செவ்வாய், 13 டிசம்பர், 2011

முல்லை பெரியாறு


மேதா பட்கர் கூட முல்லை பெரியாறு அணை விஷயத்தில் கேரளாவுக்கு ஆதரவு கொடுக்கிறார், 
மாற்று அரசியல் பற்றி சொல்லித் தரும் தமிழ் இயக்கங்களோ தங்களுக்குள் ஒன்று படாமல் தனித்து நின்றே போராடி அரசியல் மட்டுமே செய்கின்றனர்.. 

மலையாளிகளையே வெறுக்க சொல்லித் தரும் அரசியல் சரி தானா என்று புரியவில்லை?  ஈழத்து தலைவன் பிரபாகரனுக்கு ஒரு மலையாளியை விட யார் அதிகமாய் ஆதரவு கொடுத்தது. நேற்று வரை சகோதரன் போல் பழகிய ஒரு சக தொழிலாளியை வஞ்சிக்கத் தொடங்கியாகிவிட்டது, சுற்றியிருக்கும் தேநீர் கடைகளில் கூட மலையாளியின் கடை தவிர்த்து, வெந்நீர் ஊற்றும் தமிழன் கடைகளை நோக்கினால் ஒன்று தேவர் டீ ஸ்டால், மற்றொன்று காமராஜர் டீ ஸ்டால், இன்னொன்று அம்பேத்கர் டீ ஸ்டால், தமிழன் என்ற ஒரே கோட்டிற்குள் நாமெலாம் வந்துவிடத் தயாரா??.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக