செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

எங்கே செல்கிறேன் ???


உதிர்ந்துவிட வேண்டிய
காட்டயத்திலிருக்கும் சருகாய்,

கதிரவன் மறையும் முன்பு
கடைசியாக பார்க்கும் சூரியகாந்தியாய்,

வெட்டப்படும் நேரம் நெருங்குவதையுணராது
உரிமையாளனின் காலில் தன்கொம்பினைச்
சொரியும் வெள்ளாடாய்,

காத்திருக்கும் வலையை நோக்கியே
அதிர்நீச்சல் அடித்து வரும் ஆற்றுமீனாய்,

நிலையற்ற வாழ்வில்
சூன்யத்தின் பிரதிபலிப்பாய்,

திசையறியாது - பாதை தெரியாது
பயணத்தின் முடிவு தெரியாது

மனதின் உந்துதலில் - ஏதோ ஒரு
பொக்கிஷமென காலிபெட்டியினைச் சுமந்து

உள்ளிருக்கும் விழிப்புணர்வை,
உலகெல்லாம் தேடியலையும் முட்டாள்தனத்துடன்
ஒரு தேடல்,
ஒரு விடியல்,
இன்னும் புலப்படாமல்.........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக