வெள்ளி, 13 செப்டம்பர், 2013

பஜ்ஜி - சொஜ்ஜி - 36/ பவர் ஸ்டார்களின் காலத்தில் ஒரு அஜித் ரசிகன்

பவர் ஸ்டார்களின் காலத்தில் ஒரு அஜித் ரசிகன்



நான் இவனைப் பற்றி எழுத வேண்டும் என்று பல முறை நினைத்திருக்கிறேன். வாழ்வில் ஃபீனிக்ஸ் பறவை போன்று ஒரு லட்சியத்திற்காக பறந்து கொண்டே இருப்பவர்களை நாம் பொதுவாக வரலாற்று புத்தகங்களில் தான் பார்ப்போம், சாதனைக் கதைகளாக, வெற்றியடைந்தவர்களின் வரலாற்றில், அவர்கள் சந்தித்தப் பிரச்சினைகள், அடைந்த அவமானங்கள், அவர்களுக்கு நேர்ந்த தோல்விகள், விபத்துகள் என்றெல்லாம் வாசித்திருப்போம், ஆனால் அவர்கள் மட்டும் தான் சாதிப்பதற்காகவே பிறந்தது போல எண்ணுவதால் Inspireஆகும் வாய்ப்புகள் எல்லோருக்கும் கிட்டுவதில்லை, You can win, The monk who sold my ferrari, Ijobs எல்லாம் after-all ஒரு best book sellerகள் தான். அதே சமயம் நம்மிடம் இருந்து ஒருவர் அப்படி படிப்படியாக முன்னேறுவதை அவதானிப்பதும் மிகக் கடினம், ஏனென்றால் நம்மிடையே இருக்கும் ஒருவனின் வீரியத்தை, திறமையினை நாம் கண்டு கொள்வதேயில்லை, இல்லை அவனை de-motivate  செய்யும் factorஆகவே பெரும்பாலும் இருக்கிறோம். இது தான் நம் சமூகத்தின் பொதுவான பாங்கு என்று கருதுகிறேன். இது சமூகம் தாண்டி ஒரு தேசிய நோயாகவும் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் நம்மிடமிருந்து ஒருவன் சாதிப்பதைக் கண்டு அகமகிழும் போது, நாமும் ஆசிர்வதிக்கப் படுகிறோம் என்பது நமக்குத் தெரியாமலே நடந்து விடுகிறது. ஒருவரைப் பாராட்டும்பொழுது (வெறுமனே முகஸ்துதியாகவோ!! அல்லது ஜால்ராவாகவோ இல்லாமல்) நாமும் அவர்களோடு சேர்ந்து தூண்டப் படுகிறோம், பாரட்டப்படுவது மட்டுமல்ல பாராட்டுவதுமே self-motivation tool தான். IPL சிக்ஸருக்காக கிடைக்கும் கைதட்டல்கள், ஒரு ஆய்வுக் கட்டுரைக்கு கிடைப்பதில்லை, ஒரு 50 seater conferenceஇல் கிடைக்கும் சொற்பக் கைதட்டல்களின் மதிப்பை அளவிட முடியாது.

 இன்றைய உலகில் சாதனை என்பதைக் கூட சரியான எடை-நிறை போட்டு சொல்ல வேண்டிய அவசியமிருக்கிறது, ஏனென்றால் இது power starகளின் காலம், கலை தாகமும், கலையுணர்வும் உள்ள எத்தனையோ கலைஞர்கள் எட்ட முடியாத உயரங்களை சில power starகள் எட்டிவிட்டு சாதனையாகக் காட்டிக் கொள்வார்கள். 480க்கும் மேலே மதிப்பெண் வாங்கிய மாணவர்களாக பள்ளியில் சேர்த்து வெற்றி கொள்ளும் power starகளின் காலமிது. இரு நண்பர்களில் - படிப்பில், உழைப்பில், திறனில் எல்லாம் சமமாக இருந்தும் ஒருவன் தேர்ந்தெடுத்த துறை தகவல் தொழில் நுட்பமாகவும் இன்னொருவனுக்கு வேறு ஒரு அறிவியல் பாடமாகவும் இருக்க, ஒருவனுடைய வாழ்க்கையை இன்னொருவன் அடைந்திருக்கும் பொருளாதார அந்தஸ்துகளை வைத்து மதிப்பிட்டு இவன் சாதித்துவிட்டான் என்று ஒப்பிட்டுப் பார்த்து சொல்லும் அபாயகரமான சமூகத்தின் கதிர்வீச்சிலிருந்து கருப்பாம்பூச்சியாக போராடி வெற்றி கொள்ள வேண்டும் என்பது சாதாரணம் அல்ல.

அப்படிப்பட்ட ஒரு cockroach தான் என் நண்பன், அவனை நான் ஒரு பூச்சியோடு ஒப்பிடுகிறேன் என்று அவன் வருத்தப்பட மாட்டான், கருப்பாம்பூச்சி சுமார் 40-50 கோடி ஆண்டுகளாக பூமியில் நடந்த பல்வேறு மாறுதல்களையும் , பேரழிவுகளையும் தாண்டி நிலைத்து வாழ்ந்து வரும் ஒரு அதிசயம். இன்றைய மோசமான சுற்றுப்புற சூழலில் ஏற்படும் எந்தப் பேரழிவிலும் தப்பிப் பிழைக்கும் சாத்தியம் இதற்கு அதிகம், ஏனென்றால் எந்த முதுகெழும்புள்ள மற்ற உயிரினங்களைக் காட்டிலும் higher radiation resistance கொண்ட ஜீவன் அது, ஆனால் அது எங்காவது நடக்கும் போது ஒரு சிறிய விபத்தில் தலைகவிழ்ந்து விட்டால் அதோகதி தான், உயிரோடு இருக்கும் போதே எறும்புகளுக்கு இரையாகிவிடும். அதைத் தலைகீழாக வைத்துக் கொண்டே குற்றுயிரும் கொலையுயிருமாக எறும்புக் கூட்டம் நைட் supperக்கு எடுத்துச் சென்று விடும். அது போலத் தான், நாமும் லட்சியத்தினை நோக்கி பயணிக்கும் பொழுது தலைகவிழ்ந்து(அதாவது நம்பிக்கை இழந்து விட்டால்) விட்டால் அவ்வளவு தான். நம்மை பரிகசித்து, ரேட்டிங் செய்து, மார்க் போட்டு கோமாளியாக்கி விடும் இந்த சமூகம், சமூகம் என்ன சமூகம் நம்முடன் இருப்பவர்களே அதைச் செய்வார்கள், சிலருக்கு சொந்தக் குடும்பத்திலேயே தடைகள் இருக்கும்.

ஆனால், இது போன்ற அவமானங்கள், எடை போடுதல், தோல்விகள், ஆலோசனைகள், அறிவுரைகள், எல்லாவற்றையும் விட முக்கியமானதாக சமரசம் செய்து கொள்ளுதல் போன்ற எந்தக் கதிர்வீச்சிலும் பாதிப்படையாத ஒருவன் வரலாற்றின் உண்மையான ஏட்டில் இடம் பெறுகிறான், இவனும் அப்படித் தான். இதைப் போன்ற லட்சியவாதிகள் மீது விமர்சனங்களும் வரவே செய்யும், அது காந்தி, பாரதி போன்றோரின் வாழ்க்கை மீது படிந்திருக்கும் விமர்சனங்களைப் பார்த்தால் தெரியும்.. அவர்கள் அது போன்ற விமர்சனங்களுக்காக பயப்படவில்லை, அதை நிராகரிக்க தன் நேரத்தை செலவு செய்யவும் இல்லை, ஒன்று அதைப் பார்த்து புன்முறுவல் செய்ய வேண்டும் அல்லது ஏளனமாகப் பார்க்க வேண்டும். ஆனால் அந்தப் பக்குவமும் எளிதில் வந்து விடாது அல்லவா?? யாரையும் காக்கா பிடிக்கும் அவசியமோ!! பனிந்து போகும் சமரசமோ கொள்ளாத இவன் எத்தனை இடத்தில் பந்தாடப் பட்டிருந்தான்?? எல்லா இடத்திலும் இவனைக் கோபக் காரன் என்று விமர்சனம் செய்தார்கள். இன்று அவன் சிரிக்கக் கற்றுக் கொண்டான்.

ஆனால் அவ்வளவு லேசில் கிடைப்பதில்லை இது போன்ற புன்னகை, மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசையில் பள்ளியில் படித்த அவனுக்கு மருத்துவப்படிப்பிற்கான சீட் கிடைக்கும் அளவு மதிப்பெண் கிட்டவில்லை, ஆனால் Improvement option இருந்த போதும், தனது கனவினை விஸ்தீரனப்படுத்தி நுன்னுயிரியலில் முனைவர் பட்டம் பெற வேண்டும் என்று தன் இலக்கினை வைத்தான். வாழ்வில் எல்லோருக்கும் வரும் இடைஞ்சல்கள், கவனச் சிதறல்கள் எல்லாம் இங்கேயும் வந்து போயின, தன்னை முனைவர் பட்டம் பெறுவதற்கான தகுதியை, முனைவர் படிப்பில் சேறும் முன்னரே பெற்றிருக்கிறான் என்று என்னால் சொல்ல முடியும். வருங்காலத்தில் அவன் வெறும் வெற்றியடைந்த ஒரு முனைவராக மட்டுமின்றி பலருக்கு வழிகாட்டுபவனாகவும், முக்கியமான சூழலியலாளனாகவும் வருவான் என்பது என் உறுதியான நம்பிக்கை. ஏனென்றால் , முனைவர் பட்டத்திற்காக அவன் நுழைவதற்கு மட்டும் அவன் எடுத்துக் கொண்டு பிரயர்த்தனம் இந்த அரசாங்கத்தின் system மீது உமிழ்ந்து விடத் தோன்றுகிறது.

கிட்டதட்ட ஐந்து கல்லூரிகள் இடம்பெயர்ந்து தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டான், இங்கேயும் எண்ணற்ற இன்னல்கள் இருக்கின்றன, சமீபத்தில் அவன் ஒரு paper presentationக்காக சீனா செல்லும் வாய்ப்பினைப் பெற்றான், ஆனால் அதற்கான clearance மற்றும் அரசு அளிக்கிம் subsidies மற்றும் reimbursmentகளைப் பெற்றிட அவன் போராடிய முறையினை உடனிருந்தே கவனிக்கிறேன். இப்பொழுது அவனிடம் ஒரு நிதானம் இருக்கிறது( இது அவன் ஆன்மீக பலம்), தன்னம்பிக்கையிலே ஒரு துளி கூட இழக்கவில்லை (தன்னை அஜித் ரசிகன் என்று சொல்லிக்கொள்ள இதுவும் ஒரு காரணம் என்கிறான்) ஆனால் போராட வேண்டிய களமோ மிகப் பெரியது. பத்து வருடங்களாக படிப்பு என்னும் பெயரில் தவமிருக்கின்றான். அவன் இன்று தன்னை மட்டுமல்லாது தன்னைப் போல வருடங்கள் பாராது முனைவர் பட்டத்திற்காக தவம் செய்யும் எத்தனையோ மனிதர்களின் தவத்தினையும் மதிக்கிறான். ஆனால் இந்தச் சமூகம் இவனை de-motivate செய்யாமல் பார்த்துக் கொள்ளும் கடமையினை யாரிடம் கொடுத்து வைத்திருக்கிறது என்று தெரியவில்லை.

ஆராய்ச்சியாளர்களாக தன்னை அறிவியலிடம் ஒப்படைத்துக் கொண்ட எத்தனையோ இந்திய அறிஞர்கள் இந்த இந்திய system செய்யும் குளறுபடிகளிலும், புதிர்களிலும் தோல்வியுற்றிருப்பார்கள் என்று அவதானிக்க முடிகிறது. ஆனால் அவ்வப்பொழுது சிலர் வெற்றியும் அடைகின்றார்கள், எல்லா கோப்புகளையும் , மேஜைகளையும், அப்ளிகேஷன்களிலும் அடிபட்டு வெளியே தெரிந்து, போராடி வெற்றி பெறுவார்கள். ஏனென்றால் சரித்திரத்திற்கு இவர்கள் தேவைப் படுகிறார்கள்.

HISTORY NEEDS YOU MY FRIEND



(தொடரும்)


3 கருத்துகள்:

  1. விமர்சனங்களுக்காக பயப்படவில்லை, அதை நிராகரிக்க தன் நேரத்தை செலவு செய்யவும் இல்லை, ஒன்று அதைப் பார்த்து புன்முறுவல் செய்ய வேண்டும் அல்லது ஏளனமாகப் பார்க்க வேண்டும். ஆனால் அந்தப் பக்குவமும் எளிதில் வந்து விடாது அல்லவா??

    ஜீவன் ததும்பும் தன்னம்பிக்கை வரிகள்
    கொண்ட பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  2. *
    உரிக்க உரிக்க வெங்காயத்தோல் போல ஒவ்வொன்றும் கழன்று வந்துக் கொண்டே இருக்கிறது ஜீவா..

    ஆனால்
    இவ்வகை வெங்காயங்களுக்கு மையப்புள்ளியாய் ஏதோ ஒன்று இருந்தே தீர வேண்டும்..

    முக்கியமான பகிர்வு..
    நன்றி..!

    நண்பருக்கு வாழ்த்து..

    ப்ரியங்களுடன்
    இளங்கோ

    பதிலளிநீக்கு