வியாழன், 8 ஆகஸ்ட், 2013

அசுரன் ஆளும் புதிய உலகம் -02 / All Seeing Eye

அசுரன் ஆளும் புதிய உலகம் -02 / All Seeing Eye

சென்ற பகுதியில் ஆதார் கார்டு ஒரு ஆபத்து என்று அறிமுகப் பகுதியாகப் பார்த்தோம்,  அது எப்படி நமது நலனுக்கு எதிரானது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இதன் அடிப்படைத் தன்மை மற்றும் வரலாற்றில் நடந்த வேறு சில தவறுகளையும் இதே நோக்கில் ஆராய வேண்டும். இதனை எதிர்ப்பது என்பது ஒரு தொழிற்நுட்பத்திற்கு எதிராக நிற்கும் செயல், ஒரு திட்டக் குழு பரிந்துரைத்த திட்டத்தின் வடிவத்தை எதிர்க்கும் கருத்துகள். இன்றைய நிலையில், தமிழ்ச் சூழல் ஏற்கனவே மிகப்பெரிய ஒரு தொழில்நுட்பத்திற்கு எதிராக தன் கருத்தை உலக அரங்கில் பதிவு செய்துக் கொண்டிருக்கிறது என்பதே என்னை எழுதத் தூண்டுகிறது.

ஆதார் கார்டு அல்லது UID (unique identification (UID) number) என்பது நாட்டிற்கே பொதுவான, குடிமகன்களுக்கான அடையாள அட்டை ஆகும். நாட்டிற்கே பொதுவான அட்டையாக வாக்கு அட்டை, கடவுச் சீட்டு, மாநில அரசு வழங்கும் குடும்ப அட்டை என எத்தனையோ அட்டைகள் இருக்க, ஆதார் அட்டை ஏன் அவசியம் ஆகிறது? என்றால். இன்றைய நாட்களில் பொதுவாக நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக இருக்கும் பயங்கரவாதம் மற்றும் குற்றங்களைத் தடுக்கும் முயற்சிக்கு உதவக் கூடிய தொழிற்நுட்பம் தான் UID எனப்படும் பயோ மெட்ரிக் அடையாள அட்டை.  இந்த அட்டையின் மூலம் ஒவ்வொரு குடிமகனின் முழு அடையாளங்கள் சேமிக்கப் படுகிறது, கைவிரல் ரேகை, விழி மற்றும் முகத்தோற்றம் போன்றன சேமிக்கப் படுகிறது. கார்கில் போருக்குப் பிந்தைய சூழலில் தேசிய அளவில் ஒரு பொது அடையாள அட்டை பாதுக்காப்பிற்கென நிதி ஒதுக்குவதன் அவசியம் சரியானது தான். ஆனால் அது நடைமுறைப் படுத்தப் படும் முறையில் தான் பெரிய சிக்கல் வந்திருக்கிறது.

இந்தச் சிக்கலைப் பற்றி கவனிப்பதற்கு முன் ஒரு சிறிய வரலாற்றைப் பார்க்க வேண்டும், அது 1992-இல் இந்தியாவில் தொலைத் தொடர்புத் துறையில் கட்டுமானப் பணிகளை முடுக்கி விட்டிருந்த ராஜீவ் காந்தி அரசின்(இன்று வரை -அதை சாதனையாகச் சொல்லி வரும் கட்சி அறிக்கைகள் ஒரு புறம்) திட்டத்தின் மூலம் தனது முதல் காலடியை எடுத்து வைத்தது ஒரு பிரபல நிறுவனம். எடுத்த எடுப்பிலேயே PPP மூலம் கால் பதித்ததால் தனது வளர்ச்சியை பத்து ஆண்டுகளுக்குள் மிகப் பிரபலம் ஆக்கிவிட்டது, அதன் பெயர் தான் HMTL (HUTCHISON MAX TELECOM LIMITED). இப்படி நம் நாட்டினில் நுழைந்த நிறுவனம் பத்து ஆண்டுகளில் நாடு முழுமைக்கும் பரவி, இறுதியில் BPLn பங்குகளை வாங்கி சந்தையில் பிரதான நிறுவனமாக வலம் வந்தது. அது ஹட்சிசன் எஸ்ஸார் டெலிகாம் லிமிடட்.
ஒரிஜினல் பில்லா -லி கா ஷிங்


ஹட்ச் என்று தும்மல் போடாத டீவி சேனல்களின் வணிக இடைவேளை ஏதேனும் ஒன்றை அந்நாட்களில் நீங்கள் கண்டதுண்டா?? அந்த ஹட்ச் நிறுவனத்தின் தலைவர் லி கா ஷிங் (Li ka Shing), உலகம் முழுவதும் பல்வேறு தொழில்கள் செய்யும் இவர் உலகின் எட்டாவது மற்றும் ஆசியாவின் முதல் பணக்காரர் என்றுக் கருதப்படுகிறார். ஹாங்காங் பங்குச் சந்தையின் 15%விதம் முதல், இவரது பங்கில் இருந்து தான் பரிவர்த்தனைக்குள்ளாகிறது. சீனாவிற்கு ஆதரவு நிலையில் இருக்கும் அவர், ஒரு வருடம் வரை சீன அரசின் நிதி நிறுவனமான CITIC இல் இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். அதன் மூலம் அவர் பாலி டெக்னாலஜீஸ் போன்ற உலகளாவிய ஆயுத வியாபாரிக்கு மறைமுகமாக உதவியுள்ளார் என்பது அவரைப் பற்றி அமெரிக்க உளவு நிறுவனங்கள் கண்டறிந்த ரிப்போர்ட். இது அவர் நேரடியாக சீன இராணுவத்தோடு (People's Legislative Army of China) தொடர்பு வைத்திருந்ததற்கு சமம். அப்படியென்றால் நம் படுக்கையறை வரை சீன இராணுவத்தின் கண்கள் வந்து போயிருக்கின்றன என்று தானே அர்த்தம்??!! அதில் சந்தேகமே இல்லை.


இப்போது புரிகிறதா இந்த நாய் ஏன் நம்மைத் தொடர்ந்து வருகிறது என்று!!


தன் வேலை முடிந்தவுடன் என்ன செய்ய வேண்டும் - விற்று விட வேண்டும். இப்போது உரிமம் யாருடைய குறுக்கீடுமின்றி மற்றுமொரு அந்நிய(இங்கிலாந்து) நாட்டு கம்பெனியிடம் விற்று விட்டு, ஹட்ச் நடையைக் கட்டிவிட்டது. இதில் நமது அரசுக்கு வரி என்ற பெயரில் ஒரு ரூபாய் தேறாத அளவுக்கு நம்து நாட்டு எல்லைக்கு வெளியிலேயே நமது அலைக்கற்றை, நிலம் என வர்த்தகம் செய்யப்பட்டது. மத்திய அரசு இதற்கு வரி விதித்த போது கூட நாட்டு நலனில் அக்கறை கொண்ட பா.சி அவர்கள் வழக்கில் போராடி வெற்றி பெற்றார். இதனால் நமது அரசிற்கு இழப்பு வெறும் 12,000 கோடிக்கான வரித்தொகை.

தகவல் தொழில் நுட்பத்தின் மிக உயர்ந்த கட்டத்தில் நாம் இன்று நிற்கிறோம், ஆனால் வளர்ச்சி என்கிற கொள்கையை அடிப்படையாய் வைத்து உருவான வழிமுறைகளைப் பார்த்தால் நம்மைச் சூழ்ந்திருக்கும் வலை என்னவென்று தெரியாது, ஐந்தாயிரம் ஊதியம் வாங்கும் ஒருவன் கைகளில் 20000 மதிப்புள்ள செல்போன் வளர்ச்சியின் அடையாளமா ? வீக்கத்தின் அடையாளமா? என்று யோசித்துப் பார்க்க இடமிருந்தால். 

ஆதார் அட்டையின் அடிப்படையாக நமக்கு வழங்கப் படுவதன் பின்னனி என்ன?, அதன் மேல கட்டமைக்கும் பொது மக்கள் நலனுக்கு அல்லது தேசத்திற்கு எதிரான ஆபத்து எப்படியிருக்கும்? இதை நடைமுறை படுத்துவது யார்? அவர்களின் பின்னணியென்ன என்றெல்லாம் ஆராய் விலகும் திரைக்குப் பின் நிற்பது யார்?? இதற்கு பீடிகை எல்லாம் போட வேண்டிய அவசியம் இல்லை. 

அவர்கள் உலகின் மீட்பர்களாக தன்னைப் பறைசாற்றிக் கொள்ளும் பீனிக்ஸ் பறவைகள் தான்



தொடரும்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக