சனி, 17 செப்டம்பர், 2016

மோன நிலையிலே


அம்முவுடன் பேசும் போதெல்லாம் ஒரு நதியின் சலசலப்பு பின்னணியில் ஓடிக்கொண்டிருக்கும்… வெகு சீக்கிரத்தில் அவள் சிரித்துவிடுவாள் இரண்டு நதிகள் ஒன்றுடன் ஒன்று கொஞ்ச ஆரம்பித்தது போல் இருக்கும்.

நதிகள் ஓடாத வன்புணர்வு செய்யப்படும் தடங்களே உள்ள பூமியில் பிறந்தவனுக்கு நதிகள் சங்கமிப்பதாக கற்பனை செய்து கொள்ள முடிகின்றது என்பது ஒரு ஆர்கஸமிக் உணர்வு. பொதுவாக, இப்போதெல்லாம் க்ளோஸ் அப் டூத் பேஸ்டை நினைத்தாலே ஆர்கஸம் உண்டாக்கும் விளம்பரத் தந்திரயுகத்தில். நதிகளையும், மரங்களையும், பறவைகளையும், பூக்களையும், சங்கீதத்துடனும், ஸ்ரிங்காரங்களோடும், ஓவியங்களோடும் பேசுபவள் இவள். இத்தனைக்கும் மேலே கவிதைகள் வேறு தனியாக, (இரண்டாவது நதியைப் போலே, இரண்டாவது கவிதைகளும்) உண்மையில் பேசுபவள் கேட்பவனாகவா நாங்கள் இருக்கிறோம். இல்லை அம்முவின் நர்த்தனம் இது ஆனால் நான் கேட்கிறேன். இதுவும் ஒரு புலன் மயக்கம் தான். இதில் அறிவு கூட கூர்மையடைகிறது.உபொருள்.

இப்போது மூன்றாவது நதியைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறாள்

அவளது செல்பேசியும் அவளைப் போலவே, அவள் தொடர்பு கொள்ள முடியாத தொலைவில் இருக்கிறாள் என்பதை ஒவ்வொரு முறை அழைக்கும் போதும் ஒவ்வொரு மொழியில் என்னிடம் சொல்லும், அவளைப் போலவே.

இப்போது மூன்றாவது நதியைப் பற்றி என்னிடம் ஆரம்பித்தாள், இந்த முறை அவள் ஹரியானாவில் ஒரு பகுதியிலிருந்து, சரஸ்வதி நதியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாள். சரஸ்வதி நதி புண்ணிய நதி என்று வணங்கப்படும் நதி. அந்த நதி பாயும், ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து என்னை அழைத்திருக்கிறாள். அவள் அந்த கிராமத்தின் நிலக்காட்சியை எனக்கு வர்ணித்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு கையில் தூரிகை இருந்திருந்தால் ஒரு ஓவியம் கிட்டியிருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒரு ஓவியம் கித்தானிலோ, ஒரு காகிதத்திலோ , என்ன ஒரு ஊடகத்திலேயோ உருவாகும் போது. அந்த ஊடகம் என்னவாக இருக்கிறது என்பதை உணர முடியுமா.
இதோ நான் உணர்கிறேன். நான் என்னவாக இருக்கிறேனோ அதுவாகவே அந்த ஊடகமும் இருக்கும்.

 “அந்த கிராமத்தில் காக்கைகள் இல்லைப்பா” என்று அவள் சொல்கிறாள்.

ம்ஹ்ஹும் என்ன ஆச்சரியம் வந்து விடப்போகிறது, நாம் வானத்தைப் பார்த்து எத்தனை நாட்களாகியிருக்கின்றது. எத்தனை பறவைகள் பேர் தெரியும். அவள் தினமும் பறவைகளை அதன் சப்தங்களை அனுப்புவது தான் குட் மார்னிங் ஆக இருக்கிறது. அவள் காக்கைகளைக் காணவில்லை எனும் த்வனியில் ஒரு பதட்டம் இருந்தது, ஒரு அக்கறை இருந்தது. எனக்கு வெறும் கேள்வி மட்டுமே இருந்தது “( ? )”.

“இந்த கிராமத்தில் காக்கைகள் இல்லை காளிதாஸ்”
“அப்படியா அம்மு.. ஏன் அவை அங்கு விப்பில்ல

அறிவியல் ரீதியாக எத்தனையோ பேசியிருக்கிறோம். அவள் காக்கைகள் இல்லையென்றவுடன், அவள் அந்த ஊரில் வேறு என்னவெல்ம் இல்லை என்று விசாரித்ததைச் சொன்னாள். அந்த ஊரில் எருமைகள் கூட இல்லையாம்.

 “அப்படியென்றால் கரிய நிறத்தில் எதுவுமே இல்லையா” நான் என்னினத்ுக் கேட்டிருக்கிறேன் என்பு அவுக்கத் ெரியும்.

மூன்றாவது நதியருகில், இரண்டாவது நதியின் சலசலப்பு. நானும் ூட சிரித்தேன்.

“காளிதாஸ் காக்கைகள் இல்லை என்றவுடன் அந்த ஊரில் சடங்குகள் எப்படி செய்யப்படுகின்றன என்று கேட்டேன் ” என்றாள். நக்கஏன் இப்பிக் கேட்கத் ோன்றுவில்லை என்ு என்னானே கேட்டுக்கொண்டு.

காக்கைகளின் மறைவுக்குப் பின்னர், சடங்குகள் பலவற்றைக் கைவிட்டுவிட்டோம் என்று ஊர்மக்கள் சொல்லியிருக்கிறார்கள், அந்த ஊரில் கள் அனுமதி, மது அனுமதி, புலால் அனுமதி கூட கிடையாதாம். இந்து மதத்தில் காக்கைக்கு செய்யும் சடங்குகள் ஒரு முக்கியமான பகுதி, அவ்வூர் மக்கள் காக்கைகளின் இழப்பிற்குப் பின்னர் தங்கள் வாழ்வை பெருமளவுக்குக் கட்டுப்பாட்டுடன் மாற்றியிருக்கிறார்கள் என்றாள்.
இப்பவும் கூட எனக்கு அதில் என்ன எடுத்துக் கொள்ள இருக்கிறது என்று தெரியவில்லை.

சமூகக் கட்டமைப்பில் ஒரு இயற்கையாக நடக்கும் சிறிய இழப்பு அல்லது மாற்றம், எத்தனை பெரிய மாற்றங்களையோ அல்லது பேரிழப்புகளையோ கூட உருவாக்க இயலும் எனப் புரியவில்லையா என்கிறாள். அம்முவக்கு என் மீது கரிசனமிருக்கிறது.  உண்மையில் முழுமையான அறிவு என்ப கரிசனமிக்கது, அரைகுறை தான் மூடி மறைத்துக்கொள்ளும் + கொல்லும்.

ஆம் இது கயாஸ் தியரி போலிருக்கிறது என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். இந்த மாற்றங்களை அவள் தொன்மத்திலிருந்து, அறிவியலிலிருந்து, கலையிலிருந்து என அடிக்கடிப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறாள்.

ஆம் இப்படியான மாற்றங்கள், ஒன்று சாதிக் கொடுமைகள், பிரிவினைவாத, வர்க்க பேதங்கள் போன்றவற்றை அழிப்பதற்கான தந்ரோபாயங்களைச் சொல்லிக் கொடுப்பது போலவும் (உதாரணம் அண்மையில் வந்த சென்னைப் பெரவெள்ளம்), மற்றொன்று அதில் கட்டமைக்கப்படும் சந்தர்ப்பவாத அரசியல் அல்லது பாஸிஸத்தைப் பற்றி புரிந்து கொள்ளவும் கற்றுக் கொடுக்கின்றன (50 ஆண்டுகால திராவிட மனநிலை ) என நான் உள்வாங்கிக் கொண்டதை, இம்ப்ரெஸனிஸ்ட் பாணியில் ஏதாவது ஒன்றாக,ையாகச் செய்துக் காட்ட வேண்டும்.

ஏன் (இன்றைக்கு) பெரியார் பிறந்தநாள் நினைவாக ஏன் இதைப் பார்க்கக் கூடாது, ஹெல்லொ இன்றைக்கு மோடிஜியின் பிறந்தநாள் என்று அவன் சொல்கிறான். நமக்கு எதுக்கு வம்பு??

ஆனாலும் நான் அவளது ஊடகமாக இருப்பதை கௌரவமான உத்தியோகமாகவே நினைக்கிறேன்.

அம்மு இன்று மிகவும் அழகாக இருக்கிறாள். நீ பார்க்கும் நிலவை நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

My hugs on the Air, Kisses on the moon

- ஜீவ கரிகாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக