செவ்வாய், 18 டிசம்பர், 2012

பஜ்ஜி -சொஜ்ஜி -09 தலித் நலனும் சில்லறை வணிகமும்


சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு பற்றி போன பதிவில் பேசியவற்றின் தொடர்ச்சி:-


பாராளுமன்றத்தில் இந்த மசோதா வெற்றியடைந்ததற்கு காரணம் மாயவதியின் கடைசி நேர காய் நகர்த்தல் என்பது எல்லாருக்கும் தெரியும், நிலுவையிலுள்ள சி.பி.ஐ வழக்குகள் பற்றியெல்லாம் கேள்விகள் எழுப்பினாலும், இன்னுமொரு முக்கிய காரணம் இருக்கிறது அது தான் தலித் நல்வாழ்வுநோக்கம். இந்த சில்லரை வர்த்தகத்தில் பெரும்பான்மையான பகுதி குறிப்பிட்ட சாதியினரிடமே இருப்பது தான் காரணம், DICCI (Dalit Indian Chambers of Commerce and Industry)யின் சமீபத்திய சர்வேயின் படி இந்த சில்லறை வணிகத்தில் தலித் மக்களின் பங்கு 0% என்று (உ.பி) தானிய மற்றும் காய்-கனி மண்டித் தொழிலில் குறிப்பிட்ட ஒரு சாதி அமைப்பே உள்ளது என்று தெரிய வருகிறது. மேலும் இவர்கள் தான் விவசாய மற்றும் நுகர்வோருக்கு இடையே உள்ள பெரும்பங்கு லாபத்தை சுருட்டி வைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டுகிறது.

இப்பொழுது சில்லறை வர்த்தகத்தின் போக்கு சமூக ஆதாயம் (social benefit)என்ற அளவில் அடுத்த கட்டத்தில் நிற்கிறது. இங்கே FDI என்பது ஒரு கருவியாக சமூக விடுதலைக்கு முன்வைக்கும் தலித் தலைவர்கள் தேசிய அளவில் தங்கள் பொருளாதார நிலைப்பாட்டை எப்படி வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால், (சந்திரபன் பிரசாத்) சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை பெரும் சமூக விடுதலைக்கான வழியாக காண்கிறார். மாயவதியின் நிலைப்பாட்டை தலித் நல்வாழ்வை அடிப்படையாகக் (dalit pesrpective) கொண்டு மிக முக்கியமான முடிவாகக் கருதுகிறார்.

தலித் எழுத்தாளர்கள் (சந்திரபன் பிரசாத், பேராசிரியர் காஞ்சா) உலகமயமாக்கலினால் ஏற்படும் இது போன்ற மாற்றங்கள் அறுத்தெறியும் கலாச்சாரமே நம் சமூக அமைப்பை மாற்றும் என்ற கருத்தை முன் வைக்கின்றனர். இந்த இடம் தான் மிக முக்கியமானது, ஒரு சமூக அமைப்பில் குறிப்பிட்ட சாதிகளை (பனியா, படேல், அர்ஹாத்திய, நாடார்) ஆதிக்கத்திலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் இவை உதவும் என்று நம்புகின்றனர். ஆக  சமூகம் தடை செய்யும் தொழில் முனைவை உலகமயமாக்கல் எனும் முயற்சி வீழ்த்திவிட்டு ஒரு திறந்தவெளியை உருவாக்கும், அந்த வெளியே தலித் நலனுக்கு வழி வகுக்கும் என்று முடிவிற்கு வருகின்றனர்.

இதை வைத்துப் பார்க்கும் போது மத்திய அரசு செய்து வரும் தந்திரம் மிகத் தெளிவாகப் புரிகிறது, ஒரு வகையில் தலித் நலன் என்ர பொய் பிரச்சாரத்தையும் லஞ்சமாகப் பயன்படுத்திய தோற்றத்தை உருவாக்குகிறது. இவை எப்படி தலித் நலனுக்கு கொஞ்சம் கூட உதவாது என்கிற பட்டியலைப் பார்ப்போம்.

1. திறந்துவிடப்படும் கதவு சில்லறை வனிகர்களை வெளியேற்றிடவே தவிர தலித் நலனென்றெல்லாம் யாருக்கும் வாய்ப்பை வழங்கிடாது. ஒட்டு மொத்த சந்தையையும் தன் கைக்குள் கொண்டு வந்துவிடும்.

2. FDI தரும் வேலைவாய்ப்பில் கூட இடஒதுக்கீடு பற்றிய பேச்சுவார்த்தையை அனுமதிக்குமா என்று எளிமையாக வாதம் செய்ய முடியும், முடிவு எல்லோருக்கும் தெரிந்தது தான். Social liberalization என்பது வெறும் கண்கட்டு

3. தலித் விவசாயிகள் நலன் என்று பார்த்தால் கூட ஏமாற்றமே மிஞ்சும், ஆரம்பத்தில் கொஞ்சம் லாபகரமாகத் தோன்றினாலும் (முன் தொகையாகக் கொடுப்பதால்), மெல்ல, மெல்ல மண்டிக் காரர்களை விட கரார் விலை தான் நிர்ணயிக்கப் படும். ஏனென்றால் இன்னும் வால் மார்ட் போன்ற முதலாளிகளுக்கு காய்-கனி விற்கும் விவசாயிகள் பலர் உதவித் தொகை வாங்கி வருகின்றனர்.

4.இது முக்கியமாக கார்ப்பரேட் விவசாயத்தை ஊக்கிவிக்கும் என்பதால், சிறு விவசாயிகள், தலித் விவசாயிகளுக்கு ஆபத்தானதே.

5.சில்லறை வர்த்தகத்திற்கு மிகவும் தொடர்புடைய, சார்புடைய தொழில் என்றால் போக்குவரத்து தான், இதில் ஒரு சாதாரண் மூன்று சக்கர ஆட்டோ, ட்ராக்டர் வைத்திருக்கும் எண்ணற்ற தலித் மக்கள் கூட சேர்ந்தே பாதிப்பார்கள். காரணம் logistics எனும் தளவாடங்கள்  ஒப்பந்த முறையில் பெரிய அளவில் தொழில் செய்யும் முதலாளிகளுக்கும், தன் சொந்த வாகனங்களுக்கும் மாற்றப் படும். இதன் மூலமும் தலித் மக்களின் நலன் பாதிக்கப் படும்.

6. எல்லாவற்றையும் தாண்டி சந்தைப் பொருளாதரம், தாரளமயப் படுத்தப் பட்டும் உலகமயமாக்கப் படுவதும் தலித் மக்களின் நலன் என்ற அடிப்படை வாதத்திற்கு இருக்கும் பெரிய ஓட்டையே இதன் தொடர் நிலையாக வரும் தனியார்மயம் தான். உலகமயமாக்கலை ஆதரிக்கும் பட்சத்தில் தலித் அமைப்புகள் தனியார்மயத்தை ஆதரிக்க ஒருகாலும் முடியாது. 

7.எல்லாவற்றிற்கும் மேலாக FDIஐ தொடர்ந்து அரசு கொண்டுவர இருக்கும் சட்டங்களான விதைகள் திருத்தம் சட்டம், உணவுப் பாதுகாப்பு சட்டம், தண்ணீர் மசோதா, கடற் பாதுகாப்பு சட்டம், பல்கலைக் கழகங்கள் திருத்த சட்டம் என எல்லாமுமே தலித் நலன்களுக்கும் எதிரானதே.

ஆக இன்றளவு இருக்கும் தலித் நலன்களுக்கான சலுகைகள் உலகமயமாக்கலினால் கொஞ்சம், கொஞ்சமாய் மறைந்துவிடும் என்பது மட்டும் உறுதி. ஏனென்றால் சாசனப்படி தலித்களுக்கான சலுகைகள் போதுமானதாய் இருந்தும் அதை செயல்படுத்தும்( execution ) முறைகளில் தான் பிரச்சனை இருக்கிறது, இதற்கு தீர்வு என்பது நிச்சயமாக அந்நிய முதலீடு அல்ல என்பது உறுதி. 

 தேசம் முழுக்க எல்லா அமைப்புகளில் இருந்தும் எதிர்வினை புரிந்த இந்த பிரச்சனை இன்னும் சரியாக விவாதிக்கப் படவில்லை என்றே தோன்றுகிறது.

இதற்கு ஒரு சாமன்யனாக என்ன எதிர்வினையாற்ற முடியும் என்று வரும் கட்டுரைகளில் பார்ப்போம். (உங்கள் கருத்துகள் மட்டுமே என்னைத் துரிதப் படுத்தும்)




(மிக சுருக்கமாக எழுதவே விரும்புவதால், கருத்துகளுக்கேற்ப அடுத்த பதிவுகளிலும் இதைத் தொடர்ந்து விவாதிப்போம்)

                                                           
                                                                                                       நன்றி

அடுத்த பகுதியில்
இன்னும் காரமாக

ஜீவ கரிகாலன்










ஆதாரம்:
http://m.financialexpress.com/news/column-fdi-as-a-tool-of-social-liberation/1043291/ 
http://tehelka.com/fdi-in-retail-maybe-the-sign-for-a-fast-growing-india-but-will-the-dalits-benefit/
http://news.outlookindia.com/items.aspx?artid=783445

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக