வியாழன், 5 ஜனவரி, 2012

செவிடன்

மீண்டும் ஒரு முறை 
கூட கேட்காத உன் குரல்..
திரும்ப திரும்ப என்னுள் 
ஒலித்து,
என் அகச்செவியின் திரை 
கிழித்தது

பின்னர் ஒருநாள் ,
என்னை கைதட்டி
நீ அழைத்தபோதும்
செவிடன் போல்
கடந்து சென்றேன்

என்னுள் கேட்டுக் கொண்டிருக்கும்
உன் குரலுக்கு
வந்தனம் செய்து கொண்டே !!!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக