறு நெல் போனஸாக வாங்கிய கரிசல் காட்டு வாழ்வியல் திரிபினை நான் சேகரித்துக் கொண்டிருந்த கதையில் அழகியலாக நினைத்துக்கொண்டிருந்தேன். உணவுச் சங்கிலியில் மனிதன் செய்கின்ற குளறுபடி தான் தத்தையினையும், மயிலையும் மனிதன் விரோதியாகப் பார்க்க வைத்திருக்கிறது.

மனிதன் முற்றிலும் இயற்கைக்கு எதிராக வாழ் ஆரம்பித்த பொழுதும், சென்னையில் நடந்திருந்த இயற்கைப் பேரிடரில் உண்மையிலேயே அரசு கொஞ்சம் மெத்தனமாய் இருந்திருந்தால் நன்றாகத் தான் இருந்திருக்கும். சே!! ஒரு தொற்று நோய் கூடப் பரவவில்லை.

ஏற்கனவே நசித்துப்போன ஒரு சிறிய இனமாக ஜைனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது, அவர்களின் சுவடுகளைக் கூட அவர்களே மறந்து கொண்டிருக்கும் காலமிதில் ஓணம்பாக்கம் போன்ற தொன்மையான வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து மனிதநடமாட்டமுள்ள பகுதிகளில் பலநூறு அடிகள் குவாரிகள் குடைந்து கொண்டிருக்கப்படுகின்றன.

காவிரியைத் தவிர வேறு விவசாயிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று PRIMEஊடகங்களும், அவர்களது SUB PRIME ஊடகங்களும்(WATSAPP, FACEBOOK,TWITTER) ஏன் ஒரு போதும் கூவவில்லை.
சரி, “இந்த ட்விட்டரைப் பற்றி தத்தையிடமாவது கேட்டுச் சொல்” என்று அம்முவிடம் கேட்டேன். 

பாவம் அந்த தத்தை கீச்சும் ட்வீட்டுகள் உனக்குப் புரியாது போடா என்றாள்

உண்மை தான் எனக்குப் புரியாது தான். 

அவளிருக்கும் ஊருக்கு ஒரு புத்தகத்தை வாசிக்க அனுப்பலாம் என்று முகவரி கேட்டால், அந்த ஊரின் விலாசம் அவளுக்குத் தெரியவில்லை என்றாள், அவளுக்கு மட்டுமல்ல அந்த ஊரில் உள்ள மனிதர்களுக்கே அந்த விலாசம் தெரியவில்லையாம். அந்த அளவுக்கு தொடர்பற்று இருக்கும் கிராமம் என்று சொன்னாள் வெறும் காக்கைகள் இல்லாத, எருமைகள் இல்லாத ஊர் என்று நினைத்திருந்தேன் - கதவு எண், அஞ்சல் எண் கூட இல்லாத ஊராக இருக்கிறது.


ஆனால் அந்த ஊரில் 2ஜி கற்றை அலைவரிசையிலிருந்து அவளுடன் கட்செவி செயலி வழியாக மணிக்கணக்கில் பேச முடிகிறது என்பதில் எத்தனை ஆச்சரியம்? அவளுக்குத் தொலை தொடர்பு வாய்த்திருக்கிறது, ஆனால் கிட்டவே இருந்தாலும் அவள் நினைத்தால் தான் தொடர்பு கொள்ளவே முடியும். எனக்குத் தோன்றும் வியப்பு எல்லாம், அவள் அந்த ஊரை விட்டு சில மாதங்களில் கிளம்பிய பின் அந்த ஊரில் என்னவெல்லாம் மாற்றங்கள் நிகழும் என்று தான், குறிப்பாக அந்த தத்தைகளின் நிலை…


சனி, 17 செப்டம்பர், 2016

மோன நிலையிலே


அம்முவுடன் பேசும் போதெல்லாம் ஒரு நதியின் சலசலப்பு பின்னணியில் ஓடிக்கொண்டிருக்கும்… வெகு சீக்கிரத்தில் அவள் சிரித்துவிடுவாள் இரண்டு நதிகள் ஒன்றுடன் ஒன்று கொஞ்ச ஆரம்பித்தது போல் இருக்கும்.

நதிகள் ஓடாத வன்புணர்வு செய்யப்படும் தடங்களே உள்ள பூமியில் பிறந்தவனுக்கு நதிகள் சங்கமிப்பதாக கற்பனை செய்து கொள்ள முடிகின்றது என்பது ஒரு ஆர்கஸமிக் உணர்வு. பொதுவாக, இப்போதெல்லாம் க்ளோஸ் அப் டூத் பேஸ்டை நினைத்தாலே ஆர்கஸம் உண்டாக்கும் விளம்பரத் தந்திரயுகத்தில். நதிகளையும், மரங்களையும், பறவைகளையும், பூக்களையும், சங்கீதத்துடனும், ஸ்ரிங்காரங்களோடும், ஓவியங்களோடும் பேசுபவள் இவள். இத்தனைக்கும் மேலே கவிதைகள் வேறு தனியாக, (இரண்டாவது நதியைப் போலே, இரண்டாவது கவிதைகளும்) உண்மையில் பேசுபவள் கேட்பவனாகவா நாங்கள் இருக்கிறோம். இல்லை அம்முவின் நர்த்தனம் இது ஆனால் நான் கேட்கிறேன். இதுவும் ஒரு புலன் மயக்கம் தான். இதில் அறிவு கூட கூர்மையடைகிறது.உபொருள்.

இப்போது மூன்றாவது நதியைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறாள்

அவளது செல்பேசியும் அவளைப் போலவே, அவள் தொடர்பு கொள்ள முடியாத தொலைவில் இருக்கிறாள் என்பதை ஒவ்வொரு முறை அழைக்கும் போதும் ஒவ்வொரு மொழியில் என்னிடம் சொல்லும், அவளைப் போலவே.

இப்போது மூன்றாவது நதியைப் பற்றி என்னிடம் ஆரம்பித்தாள், இந்த முறை அவள் ஹரியானாவில் ஒரு பகுதியிலிருந்து, சரஸ்வதி நதியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாள். சரஸ்வதி நதி புண்ணிய நதி என்று வணங்கப்படும் நதி. அந்த நதி பாயும், ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து என்னை அழைத்திருக்கிறாள். அவள் அந்த கிராமத்தின் நிலக்காட்சியை எனக்கு வர்ணித்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு கையில் தூரிகை இருந்திருந்தால் ஒரு ஓவியம் கிட்டியிருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒரு ஓவியம் கித்தானிலோ, ஒரு காகிதத்திலோ , என்ன ஒரு ஊடகத்திலேயோ உருவாகும் போது. அந்த ஊடகம் என்னவாக இருக்கிறது என்பதை உணர முடியுமா.
இதோ நான் உணர்கிறேன். நான் என்னவாக இருக்கிறேனோ அதுவாகவே அந்த ஊடகமும் இருக்கும்.

 “அந்த கிராமத்தில் காக்கைகள் இல்லைப்பா” என்று அவள் சொல்கிறாள்.

ம்ஹ்ஹும் என்ன ஆச்சரியம் வந்து விடப்போகிறது, நாம் வானத்தைப் பார்த்து எத்தனை நாட்களாகியிருக்கின்றது. எத்தனை பறவைகள் பேர் தெரியும். அவள் தினமும் பறவைகளை அதன் சப்தங்களை அனுப்புவது தான் குட் மார்னிங் ஆக இருக்கிறது. அவள் காக்கைகளைக் காணவில்லை எனும் த்வனியில் ஒரு பதட்டம் இருந்தது, ஒரு அக்கறை இருந்தது. எனக்கு வெறும் கேள்வி மட்டுமே இருந்தது “( ? )”.

“இந்த கிராமத்தில் காக்கைகள் இல்லை காளிதாஸ்”
“அப்படியா அம்மு.. ஏன் அவை அங்கு விப்பில்ல

அறிவியல் ரீதியாக எத்தனையோ பேசியிருக்கிறோம். அவள் காக்கைகள் இல்லையென்றவுடன், அவள் அந்த ஊரில் வேறு என்னவெல்ம் இல்லை என்று விசாரித்ததைச் சொன்னாள். அந்த ஊரில் எருமைகள் கூட இல்லையாம்.

 “அப்படியென்றால் கரிய நிறத்தில் எதுவுமே இல்லையா” நான் என்னினத்ுக் கேட்டிருக்கிறேன் என்பு அவுக்கத் ெரியும்.

மூன்றாவது நதியருகில், இரண்டாவது நதியின் சலசலப்பு. நானும் ூட சிரித்தேன்.

“காளிதாஸ் காக்கைகள் இல்லை என்றவுடன் அந்த ஊரில் சடங்குகள் எப்படி செய்யப்படுகின்றன என்று கேட்டேன் ” என்றாள். நக்கஏன் இப்பிக் கேட்கத் ோன்றுவில்லை என்ு என்னானே கேட்டுக்கொண்டு.

காக்கைகளின் மறைவுக்குப் பின்னர், சடங்குகள் பலவற்றைக் கைவிட்டுவிட்டோம் என்று ஊர்மக்கள் சொல்லியிருக்கிறார்கள், அந்த ஊரில் கள் அனுமதி, மது அனுமதி, புலால் அனுமதி கூட கிடையாதாம். இந்து மதத்தில் காக்கைக்கு செய்யும் சடங்குகள் ஒரு முக்கியமான பகுதி, அவ்வூர் மக்கள் காக்கைகளின் இழப்பிற்குப் பின்னர் தங்கள் வாழ்வை பெருமளவுக்குக் கட்டுப்பாட்டுடன் மாற்றியிருக்கிறார்கள் என்றாள்.
இப்பவும் கூட எனக்கு அதில் என்ன எடுத்துக் கொள்ள இருக்கிறது என்று தெரியவில்லை.

சமூகக் கட்டமைப்பில் ஒரு இயற்கையாக நடக்கும் சிறிய இழப்பு அல்லது மாற்றம், எத்தனை பெரிய மாற்றங்களையோ அல்லது பேரிழப்புகளையோ கூட உருவாக்க இயலும் எனப் புரியவில்லையா என்கிறாள். அம்முவக்கு என் மீது கரிசனமிருக்கிறது.  உண்மையில் முழுமையான அறிவு என்ப கரிசனமிக்கது, அரைகுறை தான் மூடி மறைத்துக்கொள்ளும் + கொல்லும்.

ஆம் இது கயாஸ் தியரி போலிருக்கிறது என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். இந்த மாற்றங்களை அவள் தொன்மத்திலிருந்து, அறிவியலிலிருந்து, கலையிலிருந்து என அடிக்கடிப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறாள்.

ஆம் இப்படியான மாற்றங்கள், ஒன்று சாதிக் கொடுமைகள், பிரிவினைவாத, வர்க்க பேதங்கள் போன்றவற்றை அழிப்பதற்கான தந்ரோபாயங்களைச் சொல்லிக் கொடுப்பது போலவும் (உதாரணம் அண்மையில் வந்த சென்னைப் பெரவெள்ளம்), மற்றொன்று அதில் கட்டமைக்கப்படும் சந்தர்ப்பவாத அரசியல் அல்லது பாஸிஸத்தைப் பற்றி புரிந்து கொள்ளவும் கற்றுக் கொடுக்கின்றன (50 ஆண்டுகால திராவிட மனநிலை ) என நான் உள்வாங்கிக் கொண்டதை, இம்ப்ரெஸனிஸ்ட் பாணியில் ஏதாவது ஒன்றாக,ையாகச் செய்துக் காட்ட வேண்டும்.

ஏன் (இன்றைக்கு) பெரியார் பிறந்தநாள் நினைவாக ஏன் இதைப் பார்க்கக் கூடாது, ஹெல்லொ இன்றைக்கு மோடிஜியின் பிறந்தநாள் என்று அவன் சொல்கிறான். நமக்கு எதுக்கு வம்பு??

ஆனாலும் நான் அவளது ஊடகமாக இருப்பதை கௌரவமான உத்தியோகமாகவே நினைக்கிறேன்.

அம்மு இன்று மிகவும் அழகாக இருக்கிறாள். நீ பார்க்கும் நிலவை நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

My hugs on the Air, Kisses on the moon

- ஜீவ கரிகாலன்