வெள்ளி, 30 நவம்பர், 2018

சுஜாதாவின் எந்திரனை இரும்பு வீரனாக்கிய குக்கூ..




எப்படியும் இரண்டு நாட்களில் காசுக்கு வேலை பார்க்கும் ரெவ்யூ புஜ்ஜிமாக்கள் அமைதியாகிவிடுவார்கள். 2.0 விற்கு வந்திருக்கும் நெகடிவ் விமர்சனங்களை மறைப்பதற்காக வழக்கம்போல் ரசிகக்குஞ்சுமணிகள் தான் அவ்ளோ வசூல், இவ்ளோ வசூல் என internal audit செய்துகொண்டிருப்பார்கள்.

அறிவியல் புனைவா? ஜோக் அடிக்காதிங்க பாஸ்

இதை SCI-FI என்று அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள், அதேநேரம் சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். ஹாலிவுட் படங்களில் இப்படியான சிக்கல் இருப்பதில்லை. விக்கிபயலிடம் கேட்டால் சொல்லிவிடுவான் : IRONMAN, AVENGERS போன்ற சூப்பர் ஹீரோ படங்கள் வேறு TRANSFORMERS போன்ற அறிவியல் புனைவு படங்கள் வேறு வகையறா என்று. இந்தக் கலவை சாத குழப்பம் தான் 2.0 படத்தின் basement weak ஆன கதை. ஆனாலும் 2.0 அதிலும் ஒருபடி மேலே போய் ஆவியெழுப்பி கூடு விட்டு கூடு புகும் காட்சிகளை எல்லாம் காண்பித்து அதையும் அப்படியே தராமல் அறிவியல் ஆக்க ஒரு டாகுமெண்டரி எல்லாம் திரையிட்டு விளக்கம் தந்து பல்லிளிக்கிறது.


சவால்களைக் கடந்ததா 2.0.? சும்மா கிச்சுகிச்சு மூட்டாதிங்க பாஸ்

படம் வெளிவரும்போதே தக்ஸ் ஆஃப் ஹிந்தொஸ்தானோடு சவால் வேறு, அப்படத்தில் அமிதாப் ஒரு கிழவனாகவே வந்து அத்தனை சாகசமும் செய்திருப்பார். தக்ஸ் அருகிலென்ன தொலைவில் வைத்து கூட ஒப்பிட முடியாத திராபையான உருவாக்கம் 2.0. வசீகரனுக்கு டயலாக் டெலிவரி உள்ளிட்ட பல முடியாமைகளின் தொகுப்பாக, சிட்டி ரோபோ முதல் காட்சியில் ஓடும்போதோ, 2.0 வில்லத்தனமாக சிரிப்பதாக மெனக்கெடும் போதோ, வடிவேலுவை ஞாபகத்தில் கொண்டு வருவதாக 2.0 நாக்கை தொங்கப்போடும் காட்சியோ சில உதாரணங்கள்

திரைப்படம் காட்டும் அரசியல்

இது அறிவியல் புனைவா, சூப்பர் ஹீரோ சாகஸமா என்று விவாதங்கள் ஒருபுறம். இந்தப் புனைவு நடக்கின்ற தளம் சென்னை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறார்கள். அமைச்சர் ஜெயக்குமார் போல் தோற்றம் கொண்ட ஆனால் பேச்சில் மலையாள வாசம்வீசும் ஒரு கேபினெட் அமைச்சரும், அவருக்கு பாஸாக இருக்கும் மற்றொரு அமைச்சர் அடில் ஹூசைன் ஒரு காட்சியில் வசீகரனிடம் பேசும் வசனத்தில், சட்டத்தை மீறினால் பிரச்சனை ஒன்றும் வாராது ஏன்னா தமிழகத்தில் இருக்கும் 40 எம்.பீ சீட்டுகளும் நாம தான் என்று பேசுவது போல காட்சியமைத்திருக்கிறார்கள். 

பீ.ஜே.பி அல்லது பீ.ஜே.பியின் ஆதரவுள்ள ஒரு அரசு ஆட்சி அமைத்திருக்கும் தமிழகமாக அதை கவனிக்கலாம். அரசாங்க அலுவலகத்தில் பிரதமர்கள் போட்டோக்களை காட்டும் காமிரா கோணம் வாஜ்பேயினைக் காட்டும் போது வேறு காட்சிக்கு செல்கிறது. 

இங்கிருக்கின்ற திராவிட கட்சிகளின் எந்த சாயலுமற்ற அரசியல் தலைவர்கள் படத்தில் வலம் வருவது என்பது ஷங்கரின் அபரிமிதமான அதிபுனைவாக இருக்கிறது.

தாமரை மலரும் என்கிறதா ஷங்கர் – ஜெமோ – ரஜ்னி கூட்டணி !

குழந்தைகளுக்கான படமா? ஐயோ சத்யமா இல்லைங்க

எந்த விதத்திலும் இது குழந்தைகளுக்கான படமில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். கோரமாக உடல் வெடித்துக் கொல்லப்படும் மனிதர்களைக் காட்டும் காட்சி ஷங்கருக்கு புதிதல்ல. அந்நியனில் இதேமாதிரி தான், ஐ படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளும் மிக அருவருப்பானவை தான். இந்தப் படத்தின் சாகஸ நாயகன் 3.0 வில்லனை தனது கண்ணிக்குள் சிக்க வைக்க புறாக்களை கொல்லப் போவதாக மிரட்டுகிறது.

குழந்தைகள் விரும்பும் படங்களில் வரும் சாகஸ நாயகன் Eco System குறித்தும், அதன் தகவமைப்புகள் குறித்தும் கவலைப்படுபவனாகவும் அதற்காகப் போராடுபவனாகவும் தான் இருக்கும்.

சுஜாதாவை மட்டம் தட்டும் ஆஸ்தான பீடம் பொறுப்பேற்றும், இத்தகைய மிகத்தவறான ட்ரீட்மெண்ட்டை உருவாக்கியிருப்பது என்பது திரைக்கதை அமைப்பைப் பொருத்தவரையில் அபத்தத்திலும் அபத்தம்.

இங்கே Eco சிஸ்டத்திற்காகப் போராடும் சூப்பர் ஹீரோவை (பக்ஷிராஜன்) தந்திரத்தால் கொலை செய்யும் 2.0. எது தேவையோ அது தர்மம் என்கிற மஹாபாரத வெண்முரசு suggestions தான் இப்படியான அபத்தமான காட்சியமைப்புகளுக்குக் காரணமாக இருக்கலாம்.

எதற்கு தேவையில்லாமல் இதை இங்கே பேசுகிறேன் எனில், பீடத்தின் இணையதளத்தில் தொடர்ச்சியாக வலையேற்றி வரும் சினிமா சார்ந்த ரெகமண்டெஷன்கள் தான் காரணம்.

ஆக நிச்சயமாக இது ஒரு குழந்தைகள் படம் இல்லவே இல்லை.

கிராஃபிக்ஸ் காட்சிகள் எப்படி?

ஐயோ பாவம் அக்‌ஷய் குமார்.
படத்தில் ஒரேயொரு performerஐயும் நிறுவனத்திற்கு எதிராகப் போராடும், தீய ஷக்தியாக (எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குல்ல?..) மாற்றி அதனையும் பாழாக்கிய உபயம் CGக்கே.

அக்‌ஷய் குமார் பெர்ஃபார்மென்ஸ் எப்படி ?
அதான் மேலயே சொன்னனே.

அப்படியென்றால் எமி ஜாக்ஸன் ?
அதுக்கென்ன இப்போ – அதான் மதராஸப்பட்டினம் பார்த்தாச்சுல்ல

அது சரி இது ஷங்கர் படமா?
யார் இல்லைன்னு சொன்னா, சத்தியமா இது ஷங்கர் படம்தான். சுஜாதா இல்லாத ஷங்கர் படம். அதனால்தான் தேவையற்ற வகையில் ஒரு மனிதனின் ஆரா குறித்த விளக்கங்களும், பாஸிடிவ் எனர்ஜி, நெகடிவ் எனர்ஜி பற்றி கொடுத்த விளக்கங்களும் இருக்கின்றன. ’பலேபாலு பாட்டில் பூதம்’ போல, உடலில் இருந்து ஆவி வெளியேறும் ஜமீன் கோட்டை காட்சிகளையெல்லாம் ஏன் வைக்கிறார்களோ தெரியவில்லை.
இப்படியான வெறுப்பேற்றும் அறிவியல் விளக்கங்கள் சுஜாதாவை தான் மிஸ் யூ சொல்ல வைக்கின்றன.

எந்திரன் படத்தில் ஒரு காட்சி, ’சிட்டியை’ டெமோ காண்பிக்கும் போது அதை அவர்கள் ரிஜக்ட் செய்து விடுகிறார்கள். பின்னர் இரண்டு மாத அவகாசம் கேட்டு சிட்டிக்கு மனித உணர்வுகளை உணர்ந்து கொள்ளும் feedings நடக்கிறது. எதுவுமே ரியாக்ட் செய்ய இயலாத சிட்டியைப் பார்த்து வசீகரன் திட்டுகிறார், நொந்தபடி நடந்து செல்கையில் அவரைப் பின்தொடர்கிறது சிட்டி, திடீரென வானத்திலிருந்து சிட்டி மீது ஒரு மின்னல் வெட்டுகிறது. உடனே சிட்டியை தூக்கிவந்து சரிசெய்கிறார்கள், ஆனால் இப்போது சிட்டிக்கு உணர்வு வந்துவிடுகிறது.

சுஜாதாவுக்கு எந்த மாயாபஜார் அதிரிபுதிரியும் தேவைப்படவில்லை – ஷங்கர் எதிர்பார்த்ததெல்லாம் இப்படியான ஒன்றைத்தான். சிவாஜியில் கூட காசை சுண்டும் போது இயற்கையோ தற்செயலோ என் பாதையைத் தீர்மானிக்கட்டும் என வசனம் வரும். ஒரு வெகுஜன எழுத்தாளன் என்கிற விமர்சனத்திற்கு பின்னிருக்கும் இத்தனை perfection தான் 2.0 படத்தில் இல்லை.

“என்னைப் படைத்த கடவுள்” என்றும், ”எம்பெருமானே” என்றும் சிட்டி வசீகரனை அழைக்கும் காட்சியில் எமோஷன்ஸ்க்கு பதிலாக எரிச்சலே வருகிறது.

எந்திரன் படத்தில் செய்தது போல 2.0 வில்லத்தன சிரிப்பைக் கூட செய்ய முடியாத அளவுக்கு இருக்கும் மனுஷனை கஷ்டப்படுத்துறது உலக அளவில் 10000 தியேட்டர்களில் ஒரு தமிழ்படம் திரையிடப்படணும் என்பதெல்லாம் ஒரு தமிழனின் கனவு என்றால் தமிழன் INSOMNIA விலேயே கிடந்து அவதியுறட்டும்.

2.0 is simply a flaw.

டாட்.

ஜீவ கரிகாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக