புதன், 27 மார்ச், 2013

பஜ்ஜி-சொஜ்ஜி 16- ஊடகமும் முகநூலும்



*விஸ்வரூபம் பட விவகாரத்தில் செய்திப் பிச்சைக்காக இங்கேயே டெண்ட் அடித்த ஊடகங்கள், ஈழம் விசயத்தில் மாணவர்களின் உணர்வையும், போராட்டத்தின் அம்சங்களையும், கோரிக்கைகளையும் ஒளிபரப்பியதா? இன்று IPL கை வைத்ததும் குதிக்கின்றன..






*கூடங்குளம் பற்றி பேசினால் இந்தியாவின் மின் பற்றாக்குறை எனவும், மீனவர்களுக்கு ஏற்படும் ஆபத்து தமிழக மீனவர்களின் பிரச்சனை என்று பெரிதாகக் கண்டு கொள்வது இல்லை, இன்று வரை.அதிலும் கேரள் மீனவர்களுக்காக மத்திய அரசும், ஊடகங்களும் எடுத்துக் கொண்ட அக்கறையை நம் நிலையோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியம் வருகிறது.






*இந்து, துக்ளக் போன்ற பத்திரிக்கைகளையும் அதன் செய்திகளையும் CNN IBN பயன் படுத்துகிறதோ, ஏன் இருக்காது? CNN-IBN Chief News Editor சுஹாசினி ஹெய்டர் மாண்புமிகு சுனாசானாவின் மகள் என்பது போதுமான காரணம் தானே..






*NDTV, CNN-IBN போன்ற செய்தி வலைதளங்களில் பார்க்கும் பொழுது தான் தெரிகிறது. பிற மாநிலங்களில் தமிழன் மீது இலங்கை வீரர்கள் சென்னயில் ஆடுவதற்கு தெரிவித்த எதிர்ப்பையும் தொடர்ந்து வட இந்திய ஊடகங்களும், வட இந்திய ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் களில் தமிழர்கள் மேல் கடும் வெறுப்பை உமிழ்ந்துள்ளார்கள்.






*எல்லாவற்றிற்கும் மேலே இருக்கும் தலையாயப் பிரச்சனை நமது மாநிலத்தின் நிலை சன் டீவீ ஒரு அப்பட்டமான வியாபாரி, மற்ற எல்லா சேனல்களும் துதி பாடிக்ளாகவே வலம் வருகின்றனர். புதிய தலைமுறை, முகநூலைத் தவிர வேறு வழிகள் இல்லை செய்திகள் பரப்பிட.




* முகநூலை சரியாகப் பயன்படுத்திய வேண்டிய காலம் இது எனபதை முதலில் உணர வேண்டும்.


*வெறும் வணிக நோக்கினை மனதில் வைத்து தமிழர்களையும் , அவர்கள் நலன்களையும் சிறுமை படுத்தும் ஊடகங்கள் , தமிழ் தேசியவாதிகள் மற்றும் காங்கிரஸை விட பிரிவினை கோரவேண்டிய நிர்பந்தத்தை திணிக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை


* தொடர்ந்து தமிழர்களின் உணர்வுகளைப் புறக்கணித்து வரும் வட இந்தியச் செய்தி ஊடகங்களுக்கு இது போன்ற நிகழ்வுகளுக்கு எதிர்வினை, கருத்துகள் பதிவதன் மூலம், இன்னும் நாம் இந்தியாவின் தென் திசை மூலையில் தான் இருக்கிறோம் என்று தெரியப் படுத்துவோம்....


எகிப்தில், லிபியாவில், ஈரானில் எல்லாம் புரட்சி வர முதன்மையானக் காரணமாக முகநூல் இருந்தது எனும் செய்தி, டில்லி பெண் பாலியல் பலாத்காரத்தில் எழுந்த போராட்டத்தில் நாமும் பார்த்திருப்போம். இன்று மாணவர்கள்  போரட்டத்திற்கு நாமும் உதவி செய்துக் கொண்டிருக்கிறோம், இதனால் தான் முகநூல் எனும் மாபெரும் ஊடகத்தை சரியான வழியில் பயன்படுத்துதல் அவசியமாகிறது. அதே சமயம் இணையம் வாயிலாகக் கொண்டு செல்லும் செய்தி மிக எளிதாகவும் சென்றடைகிறது... வாருங்கள் பதிவிடுவோம்...................







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக