செவ்வாய், 22 டிசம்பர், 2015

நகுலன் எழுதாத ஃபேஸ்புக் கவிதை (மெயின் டைட்டில்)

(Staturory warning
1.Subject to editing risks at any point of time
2.Subject to spelling mistakes
3.Content not suitable for all especially those who believe them are poets)

(சப் டைட்டில்) இறுதியில் CTRL + V செய்தால் மதி!!

இப்படியாக இறுதியில்
சரவணன் பேட்டர்ன் ஒன்றைக் கண்டு பிடித்தான்
சரவணன் கவிதை ஒன்றை எழுதினான்
மேலே சொன்ன வரிகள் பல்லவியாக மாறின 
”யாரவள்”
”ஷட் அப்”
சரவணன் பேட்டர்ன் ஒன்றைக் கண்டு பிடித்தான்
சரவணன் கவிதை ஒன்றை எழுதினான்
மேலே சொன்ன வரிகள் பல்லவியாக மாறின 

{பல்லவியை பாடிக்கினு அடுத்த சரணம்} 
CTRL + C ஐ சரவணன் அழுத்தினால்
2 லைக்ஸ் எப்பவாது கமெண்ட்ஸ் 
CTRL + C ஐ நான் அழுத்தினால்
10 லைக்ஸ் மூனு கமெண்ட்ஸ் (சரவணனும் தான்) 

{பல்லவியை பாடிண்டு அடுத்த சரணம்}

CTRL + C ஐ “!!!” அழுத்தினால்
411 லைக்ஸ் 64 கமெண்ட்ஸ் (நானும் சரவணனும் BLOCKED)
 CTRL + C எல்லாம் என்ன பிரமாதம்
”???” ஒரே ஒரு “.” வைத்தால் போதும்
1599 லைக்ஸ் 456 கமெண்ட்ஸ்
சரவணன் : அருமை.. கவிதை மாதிரி இருக்கு
   “J
நான் : புல்லரிக்குதுங்க
    “J
{பல்லவியப் பாடேம்ல இன்னொரு வாட்டி}


பகுதி – 2 ( இது வேற வெர்ஷன் )

இப்பொழுதும் அதே பல்லவி தான்

“இந்த புத்தகச் சந்தைக்கு
சரவணனின் நூல் வெளிவருகிறது”

நான் : யோவ் ராயல்டி கேளுய்யா

சரவணன் :
சார் டெம்போவெல்லாம் வச்சுக் கடத்தியிருக்கேன்

!!! : அதுக்கு
சரவணன் : ராயல்டிலாம் வேணாம்
         ரைட் க்ளிக் டிஸேபிள் பண்ணி,
           கண்ட்ரோல் பட்டனைக்
           கழட்டி கொடுங்க

!!! : முட்டப்பய – கீபோர்ட்ல ரெண்டு கண்ட்ரோல் பட்டன் ஒன்னு தான் கேட்டான்


பின் குறிப்பு அல்லது அடிவாங்குவதற்கு முன் குறிப்பு
( நானே சரவணன், நானே !!!, நானே ???, நானே கவிஞன், நானே பப்ளிஷர், நான் நானாக மட்டுமில்லை)


கடைசியா இன்னொரு தபா ஒரு தலைப்பு
“Sorry  சரவணன்”


ஏதோ ஒன்றில் PATTERNகளை தீவியமாக உருவாக்கி வரும் நண்பருக்கு டெடிகேட் செய்கிறேன்.

“சாவுடா!!”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக