வெள்ளி, 25 ஜனவரி, 2013

பஜ்ஜி - சொஜ்ஜி 14/ விஸ்வரூபம்
























Arvind Swaminathan

(- பார்த்ததில் பிடிக்காதது -)

”சமணர்களைக் கழுவேற்றினார்கள்” என்று சொல்லி இது போன்ற புகைப்படங்களை ஆதாரமாகக் காண்பிக்கின்றனர் ஒரு சிலர்.

சரி... எந்தச் சமணராவது ”கைகளில்” திருநீற்றுப் பட்டையை அடித்துக் கொண்டிருப்பார்களா? முற்றும் துறந்து முடி களைந்து வாழ்ந்த அவர்கள் ”தாடி” வைத்துக் கொண்டிருப்பார்களா?

இவர்கள் சமணர்களே அல்ல: உண்மையில் சிவத் தொண்டர் வேடம் பூண்டு பசுக்களைக் கொல்தல், மனிதர்களைக் கொலை செய்தல், கொள்ளையில் ஈடுபடுதல் போன்ற பாவச் செயல்களைச் செய்த கயவர்கள். திருடர்கள். கொள்ளைக்காரர்கள்.
அதுபோன்ற மா பாதகம் செய்தவர்களே பெரும்பாலும் கழுவில் ஏற்று கொல்லப்படுவர். அதனாலேயே இவர்களுக்கு அத்தண்டனை.

சிலர் ”எண்ணாயிரம் சமணர்” என இலக்கியத்தில் இருந்து ஆதாரம் கூறுவர்.

“எண்ணாயிரம்” என்பது மதுரை அருகே இருக்கும் ஒரு ஊர். (விழுப்புரம் அருகே கூட ஒரு எண்ணாயிரம் இருக்கிறது)

”8000 சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள்” என்பது எந்த வரலாற்று, இலக்கிய ஆதாரமும் அற்ற வெறும் பிதற்றல். ஒரு சிலர் கொல்லப்பட்டிருக்கலாம். அவ்வளவுதான். 8000 என்பதெல்லாம் சும்மா...

(மறுப்போர் ஆதாரங்களுடன் மறுக்கவும்)

(என் நண்பர் இணையத்தில் சொன்ன ஒரு அருமையான பகிர்வு)
------------------------------------------------------------------------------------------------------------

மற்றொரு நபருடன் பேசிக் கொண்டிருக்கையில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று சொன்னவர் கணியன் பூங்குன்றனார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் பூங்குன்றனார் என்பதே பூங்குன்றன் எந்த ஊரைக் குறிப்பதாகும், தன் சாதியையும், தன் ஊர்ப் பெயரையும் வைத்தவரா இப்படிப் பாடியிருக்க முடியும் என்று கேட்டார்.

“யாதும்” என்ற பதம், சமய நம்பிக்கையான முற்பிறவியை வைத்து எழுதப் பட்டமையை சொல்கிறார்.

யாதும் ஊரே என்பது தமது முற்பிறவியில் பிறந்திருக்கக்கூடிய வேறு ஊர்கள் எதுவாக வேண்டுமாயினும் இருக்கலாம் என்கிறார்.

மேலும் இதைக் ஏற்றுக் கொள்ளும் விதமாக “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது மிகப் பொருத்தமாய் கர்ம வினையினை ஏற்று வருகிறது. “சாதலும் புதுவது மன்றே வாழ்தல்” கூட சமய நெறியை ஒட்டிய வரிகளே என்று அவர் சொல்லும்பொழுது என்னால் ஏற்றுக் கொள்ள முடிகிறது...

மேலும் பண்ணாகப் பாடும் பொழுது இச்சமயக் கருத்துகள் போலச் செய்து, இன்னும் சொல் பொருளை மிஞ்சிவிட்டதாகக் கூறுகிறார்.

என்ன (யாதும் ஊரே!! யாவரும் கேளிர் என்ற வரி 500 ஆண்டுகள் வயதான கம்யுனிசத்தை விட மிகப் புரட்சியாய் இருக்கிறதே என்று நினைத்திருந்தேன்)

-----------------------------------------------------------------------------------------------------------


இந்த இரண்டுக் கருத்துகளிலுமே நாம் முரன்படலாம், ஆனால் ஏற்றுக் கொள்வோரை தடுத்திடவும் முடியாது. வரலாறு மட்டுமல்ல உலகின் எல்லா பொருளுக்கும் மறைபொருளாகவோ, எதிர்த் திசையில் பிம்பமாகவோ அல்லது எதிர்வினையோ பதியலாம்.

வரலாற்றின் ஒவ்வொரு உண்மைகளின் அடிவாரத்திலும் மற்றொரு உண்மையின் சமாதியாகியிருக்கிறது. உண்மையும், பொய்யும் தானே நாணயத்தின் இருபக்கங்கள் என்று சொல்லலாம். ஆனால் ஒவ்வொரு பூவுக்கும், தலைக்குமே குறைந்தபட்சம் இரண்டு உண்மைகள் இருக்கின்றன. இது தான் இறுதி உண்மை.

ஆனால் நாம் பல இடங்களில் உண்மையைக் கண்டறிதலோடு முடித்துவிடுகிறோம், இன்னொரு உண்மை எட்டிப் பர்த்துக் கொண்டேதான் இருக்கிறது.

அப்படித்தான் விஸ்வரூபம் படம் கூட அவரது செக்யூலர் மற்றும் தேசிய அளவீடுகளில் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறது. இப்பொழுது எந்த அணியும் (சினிமா ரசிகனைத் தவிர) கமலுக்கு உதவ முன்வரவில்லை. ஆதரவு தெரிவிக்க எந்த அணியாவது ஒரு அடி எடுத்து வைக்கிறார்களா என்றால் vote bank தான் காரணம். இதில் என்னப் புது விஷயம் இருக்கிறது, அநாவசியமாக ஒரு feature filmஐ documentary film ஆகக் காட்டுகிறது. இவர்களுக்கு திடீர் ஆதரவு தெரிவுக்கும் சில பார்ட்டிகளால் இன்னும் பெரிய விவகாரம் ஆகிக் கொண்டிருக்கும் பட்சத்தில், எதிர்ப்பில் இருப்பவர்கள்”ரிலீஸ்” ஆன பின்பு போய் பார்த்த பின் முடிவுக்கு வருவார்கள். ”கமல்”, சேம் சைடு தானே கோல் அடித்திருக்கிறார் என்று!!


கஜூரஹோ, அஜந்தா ஓவியங்கள் மீது நடந்தவை
ஓவியர் MF Hussain,
சல்மான் ருஸ்டி, போன்ற எல்லாமுமே கலாச்சாரத் தாக்குதல் தானே!!

நான்கு முதல்வர்களையும், நாற்பது முதல்வர் கனவுகளையும் உருவாக்கிய இந்த மண்ணில்

சினிமா ஒரு பவர்புல் மீடியா அதை வைத்து அரசியல் செய்யக் கூடாது என்று சொல்ல முடியாது. கமலஹாசனால் நீக்க வேண்டும் என்று சொன்ன அத்தனைக் காட்சிகளுக்கும் இணையத்தில் ஆதாரம் (உண்மையில் இதைப் போன்ற சம்பவம் பற்றிய தகவல்கள்)கிடைக்கும், ஆனால் அவை உண்மையாகி விடாது.

அதே சமயம் இந்த அரசியலில் நான் கமலஹாசனை விட தர்ம சங்கடமான இடத்தில் பகுத்தறிவுப் பகலவனையும், உபகோள்களையும், மணிகளையும் தான் பார்க்கிறேன். பாவம் எப்படி சமாளிப்பாங்க என்று பார்க்கிறேன். ”காதலா, காதலா” என்ற படம் எனக்குப் பிடித்திருந்தாலும் அதில் வரும் சில முருகக் கடவுளரைப் பற்றிய காட்சிகள் மிக மோசமாக சித்தரிக்கப் பட்டிருக்கும்(மிகக் கொடுமையாக). அன்பே சிவம் படம் பார்த்து மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் புத்தகம் வாங்கினேன் dosage அதிகம் தான், ஆனால் தசாவதாரத்தில் பேசப்படும் நாத்திகக் கருத்துகள், intelligent design போன்றவை ஓவர் டோசேஜ் ஆகிவிட்டது, அதற்கு பின் தன்னையறிதல் என்ற வழியே மீண்டும் ஆன்மிகத் தேடலில் சென்றுவிட்டேன் என்பது வேறு கதை.

இவர் தன்னையும் ஒரு பெரியாரிஸ்டாய் முன்னிருத்திய இடமெங்கும் இனி மௌனம் மட்டுமே நிற்கும். கமலுடன் நட்பு கொண்டாடி வந்த கழகங்கள் சிறுபான்மை இனத்தை தட்டிக் கேட்கவும் முடியாமல், தன் தோழரை சமரசம் செய்யவும் முடியாமல் cultural fascism பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். படம் திரைக்கு வரும் பட்சத்தில் கிடைத்திருக்கும் எக்கச்சக்க hype கமல் ஹாசனைப் காப்பாற்றும்









------------------------------------------------------------------------------------------------------------------------------









அடுத்த பகுதியில் பார்ப்போம்
ஜீவ.கரிகாலன்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக