புதன், 28 ஆகஸ்ட், 2013

புனர்ஜென்மம்

             
             அன்று நான் திட்டமிட்டபடி நண்பர்களை வெளியேற்றி இருந்தேன், அந்த நீளமான அறையில் நானும் அவளும் மட்டும் தனித்திருந்தோம், அவளும் நான் செய்த முன்னேற்பாட்டினை அறிந்திருந்தாள், ஆனால் அவள் அதற்காக அலட்டிக் கொள்ளவில்லை, அவள் என்ன சாதாரணமானவளா? இதுவரை  நான் அவளிடம் இருந்து எத்தனை அடிகள் தள்ளியிருக்க வேண்டும் என்பதை அவள் கண்கள் மூலம் தான் ஒவ்வொரு முறையும் எனக்கு தெரியப் படுத்துவாள். அதற்கு எந்தப் பேச்சும் தேவையில்லை, அவள் கண்கள் தான் அவளருகில் நான் அமர்வதற்கோ, நிற்பதற்கோ, கூட நடப்பதற்கோ அனுமதிக்கும். ஏன், அவளை வண்டியில் அழைத்துச் செல்வதற்கு முன் நான் கேட்கும் “If you don't mind?” என்று கூட அவள் கண்கள் அனுமதித்த பின்னர் தான் என்னால் கேட்க முடியும்.

“If you don't mind அமுதா.. நான் உன்னை Drop பண்ணட்டுமா”?? :
#“உனக்கு ஏன் சிரமம்”,
‘எனக்கு இதுல என்ன சிரமம்’ என்று நான் பதில் சொல்லுவேன், அன்று அவள் என்னோடு வரச் சம்மதித்து விடுவாள்
#“இல்ல..பா நானே போயிடுவேன்”,
அவள் என்னோடு வருவதற்கு யோசிக்கிறாள் என்று அர்த்தம், ஆனால் கொஞ்சம் அதிகமாகக் கெஞ்சினால் என்னோடு வரலாம்
#“ஐயோ எனக்கு டைம் ஆயிடும்மே”,
‘மடையா! இன்னும் ஏண்டா இன்னும் வெயிட் பண்ணுற, சீக்கிறம் அவளை ஏத்திட்டுக் கிளம்பு
#“ஐயோ எங்க அண்ணன், பார்த்துடுவான்”
‘கருநாக்கு தேவதை , அவள் வாய் வச்சா கண்டிப்பா நடக்கும், அடி வாங்காம் வீடு போய் சேரனும்,  “you reached safe??”என்று 2,3 மெஸேஜ் மட்டும் தட்டுனாலே போதும்.

இப்படிப் பட்ட அவளையும்,, ஒரு இரவு போனிலேயே புரபோஸ் பண்ணி,convince பண்ணி அடுத்த நாளே சம்மதம் வாங்கி, இந்த சந்திப்பு நிகழ்ந்திருந்தது. அதிசயமாக என் நண்பர்கள் என் காதலுக்கு உதவி செய்கிறேன் என்று கைகளைக் குலுக்கிவிட்டு அங்கு இடமளித்தனர். அந்த அறையில் இப்போது நானும் அவளும் மட்டுமே, எங்களுக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. ஆனால், இப்படியே அவளிடம் எதுவும் பேசாமல் அவளையே பார்த்தபடி ஒரு மணி நேரமாக எதிரினில் இருந்த இருக்கைகளின் ஒன்றில் அமர்ந்து கொண்டிருக்கிறேன். அந்த இருக்கையைக் கூட அவள் பார்வை யால் தேர்ந்தெடுத்தது தான், என்னைத் துளியும் சட்டை பண்ணாமல் கணிணியில் விளையாடிக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் மிகவும் பதட்டமாய் இருக்கிறாள் என்று அவள் மீது வீசிய ஒரு வாசம் எனக்குச் சொன்னது.

வாசனை எப்படிச் சொல்லும் அவள் உணர்வை?? எனக்கு அந்த வாசனையின் வேதியல் சமன்பாடு எல்லாம் தெரியாது. ஆனால் அது ஒரு நறுமணம் தான் அதில் வியர்வையும் கலந்திருக்கிறது, அது தான் முக்கிய மூலக்கூறு போல. என்னைப் பார்க்க வருவதால் மிகவும் நேர்த்தியாக பட்டும் படாமல் முகத்தில் அப்பியிருந்த பூச்சு அவள் பதட்டமடைந்ததை வெளிக்காட்டியது. நான் இப்பொழுது என்ன செய்யட்டும்??, அவள் அனுமதியின்றி, எழுந்து அவள் பின்புறம் வந்து நின்றேன். அவள் நான் நின்றிருப்பதை உணர்ந்திருக்க வேண்டும், தாவித் தாவிக் குதித்து அடுத்த லெவல்களைக் கடந்து வந்த அந்த Super Mario, விஸ்வரூபத்தில் இருந்து வாமணனாகக் குறைந்தான். அவன் ஓட்டத்தின் வேகம் வெகுவாகக் குறைந்தது.

அப்படியே வைத்திருந்த Life optionகள் ஒன்றன் பின் ஒன்றாகக் குறைந்து வந்தது. இது தான் கடைசி வாய்ப்பு, மொத்த விளையாட்டும் முடிந்து விட்டால் அவளுக்கு என் மீது கோபம் வந்து விடக்கூடும், இல்லை என்னை அமரச் செய்துவிட்டு மறுபடியும் முதலில் இருந்து ஆடுவாள். ”ஒருவேளை நான் கிளம்புறேன், அண்ணா வெய்ட் பண்ணுவார்” என்று கிளம்பிடும் ஆபத்தும் இருக்கிறது. இப்படியே கொஞ்ச நேரம் தாமதித்தால் கூட நண்பர்கள் வந்து விடுவார்கள். அப்படியென்றால் நான் என்ன செய்யனும், நான் என்ன செய்ய முடியும்?? அவளருகில் சென்று, இல்லாத தைரியத்தை எங்கிருந்தோ கையிறு கொண்டு கட்டி இழுத்து, அமர்ந்திருந்த அவள் தோள்களில் என் இரு கைகளையும் வைத்து விட்டேன்.

என் கைகள் பட்ட அந்த கணமே அவள் எழுந்து நின்றாள், என் பக்கம் திரும்பாமல் நின்று கொண்டிருந்தாள். என் கைகள் தோளில் இருந்து கைகள் வழியே படர்ந்து கீழிறங்கியது, இரண்டு கைகளையும் உரசிக் கொண்டே என் கைகள் இறங்கியது, எங்கள் கைகளின் வழியே எங்கள் உடல்கள் முதன் முதலாக் ஸ்பரிசித்துக் கொண்டன. எந்த நொடியும் அவள் என்னை அறையவோ, இல்லை அறையினை விட்டு செல்லவோக் கூடும். ஆனால் அவள் கைகள் சில்லிட்டு இருந்தன, எனக்கோ கொதித்துப் போய் இருந்தது.

 யார் உடல் சில்லிட்டும், யார் உடல் கொதித்துக் கொண்டும் இருந்தது? என்று என்னால் சரியாக சொல்ல முடியவில்லை, ஒருவேளை என் இதயம் சில்லிட்டும், என் மூளை கொதித்தும் போயிருக்கலாம், இல்லை எனக்குக் கேட்கும் இதயத் துடிப்பு அவளுடையதாய் இருக்கலாம். அடுத்து நான் என்ன செய்வது?.

 எத்தனை கோடி அணுக்களால் நான் ஆனவன் என்று இப்பொழுது தான் உணர்கிறேன், அத்தனை அணுக்களும் அவளுக்கு முத்தம் கொடுக்கச் சொல்லிக் கொஞ்சின, கெஞ்சின, மிரட்டின. நானும் இன்னும் சற்று அருகில் அவள் பின்னால் வந்து, பின்னலிடாத அவள் கூந்தலை ஒரு புறமாக விலக்கி, சிறிய ரோமங்கள் இருந்த அவள் வலப்பக்கத் தோள் மீது என் முத்தம் வைத்தேன், என் உதடுகள் பணித்த இடம் வேறு, ஆனால் நான் அவள் தோள்களில் தான் ஈரம் வைத்தேன், ஆனால் இதழ்களை அவள் தோளில் இருந்து உடனேயே எடுக்க எந்த நரம்பு மண்டலமும் அனுமதிக்கவில்லை. மெதுவாக என் உதடுகளால் உராய்ந்துக் கொண்டே அவள் பின் கழுத்தில் ஊர்ந்து ,அங்கே சில நொடிகளும்; காது மடல்களைத் தொட்டு, அங்கே சில நொடிகளும் அது தொடர்ந்தது.

காதில் இருந்து கீழிறங்கி அவள் கன்னத்தின் எல்லை அடைந்திருந்த போது அதன் சுவை மாறியிருந்தது. மெதுவாக அவள் என் புறம் திரும்பத் தொடங்கியிருந்தாள்?? இல்லை இல்லை நான் தான் அவளை இயக்கிக் கொண்டிருந்தேன்!! இத்தனை முத்தத்திலும் என் ஈகோ விழிப்போடு தான் இருக்கிறது பாருங்கள்!! அவள் கண்கள் அப்பொழுது மூடியிருந்தது. கன்னத்தின் மையத்தில் என் இதழ்கள் வந்திருந்தபோது தான் அவள் போட்டிருக்கும் வாசனைப் பூச்சுகளைத் தாண்டியும் அவளாய் இருக்கின்ற அவள் மணம் எனக்குக் கமழ்ந்தது, அது என் அடுத்த ஜென்மத்திலும் என் நினைவில் தங்குமாறு என் மூளையின் நியூரான்கள் சேமித்து வைத்திருந்தன. கன்னத்தின் மையத்தில் இருக்கும் பொழுது நான் அவளை பக்கவாட்டிலிருந்து அணைத்திருக்கிறேன். அவள் மேலுதடு மட்டும் என் கண்களில் தெரிந்தது, கீழுதட்டைக் காணவில்லை. சட்டென்று அவள் கண்களைக் கண்டேன், நான் பார்க்கிறேன் என்று அவளும் உனர்ந்திருப்பாள் போல அவளும் என்னைப் பார்க்க, அடுத்த கணத்திலேயே ஒரு மீட்டர் இடைவெளி.

மறுபடியும் அவளை நோக்கி முதல் அடியை நான் எடுத்து வைக்க,.........ஆ..........ஆ.........உயிர் போகும் வலியால் என் வலது கால் துடித்தது. அந்தக் காலில் ஏதோ ஒரு எலும்பு உடைந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

மீண்டும் அதே கனவில் இருந்து தான் விழிக்கிறேன், ஆனால் என் இடது காலில் மட்டும் மெய்யான வலி, கண்களில் வலி பொறுக்க முடியாது நீர் வழிந்தோடியது. கணுக்காலிற்கு சற்று மேலே காலெலும்பு உடைந்திருக்க வேண்டும். வலியில் காலினையே வெட்டி எரியும் வெறி இன்னும் சற்று நேரத்தில் வந்திடலாம், ஆனால் வலி கால்களில் மட்டும் இல்லையே. பழைய துனியில் ஏதேதோ இலைகளை வைத்து கட்டு போடப்பட்டிருந்தது. ஒரு குடிசை போன்ற சிறு இடத்தில் ஒரு பக்கம் மட்டுமே தட்டியும் மற்ற மூன்று பக்கமும் மலைப் பாறைகளே பக்கச் சுவராக இருந்தது.

“நான் எங்கே இருக்கிறேன்”

ஆம் நான் தனியாகத் தான் இறங்கினேன். அது நான் தான் ப்ளான் பண்ண ட்ரெக்கிங், நண்பர்களோடு கோபம் கொண்டு தவமுனிப் பாறையிலிருந்து தன்னந்தனியாக இறங்கி வந்தேன். நினைவுகள் திரும்பின.

என் பெயரை அழைத்தபடியே, என் நண்பர்களும் என்னை சற்றே பின்தொடர்ந்து வருகிறார்கள் என்று தெரிந்தது, அதனால் வேகமாக இறங்கிக் கொண்டிருந்தேன். திடிரென்று நான் இறங்கிக் கொண்டிருந்த பாதை தவறென்று தோன்றியது, நண்பர்களின் குரலும் கேட்கவில்லை. வேறு வழியின்றி, வந்த வழியே மேலேறினேன், சரியான பாதையில் தான் ஏறினேன் என்றும் தெரியவில்லை, கோரைப் புற்களாக இருந்த மலைப் பகுதியாக மாறியது. அந்த இறக்கத்தில் பார்க்கும் பொழுது சற்று தொலைவில் என் நண்பர்கள் எனக்கு முன்பாக கீழிறங்குவது தெரிந்தது, என் நண்பன் பெயரை “கனா....” என்று அழைப்பதற்குள் அந்தப் புற்களின் பலமான் வேர் பகுதியில் இடறி விழுந்து உருண்டேன்.

இன்னும் தெளிவாக நினைத்துப் பார்த்தேன், கீழே விழுந்து உருளும் போதே!! நான் மூர்ச்சையடைந்திருக்க வேண்டும். கால் வலித்த்து. ஆம் என் முகத்தில் தவழ்ந்து கொண்டிருந்த பனி மூட்டம், எனக்கு நினைவைத் தந்தது, அந்த மலைகளுக்கு இடைவெளியில் இருந்த பள்ளத் தாக்கு என் தலைக்கு மேலே இருந்தது. ஆமாம் நான் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருந்தேன். கண்களின் வழியே இரத்தம் வருவது போல் இருந்தது. என் மூலாதாரம் சுருங்கிக் கொண்டிருந்தது, பல மரங்களின் கிளைகளும், கூரிய பாறைகள் சிலவற்றையும் நான் பார்க்க முடிந்தது. பாறையின் இடுக்குகளில் என் இரண்டு கால்களும் சிக்கியிருந்தன. தாங்க முடியாத வலி, ஒரு மரத்தின் வேரினைப் பிடித்தேன். அதைப் பிடித்தபடியே மேலே செல்ல முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

அந்த வேரினை இறுகப் பற்றிக் கொண்டு வலது காலினை மெதுவாக எடுக்கும் பொழுது, இடது கால் மீது மொத்த பாரமும் செல்ல, வலியும் பன்மடங்கு அதிகரித்தது. வலியைப் பொறுக்க முடியாமால் வேரினைக் கடுத்தபடி கத்தினேன். ஆஅ...ல்ல்ல்..ஆம் ஞாபகம் இருக்கிறது, அப்பொழுது இறுதியாக ஒரு பூவின் வாசம் வீசியது, அப்படியே என் நினைவுகள் தப்பியிருக்க வேண்டும். அதற்குப் பின் எதுவும் ஞாபகம் இல்லை. மிகவும் பசிக்கவும் செய்தது. அந்தக் குடிலில் வேறு யாரும் இல்லை. அதுவரை தான் படுத்திருந்தது கூட ஒரு கட்டில் இல்லை பாறை தான் என்று தெரிந்து கொண்டான்.

“ஹலோ!!! யாராவது இருக்கிங்களா?? ஹளோ!!!”
“எனக்குப் பசி உயிர் போகுது!! யாராவது இருக்கிங்களா??”
யாரோ வரும் ஓசை கேட்டது.

மெதுவாக வாயிலின் வழியே எட்டிப் பார்த்தேன், ஒரு கூடையைத் தூக்கியபடி ஒரு பெண் வந்துக் கொண்டிருந்தாள், என்னை விட வயதுக் குறைந்தவளாகத் தான் தெரிந்தாள்
“ஹலோ....!!”
அவள் நேராக என் குடிலுக்கு தான் வந்துக் கொண்டிருந்தாள். வெறும் சேலை மட்டும் அணிந்து கொண்டிருந்த அவள் கழுத்தில் ஒரு கருப்பு கயிறு மட்டும் தொங்கியது. நேராக, உள்ளே வந்து அவள் என்னை ஆச்சரியமாகப் பார்த்தப்டியே இருந்தாள். அதற்குள் நான் எழுந்து விட்டேனென்று ஆச்சரியமாகப் பார்த்திருக்க வேண்டும். அவளும் அதிகமாய வியர்த்திருந்தாள், ஏதோ வேலை செய்திருக்க வேண்டும், இல்லை மலை ஏறியிருக்க வேண்டும். தன் கையிலிருந்த கூடையில் இருந்து ஒரு நழுங்கிய பிரெட் பாக்கெட்டை நீட்டினாள்.
”தேங்க்ஸ்”
வாங்கிப் பிரித்து, உண்டேன். வெறுமனே உண்பதற்கு பிடிக்கவே இல்லை, ஆனாலும் வேறு வழியில்லை உண்டேன். கொஞ்சம் பசியின் தீவிரம் குறைந்தது, அதனால் கால் வலியை மட்டும் இப்பொழுது தெளிவாக , தனியாக உணர முடிந்தது. இந்தப் பொல்லாத பசி உடைந்து போன காலின் வலியினை விட மோசமானது தானோ, இப்போது  வலியின் தீவிரம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. உண்மையில் கால் உடைந்து தான் போயிருக்குமா என்ன? அவளிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று தோன்றியது

“ஹலோ... எனக்கு என்ன ஆச்சு”
“..”
“நான் எங்க இருக்கேன்?”
“....”
“என் கால் என்ன உடைஞ்சு போச்சா??”
“....” தலையசைத்தாள்
“தமிழ் தெரியும்ல,, உனக்கு பேசத் தெரியுமா??”, அவளை ஒருமையில் பேசினேன்.  எனக்கு முன் பின் தெரியாதவர்கள், மேலும் எனக்கு உதவி பண்ணியவர்கள் அவர்களை நான் ஒருமையில் பேசுகின்றேனே என்று சங்கடமாக இருந்தது, பொதுவாக நான் நண்பர்களைத் தவிர யாரையும் அப்படி அழைப்பதில்லை.

“ப்ளீஸ் கொஞ்சம் பேசுங்க, இல்லை யார் என்னை தூக்கி வந்தாங்களோ அவுங்கள கூப்பிடுங்க”
“...” சிரித்தாள்
“ஹலோ என்ன சிரிக்கிரிங்க, யாரையாவது கூப்பிடுங்க”
”இங்க நான் மட்டும் தான் இருக்கேன்”, “இப்ப நாம மட்டும் தான் இருக்கோம்”.....

(தொடரும்......)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக