வெள்ளி, 16 மார்ச், 2012

ருதுவின் காலம்


பிரபஞ்சம் தன்னைத் தானே 
உமிழ்ந்ததும் கூட பூப்படைதல் தான் !!
ஒரு மாஞ்செடியின் முதல் மொட்டாய்
நேற்றின் மழை கொடுத்த பசும்புல்லாய்!!
தொடங்கியது தான் ருதுவின் காலம் >>
அங்கே தன்னைத் தொலைப்பவள் 
தனக்கான வேறு உலகம் பெறுகிறாள் ,
அதில் அவள் ராணியாக தன்
கனவைத் தொடங்க ,
இப்பிரபஞ்சத்தின் மற்றொரு மாதிரியாய்
ஒரு சிறுமி குமரியாகிறாள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக