செவ்வாய், 15 அக்டோபர், 2013

அசுரன் ஆளும் உலகு (பஜ்ஜி - சொஜ்ஜி 42 )

                    தண்ணீர் காட்டும் எண்ணெய் நிறுவனங்கள்

சுப்ரீம் கோர்ட் கடந்த செப்டம்பர் 23ம் தேதி ஒரு முக்கியமான திர்ப்பை வழங்கி மத்திய அரசுக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது தான் பொதுமக்கள் தங்கள் மானியத்திற்காக ஆதார் கார்ட் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தியது தான். ஆதார் கார்ட் இல்லாதவர்களுக்கும் மானியம் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் சொன்ன தீர்ப்பு ஒரே நாளில் அரசின் 50,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்தின் பெரும் தோல்வியாக நாம் பார்க்க இடமளிக்கிறது.

இந்த தீர்ப்பினை எதிர்த்துப் போராட மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்கள் அவர்களுக்கு விலை போன மீடியாக்கள் என்று ஒரு குழுவாக களத்தில் இறங்கி இந்த தடையை தளர்த்த போராடுகிறார்கள்

எதற்காக இந்த தடை?

சுப்ரீம் கோர்ட் கீழ்கண்ட அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த தீர்ப்பினை வழங்கியிருக்கிறது.

1. பொது மக்கள் எல்லோராலுமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த ஆதார் அட்டையினை வாங்கிட முடியாது,
  - இது அரசின் புள்ளியல்  மற்றும் கணக்கெடுப்புத் துறையின் பலவீனமான செயல்பாட்டை சுப்ரீம் கோர்ட் சரியாகக் கணக்கில் கொண்டுள்ளதைக் காட்டுகிறது.

2. ஆதார் அட்டை வழங்குதலில் உள்ள முறைகேடு மற்றும் குழப்பங்கள்
- போலியான அட்டைகள், பணம் வாங்கிக் கொண்டு முறைகேடாகத் தரும் அட்டைகள் (ஆந்திராவின் ஒரு பகுதியில் ரூ.200/-க்கு முறைகேடான் ஆதார் அட்டை வழங்கிய கும்பல் போன மாதம் கைது), குளறுபடியாக பிரிண்ட் செய்யப்பட்ட அட்டைகள்(பெயர், போட்டோ மாறியிருத்தல் மிகச்சாதாரனமாக காணப்படுகிறது)
- எத்தனை பேருக்கு ஆதார் அட்டைக்கான சான்றுகள், விண்ணப்பிப்பதற்கான விடுப்புகள், வங்கிக் கணக்குகள் இருக்கின்றன? எத்தனை கிராமங்களில் வங்கிகள் இருக்கின்றன?

3.ஆதார் அட்டையினால் லாபம் அடைபவர்கள் யார் யார்..

மூன்றாம் கேள்விக்கான விடை சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வந்தவுடன் காலில் வெந்நீர் ஊற்றியது போலே குதித்துக் கொண்டு எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாட்டை கவனித்தால், இவர்களுக்கு இருக்கும் நிஜ ஆதாயம் என்ன என்று புரியும்.

Economic Timesல் இந்த தீர்ப்பினால் ஏற்படும் விளைவுகளைச் சுட்டிக் காட்டுகிறது, கள்ளச் சந்தையில் எல்.பி.ஜி சிலிண்டர்களை கட்டுப்படுத்தத் தவறினால் அரசுக்கு 01 பில்லியன் டாலர் வரை இறக்குமதி அதிகரிக்கும் என்று சொல்கிறது. இங்கே ஒரு லாஜிக்: ஆதார் கார்ட் உபயோகிப்பதால் எண்ணெய் இறக்குமதி குறையும் என்று எண்ணெய் நிறுவனங்கள் சொல்வதில் இந்நிறுவனங்களுக்கு என்ன லாபம் இருக்கிறது?. 

லாபம் இருக்கவே செய்கிறது!! அதாவது ஆதார் கார்டு வினியோகத்தில் உள்ள சாத்தியக் கூறு, இருக்கும் வாடிக்கையாளர்களில் ஒரு பத்து சதவீதம் பேரையாவது வடிகட்டி அவர்களுக்கு மானியம் இல்லாமல் சந்தை விலைக்கு கொடுக்க முடியும் என்பது அரசிற்கு ஒரு Extra Bonus. உங்கள் மாநகரங்களில் திடீரென்று முளைத்துள்ள சில தனியார் எல்.பீ.ஜி. கடைகளின் பெயர்கள் உங்களுக்கு ஞாபகம் வருகிறதா?? Total Gas, Super Gas..இவர்களுக்கான புதிய சந்தைக்கு பயன்படும் ஒரு முக்கிய நபர் இந்த ஆதார்.  

அப்படியென்றால் அரசினால் ஆதார் கார்டு இல்லாமலேயே கள்ளச் சந்தையைக் கட்டுப்படுத்த வேறு வழிகள் இல்லையா?? அரசு மட்டும் நினைத்திருந்தால் பத்து ஆண்டுகளுக்கும் முன்பாகவே RFID தொழில்நுட்பம் மூலம் வீட்டு நுகர்வுக்கு வரும் சிலிண்டரினை கள்ளச் சந்தையில் விற்பதை தடுத்திருக்க முடியும். ஏன் ஒட்டுமொத்த CIVIL SUPPLIESஐயும் கட்டுப்படுத்திட இந்த தொழில்நுட்பம் உதவும், ஆனால் அரசுக்கு இதன் மீதான் அக்கறை இல்லை என்பது மட்டும் உறுதி.

சரி இப்படி வைத்துக் கொள்வோம், முதலில் எல்.பீ.ஜிக்கான மானியத்தை இப்படி ஆதார் மூலம் வங்கிகளில் டெபாசிட் செய்தால், அடுத்ததாக ஒட்டு மொத்த CIVIL SUPPLIESன் மானியங்களும் வங்கிகளுக்குமே வரவு வைக்கப் படும், நாம் அதை எடுத்துக் கொண்டு ரிலையன்ஸ் ஃப்ரஸ் போன்ற சூப்பர் மார்க்கெட்டிலோ அல்லது தீபாவளிக்கு வெளி வரும் திரைப்படத்தைக் கான் முன்பதிவோ செய்யக் கூடும்.

எல்லோரும் 1004 ரூபாய் கொடுத்து சிலிண்டர் வாங்கிவிட வேண்டும், அரசு நாம் வாங்கியவுடன் 410.50 ரூபாயினை நம் வங்கியில் வரவு வைத்து விடும், இங்கே நாம் கவனமாக இருக்க வேண்டும், சரியாக குறைந்த வைப்புத் தொகையினை நாம் வங்கியில் வைத்திருக்க வேண்டும், இல்லையென்றால் உங்கள் மானியம் அபராதமாக வங்கிகளால் சுவாஹா செய்யப்படும். இதில் எத்தனை பேருக்கு எல்லா வங்கிகளிலும் NO FRILLS ACCOUNT இருக்கும் என்று தெரியும்?? ஆனால் NO FRILLS ACCOUNTஇனை வையர் ட்ரான்ஸ்பருக்குப் பயன்படுத்த முடியுமா என்று தெரியாது? மானியத்திர்காக மட்டும் வங்கிகளுக்குள் முதன் முறை நுழைபவர்களுக்கெல்லாம் ATM கட்டணங்கள், இதர வங்கிச் சேவை கட்டணங்கள் குறித்த விளக்கங்கள் தெரிவிக்கப்படுமா??

ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல முடியும் ஆதார் கார்டு இந்திய அரசியல் சாசனத்தின் 14,20 மற்றும் 21ஆம் பிரிவுகளுக்கு எதிரானது (Right to equality, live and liberty) என்பதை, ஆக இதற்கெதிரான பிரச்சாரம் மிக அத்தியாவசியமாகிறது

மராட்டிய மாநிலத்தில் ஆதார் கார்டு இல்லையெனில் திருமணப் பதிவு ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது என்று அரசு கூறியுள்ளது ஒருவேளை மக்கள் தொகைப் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்தும் யுக்தியா என்று தெரியவில்லை.
வரும் அக்டோபர் 22ம் தியதியில் வரும் தீர்ப்பினைச் சார்ந்து தான் இதன் முடிவு எப்படி இருக்கும் என்று யோசிக்க இயலும். அதுவரை எண்ணெய் நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினைக் கண்டு அஞ்சப் போவதில்லை...

அடுத்தப் பகுதியில் தீர்ப்பினை வைத்து விவாதிப்போம் ...

ஜீவ.கரிகாலன்




3 கருத்துகள்:

  1. ஐயோ இதில் இவ்வளவு விவகாரம் இருக்கின்றதா?
    எனக்கு ஒரு சந்தேகம்.காங்கிரசுகு்கு யோக்கியமான சிந்தனையே வராதா?
    வரும்.ஆனா வராது
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா, இந்த தொடரின் முழு இணைப்பும் தரப்பட்டுள்ளது. http://kalidasanj.blogspot.in/search/label/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

      நீக்கு
  2. எல்லாம் ஏமாத்து வேலை , திருட்டு பசங்க.

    பதிலளிநீக்கு