செவ்வாய், 24 ஏப்ரல், 2012

ஜூஜூ - வெறும் பொம்மையல்ல

இந்தியாவில் - ஹட்சிசன் நிறுவனத்தின் சிறிய வரலாறு அல்லது ஜூஜூவின் வரலாறு :
1 .1992இல் திறந்துவிட்ட உலகமயமாக்கல் கதவில் நுழைந்த ஹட்சிசன் வம்போவா நிறுவனம் மாக்ஸ் கருப்புடன் இணைந்து ஹட்சிசன் மாக்சாக தொடங்கியது.அதன் பெயர் HMTL .
2 . எஸ்ஸார் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் 2000ஆம் ஆண்டில் கொல்கத்தா,டெல்லி,குஜராத் ஆகிய இடங்களில்"ஹட்ச்"எனும் பெயரில் தன் சேவையைத் தொடங்கியது.
3 .2003ஆம் ஆண்டு ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், ஹரியானா ஆகிய இடங்களில் ஏர்செல் டிஜிலின்க் எனும் நிறுவனத்தை வாங்கியதன் மூலமும், 2005இல் BPL நிறுவனத்தை வாங்கியதன் மூலம் தமிழகம், கேரள , மகாராட்டிரம் என்று வழுவாகக் கால் ஊன்றியது.
5 . 2007இல் தன் 67 % விகிதப் பங்குகளை கிட்டத் தட்ட 12000 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வோடஃபோன் நிறுவனத்திற்கு விற்று ஈட்டிய கொள்ளை பணத்தை வாரிச் சுருட்டிக் கொண்டு ஒரு ருபாய் கூட வரி செழுத்தாமல் தன் நாட்டிற்கு சென்றுவிட்டது.

வெளிநாட்டு மொபில் போன் நிறுவனமான வோடஃபோன் வாங்கிய தொகைக்கு வரிகேட்டு மத்திய அரசு வழக்குத் தொடர இந்தியாவிற்கு வெளியே நடந்த ஒப்பந்தத்தில் வரி செழுத்தும் கடமி தனக்கு இல்லையென சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய, வழக்கின் தீர்ப்பும் ஹட்சிசன் செழுத்த வேண்டிய வட்டிஎன்பதால் வோடஃபோனை நிர்பந்திக்க கூடாது என்று தீர்ப்பளித்தது.

நாம் அனைவரும் பார்த்து ரசிக்கும் ஜூஜூ விளம்பரத்திற்கு பின்னே இப்படி ஒரு கொள்ளை நடந்ததை நாம் உணருவோமா ??



Auditor. M.R Venkatesan அவர்களின் கட்டுரையின் தமிழாக்கம் 

வோடஃபோன் நிறுவனம் மீதான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினைக் கண்டு சீன விடுதலைப் படை (PLA ) சிரித்துக் கொண்டிருப்பது ஏன்??

வோடஃபோன் மீதான இந்த தீர்ப்பு இது போன்ற மற்ற வழக்குகளில் ஒரு முன் மாதிரியாக (precedent )எடுத்துக் கொள்ளும் வாய்ப்பை உருவாக்கி இருக்கிறது. இத்தீர்ப்பிலிருந்து இருந்து உலகம் முழுக்க எடுத்துக்  கொள்ளப்படும் ஒரு குறிப்பாகவும் இருக்கும், இதே போன்ற சூழலில் சிக்கியிருக்கும் சீனாவைப் போன்ற பல தேசங்களுக்கும் இந்த தீர்ப்பிலிருந்து பல வரைவுகள் உருவாகும்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் குழுத் தலைவர் ஃப்ரெட் தாம்சன் அவர்கள் , சீன வணிக நிறுவனமான "CRE" பற்றிக் கூறும் பொழுது "பார்ப்பதற்கு நட்பாய்ப் பழகிவிடும் என்று தோன்றினாலும் புலி மிகவும் ஆபத்தானது" என்று குறிப்பிடுகிறார். அந்த சபை தன் விசாரணையில் ,1996 -ல் நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் தன் திட்டங்களை செயல்படுத்த முயன்ற சீனாவின் முயற்சியை , CRE தான் ஒரு ஊடகமாய் அரசியல் , பொருளாதார மற்றும் இராணுவத் தகவல்களை உளவு பார்க்க உதவியது என்று கண்டறிந்தது. இதில் தற்செயலானது என்னவென்றால், சீன ராணுவத்தின் அமைப்பான PLA க்கு தான் CRE சொந்தம் என்பது தான்.


மற்றொரு போக்குவரத்துத் தளவாட நிறுவனமான COSCO வும் PLA-விற்கு சொந்தமானது என்றும் , அந்நிறுவனம் லிபியா, ஈராக், ஈரான் மற்றும் பாக்கிஸ்தான் போன்ற நாடுகளுக்கு சீனாவின் ஏவுகணைகளையும், ஏவுகணை உபகரணங்கள், ஜெட் விமானங்கள் மற்றும் ஆயுதத் தொழில்நுட்பங்களைக் கொடுத்துள்ளது என்று விமர்சிக்கப் பட்டது.

சைனாவின் ஆயுத விற்பனைகளுக்கு, பாலி டெக்னாலஜீஸ் (poly technologies ) எனும் நிறுவனத்தின் அதிபரான வாங் ஜுன் ஆயுதத் தரகராகச் செயல்பட்டார் எனவும் அந்த அறிக்கை கண்டறிந்தது.
இந்த ஜுன் என்பவர், சீன நடுவன் அரசின் முக்கிய முதலீடு ஈட்டும் கரமான CITIC நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர் என்பது கூட தற்செயலானது தான்.

'ஜுன்' உடன் அமர்ந்திருக்கும் மற்றொரு உறுப்பினர் தான் 'லீ கா சிங்', இவர் "ஹட்சிசன் வேம்போவா" நிறுவனத்தின் தலைவர்.ஆம், இதே நிறுவனம் தான் இந்தியாவின் தனது தொலைதொடர்புத் துறை பங்கினை வோடாபோனுக்கு விற்றது.

ஜனவரி 2012 ல் வந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, "விற்றுமுதலில் ஈட்டிய லாபத்தினில் இந்தியாவிற்கு,  பன்னிரெண்டாயிரம் கோடி டாலர் மதிப்பிற்கு எந்த ஒரு வட்டியும் வோடஃபோன் நிறுவனம் கட்டத் தேவையில்லை என்று இருந்தது". லீ கா சிங் மற்றும் அவருடைய ஹட்சிசன் வேம்போவாவிர்க்கும், PLA விற்கும் இந்தக் காரணம் போதாதா சிரிப்பதற்கு?? 

அகன்று வரும் இரும்புத் திரை:-

முதலில், இந்த லீ கா சிங் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்?, நிறுவனத்தின் வலைதளத்திலிருந்து கிடைக்கும் தகவல் படி, மொத்தம் 53 நாடுகளில் உள்ள கிளைகளில் 260000 பேர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் தலைவராக லீ கா சிங் இருக்கிறார்.

ஹாங்காங்கில் கூட, இக்குழுமம் தனது 8 துணை நிறுவனங்களின் சந்தை மதிப்பாக சராசரி ஏழாயிரத்து நாற்பத்தி ஏழு கோடி ஹாங்காங் டாலர்கள் உள்ளது. ஃபார்ச்சுன் நிறுவனத்தின் தலை சிறந்த 500 நிறுவனங்களில் ஒன்றாக இது விளங்குகிறது.


நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் போல் இருக்கும் என்று  லீயின் கதை இருக்கலாம். ஆனால், தற்பொழுது அவரது தொழில்கள்  ப்ராபெர்ட்டி டெவலப்மன்ட், ஹோட்டல்கள், தொலை தொடர்புத் துறை, மின்-வணிகம், நிதி - முதலீடு, சில்லறை வணிகம், துறைமுகம் மற்றும் போக்குவரத்து, எரிசக்தித் திறன், கட்டுமானம், மூலப் பொருட்கள், ஊடகம் , பயோடெக்னாலஜி என்று பரந்து, விரிந்துள்ளது .

சரி இருக்கட்டும் லீயால் நமக்கு என்ன பிரச்சனை என்கிறீர்களா??
அவரைப்பற்றித் தெரிந்து கொள்வோம், ஆகஸ்ட் 1999 இல், ஹாங்காங்கில் இருக்கும் அமெரிக்க தூதரகம் இவரைப் பற்றிக் கூறுகையில்,"பெய்ஜிங்கில் இருக்கும் எந்த ஒரு முக்கிய புள்ளியுடனும் நேரடியாக தொழில்முறை உறவுகள் ஏற்படுத்திக் கொள்ள இவரால் முடியும் " என்று சொன்னது.

மேலும் இவர் பற்றிக் கூறுகையில் , " இவர் ஹாங்காங் பாரம்பரியத்தில் இருக்கும் ஒரு சீனத் தொழிற் சக்ரவர்த்தி. எதேச்சதிகாரம் உடைய பலம் பொருந்திய முதலாளியான இவர் ஜனநாயகத்தை அனுமதிப்பதில்லை. இந்த உண்மை , ஹாங்காங் நாட்டில் அந்த அரசு பொருளாதாரக் கொள்கையினை மாற்றி அமைத்து ஜனநாயக அடிப்படையில் உருவாக்கியதால், இவர் தனது 1.3 பில்லியன்  அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒரு செயல்திட்டத்தை ரத்து செய்தார்".
newsmax.com என்னும் வலைதளத்தில் ஸ்மித் என்பவரது கட்டுரையில் ஹாங்காங்கைச் சேர்ந்த கோடீஸ்வரர்களைப் பட்டியலிட்டார். இதில், லீயை பற்றிக் குறிப்பிடுகையில் அவரை "வாசிங்டன், பெய்ஜிங் , ஹாங்காங் என்ற ஊர்களில் சிறப்பு வாய்ந்த மனிதன்" குறிப்பிடுகிறார். மேலும் லீயை, "கம்யுனிஸ்ட் சீன அரசின் அங்கமாக அவர் திகழும் ஆதாரங்களை அவர் மூழ்கடித்துக் கொண்டிருக்கிறார்" என்றும் குற்றம் சாட்டுகிறார்.

 தகவலறியும் சட்டத்தின் மூலம் திரட்டிய தகவல்களில், "சீன அரசாங்கத்துடன் லீயுடனானத் தொடர்பு மிகவும் உறுதியானது" என்று தெரிகிறது.

அந்த அறிக்கையில்,"லீ ,சீனா ரானுவத்தினுடனான நேரடித் தொழில் தொடர்பை தமது ஆயுதத் தொழிற்சாலையான பாலி(poly ) டெக்னாலஜீஸ் இனக் மூலம் கொண்டிருந்ததை அறியலாம் , இந்த தகவல்கள் யாவும் 1997 -இல் வெளி வந்த சீனா ராணுவ தொழிற்சாளிகளின் மீதான ராண்ட் கார்ப்பரேசன் ரிப்போர்ட்டில் எனும் அறிக்கையில் இருக்கிறது ." 

அந்த அறிக்கையின் படி, "ஹாங்காங்கின் ஹட்சிசன் வேம்போவா நிறுவனம் அவ்வூரின் கோடீஸ்வரரான லீ கா சிங்கிற்கு முழுவதுமாக கட்டுப்பட்டது ,அந்நிறுவனம் பாலி நிறுவனத்தின் 'யான்க்பு டெவலப்மென்ட் கம்பெனியின்' பங்குகளை வாங்கியது, இந்த கம்பெனியோ சீனாவிலுள்ள ஹைனான் தீவின் முழுக் கட்டுமானத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளது" என உள்ளது 

ராண்ட் ரிப்போர்ட்டில், "CITIC பாலி டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் முன்னோடியாக இருந்து வந்தது" என்றும்,  மேலும் அதில், "CITIC (China International Trust and Investment Corporation) ராணுவத்  தொழிற்சாலையான பாலி டெக்னாலஜீசைப் போன்றே, ராணுவத் தளவாடங்களுக்கு உதவி செய்து வந்தது" என இருக்கிறது. 

"1980களில் பாலி நிறுவனம் உலகம் முழுக்க தனது வாடிக்கையாளர்களான தாய்லாந்த், பர்மா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் அமரிக்கா என பெரிய அளவில் ஆயுதங்களை விற்றுள்ளது" என ஸ்மித் தன் வலைதளத்தில் எழுதியுள்ளார்.

லீ கா சிங்கும் இந்தக் கட்டுரையில் சீனா ராணுவத்திற்கு சட்டத்திற்கு புறம்பாக விற்ற நிறுமத்தின் சொந்தக்காரர்களுள் ஒருவராக சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏசியா சேட்டிலைட் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தினுடைய வணிக கோப்புகளில் மூன்றில் ஒரு பங்கினை லீ கா சிங் வைத்திருப்பதை அறியலாம். ஏவியேசன் வீக் அன்ட்  ஸ்பேஸ் டெக்னாலஜீஸ்-ன் கூற்றுப் படி ஏசியா சாட்டின் மற்றொரு உரிமையாளர் சீன ராணுவம் ஆகும்.

 சீன ராணுவத்தின் கீழுள்ள நிறுவனங்களுக்கும் , PLA வின் பிரிவகளுக்கிடையேயான ராணுவத் தொடர்பு மற்றும் பரிமாற்றங்களை ஏசியா சேட்டிலைட் மட்டுமே தாங்கி வந்தது.

லீ தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சர்வேதச அளவில் நடைபெறும் மோசடியான ஒப்பந்தங்களைக் கூட நேர்த்தியாக, சரியான கோப்புகளைக் கொண்டு கையாண்டார்.1996இல் பனாமாவிலுள்ள கால்வாயினை மேற்பார்வையிடும் பொறுப்பை ஹட்ச் நிறவனம் ஏலத்தில் எடுக்க, அதற்கு சீன அரசு 40 கோடி டாலர்களை கடனைக் கொடுத்துள்ளது.

இது எதனால் தெரியுமா?  இந்த நிதியளிப்பு மூலம் சீனாவின் கட்டுப்பட்டிற்குள் பனாமா கானல் வந்துவிடும் அல்லவா, இதைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கு மூன்று பெரிய பாதுகாப்பு அம்சங்கள் இந்த பனாமா கால்வாய் ஏற்பாடுகளினால் தேவைப்பட்டது .

இவற்றில்,  அங்கு மறைந்துள்ள சீன உளவு அமைப்பினைக் கண்காணிப்பது, சீனாவிற்கும்,அமெரிக்காவிற்கும் ஏற்ப்படும் பிளவுகளில் தந்திரமாக அமெரிக்காவிற்கு மறுக்கப்படும் விஷயங்கள் மற்றும் அமெரிக்க வளர்ச்சிப் பணிகளில் சீனாவின் பலம் பொருந்திய அரசியல் சக்திகளின் மூலம் வரும் இடையூறு ஆகியன முக்கிய அம்சங்களாக இருந்தது.

இந்த ஒப்பந்தத்தினை அமெரிக்கர்கள் ஒன்றும் எதிர்க்கவில்லையா? பனாமாவின் அமெரிக்கத் தூதர் வில்லியம் ஹக்ஸ் இந்த ஏலத்தினை மரபில்லாத ஒப்பந்தம் என எதிர்த்தார், மேலும் விசாரணைக்காக முயற்சி எடுத்தார் ஆனா பலனளிக்கவில்லை. நான் ஏற்கனவே  சொல்லவில்லை ?? "லீ உலகம் முழுக்க செல்வாக்கு மிக்கவர்" என்று .

அதே போல அமெரிக்க நாடுளுமன்ற அவைக்குறிப்பின் 145ஆம் தொகுதியில் இருபதாம் குறிப்பில், அதாவது நவம்பர் நான்கு முதல் பதினாறு ,1999 வரை இருந்தக் குறிப்பு "அவர்கள் ஹான்காங்கைக்  கைப்பற்றும் வரை கம்யுனிஸ்ட் சீனாவின் நம்பகத் தகுந்த கூட்டாளியை அவர் இருந்ததைச்' சொல்கிறது.

அதேபோல் , இவருடைய சீன ஆட்சியாளர்களுடனானத் தொடர்பு டெங் சியோபிங்கிலிருந்து இன்று வரை இருப்பது நன்குத் தெரிந்த விஷயமே.இதுவே, அவர் CITIC போர்டின் உறுப்பினராய் இருக்கும் காரணத்தை விளங்க வைக்கும்

Lax Legislature, Incompetent Executive, Liberal Judiciary?
இத்தனையும் இருக்க நம்மை ஆச்சரியப்படுத்தும் உண்மை என்னவென்றால், 1992 -இல் இந்தியாவில் தொலைதொடர்புத் துறையில் முதன் முதலாக கால்  எடுத்து வைத்த நிறுவனங்களுடன் ஹட்ச்சும் இணைந்துக் கொண்டது தான், அந்தக் குழுமம் ஒரு இந்தியக் கூட்டு வர்த்தகத்தில் (joint venture) முதலீடு செய்தது அதன் பெயர் HMTL (Hutchison Max Telecom Limited).

இதற்கு காரணம் மிக வெளிப்படையானது இங்கு நடைபெறும் வர்த்தகம் அவர்களுக்கு மேலும் ஒரு தொழிலாய் இருப்பதோடு; தந்திரமான தொழிலாகவும் இருக்கிறது. இதன் மூலம் இந்தியா நாட்டின் நலனுக்கு எதிரான சக்திகளுக்கும் இவை உதவும்.

இந்த மாதிரியான அபாயங்கள் தான் நம்மை ஒரு முக்கியமான கேள்வி ஒன்றை நம் அரசின் மீது எழுப்ப வைக்கிறது ? நம் நாட்டில் இந்த மாதிரியான FDI முதலீடுகளின் இயங்குமுறைகளை ஒழுங்குபடுத்த முடியுமா?? என்பது தான். நாம் திறந்து விட்டுள்ள தானியங்கி வழியில்(automatic route for FDI Inflow ) வரும் அந்நிய முதலீடு வரையறுக்கப்பட்டத் துறைசார்ந்த முதலீட்டிற்கு மட்டுமே உட்பட்டதாகிவிடும் , அப்படி வருகின்ற அந்நிய முதலீட்டின் தரம் குறித்து கண்காணிப்பதற்கு எந்த ஒரு இயங்குமுறைகளும் (mechanism) இல்லை.

அந்நிய முதலீட்டில் தானியங்கி வழிமூலம் வர முடியாத முதலீட்டாளர்கள் அல்லது வரையறுக்கப்படாத துறைசார்ந்த முதலீட்டாளர்கள் தங்களுடைய திட்டங்களை FIPB (The Foreign Investment Promotion Board ) யிடம் தெரிவிக்கும் பொழுது, அந்த அமைப்பு ஒற்றைச் சாளர முறையில் அனுமதிக்கும். 

FIPB ஒரு ப்ரோமொசனல் போர்டு என்றிருந்தாலும், அதன் அமைப்பானது அந்நிய முதலீட்டை வரையறுப்பதில்லை, ஆதலால் அது பலனிக்ககூடிய அமைப்பாக விளங்குவதுமில்லை, அது வலியுறுத்தும் தேவைகளும் எந்த அர்த்தங்களையும் கொடுப்பதில்லை.

*அந்நிய முதலீட்டினையும் அதன் தரத்தையும்  வரையறுக்க FIRB (foreign investment regulatory board ) உருவாகும் நேரம் வந்துவிட்டதா ??
  
இந்த ஹட்ச் -வோடஃபோன் அனுபவம் நமக்கு விளக்குவது, ஹட்ச் வெளியேறியதால்  கைவிட்டுப் போன வெறும் வரியை மட்டுமல்ல, நாம் எப்படி ஹட்ச் நிறுவனத்தை இந்தியாவில் முதலாவதாக வர வைக்க முடிந்தது?? மேலும் அதற்கு சீன ராணுவத்தினுடன் இருக்கும் தொடர்பை அறிந்தும்.

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், லீ மற்றும் வம்போவா பற்றிய தகவல்களை யாவும் எல்லோருக்கும் கிடைக்கும் இணையத்திலிருந்து சில மணி நேரத் தேடலில் கிடைத்தன. இவ்வளவு வெளிப்படயாக இருந்தும், இடை ஏன் நமது அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை ??

இதற்கும் மேலே, அகண்ட பார்வையுடன், நடைமுறைகள் தேவைப்படும் இந்த அந்நிய முதலீட்டில், ஹட்ச் தனக்கான நிதித் தேவையில் எப்படி தன் பங்குதாரர்களிடம் இருந்து பெற்றது ?? என்ற கேள்வி எழும்புகிறதே !

ஹட்ச் நம் நாட்டை விட்டு செல்லுகையில் சம்பாதித்த மலையளவு பணத்தில் கொஞ்சம் கூட வரியாகக் கட்டும் அவசியமில்லாமல் போனதில் ஆச்சரியப் படும் வகையில் ஒன்றும் இல்லை. சீனத்து PLA நம்மைப் பார்த்து ஏளனப்படுத்துவதை ஒன்னும் செய்ய இயலாத வேளையில், நம் நிலைக்கு இத்தகைய எதிரி நமக்கு வேண்டுமா ???

நமது நாட்டில் அணிய முதலீடு என்ற வழிப்பாதையில் சீன இராணுவமானது  ஹட்சிசன் எனும் பெயரில் நுழைந்து, நமது படுக்கை அறை வரை வந்துள்ளது.நாம் அதை கவிநிக்காது அதைக் கொண்டாடியுள்ளோம்.

நமது தாரளமயமாக்கல் மற்றும்  உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கைகளின் மூலம் இதே போன்ற பிரச்சனைகளைத் தான் நாம் சந்தித்து வருகிறோம் .

இதைப் போன்ற பன்னாட்டு  நிறுவங்களுக்கு வரிவிலக்கு போன்றன அளிக்கப்பபட்டு அவர்கள்  லாபத்தை மென்மேலும் பெருக்குவதற்கு மட்டுமே நமது தாராளமயமாக்கல் கொள்கைகள் பயன்படுகின்றன என்றும் எடுத்துச் சொல்லி வருகிறோம். 


We hailed such investment-infrastructure friendly tax-regime. As they existed the Supreme Court tells us that under the extant law taxing such capital gains would be tantamount to handing a capital punishment to capital investments!

Under these circumstances, that by definition makes India a banana republic. Isn't it?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக