திங்கள், 2 மே, 2011

அருளமுது - Nama Shivaya




1.சொர்கமென்ப பொன்னன்று பொருளன்று -யாதொரு 


மயக்கமென்ப மதுவன்று மங்கையன்று - பிரிதறு 
உறவென்ப தாயன்று,தாரமன்று எல்லாமன்று 
சிவனென்றி ருத்தலே மெய்  

2.
அகங்கொண்ட கோபமுங்காமமும் பொல்லா பாசமும் 
யாக்கைகொண்ட குருதியும்-மலமும் நோய்செய் கிருமியும்-எமை 
யாட்கொண்ட பேரருளாஞ்சிவனடி பற்றிட; எம்மை விட்டகன்றிட
யாம் நின்றோம் ஆனந்தவெற்றிடமாய். 


3.
நித்தமும் பயிலும் யோகமும், தியானமும்

சித்தமெல்லாம் சொல்லும் சிவாய மந்திரமும்

பித்தனைச் சேர்வதில்லை; ஞானமென்ப பலனன்று

வினையருத்து நின்ற வெற்றுமனம்

4.இம்மையில் ஆற்றிய வினை கரைந்தொழிய


மறுமையில் யாதொரு முயர்ச்சியு மற்று, 
இயல்பினொரு ஒருமையினைக் கண்டு- மதமெனுஞ்   
செயல்துறந்த நானே சிவன் 


5.விடுவிடுவென விட்டுநின்ற சுற்றமுஞ் சொந்தமும் 

படபடவென பட்டுப்போன பாசமுஞ் சோகமும் 
கடகடவென பாய்ந்துவந்த பக்தியெனு நதியிலே 
சிவசிவனென சந்தமாய் மூழ்கினேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக