வியாழன், 27 மார்ச், 2014

இந்த வருடம் என்ன செய்யலாம்??


ஏதோ நாம் எழுதும் கட்டுரைகள் அங்கங்கே பத்திரிக்கைகளின் வரும் பொழுது கிடைக்கும் சந்தோஷத்தோடு நிவர்த்தி செய்து கொள்ளலாம் தான். சிலர் என் மீது வைத்த நம்பிக்கைகளுக்கு நான் செயல் புரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. அழுத்தம் என் மனதில் ஏற்கனவே இருந்து தான். இதைப் பதிவதின் மூலம் இன்னமும் வீரியமாகவே செயல்படுவேன். ஏற்கனவே நான் செய்திருந்த ஸ்டெரிலைட் ஆலை குறித்த கட்டுரை தான் எமக்கு இந்த வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது என்பதும் மிகையல்ல.

ஆம் இந்த ஆண்டு முழுதும் நான் களத்தில் இருக்கப் போகிறேன், இதைப் பற்றிப் பேசும் போது ஒரு பக்கம் அளவிலா சந்தோஷமும், பொதுவில் சொல்லி விட்டதால் அதை நிறைவேற்றியே ஆகவேண்டிய நிர்பந்தமும் ஏற்படும் என்பதால் தான் இந்தப் பதிவு.

சுற்றுச்சூழல் தொடர்பான, இயற்கை விவசாயம் தொடர்பான ஆவனப் படங்களும், கட்டுரைகளும் இனி தொடர்ந்து நம் வலை தளத்தில் பதிவேற்றப் படும். கட்டுரைகள் மட்டுமன்றி இதற்காக நான் சுற்றியலைந்த இடங்கள் குறித்த பதிவுகள், அதற்கான செலவு, பயண அனுபவம் என எல்லாவற்றையும் தொடர்ந்து பதிவிட உத்தேசித்துள்ளேன்.

சுற்றுச் சூழல் தொடர்பாக ஸ்டெரிலைட் மற்றும் நன்னிலம் - மீத்தேன் கால்வாய் பற்றிய கட்டுரைகளும், இயற்கை விவசாயம் குறித்த பதிவுகளுமாக இரண்டு வேலைகளாக பிரித்து செய்வதென ஏற்பாடு. இதில் ஒரு பாதி வேலைகளுக்காக எனக்கு sponsor கிடைத்திருக்கிறது என்பது தான் என்னை உத்வேகத்துடன் நகர்த்திச் செல்லும் விஷயம். நண்பர்கள் யாரேனும் என்னுடன் சேர்ந்து பயணம் செய்ய விரும்பினாலும் சேர்ந்து கொள்ளலாம். ஆனால் அது முதல் சுற்று முடிவடைந்த பின்னர் தான்.

இந்த வழியில் எனது அடுத்த பதிவு என் களப்பணி பற்றிய செய்தியில் இருந்து ஆரம்பிக்கும்.

வேறென்ன வேண்டும் உங்கள் வாழ்த்துகளைத் தவிர??

-
ஜீவ.கரிகாலன்




2 கருத்துகள்: