திங்கள், 23 ஏப்ரல், 2012

ஆப்பிளுக்குள் ஓடும் ரயில் -விமர்சனக் கூட்டம்


                  நேற்று கவிஞர் அய்யப்ப மாதவனின் ஆப்பிளுக்குள் ஓடும் ரயில் என்ற புத்தக விமர்சனக் கூட்டத்தில் கலந்து கொண்டேன் , இதற்கு முன் எந்த விமர்சனக் கூட்டத்திலும் கலந்து கொண்டது கிடையாது , இருந்தாலும் இந்த புத்தக விமர்சனக் கூட்டத்தில் புத்தகம் குறித்த மதிப்பீடுகளும்,  விமர்சனங்களும் குறைவாக இருந்ததாக என் கருத்து, ஆனால் சுவாரஸ்யத்திற்கு கொஞ்சம் கூட பஞ்சம் இல்லை, அதற்கு தலைமை கவிஞர் யவனிகா அவர்களும் முக்கியக் காரணம் . நல்லதொரு நிகழ்வை Discovery Book palace-ல்  செய்திருந்தார் அதன் நிறுவனர் திரு.வேடியப்பன்.
        

             கவிஞர் அய்யப்ப மாதவனின் நண்பர்கள் பார்வையில் கவிஞரின் வாழ்க்கை, எழுத்து, அவர் பயணம், அவர் முந்தையப் புத்தகனகள் என்று சென்றுக் கொண்டிருந்தது. முதலில் வாசிக்கப் பட்டக் கட்டுரையைத் தவிர மற்றவர்கள் spontenous ஆக பேசிக்கொண்டும், சில கவிதைகளை மேற்கோளிட்டும் வந்தனர். கரண்ட் இல்லாத பொழுதும் அங்கு வந்திருந்தோர் களைந்து சென்றுவிடவில்லை. மணிக்கு ஒரு முறை கவிதை எழுதும் கவிஞர், முக புத்தகக் கவிஞர், பார்க்கும் பொருளையெல்லாம் கவிதயாக்கும் கவிஞர்  என்றெல்லாம் அவரை வாழ்த்திப் பலர் சொன்ன போது எனக்கு ஒன்று சொல்லத் தோன்றுகிறது , அவரைப் பொறுத்தவரை அவரின் கவிதைகளை அவரிடம் இருந்து பிரித்துச் சொல்லவே முடியாது , அவர் கவிதையாகவே வாழ்கிறார் அல்லது அவரே ஒரு கவிதை தான். கவிதையைத் தவிர உரைநடையில் அவர் அதிகம் கவனிக்கப் படும்போது வேண்டுமானால் அவர் உரைநடையோடு ஒப்பிட்டு இந்த மாதிரியான கணக்கைப் பேசலாம்.

               கவிஞர் ஆத்மார்த்தி சொன்னது போல "முக புத்தகத்தில் அவரை சுற்றி ஒரு பெரிய கூட்டம் இருக்கிறது" என்று. முகநூல் மூலம் இலக்கியமும் அடுத்தக் கட்டத்திற்கு சென்று விட்டது. ஓலைச் சுவடியிலிருந்து, மை பாட்டிலுக்கு நம் இலக்கியம் மாறும் போது இத்தகைய ஒரு ஏற்காமை இருந்துரிந்ததா என்றுத் தெரியவில்லை, இன்று உலக நாவல்களையெல்லாம் வீடு அலமாரி போல் நம் மடிக்கணினியிலோ, கைப்பேசியிலோ பார்க்கும் வழக்கம் வந்துவிட்டது. கல்கியும் சாண்டில்யனும் கூட அதில் இடம் பெற்று விட்டனர், இனி வரும் காலங்களில் நல்ல கவிதை புத்தகங்கள் ஆப்பிள் ஸ்டோரிலோ  , android ஸ்டோரிலோ, இனி புத்தகம் பதிவிடலாம். இலக்கியம் ஒரு hardware இல்லை அது ஒரு சாப்ட்வேர் என்பதால் அது எளிதாகவோ/ சிரமப்பட்டோ தன்னைத் தக்கவைத்துக் கொள்ளும். கிழக்குப் பதிப்பகம்,ஆனந்த விகடன் போன்ற முன்னோடிகள் அதைச் சாத்தியம் ஆக்குவார்கள். முகநூல் போன்ற தளங்களில் இனி Virtual இலக்கியக் கூட்டங்கள் நடைபெறும் , ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. முகநூலில் இருப்பவனும் புத்தகம் வாங்குவான்.


                 முன்பே சொன்னது போலே அந்தப் புத்தகத்தில் பெரிய விவாதங்கள் நடைபெறவில்லை மதுரையிலிருந்து வந்திருந்த கவிஞர் ஆத்மார்த்தி தன் கட்டுரையை முன் வைத்தார், கவிஞர் அசதாவின் கட்டுரை கவிஞர் கண்டராதித்தன் அவர்களால் வாசிக்கப்பட்டது, கவிஞர் நேசமித்திரன் சில கவிதைகளை மேற்கோளிட்டு தன் வாசிப்பைப் பகிர்ந்துக் கொண்டார்.

1 . கிளிசலாடை படர்ந்த இடுப்பில் அமர்ந்து நிர்வாணம் மறைக்கும் குரங்கு
2 . விற்பனையாளன் விற்காத கதவுகளின் கதவற்ற வீடுகளைக் கற்பனித்துக் கொண்டிருக்கிறான்.
3 . ரயில் பயணத்தை சாட்சி சொல்லும் ஆப்பிள்

இது போன்ற கவிதைகள் நன்றாகப் பேசப்படும், விமர்சிக்கப் படும் என்று பார்த்தேன், சமூகத்தை அரசியலை தனது மைக்ரோ கண்களால் கண்டு நுண்ணிய விசயங்களில் கருத்துச் செரிவை சமூகத்திற்கு ஊட்டும் கவிஞனின் இந்தப் புத்தகம்,  ஒருவேளை மறுபடியும் இணையத்திலோ முகநூலிலோ நடக்கும் என்று அதற்க்கான முயற்சிகளை (Virtual புக் review ) நான் மேற்கொள்வேன் என்றும் இங்கு சொல்ல ஆசைப்படுகிறேன்.கடல் கடந்து நிற்கும் அவரது ஏராளாமான வாசகர்களும் அதில் தம் பங்கை அளிப்பார்கள் என்று நான் உறுதிபட கூறுகின்றேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக