செவ்வாய், 2 ஏப்ரல், 2013

#tag கதைகள்

முதல் பாகம்
இரண்டாம் பாகம்


###015

அவள் என் கவிதைகள் பிடிக்கவில்லை என்றாள் என உன்னிடம் சொன்னேன்
ஒருவேளை அவள் உன்னையும் மணந்து விட்டாளோ என்றாய் நீ
அவள் உன்னைப் பற்றி சரியாகத் தான் சொன்னாள் “அது பொல்லாதது” 

###016

அவள் திருமணத்திற்கு நினைவுப் பரிசு???என்றேன்.
”நான் அவளுடன் செல்கிறேன் ஸ்தூலமாய் இருந்து அவளை துன்புறுத்துவேன்” என்றாய் நீ..      நீ என்னுடனும் இருப்பாய்


###017

பிழைகளைக் காட்டி ”அவளைப் பற்றிய உன் கவிதைகள் வாசிக்க விரும்பவில்லை” என்றாய். நல்லது தான், உன்னிடமிருந்து விலகி
இனி என் பிழைகளில் மட்டும் அவள் இருக்கட்டும்.

###018

நாளை அவள் திருமணம் என்று சொன்னது, நீ உறங்கச் செல்கிறாய்.
நீ இரவில் தூங்கச் செல்வது இது தான் முதல் முறை.
நாளை காலை நான் நினைத்தபடி.....


###019
இத்தனை வருடங்கள் கழித்துப் பார்த்தபோதும்,
அவள் கண்களில் நீ தழும்பாய் தெரிகிறாய்.
அதனால் தான் அவளைப் பார்த்ததை நான் உன்னிடம் சொல்லாமல் மறைத்துவிட்டேன்.


###020

அந்த இரவு ஞாபகம் இருக்கிறதா,
அவளை என் வண்டியில் ஏற்றி வீடு சேர்த்தேன்
அன்று தான் நீ பிறந்தாய்!!

###021

இத்தனைக்கும் பின்னே,
அது எப்படி உன்னால் மட்டும் முடிகிறது??
அவள் பெயரை உச்சரிக்கும் போது அனுபவித்து, மெய்மறந்து, கண்களை மூடித் திறக்க.


###022

அன்று அவள் என்னிடம் கேட்டுக் கொண்டதைத் தான்
இன்று உன்னிடம் கேட்கிறேன் “நாம் நண்பர்களாக இருப்போம்”




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக