வியாழன், 10 மே, 2012

செம்மொழிப் பூங்கா



செயற்கையாக அழகு தரும் 
இயற்கையின் படிமம்.

கண்களைக் குளிர்விப்பதர்க்கான
எல்லா முகப்பூச்சும் செய்தபடி.

மிதிபட்டும் மோட்சம் கிட்டா
உயர்ந்த ஜாதிப் புல்வெளியில்,

தண்ணீரில் கரணம் செய்து
பெடையோடு குலாவும் பறவைகளோடு,

ஓங்கியதால் உண்டான நிழலில்
வேர் போல் பிண்ணிக் கொள்ளும்
மனிதத்தின் ஒரே உயிர்ப்பான
காதல் மொழி பேசும் இனம்

கவிதை எழுத வந்த என்னை
வேற்றுக் கிரகவாசி போல்
எரிச்சலோடுப் பார்த்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக