புதன், 25 செப்டம்பர், 2013

பஜ்ஜி-சொஜ்ஜி - 38 நனவாகும் நாளில்.........

ஒரு எழுத்தாளனின் புனைவில் இருக்கும் சில சம்பவங்கள் உண்மையாக மாறும் பொழுது (நல்ல விசயங்கள்) அது எத்தகைய நிறைவினை அவருக்குப் பெற்றுத் தரும்?? சமீபத்தில் ஒரு புனைவை அவர் வாசித்துக் கேட்ட பொழுது, அவர் தன் ஆசைய்னை புனைவாக தன் கிராமத்தில் (நகரத் தொடர்பே இல்லாத கிராமியம் படிந்திருக்கும் ஒரு கிராமம்) ஒரு ரயில் நிலையம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.... ஆனால் அவர் அதைச் சொல்லி முடிக்கும் பொழுதே அந்த திட்டம் விரைவிலேயே தொடங்க இருக்கிறது என்பதை நானறிந்தேன்....

அந்த மனிதர் அவ்வூருக்கு ரயில் நிலையம் வந்தவுடன் வரும் முதல் ரயிலிலேயே பிரயாணம் செய்ய வேண்டும், அப்பொழுது அவருடன் நானும் உடனிருக்க வேண்டும் என்று ஆசையுற்றேன்... இதுவும் ஒரு புனைவாக எனக்குள் எழுந்தது.....

அப்பொழுது எண்ணிக் கொண்டேன், “நம் வாழ்நாளிலேயே நதிநீர் இணைப்பு சாத்தியம் என்றால், நீரோட்டப் பெறும் வைப்பாற்றில் இருந்து தண்ணீர் மொண்டு பாரதியின் வீட்டிற்கு சென்று முற்றத்தில் ஊற்றிவிட்டு வர வேண்டும்”.......................

இது சொல்லப்பட வேண்டிய கதை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக