சனி, 8 பிப்ரவரி, 2014

தனியறைக் கொலைக் களம்

புதிதாய் வாங்கிய மின்விசிறியின்
டெசிபல்கள் செவிடாக்கிய பின்னும்
மிச்சமிருக்கிறது அவள்
சொல்லாத வார்த்தையின் ஒலி
தற்கொலைக் கருவிகளான
எழுதுபொருட்களைக் கொண்டு
கொண்டை ஊசிப் பயணம்
ஆறுதல் கிடைக்காத வெறுமையில்
சுயவதை மட்டுமே தீர்வாக இருக்கிறது.
கவிதைகளின் வழியெ இறந்து பார்த்தபின்
பிழைகள் வழியே ஜனனம் நேரிடுகிறது.
நீண்டு தனித்த மலைப்பாதையில்
என்னைத் தொலைக்க நினைக்கும் நேரம்
கைகளுக்கு வலிப்பு..

நிர ந்தரமா கட்டும்

-ஜீவ.கரிகாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக