சனி, 17 டிசம்பர், 2011

Nostalgia

என் நண்பர் சொன்ன இந்த மந்திர வார்த்தை "Nostalgia" , நினைவு மீட்டல் - நம் பசுமையான நினைவுகளுக்கு திரும்பி நாம் இழந்துவிட்டதை திரும்பி பார்ப்பது அன்றாடம் நாம் சந்திக்கும் வலிகளுக்கும் , காயங்களுக்கும் எவ்வளவு பெரிய மருந்து?? இப்பகுதியில் நாம் இழந்து விட்டதை பற்றி கொஞ்சம் எழுதுகிறேன்.

இதில் நம்மையும் மறந்து, நமக்கே தெரியாமல், காலத்தை வென்ற சில கருப்பு வெள்ளைப் பாடல்களை பற்றி முதலில் நான் பதிய விரும்புகிறேன்.



எனக்கு பிடித்த தாலாட்டுகள் 
1 .  என் அம்மா என்றும் என்னுள் இருப்பாள், இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் , எந்த பாமர எழையும் தன தாய்க்கு ராஜ தன என்று உணர்த்தும் பாடல்.

படம்:கணவனே கண் கண்ட தெய்வம் ,பி.சுஷீலா ..இசை :மெல்லிசை மன்னர்



2.மாடி மனை வேண்டாம், கோடி செல்வம் வேண்டாம் -வளரும் பிறையே நீ போதும் !!!!! வேறு என்ன சொல்ல ?? பட்டுக் கோட்டையார் தமிழ் உலகம் மறக்கக் கூடாத ஒரு உன்னத கலைஞர்."நாளை உலகம் நல்லோர்கள் கையில்" தாய் தாலாட்டும் பொது நாட்டைப் பற்றிய கவலையும் தன தாய்ப்பாலுடன் ஊட்டும் வழக்கம் நம்மிடையே உண்டு என்பதை இந்த வரிகளின் மூலம் நாம் அறியலாம்.

படம் : பதிபக்தி , பட்டுக் கோட்டையார், பி.சுஷீலா ..இசை :மெல்லிசை மன்னர்



3 . சில நேரங்களில் தாயானவள் தன் மகளுக்கோ மகனுக்கோ தந்தையுடன் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளில் இப்படிப்பட்ட தாலாட்டுகள் பாட வேண்டியிருக்கிறது, பாடல் குழந்தைக்கு மட்டுமில்லை தந்தைக்கும் சேர்த்துத் தான்.
படம் : வண்ணக்கிளி



4 . தாய்க்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ இந்தக் காலத்தில் ஆனால் அவள் எந்த காலத்திலும் நமக்காக தாங்கும் வலியினை அறிவியலாளே அறிய முடியாது.... ஆனால் அவளோ  மண்ணுக்கு மரம் பாரமா?? என்று உவமை கொண்டு தன் குழந்தைப் பார்த்து பாடுகிறாள்.. அப்படிப் பாடும் தாய் மட்டும் தான் உலகில் உள்ள ஒரே கடவுள் என்று நாமும் நம்புவோம்



5. பானுமதியின் கம்பீரக் குரலில் அருமையான வரிகள், நடிப்பிலும் மிக எளிமையாக நம்மை படத்தில் ஒன்ற வைப்பார்.
படம் : அன்னை


6. சுசிலாவின் குரலும்,மெல்லிசை மன்னரின் இசையும் கண்ணதாசனுடன் இனைந்து உருவாக்கிய மிக அழகான படைப்புகளில் ஒன்று, தாலாட்டுகளில் மிகப் பிரபலம் .


7. இறைவனே இந்த பாடலிக் கேட்டாலும் தனக்கு தாய் இல்லையே என்று வருத்தமடையும் தேனிசை கானம்.

8.பாசமலர் இந்த பாடலில் சிவாஜி , சாவித்ரியின் நடிப்பில் அண்ணன் - தங்கை பாசம் தான் நமக்கு காட்சியாக்கப் படுகிறது... ஆனால், இது ஒரு அற்புதமான தாலாட்டு "சிறகில் எனை மூடி, அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா" என்று தன ஆற்றாமையை பாடிக் கொண்டும், தன் அண்ணன் தன் மகளை எப்படியெல்லாம் சீராட்டுவார் , என்று அசைக்க முடியாத நமது குடும்பச் சமுதாயத்தை இப்பாடலில் காணலாம் 



9 .இந்த பாடலும் முன்னர் சொன்ன பாடல் போலத் தான், நமது குடும்ப வாழ்வில் தாயிற்கு அடுத்தப்படியான உறவான தாய் மாமனை பற்றி பாடுகிறது. ஆனால், இந்த கதைக்களம் வறுமையில், பெண்களின் நிலை மிகத் தாழ்ந்த நிலையில் இருந்த காலத்தில் இருக்கும். ஒருதடவையாவது கண்ணீர் சிந்தாத கண்களில் கண்டிப்பாக கோளாறு இருக்கும் .
படம் : பராசக்தி 



10. தாலாட்டு ஆண்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல, படம் :பார்த்தால் பசி தீரும் 

11 . தாலாட்டு பாடும் போதே தன் சொந்த சோகத்தையும் இணைத்துப்  பாடுவது தாலாட்டு வகைகளில் உண்டு , தான் காதலில் ஏமார்ந்ததாய் நினைவு கூறும் ஒரு தாலாட்டு. பாடலின் சிறப்பு PBS என்ற ஒரே காரணம்.
படம் : வாழ்க்கை படகு


12.நல்லதங்காளின் கதையைப் போலே உருவான இந்த சிவப்பு படத்தில் வரும் இந்தப் பாடல் எந்த வறுமையிலும், வேதனையிலும் தங்கள் பிள்ளையை சீரட்டுவதும், எளிமையாய் வாழ்வதும் தெரியும் . படம்: துலாபாரம் 


13.தந்தை ஒருவன் அந்த இறைவன் ஆவணும் அன்னை இல்லாதவன் - TMS காலத்தை வெல்லும் குரல் ஜீவனோடு வாழும் பாடல். படம்: எங்க மாமா


14.பாசமுள்ள நெஞ்சினிலே கடவுள் வாழ்கிறார் ....
படம் : பாபு


15 . தாய்மை கொண்ட எவரும் தாய் தான், தாலாட்டுகளில் தவிர்க்க முடியாத அத்தை (அல்லது செவிலித் தாய் ) பாடும் தாலாட்டு. படம் : கற்பகம்



16 . (நேரடியான காணொளி கிடைக்க வில்லை) தாய்/செவிலித் தாய் குழந்தைப் பாடும் தாலாட்டுகளில் எவ்வளவு அறிவுரைகள் இருக்கின்றது என்பதை இந்தப் பாடலில் பார்க்கலாம்.
எத்தனையோ முறை, நான் - என் வாழ்வில் இடறி விழும் போதெல்லாம் "புயலைக் கண்டு அஞ்ச மாட்டேன் , முயன்று நானே வீரன் ஆவேன்" என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டு மீண்டும் எழுந்து வந்துள்ளேன் - தாய்மார்கள் கற்றுக் கொள்ளவேண்டிய முக்கியமான பாடல் இதுவே !!!



இன்னும் சில பாடல்கள் கிடைக்கவில்லை, இந்த தொகுப்பினை எனது புதிய நண்பர் வனமாமலைக்கு சமர்ப்பிக்கிறேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக