கவிதை - devotional லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை - devotional லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 டிசம்பர், 2015

நகுலன் எழுதாத ஃபேஸ்புக் கவிதை (மெயின் டைட்டில்)

(Staturory warning
1.Subject to editing risks at any point of time
2.Subject to spelling mistakes
3.Content not suitable for all especially those who believe them are poets)

(சப் டைட்டில்) இறுதியில் CTRL + V செய்தால் மதி!!

இப்படியாக இறுதியில்
சரவணன் பேட்டர்ன் ஒன்றைக் கண்டு பிடித்தான்
சரவணன் கவிதை ஒன்றை எழுதினான்
மேலே சொன்ன வரிகள் பல்லவியாக மாறின 
”யாரவள்”
”ஷட் அப்”
சரவணன் பேட்டர்ன் ஒன்றைக் கண்டு பிடித்தான்
சரவணன் கவிதை ஒன்றை எழுதினான்
மேலே சொன்ன வரிகள் பல்லவியாக மாறின 

{பல்லவியை பாடிக்கினு அடுத்த சரணம்} 
CTRL + C ஐ சரவணன் அழுத்தினால்
2 லைக்ஸ் எப்பவாது கமெண்ட்ஸ் 
CTRL + C ஐ நான் அழுத்தினால்
10 லைக்ஸ் மூனு கமெண்ட்ஸ் (சரவணனும் தான்) 

{பல்லவியை பாடிண்டு அடுத்த சரணம்}

CTRL + C ஐ “!!!” அழுத்தினால்
411 லைக்ஸ் 64 கமெண்ட்ஸ் (நானும் சரவணனும் BLOCKED)
 CTRL + C எல்லாம் என்ன பிரமாதம்
”???” ஒரே ஒரு “.” வைத்தால் போதும்
1599 லைக்ஸ் 456 கமெண்ட்ஸ்
சரவணன் : அருமை.. கவிதை மாதிரி இருக்கு
   “J
நான் : புல்லரிக்குதுங்க
    “J
{பல்லவியப் பாடேம்ல இன்னொரு வாட்டி}


பகுதி – 2 ( இது வேற வெர்ஷன் )

இப்பொழுதும் அதே பல்லவி தான்

“இந்த புத்தகச் சந்தைக்கு
சரவணனின் நூல் வெளிவருகிறது”

நான் : யோவ் ராயல்டி கேளுய்யா

சரவணன் :
சார் டெம்போவெல்லாம் வச்சுக் கடத்தியிருக்கேன்

!!! : அதுக்கு
சரவணன் : ராயல்டிலாம் வேணாம்
         ரைட் க்ளிக் டிஸேபிள் பண்ணி,
           கண்ட்ரோல் பட்டனைக்
           கழட்டி கொடுங்க

!!! : முட்டப்பய – கீபோர்ட்ல ரெண்டு கண்ட்ரோல் பட்டன் ஒன்னு தான் கேட்டான்


பின் குறிப்பு அல்லது அடிவாங்குவதற்கு முன் குறிப்பு
( நானே சரவணன், நானே !!!, நானே ???, நானே கவிஞன், நானே பப்ளிஷர், நான் நானாக மட்டுமில்லை)


கடைசியா இன்னொரு தபா ஒரு தலைப்பு
“Sorry  சரவணன்”


ஏதோ ஒன்றில் PATTERNகளை தீவியமாக உருவாக்கி வரும் நண்பருக்கு டெடிகேட் செய்கிறேன்.

“சாவுடா!!”

சனி, 10 நவம்பர், 2012

இருத்தலின் முரண்


.

 வாழ்தலின் நிறைவு மரணம்
 விழித்தல் கூட ஒரு தூக்கம்
 கவிதை யாவும் ஒரு நகர்தல்
 பயணம் என்பது ஒரு நிறுத்தம்.
 தேடல் தான் சுவாரஸ்யம்
 வெற்றி என்பது மயக்கம்
 தோல்விகள் யாவும் வெற்றி
 அணு தான் பிரபஞ்சம்
 வெளி யாவுமே ஒரு மூச்சு 
 காமம் தான் இங்கே  பள்ளம்
 காதல் அதன் ஏணி
 கடவுள் என்பது அதன் பிம்பம்

  மௌனம் என்பதும் வார்த்தை
  உயிர்வாழ்தல் ஒருஅவஸ்தை
  அங்கொன்றும் இங்கொன்றுமாய் 
  இரைந்துகிடக்கும் நிம்மதி
  உயிர்ப்பான மரணமே வாழ்தல்

செவ்வாய், 6 நவம்பர், 2012

பிதற்றல்கள் - 2




ஒரு பூந்தோட்டத்தின் வழியே
ஒரு மலரைக் கூட தொடாதவனே
தன் காதலைச் சொல்லாமல்
 வாழ்ந்து முடிக்கிறான்

---------------------------------------------------------------------------------------------------------
மூழ்கித் தான் போய்விடுகிறது
வாழ்க்கை - அறிவின் கொடை;
வாழ்வதை மறந்து விட்டு

---------------------------------------------------------------------------------------------------------
காதல் குழப்பமானது
குழப்பம் விடுதலை தராது
மரணம் தெளிவு தரும்
தெளிவு காண்பது தீர்வல்ல

ஆதலால் காதலே மேல்

----------------------------------------------------------------------------------------------------------------
அவள் தான்!!

நான் -
பெண்ணையே தேடிக் கொண்டிருக்கிறேன்
அவள் கவர்ச்சியாய் இருக்கிறாள்
அவள் தோலுக்குள் சென்றால் தானே
தெரிகிறது
இரத்தம்
சதை
எழும்பு
சீழ்
சளி
புழு - என்னிடமும் தான்,
ஆமாம், காதல் இருந்த தடம் எங்கே??
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------


அது ஒரு காதல் கதை

நாளை தன் காதலுக்காக -யாரேனும்
கொலை செய்யப் படலாம்

ஒரு வேளை நேற்று அவர்கள்
களவு கொண்டிருக்கலாம்

அதற்கு முந்தையநாள் அவர்கள்
சண்டையிட்டும் இருந்திருக்கலாம்

அதற்கும் முந்தைய நாள்
சந்திப்பதற்கே தவம் செய்திருக்கலாம்

இன்று அவர்களைப் பார்ப்பதற்கு
அவர்கள் என்றென்றும் காதலிப்பவர்கள்

நேற்றைக்கும் இன்றைக்கும்
நடுவே ஒரு நாளிருந்தால்
காதலுக்காகவே தற்கொலை நிகழ்ந்திருக்கும்

இருக்கட்டும் நாளை மறுநாள் தான் ஊழி!!

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


பரம்பொருளைப் பருகிய பின்னும்
இறுதிப் பரம்பொருள் ஒன்று எட்டிப் பார்க்கிறது
இதைக் கொன்று அல்லவா தின்ன வேண்டும்??

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எது ??

காதல் 
அடையாத வரை இது
அடைந்துவிட்டால் அது
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காதல் எழுந்து நடமாட ஆரம்பித்துவிட்டது.
இனி நான் உறங்கச் செல்ல வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கட்டுக்கடங்காத காதலை சங்கிலியால் பிணைத்து வைத்து, மறுமுனையை ஒரு சுவற்றில் கட்டி வைக்க மறந்தேன்.

அது சங்கிலியை இழுத்துக் கொண்டே அலைகின்றது,
இப்போது சங்கிலியும் நடமாடுகிறது 

திங்கள், 2 மே, 2011

அருளமுது - Nama Shivaya




1.சொர்கமென்ப பொன்னன்று பொருளன்று -யாதொரு 


மயக்கமென்ப மதுவன்று மங்கையன்று - பிரிதறு 
உறவென்ப தாயன்று,தாரமன்று எல்லாமன்று 
சிவனென்றி ருத்தலே மெய்  

2.
அகங்கொண்ட கோபமுங்காமமும் பொல்லா பாசமும் 
யாக்கைகொண்ட குருதியும்-மலமும் நோய்செய் கிருமியும்-எமை 
யாட்கொண்ட பேரருளாஞ்சிவனடி பற்றிட; எம்மை விட்டகன்றிட
யாம் நின்றோம் ஆனந்தவெற்றிடமாய். 


3.
நித்தமும் பயிலும் யோகமும், தியானமும்

சித்தமெல்லாம் சொல்லும் சிவாய மந்திரமும்

பித்தனைச் சேர்வதில்லை; ஞானமென்ப பலனன்று

வினையருத்து நின்ற வெற்றுமனம்

4.இம்மையில் ஆற்றிய வினை கரைந்தொழிய


மறுமையில் யாதொரு முயர்ச்சியு மற்று, 
இயல்பினொரு ஒருமையினைக் கண்டு- மதமெனுஞ்   
செயல்துறந்த நானே சிவன் 


5.விடுவிடுவென விட்டுநின்ற சுற்றமுஞ் சொந்தமும் 

படபடவென பட்டுப்போன பாசமுஞ் சோகமும் 
கடகடவென பாய்ந்துவந்த பக்தியெனு நதியிலே 
சிவசிவனென சந்தமாய் மூழ்கினேன்