ஞாயிறு, 10 நவம்பர், 2013

அலங்காரம் என்றொரு கலையுணர்வு - பஜ்ஜி-சொஜ்ஜி /046


எல்லா விடியல்களுமே அன்றைய இரவு எப்படி ஒரு மனநிலையைத் தரும் என்ற ரகசியத்தை மறைத்து வைத்தபடியே தான் விடிகின்றன..

நேற்று  “நம்மோடு தான் பேசுகிறார்கள்” எனும் ஒரு உரையாடல் தொகுப்பிற்கான விமர்சனக் கூட்டத்திற்கு சென்று வந்தேன். நண்பர்களோடு அமர்ந்து சினிமா பார்ப்பதெல்லாம், இது போல கூட்டங்களுக்குச் செல்லும் நிறைவில் பத்து சதவீதம் கூட தராது என்று சொல்லலாம். அப்படியொரு நாள் தான் நேற்று.

இன்றைய நவீனச் சூழலில் தொன்மை, கிராமியம், ஆறு, இழப்புகள் என்று பேசிக் கொள்ளும் இடங்களில் பெரும்பாலும் மிஞ்சுவது எல்லாம் விரக்தி தான் இருக்கும் என்பது என் அவதானிப்பு, நேற்றோடு அவை மடிந்துவிட்டன. அப்படிப் பட்ட ஒரு உற்சாகமான கூட்டம் இந்த புத்தகத்தை முன் வைத்துப் பேசியது, அந்தவகையில் இந்த புத்தகம் சாதித்திருப்பது ஒரு பெரிய விஷயம் தான் என்று தோன்றியது. கலையானது எப்படி சாதாரன வாழ்வியலில் இருந்து உருப்பெற்று தன் மீடியத்தைத் தேடிப் பிடித்து ஒரு வடிவத்தைத் தேர்ந்தெடுத்து தேவையைத் திட்டமிட்டு ஒரு வடிவத்தில் சென்று அமர்கிறது என்று இந்த புத்தகத்தைப் பார்க்கும் பொழுது ராட்டினச் சக்கரப் பயணமாக உற்சாகம் தொற்றிக் கொள்கிறது, இந்த புத்தகம் பற்றி இன்னொரு பதிவில் பேசுவோம்.

புக்பாயிண்டில் நடந்த இந்த புத்தகத்தைப் பற்றிய விமர்சனக் கூட்டத்தில் பவா, சைலஜா, சௌமியா, தமிழச்சி தங்க பாண்டியம், பாரதி கிருஷ்ணக் குமார் மற்றும் இந்த புத்தகத்தின்ஆசிரியர்களான ஓவியர்கள் ஸ்ரீநிவாசனும், பாஸ் என்கிற கே.பாலசுப்ரமணியன் அவர்களின் பேச்சுகளில் கிளம்பிய உற்சாகம் அறை முழுதும் பரவியிருந்தது. பாரதி கிருஷ்ணக்குமார் இதுவரை நான் பார்த்திராத மாதிரி வேறு மாதிரியான உரை ஒன்றை நிகழ்த்தினார்.

இதில் கோணங்கியின் ஓவியங்கள் பற்றிய ஒரு பதினைந்து நிமிடங்கள் நிகழ்ச்சியின் உச்சம் என்று உணர்த்தியது, இந்தப் பேச்சினை என் ஆயுள் உள்ளவரை மறக்க இயலாது. சித்திரங்கள் பற்றிய அவரது பேச்சில் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வெடிப்பு நிகழ்ந்துக் கொண்டிருந்தது. Naked Eyeன் மகத்துவம் பற்றி ஒரு மாபெரும் கதை சொல்லி சில

வந்துப் பேசிய எல்லோருமே, சிலாகித்த ஒரு சொல்லானது என்னவென்றால் “அலங்காரம்” என்பது தான். தமிழச்சி ஞாபகம் கொண்ட தன் அப்பாவின் ஞாபகம் மற்றும் அலங்காரம் பற்றிய அவரது அபிப்ராயங்கள் (அதில் அவரது பூ, வளையல்கள் பற்றி அவர் பேசுவதற்கான வாய்ப்பை இந்த புத்தகம் உருவாக்கி வைத்திருப்பதை அவர் பேசும் பொழுது, என்னைப் போஒல பலருக்கும் அவரது அலங்காரம் பற்றி மனதில் இருக்கும் சில கேள்விகளுக்கான விடைகளை அவரே கேள்விகளை முன் வைத்து பதில்களையும் அளித்தார்). B.கிருஷ்ணக்குமார் ஞாபகம் வைத்திருந்த தன் அம்மாவின் நினைவுகள் எனக்கான குரலாக அவர் பேசியது போன்று இருந்தது. அலங்காரம் எனும் கலையம்சம் கொண்ட வார்த்தையானது மிகப்பெரிய உரையாடலை அந்த அரங்கில் முன்வைத்திருந்தது.

நிகழ்வு மிகவும் வித்தியாசமாக, நமது இலக்கியக் கூட்டம் போன்ற இறுக்கம் இல்லாமல் நடந்து முடிந்தது.

அலங்காரம்
************

ஓவியர் ஸ்ரீநிவாசனோடு கேட்டுக் கொண்டிருக்கையில் அலங்காரம் எப்படி கலையுணர்வாக மாறுகிறது என்ற transformation தான் இந்த நூலின் அடிநாதம் என்று தெரிய வருகிறது. அதற்கான யுக்தி தான் - இது போன்ற ஒரு உரையாடலைத் திட்டமிடுவது, அப்படி வந்திருக்கும் இந்த புத்தகம் தான் தான் இது போன்ற ஒரு அரங்கத்தை சாத்தியப்படுத்தியது. அதுவும் சரியான பதில் தான் வெற்றிகரமாக முடித்து விட்டனர் அந்த இரு நண்பர்களும்.

இவ்வளவு பேர் அலங்காரம் பற்றிப் பேசினார்களே என்று யோசிக்கும் பொழுது, கண்டிப்பாக இதன் ஆசிரியர் என்பவர் இது போன்ற ஒரு உரையாடல் உருவாகும் என்று எப்படியும் எதிர்பார்த்திருப்பார்கள் என்று தோன்றியது. அலங்காரம் பற்றி தனது ஏற்புரையில் ஃநிவாசன் என்ன பேசுவார் என்கிற எதிர்பார்ப்பும் கூடவே இருந்தது, உலகம் முழுக்க சுற்றி வந்தாலும் தன் நிலத்தின் மக்கள் தரும் அன்பும் மரியாதையும் சேர்ந்து உணர்ச்சி வயப்பட்ட நிலையில் நன்றிவுரையாக முடித்து விட்டுக் கீழிறங்கி விட்டார். கடைசியாக வெளியே வரும் பொழுது, பாலசுப்ரமணியன் அவர்களிடம் சென்று என்னை சுய அறிமுகம் செய்யும் பொழுது, அவர் என்னை முன்னமே அறிந்திருந்தார் (ஸ்ரீநிவாசன் சார் மூலம் தான்) என்பது எனக்குக் கிடைத்த ஒரு பரிசாகவே தோன்றியது. கீழே இறங்கும் போது தான் சிந்தித்தேன், அங்கே தேனீரோடு வழங்கப்பட்ட இனிப்பு மற்றும் சமோசாவும் தான் இந்நிகழ்வை மிக அழகாக அலங்கரப்படுத்தியிருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. அடடா இந்த ஏற்பாட்டை யாரும் கவனிக்கவில்லையா என்று வியந்தேன்

இந்திய ஓவியச் சூழலில் இருக்கும் பிரதான ஓவியப் பள்ளிகள் என்று எடுத்துக் கொண்டால் பாம்பே, வதோதரா(குஜராத்) மற்றும் வங்காளத்தின் பாரம்பரியமிக்கப் பள்ளிகளே, இந்த தென்னிந்தியக் கலைஞர்களின் (madras movement)  விழாவுக்கு அலங்காரம் செய்வது போல் - முறையே பாம்பே சமோசா, வதோதரா மில்க் ஸ்வீட் ஒன்று(டோட்லாவோ கோட்லாவோ பெயர் அடிக்கடி மறந்து விடுகிறது) மற்றும் பெங்காலி ஸ்வீட்டான ட்ரை ஜாமூன் என்று அலங்காரப் படுத்தியவற்றை நான் உணர்ந்து கொண்டேன். அலங்காரம் எனும் சொல் இத்தனை கலைநயம் மிக்கதா என்று சந்தோஷத்துடன் உறங்கச் சென்றேன்..

What A Sweet Memories

ஜீவ.கரிகாலன்




3 கருத்துகள்:

  1. அலங்காரம் எனும் சொல் இத்தனை கலைநயம் மிக்கதா என்று சந்தோஷத்துடன் அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  2. சகோதரி அந்த புத்தகத்தினை வாசித்தீர்களாயின் மிகுந்த சந்தோஷப் படுவீர்கள்...... வம்சி பதிப்பம - “நம்மோடு தான் பேசுகிறார்கள்”.. உண்மையில் மகிழ்ச்சி குறைந்தபட்சமாக இரட்டிப்பாகும் உங்களுக்கு என்று உத்தரவாதம்

    பதிலளிநீக்கு
  3. I order that book "Nammoduthan Pesugirargal" after read your comments.... thanks for introducing a good one.... thanks.....

    பதிலளிநீக்கு