திங்கள், 5 மார்ச், 2012

அது

உடல் முழுக்க 
ரணம் மட்டும் வியாபித்திருக்க 
ஏதோ ஒன்று வலியையும் 
மீறி அதை உற்றுப் 
பார்க்கிறது ....

சில நேரம் மட்டும் தான் 
அது இருக்கிறது,
சில நேரம் அது இல்லை 
சில நேரங்களில் தான் 
அதை உணர அது
கற்றுக் கொடுக்கிறது ..


சில நேரம் வலியுடனும் ,
சில நேரம் அதனுடனும் 
நான் இருக்கிறேன் ..
ரணம் இல்லாத பொழுது 
அது தெரிவதும் இல்லை 
பின்னர் புரிவதும் இல்லை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக