வியாழன், 15 அக்டோபர், 2015

இன்னுமொரு கடைசி விருந்து பாக்கியிருக்கிறது

சந்தோஷமாய் இருந்த முட்டாள் நான்

செல்லோவின் தந்தி மீட்டல்கள்
அபஸ்வரமாய் ஒலிக்கும் நாளொன்றில்
நாளொன்றைப் பரிசளித்தாய்
எனக்காய்.
அதில் ஸ்னேகமும், இறுதித் தழுவலும்
ஆறுதல்களாக இருக்காது
கோள்களின் அலைவரிசையில்
ஆர்பரிக்கும் கடல் சீற்றம்
சற்று முன்னர் இருந்த நிசப்தத்தில்
மடித்து வைக்கப்பட்டிருந்ததே.
பிசகிய மனமாக துடித்துக் கொண்டிருக்கும்
ரிக்டர் அளவுகோலின்
நீட்டிப் பிளந்த அதிர்வுகளின்
விளைவாக
புதையுண்டதும் உண்டு
கரை கண்டதும் உண்டு
பாதாதி கேஷம் பாடுவோனுக்கு
காலடிச் சுவடு தெரியமலா போகும்


அந்த விரல் அறுபடாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக