வெள்ளி, 5 ஜூன், 2009

கவிதை நேரம்




அம்மா ............
உன்னை
கழுத்து நிறைய நகைகளுடன்
கட்டி வைத்தனரா? :
அந்த புகைப்படம்
சொன்னது ஆமாம்
என்று :
எந்தையின் தொழிலுக்கும்;
என் பிறப்பிற்கும்:
பின் என் தம்பிக்கும்;
எங்கள் படிப்பிற்கும் ;
உணவுக்கும் , நோயிற்கும் ,
என்று எல்லா நகையும் போனது ;

உனக்கு வாங்குவதற்கு கடை சென்றேன்;

அம்மா தங்கம்
வாங்கும் போது மட்டும் விலை அதிகமாம்;




ஒன்று மட்டும் கேட்கிறேன் அம்மா;
அந்த புகைப்படம் போல்
இன்றும் சிரிக்கிறாயே ???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக