செவ்வாய், 19 ஜனவரி, 2016

அது - 01

அவள் கடைசியாக என்னிடம் சொல்லிய வார்த்தை ஞாபமிருக்கிறதா என்று அதனிடம் கேட்டேன். அது மிகச் சரியாக சொன்னது, “விட்டுவிடாதே தொடர்ந்திடு”. அவளின் குரலுக்குத் தெரியாது, அதற்கடுத்ததாய் நான் உதிர்த்த வார்த்தைகள் எல்லாவற்றையும் மாற்றிவிடப் போகிறது என்று.



“விட்டுவிடாதே தொடர்ந்திடு” அவள் சொன்னாள், நானும் சொன்னேன். இப்போது அதுவும் சொல்கிறது

சரிதான், என் கேள்விக்கு சரியான பதில் சொன்ன மகிழ்ச்சியில் குதித்தது. அதே போலா நான் அவளிடம் இறுதியாக என்ன சொன்னேன் தெரியுமா என்றேன். இன்னமும் நான் அவற்றைச் சொல்லவில்லை என்றது. ஆம் இன்னும் அவற்றைச் சொல்லவில்லை. நான் அவளிடம் சொன்ன சொற்கள் இறுதியானவை அல்ல, இறுதியாய் சொல்வதற்கு என்னிடம் சொற்கள் இருக்கின்றன. அதனை அது மறைத்து வைத்திருக்கிறது, இப்பொழுது எனக்கிருக்கும் குழப்பமெல்லாம், அவற்றைத் தேடிக் கண்டடைவதா? இல்லை அப்படியே இருக்கட்டுமா என்று தான். பூட்டி வைத்திருக்கும் ட்ரங்க் பெட்டியினுள் புறாவின் சிறகசைப்பு போன்ற ஓசை எதிரொலியோடு கேட்கின்றது. அதன் ACOUSTICS மனதில் ஒலிக்கிறது. அது மறைத்துவைக்கப்பட்ட என் சொல்லின் பரிதவிப்பு தான். இப்போது நான் என்ன செய்யட்டும்.

பகலில் அந்த சொற்களைப் பற்றி நான் கண்டுகொண்டதில்லை, அவை பற்றிய நினைவு வராமல் என் வேலைகள் என் கழுத்தைச் சுற்றியிருக்கின்றன. இரவில் அவற்றைத் தேடியெடுக்கப் புறப்படுகிறேன், ஞாபகம் வந்தவுடனேயே அந்த தேடல் ஒன்று தான் என்னை அசைப் போடுகின்றது. ஆனால் அந்தச் சொற்களை மறைத்து வைத்திருக்கும் அது, மாலையில் விழித்துக் கொள்கிறது. அது விழித்திருக்கும் பொழுது என்னால் அவற்றை கண்டுபிடிக்க முடியாது, மிகவும் நூதனமாக அவற்றை என்னிடம் இருந்து மறைத்து வைத்திருக்கின்றதாய் அது என்னிடம் சொல்லியிருக்கிறது. அது என் மீது கொஞ்சமும் கரிசனமற்றது என்பது எனக்கு நன்றாகப் புரிந்திருந்தது. இருந்தாலும் எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிட்டாமலா போய்விடும். காத்திருக்கிறேன். அது என் நினைவுக்கும், மறதிக்கும் நடுவே உண்டு களித்து உறங்கி தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறது.

அவற்றைக் கவர்வது எப்படி?

முதல் உபாயம் : 
அது உறங்கும் கணத்தில் அச்சொற்களைக் கண்டு கொள்ள வேண்டும்

இரண்டாம் உபாயம் : 
அதனைக் கொல்ல வேண்டும்.

இதில் சில அபாயங்களும் இருக்கின்றன –
  • நான் கவர்ந்தது உண்மையில் என்னுடைய சொற்கள் என்று யார் ஊர்ஜிதம் செய்வார்கள்.
  • ஒருவேளை அந்தச் சொற்கள் என்னையே கொன்று விட்டால்…. 
உபாயம், அபாயம் பற்றிக் கவலைப்படும் நிலையில் நானில்லை. நேரமில்லை, பொறுமையில்லை, தைரியமில்லை என பட்டியல் நீள்கிறது. இல்லாது போனவற்றிட்கும், இருக்கின்றவைகளுக்கும் மத்தியில் ஒன்று தெரிகிறது, வார்த்தை விளையாட்டு அல்ல, அது வளர்பிறையோ தேய்பிறையோ அல்ல.. அந்நிலையில் அது வளரவும் செய்யும், தேய்ந்தும் போகலாம். அது தான் அது

மழையின், கடற்கரையின் உப்புக்காற்றில், வெயிலின் கானல் நீரில், நிலவின் தகிக்கும் florescent வண்ணத்தில் நிற்கதியாய் தொங்கிக் கொண்டிருக்கும் துருப்பிடித்த கிட்டார் ஒன்றினை யாரோ வெறித்தனமாக வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். Luckily or lustily , those lightning electrified the strings.That's how my pineal gland pierced on the very moment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக