வியாழன், 8 அக்டோபர், 2015

பஜ்ஜி-சொஜ்ஜி - 84


(இனிமே கொஞ்சம் அரசியலையும் தொட்டுக் கொள்ளலாமே என்று இந்த கட்டுரையை ஆரம்பித்து இருக்கிறேன். விவகாரமான தலைப்பு வைக்கும் போதே வில்லங்கங்களையும் எதிர் பார்த்து தான் தொடர வேண்டி இருக்கிறது.)

பிரியாணியும் கேஸ்ட்ரபிளும்

ஒகே விஜய் படமான புலி வராமல் இருந்திருந்தால், மொத்த கவனமும் இந்த சூட்டில் தான் தமிழ் கூறும் நல்லுலகத்தின்  இணைய உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து இருக்கிறது. படம் நல்லாயிருந்தாலாவது பரவாயில்லை, மக்களும் தலைப்புச் செய்திகளுக்கு செவி கொடுத்திருப்பார்கள்.

பாம்பேக்கு இரயிலில் செல்லும் பொழுது நான் பேசிய நண்பர்கள், வாசித்த புத்தகங்களை வைத்தும், கொஞ்சம் கதைத்ததை வைத்தும் என்னை எழுத்துக்காரன் என்று அடையாளம் பிடித்தவர்கள் இருவர். ஒருவர் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஜவான் ஒருவரும், மற்றொருவர் மும்பையில் பலகாலமாக வாழ்ந்து வரும் ஒரு தமிழர். இருவரும் என்னை எவ்வாறு பார்த்தனர் என்பது தான் சுவாரஸ்யம்.

இப்போது எல்லோரும் ஒரு கருத்து ஒன்றை தெரிவிக்க வேண்டும் என்கிற அசாதாரண சூழல் ஒன்று உருவாகியிருக்கிறது. அசாதாரணச் சூழல் என்றால், மூன்றாவதாக ஒரு நிலைப்பாடு என்பதை எடுக்கவே முடியாத அளவிற்கு ஒரு அழுத்தம். இணைய ஊடகங்களில் ஜீவிக்கும் அத்தனை மனிதர்களும் கருத்து சொல்ல வேண்டிய நிர்பந்தத்திலிருப்பவர்கள். 

உண்மையில் நடுநிலைவாதம் (unbiased stand) என்று ஒன்று இருக்கிறதா என்ன??

இதெல்லாம் ஒருபுறமிருக்க தமிழகத்தில் எழுத்தாளர்கள் தாங்கள் வாங்கிய சாகித்ய அகாதமியைத் தூக்கி எறிய வேண்டும் என்கிற கருத்து நயந்தாரா தன் விருதைத் திருப்பிக் கொடுத்ததன் வழியாக, சமூகத்தில் ஆளும் அரசுக்கு எதிரான தன் எதிர்ப்பைப் பதிந்தையே நம்மூர் ஆட்களையும் செய்யச் சொல்லி கேட்கும் கூவல்களையும் கேட்க முடிகிறது. நிச்சயமாக அரசிற்கு இது ஒரு அவமரியாதைத் தரக்கூடிய செயல் தான், அதிகாரத்தைக் கண்டிக்கும் செயல் தான் ஆனால் , தமிழ் சூழலில் - அதற்கான சமூக அமைப்பில் இருக்கின்ற மதிப்பீடு /CREDITS என்ன என்று யோசித்துப் பார்க்கும் போது தான் மேற்கண்ட என் பயணம் ஞாபகத்திற்கு வருகிறது.

சில கேள்விகள்  - கலை வரலாற்றை சமூக வரலாற்றோடு இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாக நம்பும் நான், நயந்தாராவின் படைப்புலகம் குறித்த ஐயப்பாட்டை எழுப்பவில்லை, அது அங்கீகரிக்கப்பட்ட பின்னணி என்ன என்று பார்த்தால்..

  • நயந்தாரா - விருது கொடுத்த வருடம்  1986.
  • சாகித்ய அகாதமி விருது கொடுக்கப்பட்ட புத்தகம் 1985ல் வெளிவந்த RICH LIKE US எனும் நாவல்
  • 1986 ஐ ஒட்டிய தேசிய அளவிலான பிரச்சினை - 1984ல் சீக்கியக் கலவரம் (3000க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்ட ஒரு அவமானகரமான காலக்கட்டம் )
  • இப்படியான காலக்கட்டத்திலும், அரசாங்கம் பல கலைஞர்களை கௌரவித்தும், கலைகளுக்கான நிறைய சலுகைகளையும் அறிவித்துக் கொண்டுதான் இருந்தது. இதே வருடத்தில் தான் (1986) எம்.எஃப்.ஹுசைன் காங்கிரஸ் சார்பாக ராஜ்யசபா உறுப்பினராக பார்லிமெண்ட் சென்றார்.
இணையம் வந்த பின்னர், எழுத்தாளர்களுக்கு பிளாட்பாரங்கள் தேவையில்லை, ART FOR ART, ART FOR PEOPLE என்று இங்கே ஏற்படும் பிளவினை கோட்பாடுகள் மூலம் ஆராந்து பார்ப்பதே நல்லது எனப்படுகிறது. விருதைத் திருப்பிக் கொடுத்தவர்களை சாடுவது நோக்கமுமில்லை, அதை எதிர்க்கவுமில்லை. கருத்து சொல்லாமல் ஒதுங்கி இருப்பவனை வம்பிழுக்கும் பல முட்டாள்தனமான வாதங்களைக் கண்டு பதில் சொல்வதற்கும் மனமில்லாமல், கவுண்டமனி நெல்லை சிவாவிடம் ஓசியில் கடலை வாங்கியதற்கு பிரதிபலனாக தான் அபிமானம் உள்ள கட்சி எதுவென கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்லுமாறு அவஸ்தைக்குள்ளாகும் காட்சி வந்து போனது. 


தமிழ் சூழலில் எழுத்தாளர்களுக்கு இருக்கும் மதிப்பீடுகளும், அதைத் தருவதால் ஏற்படுத்தப் போகும் அழுத்தங்களும் என்னென்ன என்று யோசித்தாலும், அறிவியல் தேற்றங்களை எழுதச் சொன்ன பின்பான என் பேனா  படும் பாடு தான்

அடக் கடவுளே இந்த அவசரத்தில் பம்பாய் ரயிலில் நடந்த விசயத்தை சொல்ல மறந்துவிட்டேனே!! அவ்விருவரும் கேட்ட கேள்விகள்

1.மராட்டிய ஜவான் : உங்களோட ஒரு செல்ஃபி எடுக்கவா ?? – GREAT TAMIL WRITER right??
நான் : YES, GREAT TAMIL and a Tamil writer

2.மும்பை தமிழன் : நீங்க ஏதும் எழுத்தாளரா??
நான் : ஆமாங்க, வளரும் எழுத்தாளன்
மு. த: அதெல்லாம் சரிதான். “சோத்துக்கு என்ன செய்யுறிங்க”




!@#@$%!%%!%!@%

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக