ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

எலியின் வாட்டமும் பூனையின் கவலையும்

சுதேசிச் செய்தி இதழில்(அக்டோபர்) மாதம் வெளிவந்த கட்டுரை

நம் வழக்கில் ஒரு பழமொழி ஒன்று உள்ளது “எலி ரொம்ப வாடுதேன்னு பூனை கவலை கொண்டதாம். ஆம், பெண்கள மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் கிரிஷ்ண திராத் வெளியிட்ட ஒரு அறிக்கை தான் மத்திய அரசை இந்த பழமொழியோடு ஒப்பீட்டு பார்க்க வைக்கிறது. இதன்படி “இனி குடும்பத் தலைவிகள் செய்யும் பணிகளுக்கு சம்பளமாக அவர்கள் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு ஒன்றை நிறுவி அதில் 10-20 சதவீதம் மாத வருமானத்தை அவர்கள் பெயரில் ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் அடுத்த கவர்ச்சிகரமான மற்றுமொரு பல்நோக்கு திட்டம் தான் அது.  


இந்த அதிநவீன சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசிற்கு காரணங்களா இல்லை? வீட்டில் இருக்கும் பெண்கள் எவ்வளவு வேலை பார்க்கின்றனர், வீட்டினை சுத்தமாக வைப்பது, சமைப்பது, குழந்தைகளை கவனிப்பது, துனி துவைப்பது என நீண்டு செல்லும் உழைப்பிற்கு கூலி கொடுப்பதாகும் என்று முதலில் சொன்ன அமைச்சகம், பின்னர் “இந்த தொகையை ஒரு பெண்ணிற்கு விவாகரத்து ஆனாலோ, கணவனை இழந்தாலோ அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு ஆக இதை சம்பளமாக கருதாமல் அவர்களுடைய சேவைக்கு இதை ஒரு கௌரவப் பரிசாகவோ, நன்கொடையாகவோ கருதி கொடுக்க வேண்டும் என்று இதற்கு கிளம்பிய எதிர்ப்பைக் கண்டு சம்பளம் என்ற வார்த்தையை அதில் இருந்து நீக்கியது.

அடிப்படையில் குடும்பப் பொருளாதாரமே நம் சமுதாயத்தின் தனிப் பெரும் பலம் என்பதை உணராத அரசு இது போன்ற சட்டங்களை இயற்றுவதில் ஒன்னும் ஆச்சரியம் இல்லை தான். ஆனால் இதைப் பெண்கள் நலன், சமூக
நலன் என்ற விகிதாச்சாரத்தில் மத்திய அரசு பிரச்சாரம் செய்யும் விதம் தான் மிகவும் கண்டிக்கதக்கது. அவர்கள் கூற்றுப்படியே பார்ப்போம், அவர்கள் முன் வைக்கும் காரணங்கள் விவாகரத்து ஆனாலோ இல்லை கணவனை இழந்தாலோ அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றும், உழைக்கும் பணத்தை வீட்டிற்கு தராமல் குடித்திடும் ஆண்களிடமிருந்து காப்பதற்க்கும் என்றும் காரணம் சொல்கிறது. பணி செய்து ஈட்டும் பணத்தை குடும்பத்திற்கு நூரொ சதவீதம் தராதவன், இருபது சதவீதம் தந்தால் போகும் என்கிறதா அரசு?

இந்த சட்டம் சமீபத்தில் பல நாடுகளில் (அமெரிக்கா, ஐரோப்பா) கொண்டு வரப்பட்டதற்கு காரணமும், நம் நாட்டில் கொண்டு வரப்பட்டதற்கு காரணமும் ஒன்று தான். ஆனால் அழகாக அரசு சொல்லும் சந்தர்ப்பவாதம் பெண்கள் நலன் என்ற பொய். இந்த திட்டம் 2011ல் நடைபெற்ற OECDநாடுகள் கூட்டத்தில், அந்த அமைப்பின் 28 நாடுகளிலும், மேலும் வளரும் பொருளாதார சக்தியான சீனா, இந்தியா, தென் அமெரிக்க நாடுகளிலும் ஒரு ஆராய்ச்சியை நிகழ்த்தியிருந்தது. இந்த உறுப்பினர் நாடுகளோடு இந்தியா, சீனாவை சேர்த்துக் கொண்டமைக்கு காரணம் அவர்களின் வளர்ச்சிப் பொருளாதாரம் மட்டுமல்ல அவர்களுடைய குடும்ப அமைப்பு தான் முக்கிய காரணம், இதன் படி இங்கிருக்கும் குடும்பத் தலைவிகளின் வேலைகளை சம்பளமற்ற பணி என்று எடுத்துக் கொண்டால் சராசரியாக தினமும் நாலரை மணி நேரம் ஆகிறது, ஆக இதை ஒரு வலுவான காரணமாகக் கொண்டு புதிய திட்டம் ஒன்றை அரசாங்கங்கள் உருவாக்குகின்றன.


இதற்கு இந்தியப் பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், ஜோசெப் ஸ்டிக்லிட்ஜ் போன்ற நோபல் பரிசு பெற்ற பொருளாதாரக் குழு ஒரு அறிக்கையை சமர்பிக்கிறது, இதன்படி உலகமயமாக்கலில் சரிந்து போய் சம்மனமிட்டு அமர்ந்த அமெரிக்கப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அமெரிக்காவின் குடும்பங்களில் நடைபெறும் மொத்த உற்பத்திகளையும் சேவைகளையும் கணக்கிட்டால் (household production) அமெரிக்க கூலி விகிதப் படி (wage rate) 3.8 ட்ரில்லியன் டாலர்கள் அந்நாட்டின் பொருளாதாரத்தில் அதாவது மொத்த உற்பத்தியில் (Gross Domestic Product-il) சேரும் என்று சொல்கிறது. அவர்கள் சொன்னது தான் தாமதம் என்று எல்லா OECDநாடுகளும் தங்கள் பொருளாதாரத்தை உயர்த்திக் காட்டின. இங்கிலாந்தோ தங்கள் குடும்பப் பெண்மனிகளின் மணி நேரக் கூலி எட்டு பவுண்டுகள் என்றும் ஆண்டுக்கு கிட்டதட்ட 30000 பவுண்டுகள் என்றும் சொல்லிட எல்லா நாடுகளும் தங்கள் நாட்டின் மொத்த உற்பத்தியை உயர்த்திக் காட்ட களத்தில் இறங்கின.


மக்களுக்காக சிறப்பான ஆட்சியை நடத்துவதற்கு கங்கனம் கட்டி அமர்ந்திருக்கும் நம் மத்திய அரசு இதைப் பார்த்து சும்மா இருக்குமா? ஏற்கனவே இந்த திட்டம் ஆரம்பிப்பதற்கு இந்தியப் பெண்களின் உழைப்பை முன்னுதாரனமாகக் கணக்கிட்டனர் தானே, ஆக அடுத்த திட்டம் தயாரானது. ஆனால் மிக விழிப்போடும், தந்திரத்தோடும் நம் மத்திய அரசு இதை அறிவிக்கும் போதே நம் நாட்டில் இருக்கும் பெண்களின் பிரச்சனையை கணக்கிட்டு அதற்கு சாயம் போட்டுக் காட்டியது. பிரிட்டீஷ் நாட்டு சர்வேயினை வைத்துப் பார்க்கும் போது நம் நாட்டில் இனி எல்லா தாய்மார்களையும் தாதிப் பெண்களாக மாற்றும் நம் அரசின் லட்சனமாக இதைக் கண்டிக்கத் தோன்றுகிறது. உற்பத்தி என்று நம் குடும்பத் தலைவிகளின் எத்தனை சேவைகளை இவர்களால் GDPயில் சேர்க்க முடியும், மற்ற நாட்டுப் பெண்கள் போல சமையல், வீட்டை, குழந்தைகளைப் பராமரித்தல் என்று முடிந்துவிடுகிறதா, இன்னும் நம்மிடம் இருக்கும் கூட்டுக் குடும்ப வாழ்வில் அவர்களின் பணி எத்தகையது? இது போன்ற சட்டங்கள் முதலில் உடைப்பதே கூட்டுக் குடும்பங்களின் அமைப்பைத் தான். இல்லை சில பொறுப்பற்ற கணவன்மார்களின் பணி 20 சதவீதம் கொடுப்பது மட்டுமே சட்டம் என்றால் அத்தோடு அந்த குடும்பங்களின் நிலை? பின்னாளில் தாலாட்டிற்கும்? தாம்பத்தியத்திற்கும் ஆராய்ச்சியையும் யாராவது தொடங்கி விட்டால் அதற்கும் செவி சாய்க்குமா நம் அரசு?

உலகமே பொருளாதார மந்தத்தில் ஸ்தம்பித்துப் போய் நிற்க, நம் குடும்பங்களை நிர்வாகிக்கும் பொறுப்பு (முக்கியமாக மத்திய தர வர்க குடும்பங்களில்) பெண்களிடம் இருப்பதாலேயே நாம் இன்னும் இந்த விலைவாசியுயர்வு, கலாச்சார மற்றும் அரசியல் சுரண்டல்கள் போன்ற எல்லாவற்றையும் தாண்டி ஒரு சேமிக்கும் பொருளாதாரமாகவே நம்மை இன்னும் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறது என்பதில் ஐயமில்லை. சேமிப்பிலும் கூட இன்னும் பங்கு வர்த்தகம் போன்ற குப்பைகளில் வீழ்ந்துவிடாமல் தங்க ஆபரணங்களாக மாற்றி அதையும் நம் கலாச்சாரத்தில் வடித்து வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளை, அனேக நடுத்தர வர்கத்தில் முழுச் சம்பளமும் முதலில் தாயிடமோ அல்லது மனைவியிடமோ தான் கொடுக்கப் படுகிறது, அதில் அவர்களுக்கு சம்பளம் கொடுக்க சொல்வது முட்டாள்தனம் மட்டுமல்ல கயமைத் தனமும் கூட.

     ஆம், மாதம் பதினைந்தாயிரம்(15000) வாங்கும் கணவன் மொத்தமாக தன் மனைவியிடம் கொடுக்கும் சம்பளத்தில் ஒரு மூவாயிரம்(3000) ரூபாய் தன் மனைவியின் பணிவிடைக்கென்று கொடுக்கும் பட்சத்தில் மொத்தம் பதினெட்டாயிரம் (18000)ரூபாயாக அரசு கணக்கெடுத்துக் கொள்ளும் இதில் நம் பொருளாதரம் திடீர் 20 சதவீத உயர்வைக் காணும். பிற்காலத்தில் இந்த கூடுதல் 3000 ரூபாய்க்கு வருமான வரியும் விதிக்கலாம், அல்லது சேவை வரியையும் விதிக்கலாம். எப்படியோ இது போன்ற சட்டத்தின் மூலம் குடும்பம் என்கிற அமைப்பு உடைவது மட்டும் நிச்சயம். இந்த சட்டத்தை நிறைவேற்றாமல் தடுப்பதோடு நின்றுவிடாமல் , ஆடம் ஸ்மித் சொன்ன தேசங்களின் சொத்துகள் (wealth of nations) இப்படித் தான் எல்லாவற்றையும் சந்தைப் பொருளாக பணத்தின் அளவு கொண்டு பார்த்து வரும் (monetary measures) என்று சொன்னால் அவற்றை நம் பாடத் திட்டங்களில் இருந்து நீக்கிவிட்டு, நமது தத்துவயியல் சார்ந்த மரபின் அடிப்படையில் புதிய பாடத் திட்டங்கள் கொண்டு வரவேண்டும் என்ற தொலை நோக்குப் பார்வையும் அவசியம் வேண்டும்.
 
பின்குறிப்பு:
மனைவியின் பெயரில் வங்கிக் கணக்கு வைத்து அதில் சம்பளப் பணத்தில் ஒரு பகுதியை சேர்க்க வேண்டும் என்று சொன்ன அரசு வங்கிக் கணக்கிற்கு கொடுக்கும் ATM கார்டுகளை யார் வைத்திருக்கலாம் என்று எந்த தீர்மானமும் சொல்லவில்லை என்பதை வைத்து சற்று ஆறுதல் கொள்ளலாம்

ANTIDISESTABLISHMENTARIANISM (பஜ்ஜி சொஜ்ஜி -3)



ANTIDISESTABLISHMENTARIANISM

          எனது கல்லூரிக் காலத்தில், இரண்டாம் ஆண்டின் ஒரு நாள், எங்களது வேப்பங்காய் பாட வேளையான ஆங்கில வகுப்பில், எங்களை எப்பொழுதும் ஏளனமாகப் பார்க்கும் ஒரு ஆங்கிலப் பெண் விரிவுரையாளர், ஆங்கிலத்தின் மிக நீளமான இந்த வார்த்தையை எழுதி எல்லோரையும் வாசிக்கச் சொல்லி அங்கலாய்த்தார். இதை வாசித்து தற்கொலை முயற்சி பண்ணத் துணிவற்று, நாங்கள் பேசாமலேயே நின்றபடி இருந்தோம்.  வழக்கம் போல, இதை சாக்காக வைத்துக் கொண்டு சயின்ஸ் ஸ்டூடண்ட்ஸ் தான் உயர்ந்தவர்கள், ஆர்ட்ஸ் என்பதே வெத்து வேட்டுகள் என்று எங்களை வெறுப்பேற்றினார். இவர்கள் போன்ற ஆசிரியர்கள் தான் இது போன்ற ஒப்பிடுதல் மூலம் மேலும் ஒரு பிரிவினையை இந்த சமூகத்தில் உண்டாக்குகிறார்கள், அது கல்லூரியோடு நின்று விடுவதில்லை. கலை அறிவியல் கல்லூரிகளில் எல்லாம் தமிழ் இலக்கியம், வரலாறு, வணிகவியல், பொருளாதாரம் படிக்கும் மாணவர்களுக்கு இது போன்ற அனுபவங்கள் சாதாரணம்.

இதில் அந்த வார்த்தைக்கு அர்த்தம் கேட்கும் போது அந்த விரிவுரையாளர் திணறியது வேறு கதை.

     இதே போன்ற ஒரு வேறுபாட்டை ஒரு நண்பன் தான் வேலை பார்க்கும் வங்கியில் அனுபவிப்பதாகச் சொல்கிறான். வங்கி வேலை என்பதால் கிளெரிகல் வேலைகளில் கூட எங்களுடன் போட்டிக்கு வந்து பணியில் அமரும் பொறியியல் படிப்பு படித்தவர்கள் ஒரு அணி சேர்ந்து அரசியல் செய்கின்றனர் என்று நொந்தான். பொறியியல் படிப்பிற்கும் வங்கி குமாஸ்தா வேலைக்கும் என்னடா சம்பந்தம்?, என்று உன்னுடன் அவர்கள் வந்து அமர்ந்தார்களோ? அன்றிலிருந்து They are no more Engineers அதை நீ பொருட்படுத்தாதே!! என்று சொன்னேன். கரூரில் எனக்குத் தெரிந்த ஒருவர் இருக்கிறார், அவர் அந்த நகரத்தின் அரசு மருத்துவமனையின் முன்னாள் தலைமை மருத்துவர். பங்கு வர்த்தகத்தில் இருந்த ஆர்வம் காரணமாக அவர்  முழுவதுமாக பணியை விட்டு வர்த்தகத்தில் ஈடுபட, தன் பெயருக்கு முன்னால் போடும் “DR” எனும் பட்டத்தை துறந்து விட்டார். பெயருக்குப் பின்னால் ஜாதியையே தூக்கி எறிந்தாயிற்று, உபயோகப்படா(இருந்தால்) படிப்ப மட்டும் பெயரோடு சேர்த்து வைத்து என்னதான் சாதித்திட ?

வங்கி வேலை கூட பரவாயில்லை பத்தாம் வகுப்பை அடிப்படைத் தகுதியாகக் கொண்ட கிராம நிர்வாக அதிகாரித் தேர்விற்கு ஆயிரக் கணக்கில் பொறியியல் படித்த இளைஞர்கள் எழுதும் நிலையை பார்க்கும் போது நம் கல்வித் தரத்தை என்ன்வென்று சொல்ல?

***********************************************************************

திரையுலகில் காணாமல் போன நடிகர் வடிவேலுவைப் பற்றிய புலம்பல்கள் இப்போது ஆங்காங்கே ஒலிக்க ஆரம்பிக்க, நாமும் கொஞ்சம் சீரியஸா எதாவது அவரைப் பற்றி எழுதனும் என்கிற ஆசை சில நண்பர்களோடு நடந்த உறையாடல்களில் முகிழ்ந்தது. வடிவேலுவின் பஞ்ச் வசனங்கள் சபைக்குறிப்பிற்க்கேற்ற வார்த்தைகளாகவும், மேலாண்மை யுக்திகளாகவும் பல நிறுவனங்களில் இன்று இருப்பதைக் காணலாம். அதில் ஒருவித மன இறுக்கங்கள் தளர்வதற்கும், அடுத்த வேலைக்கு நம்மை உடனேயே இட்டுச் செல்லவும் உதவுகிறது என்பது மிகையல்ல.

ஆணியப் புடுங்க வேண்டாம்எனும் வசனம் பல கார்ப்பரேட் மீட்டிங்களில் ஒலிப்பதைப் பார்க்கலாம். குறிப்பிட்ட ஒரு பணியை, செயலைத் தவிர்ப்பதற்க்கும், கைவிடுவதற்க்கும் தேவைப்படும் நீண்டதொரு காரணத்திற்கு/விளக்கத்திற்கு மாற்றாக அந்த மூன்று சொற்களைப் பயன்படுத்த, பல நேரங்களில் சுமூகமான விளைவுகளை மட்டுமே தந்திருக்கும். இது போலவே சில உயர்/மேலதிகாரிகளிடம் வாங்கும் வசவை சக ஊழியனோடு பகிர்ந்து கொள்ள “why blood, same blood என்கிற வசனத்திலோ, சேல்ஸ் டார்கெட்டிற்காக தன்னைக் கண்டபடி திட்டும் மேனஜர், அதற்கு முந்தைய நாள் தன்னோடு சேர்ந்து உற்சாக பானம் அருந்தியதை நினைக்கும் போது “அது வேற வாய்!என்று தன் மேலாளரை நினைக்கவும், “ரைட்டு விடுஎன்று தன் மீது விழும் அவமானங்களைத் துடைத்துவிட்டு அடுத்த மாத டார்கெட்டிற்கு நகர்வதும் இன்று தமிழ் கூறும் நிறுவன உலகில் சாதாரணமே. மிக முக்கியமாக எப்படிப்பட்ட இழப்போ அல்லது நஷ்டமோ நம் வியாபரத்திலோ, பணியிலோ சந்திக்க நேரிட்டாலும் “அய்யோ வடை போச்சே!” என்று சொல்லும் பொழுது அந்தக் கவலைகள் நீங்கி சாந்தி கிட்டுவதும் வழக்கம். இது போல பலரிடத்தில் இவரது மேனரிசங்கள் சோக நிலையில், காதல் பார்வையில், ஏமாற்ற நிலையில் பிரதி எடுக்கப் படுகிறது.

  மேலே சொன்ன இரு பத்தியில் நான் சொன்னவைகளோடு உடன்பட்டால் மட்டும் கீழே தரப்பட்ட இரண்டு விசயங்களைப் படியுங்கள், இல்லையெனில் இந்த பத்தியை விடுத்து அடுத்த பத்திக்கு செல்லலாம். இதன் படி சொல்வதெனில்,

1.தமிழ் சினிமா ரசிகர்களாகிய நாம் வடிவேலுவை எவ்வளவு தூரம் இழந்திருக்கிறோம்?.
2.வடிவேலுவின் வசனங்கள் நம் பணிச்சூழலில் உதவுவது உண்மை தான் என்றால், இத்தனை அறிஞர்கள், யோகிகள், மேதைகள் வாழ்ந்த நாட்டில் உருப்படியாக எந்த ஒரு முன்னேற்ற சிந்தனையும் நாம் கற்றுக் கொள்ளவில்லை, குறிப்பாக சுயமுன்னேற்ற, மேனேஜ்மெண்ட் புத்தகங்களால் நாம் வாழும் பணிச்சூழலுக்கு நமக்கு பிரயோஜனம் என்று  எதுவும் பெரிதாய் இல்லை.
            
               “அப்படி சொல்லுடா என் கன்று
****************************************************************************

கவிஞர் யவனிகா ஸ்ரீராமிடம் பேசும் வாய்ப்பு கிட்டிய போது, அவர் தன்   நண்பரான கவிஞர் ஐய்யப்ப மாதவனின் சொந்த ஊரான நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பர் அடக்கம் செய்யப்பட்ட நினைவுப் பூங்காவில் இருந்தார், ஆக கிடைத்த வாய்ப்பில் கம்பரைப் பற்றிய பேச்சை எடுத்தேன். சடையப்ப வள்ளல் ஆதரவிலும், பின்னர் சோழ மன்னனின் ஆதரவிலும் வாழ்ந்து வந்ததாகவும் சொல்லும் வரலாற்றில் அவர் இறுதிக் காலங்கள் பற்றிய குறிப்பு இல்லை என்றும்? எதற்காக இந்த ஒரு மாபெரும் கவிஞன் தன் இறுதிக் காலத்தை தன் ஊர், அரண்மனை, பரிசில், நல்வாழ்வு என எல்லாவற்றையும் விட்டு ஒதுங்கி வாழ்ந்தான்? என்று அவர் சொல்லும் போது கம்பன் கூட சமகால கவிஞர்களின் இன்றைய நிலையில் இருந்திருக்கிறானா என்ற கேள்வி எனக்குள் வந்தது

யவனிகாவின் கட்டுரைத் தொகுப்பான “நிறுவனங்களின் கடவுள்நமக்குக் கிடைக்கப் பெற்ற மிக முக்கியமான புத்தகம். நவீனம், அதன் அரசியல், மொழியின் அதிகாரம் பற்றி அதிகப் பரிச்சயம் வேண்டி சிந்தனைத் தெளிவு தேடும் இளம் படைப்பாளுகளுக்கு அவருடைய இந்த எழுத்துகள் மிகவும் உதவும். பெரிய அளவில் இன்னும் பேசப்படாத இந்த புத்தகம் சமூகவலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டால், புதிதாக எழுதுபவர்களுக்கு மிகவும் பயன்படும்.

வாசகனாக கவிதைகளை அனுகுதல், அதன் பிரச்சனைகள் குறித்து சின்ன சின்ன கட்டுரைகளில் மிக எளிமையான உதாரனங்களில் தன் வலைதளத்தில் சொல்கிறார் கவிஞர் வா.மணிகண்டன். இதில் கவிதைகளை, அதன் பரிமாணத்தை தன் சொந்த அனுபவத்திலும், பிறர் கேள்விகளுக்கும் பதிலாக அவருடைய தளத்தில் பார்க்கலாம் சில சுட்டிகளின் இணைப்பு நூல் கீழே!
http://www.nisaptham.com/search/label/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

இந்த தளத்தில் இருக்கும் மின்னல் கதைகள் எனக்கு மிகவும் பிடித்த சுவாரஸ்யமான சிறுகதைத் தொகுப்பு
*********************************************************************** 

  மிகுந்த சிரமப்பட்டு இந்தக் கட்டுரைத் தலைப்பை வாசித்தீர்களா ? இல்லையா?? இதன் அர்த்தம் தெரியுமா? “Establishment” என்ற சொல்லை வேராக வைத்து சொல்லப்பட்ட இந்த சொல். பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நிருவப்பட்ட ஒரு புதிய சர்ச்சும் (Church of England), அது ப்ரிட்டீஷ் அரசின் மற்ற மாகாணங்களிலும் பரவிட எடுத்த முயற்ச்சிகளும் அந்த அமைப்பின் செயல்கள்Establismentarianism” என்றும், அதைத் தடுப்பதற்காக ஸ்காட்லேண்ட், அயர்லாண்ட் மற்றும் வேல்ஸ் ஆகிய மாகாணங்கள் எடுத்த முயற்சி, கூட்டங்கள், பேரணிகள், சதித் திட்டங்கள் என்றும் “Dis-establishment ”என்றும் புரிந்து கொண்டால், நீங்கள் அடுத்தது (Anti-disestablishment) யாரை ஆதரிக்கிறது என்று தெரியும்!??! தெளிவாக சொல்லப் போனால் இது ஒரு அதிகாரமிக்க ஒருவரின் எண்ணப்படி(Anti-disestablishment + arianism = Anti-disestablishmentarianism) எதிர்ப்புகளைக் களைவதாகும். அது நாட்டின் வலிமைமிக்க (monarch/supreme power) ஒருவரின் அரசியல் லாப நோக்குகளோடும், சூழ்ச்சிகளோடும் சாத்தியமாகிறது என்றும் தெரிகிறது.

இன்றைய சூழ்நிலையில் ஒரு வலுவான அமைப்பு எங்காவது காலூன்ற விரும்பினால் அதற்கான எதிர்ப்பை திட்டமிட்டு அதைச் சமாளித்து ஒழித்துக் கட்டும் திட்டங்களே அதிமுதற் தேவையாகிறது.

இதே போன்ற சூழ்நிலையில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதும் (establishment) அதை நாம் எதிர்ப்பதும் (disestablishment), எல்லாவற்றிற்கும்(எதிர்ப்புகளுக்கு) ஆயத்தமாக தேவையற்ற நுகர்வுப் பண்பிற்குள் நம்மை நுழைத்து, அதே சமயம் அடிப்படைத் தேவையாக இருக்கும் எல்லாப் பொருட்களின் விலையையும் பன் மடங்கு உயர்த்தி. இதன் விளைவாக போராட்டத்தை விடுத்து மக்கள் யாவரையும் ஏதோ ஒரு மாற்றத்தை எதிர் நோக்கியோ, பிரார்த்திக்க வைத்தோ அரசியல் செய்து; நமது எதிர்ப்பை சீர்குலைத்து;- அதை இந்த அந்நியப் படையெடுப்போடு சேர்த்து வைத்து நம்மை ஏற்றுக் கொள்ளச் செய்யும் தந்திரம் தான் Anti-disestablishmentarianism.


நேரடியாகச் சொல்ல விடாமல் இந்தக் கட்டுரையில் உறுத்தி வந்த Anti-disestablishmentarianism எவ்வளவு தேவையற்றதோ, அவ்வளவு தேவையற்றது சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு. (மேற்கு வங்க முதல்வர் தீதி பானர்ஜிக்கு ஜே)

“ஷப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே

குறிப்பு : இது தான் ஆங்கில வார்த்தையில் மிகப் பெரியது என்று என் கல்லூரிப் பேராசிரியர் சொன்னது தவறு, ஆங்கிலத்தின் மிக நீளமான வார்த்தை இதோ
PNEUMONOULTRAMICROSCOPICSILICOVOLOCANOCONIOSIS எனும் ஈரல் சம்பந்தப்பட்ட நோயின் பெயர். 
ஹி ஹி....ஹி ஹி



பஜ்ஜி சொஜ்ஜி
இன்னும் சுவையாக, அடுத்த பாகத்தில்
ஜீவ.கரிகாலன்

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

கிரெடிட் கார்டைப் போலே தேய்ந்து போகும் உங்கள் மூட்டு. (பஜ்ஜி சொஜ்ஜி - பாகம் 2)



பஜ்ஜி சொஜ்ஜி - பாகம் 2

வால்மார்ட்டை வரவேற்கவும் உங்களுக்கு காரணம் இருக்கலாம்
 காரணம் 1

மான்புமிகு பாரதப் பிரதமர் அந்நிய முதலீட்டிற்கு வக்காலத்து வாங்க சொல்லும் பல காரணங்களுள் ஒன்று தான் வீணாகும் உணவுப் பொருட்கள் பற்றிய அக்கறை. சமீப காலமாக சமூகவலைதளங்களில், செய்தி ஊடகங்களில் என உணவுப் பொருட்கள் வீணாகுவதைக் குறித்த பகிர்வுகள் வருகின்றன. இதன் பின்னணியில் கூட வால்மார்ட் ஸ்டோர் நமது நாட்டில் இது போன்ற செய்திகளை பரப்பிட கிட்டதட்ட நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளார்கள் , விமர்சகர்கள் என இவர்களின் சூழ்ச்சியில் தெரிந்தோ தெரியாமலோ ”வீணாகிப் போகும் உணவுப் பொருட்களைப்” பற்றி நிறையக் கட்டுரைகள் எழுதி வருகின்றனர்.


சரி, அவர்கள் சரியாகத் தானே எழுதுகிறார்கள் என்று நமக்குத் தோன்றினாலும். அவர்கள் என்னவோ ஆராய்வது நம்மிடம் இருக்கும் செயல்படாத சேமிப்பு அமைப்புகளையும், தனியார்களிடம் இருக்கும் கிடங்கில் இருக்கும் அதிக விலையும் தான். இவையாவும் அலசி ஆராயப் படுகிறதேயொழிய இதற்கு மாற்று சேமிப்பு முறைகளைப் பற்றி யாரும் சொல்வதில்லை பெரிதாக வடநாட்டு ஊடகங்கள் கூட மாற்று வழிமுறைகளை விவாதிப்பது இல்லை, பொருளாதார வல்லுனர் திரு.சேகர் ஸ்வாமி கிராமப் புறங்களில் கூட்டுறவு பண்டகச் சாலையை நவீனப் படுத்தி மேம் படுத்துவதே நம் நாட்டின் மொத்த கிட்டங்கித் தேவைக்கும் போதுமானது ( இது மத்திய அரசு ஏற்கனவே ஒதுக்கும் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ஒதுக்கியுள்ள 40000 கோடிகளில் சாத்தியம்) என்றும்,  நைஜீரிய நாட்டைப் போல (நைஜீரியாவில் - அந்த பிந்தங்கைய ஆப்பிரிக்க நாட்டின் வறண்ட பிரதேசங்களில் வசிக்கும், கிட்டதட்ட 15  கோடி மக்கள் பயன்படுத்தும் முறை) மண்பானைகளுக்குள் சேமிக்கும் வழக்கமே!! (இரண்டு மண்பானைகளை வைத்து அதற்கு இடையில் மணல் நிரப்பி மூடி வைத்தல்). இது நம் தனி நபர் சக்திக்கும், தேவைக்கும் தாரளமாக போதுமானது என்றும் சொல்கிறார். 



இந்த உதாரணம் மிகச் சாதாரணமாய் உங்களுக்குத் தோன்றினாலும் இதன் மகிமை மகத்தானது. நமது விவசாய முறையோடு ஒத்துப் போவது, ஒரு சாதாரண ஏழை விவசாயி கூட சில விரைவில் அழுகும் காய்கறிகளுக்கு ஒன்றிரண்டு நாட்கள் பொறுத்து நல்ல விலையை பெறலாம். தவிர மின்சாரப் பயன்பாடு இல்லவே இல்லை, சில ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கூட மதுபானத்தை இப்படி இயற்கையாக குளிரூட்டுகின்றனர்.
ஆயினும் என்ன? மத்திய அரசு நிறைவேற்றிவிட்டது தீர்மானத்தை இனி நம் வேலையெல்லாம் நம் ஊரில் திறக்கும் வால்மார்ட்டின் வாசலில் நின்று உங்கள் ஐ-போனில் போட்டோ எடுத்து உங்கள் முகநூலிலோ, ட்விட்டரிலோ அப்லோடு செய்வதுதானா ??

(காரணம் இரண்டு :அடுத்தக் கட்டுரையில்)
Wiki search :Pot in Pot refrigerator

********************************************************************************
விஜய் டீவியில் சூப்பர் சிங் ஜூனியரைப் பார்க்கும் போது அந்தக் குழந்தைகளின் அசாத்திய திறமைகளில் நாம் மயங்கித் தான் போகிறோம்
என்பதில் ஐயமில்லை, ஆனால் அறுபது லட்சம் மதிப்புள்ள பரிசுத் தொகையால் குழந்தைகள் மீது பெற்றோர்களும் மற்றவர்களும் இந்தக் குழந்தைகள் மீது வைக்கும் அழுத்தத்தை நினைத்துப் பார்த்தால் மிகப் பயங்கரமாக இருக்கிறது, பத்துப் பனிரெண்டு வயதில் அவர்களுக்கு கிடைக்கப் போகும் பங்ளா வீட்டை விட அநேகமாக அவர்கள் இழந்தது என்ன என்று போடும் பட்டியல் தான் பெரியது என்று நம்புகிறேன்.

அதற்காக அவர்களுக்குக் கிடைக்கும் exposure-ஐக் குற்றம் சொல்லவில்லை, அதே சமயம் பதினோரு வயது சிறுவன் சொர்கம் மதுவிலே” என்று  சொக்கி சொக்கிப் பாடுவதும், அதை நடுவர்களோ அவனைப் பாராட்டும் போது “அப்படியே உள்வாங்கி , உணர்ந்து பாடுகிறாய், கேசுவலாய்ப் பாடுகிறாய், நல்லா என்ஜாய் பண்ணி பாடுறீங்கஎன்று வியந்து பாராட்டும் நாட்டமைத்தனமும் நிறையவே வெறுப்பேற்றுகின்றன.

இசையைப் பற்றியும் அதன் நவீன கட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் சமூகம் பற்றியும் அதன் அழகியல் பற்றியும் ஒரு சிறப்பானக் கட்டுரை இருக்கிறது. நீங்களும் அதை வாசித்தல் நலம், நண்பர் பாலசுப்ரமனியனின்  வலைப்பூவில் http://sadhukkam.blogspot.in/2012/09/blog-post.html.ஒரு நல்ல கட்டுரை இருக்கிறது. இது போன்ற நிகழ்ச்சியில் கூட செயற்கைத் தமிழில் ஸ்டைலாகப் பேசி கவரும் தந்திரம் மீது காறி உமிழத் தோன்றுகிறது.

*********************************************************************************

பூரண மது விலக்கை அமல் படுத்தக் கூறி, இன்றைய சமுதாயத்தில் மதுவை ஒழிப்பதன் அவசியத்தைப் பற்றி ஒரு நண்பர்கள் சந்திப்பு வரும் அக்டோவர் இரண்டில் நடக்க இருக்கிறது. இதைப் பற்றி பேசும் பொழுது, இப்படியெல்லாம் கூடவா கூட்டம் நடத்துறாங்க என்று கேட்ட என் நண்பன், “பார்க்கலாம் எவ்வளவு பெரிய க்ரூப் போட்டோவ நீ அப்லோடு செய்வ என்று சொன்ன அவனிடம் ஒரு அதீத நம்பிக்கை இருந்தது. அவன் நம்பிக்கை பொய்யாகக் கடவுக . http://www.facebook.com/events/484025931615936/. நீங்களும் இதில் இணையலாம் - மேலே சொடுக்குங்கள்.
******************************************************************************

ஜங்ஃபுட்சுகளில் அதுவும் மாலை நேர தின்பண்டங்களில் தனக்கென்று ஒரு தனியிடம் பெற்று முதலிடத்தில் இருக்கும் பண்டம் தான் என்னருமை பஜ்ஜி. கெடுதல், கொழுப்பு, வாயு என்று எல்லா நெகடிவ் விசயங்களையும் தாண்டி, பாணி பூரி, சமோசா, கச்சொரி, பாவ் பாஜி போன்ற போன்ற வடநாட்டு சாட் ஆதிக்கங்களையும், பீட்சா, பர்கரைப் போன்று சப்வேயில் வந்துக் குடியேறிய அகலவாய்த் திறப்பு அந்நியப் பதார்த்தங்களையும் தாண்டி முதலிடத்திலிருப்பது நம் தென்னிந்திய பஜ்ஜியே!!

அதுவும் இந்தப் போட்டிகளை சமாளிக்க தன்னைப் பரிணமித்து புதுப் புது வகைகளாக பிரட் பஜ்ஜி, காலி ஃப்ளவர் பஜ்ஜி, ஆனியன், உருளை, மிளகாய், முட்டை பஜ்ஜி என்று நீண்டு செல்லும் கியூவில் மலையாள வாழைப்பழ பஜ்ஜியெல்லாம் கூடுதல் சிறப்பு, என் அம்மா கூட பீர்க்கங்காய், அப்பளம்,மாங்காய் என்று கூட முயற்சி பண்ணிப் பார்த்துள்ளார். இப்படி எத்தனை வகை பஜ்ஜி இருந்தாலும் எப்பொழுதும் வாழைக்காய்க்கே முதல் இடம் என்று பஜ்ஜி சாஸ்திரம் பயின்ற பாக்கியம் ராமசாமி வாரமலரில் ஒரு கட்டுரையில் தெரிவித்து இருக்கிறார்.

இதில் இதற்கு தோதான சட்னி எது என்ற விவாதம்(அதிக ஓட்டுகள் தேங்காய் சட்னிக்குத் தான்)இருந்தால் கூட சட்னி என்பது இடைச் சொருகல் தான் என்றும்  “சட்னி இல்லாமலே கூட சாப்பிட்டாலும் அது சிறப்பானதே!!என்றும் பிரகனப் படுத்துவதில் தவறில்லை தானே

பஜ்ஜி போன்ற பதார்த்தங்களில் உடல்நலம் என்ற பெயரில் தீண்டாமையை அனுசரிப்பவர்கள் கூட குற்றாலம் போன்ற குளியல்களை ஒட்டியும், மழையின்
ஈர அனுசரிப்பிலும் தங்கள் கொள்கை மறக்கும் பகுத்தறிவைப் பெறுவது யதார்த்தமே. நினைத்துப் பாருங்கள் ஹைஜீனிக் என்று உங்களுக்கு கிடைக்கும் கொசுறு, சாம்பிள் பீஸ் தரும் அண்ணன்மார்களின் கடையை விடுத்து, மல்டி ஸ்டோரி பில்டிங்கில் டோக்கன் வாங்க ஒரு கியூ, ஃபூட் கோர்ட்டில் ஆர்டருக்கு ஒரு கியூ என்று நின்று கொண்டே இருந்தால் உங்கள் கிரெடிட் கார்டைப் போலே தேய்ந்து போகும் உங்கள் மூட்டு.


பஜ்ஜி-சொஜ்ஜி;
இன்னும் சுவையாக அடுத்த கட்டுரையில்,

உங்கள்
ஜீவ.கரிகாலன்

                      
                       பாகம் 1ஐ சொடுக்க

புதன், 19 செப்டம்பர், 2012

இதற்கு இன்னும் தலைப்பில்லை

எனது பிளாகில் புதிய ஒரு லேபிளைப் போடும் அவசியம் என்ன ? எது என்னைத் தூண்டுகிறது என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. ஆனால் நண்பர் ஒருவரிடம் பெற்ற கட்டுரைகளைக் குறித்த ஆலோசனை, எப்படி டைல்யூட் ஆகாமல் தக்க வைக்கலாம் என்று ஒரு நம்பிக்கையைத் தருகிறது, அதன் விளைவு தான் இந்தப் பகுதி. ஏற்கனவே இதே ஃபார்முலாவில் என் நண்பர்களே எழுதியும் வருவதால், கொஞ்சம் வேறுபடுத்தியும் காட்ட வேண்டும்.

மேலும் இந்த லேபிளில் நான் சேகரித்து வைப்பது என் நுனிப் புல் மேய்தலை சற்று குறைப்பதற்கும், நிறைய வாசிப்பதற்கும், புதியவர்களோடு பழகுவதற்கும் வாய்ப்பு கொடுக்கும் என்கிற எண்ணமும், எல்லாவற்றிற்கும் மேல் ஒரு சில தம்பிகளும், நண்பர்களும் என்னை தொடர்ந்து வாசிக்கிறார்கள் என்று ஒரு நம்பிக்கைய்ும் தான் இதை சாத்தியமாக்கியது.

இந்த லேபிளுக்கு ரெண்டே தீம்.
 1. சுவாரஸ்யமாக இருக்க வேண்டும்
 2. முதலாவது தீம் மட்டுமே மிக முக்கிமானது அல்ல

இப்போது இந்த தொடருக்கு தலைப்பை வைக்கலாமா? (ஏற்கனவே இதே ஃபார்முலா வைத்து பாப்கார்ன் என்று எழுதினேன் -அது ஃப்ளாப்கார்ன்)

*****************************************************************************
பஜ்ஜி -சொஜ்ஜி

என்னடா இது டைட்டில்?

பஜ்ஜி என்றால் என்னவென்றே தெரியாது என்று சொல்ல  நம் ஊரில் யாராவது இருப்பார்களா?, பஜ்ஜி தெரியும்அதென்ன சொஜ்ஜி? எனக்கு தெரிந்து எல்லா வகை பஜ்ஜிகளையும் ருசி பார்த்துள்ளேன். பஜ்ஜிக்கும் எனக்கும் அவ்வள்ாவு நெருங்கிய தொடர்பு இருப்பதால் - இதைத் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்று சொஜ்ஜி என்றால் என்ன என்று எத்தனையோ அம்மையார்களிடம், அக்காக்களிடம்  எல்லாம் கேட்டுவிட்டேன்? ஆன்ால் எனக்கோ ஆரம்பத்தில் சரியான பதில் வரவில்லை - 

முதலில் இதை ஒரு கரண்டி/கிரண்டி போன்ற எதுகை-மோனை சமாச்சாரமோ என்ற பதிலில் ஆரம்பித்து, ஏதோ ஒரு இனிப்பு பலகாரமாத் தான் இருக்கும் என்று தீர்மான்ித்து, முந்திரி கொத்து போலே செய்வதற்கு கடினமாய் இருப்பதால் நம் பாட்டிமார்கள் இதை ரகசியமாக்கி மறைத்திருக்கலாம் என்று சந்தேகித்து, இணையத்தில் அதைத் தேடினால் அது வட இந்திய திண்பண்டம் என்று தகவல் வருகிறது. சில சமையல் குறிப்புகளும் வருகின்றன - இது அப்பம் மாதிரியான எண்ணைப் பண்டமாகவும், போளி போன்ற தோசைக்கல்லில் சுடும் பண்டமாகவும் செய்முறை வருகிறது.
நன்றி:http://geetha-sambasivam.blogspot.in/2012/04/blog-post.html (நல்ல தளம் நிறைய நாவூறும் பொக்கீஷங்கள் இருக்கின்றன)

ஆனால் நம் குடும்பங்களில் வழக்கில் இல்லாத அல்லது அரிதாக இருக்கும் பண்டம் என்பது உண்மை. திருமணம், சடங்கு, நிச்சயம் போன்ற வீட்டில் நடக்கும் வைபவங்களில் பெரியவர்கள் பேச்சை ஆரம்பிக்கும் முன் என்ன பஜ்ஜி-சொஜ்ஜில்லாம் சாப்பிட்டாச்சா என்பது வழக்கம். இதன் மூலம் இந்த பண்டம் சில மக்கள் பேசி, மகிழ்ந்துக் கொண்டாடும் சமயங்களில் முக்கிய அம்சமாக ஒரு தெம்பை/புத்துணர்வைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. பஜ்ஜியுடன் - சொஜ்ஜி இருந்தால் நல்ல விவாதங்களும் தொடரும் என்கிற ஒரு நல்ல மூட நம்பிக்கையுடன் நம் தொடருக்கு பஜ்ஜி- சொஜ்ஜி என்ற தலைப்பை சூட்டுகிறேன். :)

*************************************************************************
இன்று பிள்ளையார் சதுர்த்தி 

ஆம், அக்‌ஷய திரிதியைப் போலவே ஒரு நவீனப் பண்டிகையாக மட்டும் இதைப் பார்க்கிறேன். இந்த கம்ப்யூட்டர் சாம்பிரானியைப் போலவே ஒரு நிறைவு தனை இந்த திருவிழாக்களில் காண முடிவதில்லை. இங்கு நான் பகுத்தறிவு என்று பகடி பேசவில்லை, திருவிழாக்களை நான் மிக முக்கியமான நிகழ்வாய் நம் வாழ்வில் பார்க்கிறேன். நம் நாட்டின் முதுகெழும்பான கிராமங்களில் திருவிழாக்கள் என்பது, அந்த கிராமத்தை உருக்குலையாமல் காக்கும் நிகழ்வாக இருந்து வருகிறது (இப்போது சில இடங்களில் சுத்தமாக இல்லை). ஒரு வருடம் ஒரு கிராமத்தில் எந்தக் கோவிலிலும் திருவிழா நடக்கவில்லை என்றால் அந்த கிராமத்தின் சந்தை நீர்த்துப் போய்விட பல காரணங்கள் இருக்கின்றன.

ஆக, கோவில்கள் மிக முக்கியமான் ஒரு பொருளாதார மையம் என்பதையும்,
இறை நம்பிக்கையுடன் தினமும் வாழ்வது நம் வாழ்வியல் நடைமுறையில்
பொருளீட்டலுக்கும்(தொழில், பணி, கலை, ப்ரோகிதம்) அதை சமூகத்தில் பகிர்ந்தளிக்கவும் (நுகர்வு , தானம்) பயன்படுகிறது என்று சொல்லலாம். இது ஒரு அமைப்பு(system) என்றால் இதனாலா நமக்கு பிரச்சனை?? இல்லை, இந்த அமைப்பைக் கையாளும் விதத்தினால் தான்(system handling). 

மீண்டும் பிள்ளையாரைப் பற்றி ஒரு செய்தி:

கோயில்களிலோ, விசேஷங்களிலோ மட்டுமல்ல நமது பாரம்பரிய விளையாட்டுகளோடும் பிள்ளையார் சம்பந்தப்படுவார்..
1. பிள்ளையார் பந்து (ஆண்கள் எறிபந்து)
2. பிள்ளையார் பிடி (பெண்கள்)
3. மழையாட்டம் (இரு பாலர்)
4. தண்ணிக்குடம்/கும்மி
போன்ற சில விளையாட்டுகளில் நம் மக்கள் களிப்புற்றனர். வேறு எந்த பொழுதுபோக்கு உண்டு அந்த நாட்களில் விளையாட்டு, கலைகளைத் தவிற ?
அவர்களிடம் பிள்ளையார் ஒரு தெய்வமாகவும் அதே சமயம் ஒரு விளையாட்டு பொம்மையாகவும், ஒரு சூப்பர் ஹீரோவாகவும் இருந்து வந்தார்.எல்லாவற்றிட்கும் மேல் சிறு வயதில் சேமிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு தெரியும், அனேகமாக நம் உண்டியல் வடிவத்தில் இருந்து நமக்கு சேமிக்கும் பழக்கத்தையும் funஆக மாற்றியவர் இந்த பிள்ளையார்.

******************************************************************************
கூடங்குளம் பிரச்சினை பற்றி நமக்கு முழுதும் தெரியுமோ தெரியாதோ, ஆனால் ஏதோ ஒரு நிலைப்பாடு மட்டும் நமக்கு இருக்க வேண்டியதை இந்த சமூகம், மீடியா போன்றன தீர்மானிக்கின்றன. இந்த dichotomy-இல் நானும் இருக்கிறேன் என்பதை ஒத்துக் கொள்கிறேன்,ஆனால் இந்த இரு பிரிவினருக்கும் பொதுவாக ஒரு மூன்று வெவ்வேறு உணர்வுகள் இதில் இருக்கின்றன என்று தெரிகிறது.
1. தமிழனாய் கூடங்குளம் வேண்டாம் என்றும்/ வேண்டும் என்றும்
2. இந்தியனாய் கூடங்குளம் வேண்டாம் என்றும்/வேண்டும் என்றும்
3. வெறும் மனிதனாய் உலகின் இன்றைய தேவைக்கு அணுசக்தி மின்சாரம் வேண்டும் என்றும்/ வேண்டாம் என்றும்.

இதில் அறிவியலின் பங்கு வெறும் ஊறுகாய் தான், அறிவியல் தன் வேலையை செய்துக் கொண்டே இருக்கும், அது அணுவுலைகளை விட அதிக ஆபத்தான கண்டுபிடிப்பிற்காக தன் சட்டையை உறித்துக் கொண்டிருக்கும்,
அது ஏலியன்களுடன் நம்மை யுத்தத்திற்கே அழைத்து சொல்லலாம்.
(ஏலியன் பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த ப்ளாக்கை மூடிவிட்டு ஸ்டீபன் ஹாக்கிங் பற்றி வலை வீசவும்).

மற்றபடி அரசங்கத்தின் அடக்குமுறையில் கடும் கண்டனத்தையும், இந்த போராட்டம் மீது சில அவநம்பிக்கைகளும் என்னிடம் உள்ளன என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

******************************************************************************

சுந்தரபாண்டியன் படம் பார்த்தேன் , இன்னும் இந்த க்ரேனில் ஹீரோவை உயரத் தூக்கிக் காட்டும் சோலோ தத்துவ ஹீரோயிச ஷாட்டுகள் எல்லாம் இன்னும் எத்தனைக் காலம் தான் பார்க்கும் அவலம் இருக்குமோ??

”நண்பன் குத்துனாக் கூட செத்தாலும் வெளியே சொல்லக் கூடாது”
எனும் பஞ்ச் டைலாக் வருகிறது, 
குத்துனா தான் செத்துப் போயிடுவியே அப்புறம் எப்படி சொல்லுவ ??

எப்படித் தான் இந்த வசனங்களுக்கு கூட கை தட்டும் ரசனையில் நம்மை இவர்க்ள் வைத்திருக்கிறார்களோ?? இப்போது வரும் சினிமாக்களில் நட்பை அனேகமாக பார்களிலும், பப்களிலும் வைத்து மட்டுமே காட்டுகிறார்கள் என்பது திரைப்படங்களின் மிகத் தாழ்ந்த தரத்தையே காண்பிக்கிறது. 

என் நண்பரின் முகநூல் ஸ்டேடஸ்:-
(சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு)
வாங்குவதாக எண்ணி
விற்றுக்கொண்டிருக்கிறோம்
அன்னியனிடம்.


இந்த முதல் பகுதியில் சொஜ்ஜியைப் பற்றி சொன்னேன், பஜ்ஜியைப் பற்றி சுவையாக அடுத்த பாகத்தில் பார்க்கலாம்

இன்னும் சுவையாக, சூடாக
மீண்டும் சந்திப்போம்
ஜீவ.கரிகாலன்
9042461472


ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

How to be a sanyasi?

‎* Devotee: 
   Maha Guruji!! How to be set free from the worldly things.!! Where is eternal freedom??
*Guruji: 
  Here is!! You have to be a Saint to enjoy the eternal freedom!!
*Devotee:
  Swamiji! Even I can be, can't I? But How?
*Guruji: 
  It's Simple first you have to secure minimum percentage in our devotional training camp, Once you cleared the    exam you have to apply for the assessment.In assessment, you'll be assessed your eligibility in front of any of our senior sanyasi bench for that you have to get the sponsorship from any of our lifetime member who gave lumpsum payment to our trust which would be treated as collateral security. After the assessment, you'll be given Sanyas training in our head branch where you have to obey our fifteen conditions in order. At the end of the successful training. You'll get the clearance of fitness and mental stability. Finally, you need to get the NOC from your Family and our Legal advisory body will arrange the documents as per your family and economical background. When the Legal authorities give you permission you'll be under this Mahaguruji's beloved Sanyaasi's and It will let free from the all Mayas.
*Devotee: OHhhh maha Guruji!!
  Thank you for the enlightment.. Goodbye forever :(

புதன், 12 செப்டம்பர், 2012

கூடங்குளம் மட்டுமா வேண்டாம் நமக்கு





1.உலகிலேயே அதிகமாக மாசு படுத்தும் தொழிற்சாலைகளில் ஒன்றான NTPC ஆறாவது இடத்தில் இருக்கிறது. கூடங்குளத்தை வேண்டாம் என்று சொல்வதற்கான அத்தனை நியாங்களும் நம் மாநிலத்தில் உள்ள தெர்மல் பிளாண்டுகளை வேண்டாம் என்று சொல்வதற்கு உள்ளன. 2. அதனால் ஏற்படும் மின்சார இழப்பை சரிகட்ட SEZ, MNC தொழிற்சாலைகளை மூட வேண்டும்.3.மேலும் கடலோரம் இருக்கும் ஸ்டெர்லைட், கடலூரில் இருக்கும் கெமிக்கல் தொழிற்சாலை என அனைத்தையும் மூட வேண்டும்..


ஆக மொத்தம் தொழிற் கொள்கைகள் முற்றிலுமாக நம் நாட்டில் மாற வேண்டும். என்னைப் பொருத்த வரை இந்த எல்லா setbackகளும் அவசியம். கண்டிப்பாக உலகமயமாக்களுக்கு எதிரான சரியான அடியாக இருக்கும் இது வரவேற்கத்தக்கது.


மற்றபடி அறவழியில் போராடுவது என்று வரலாற்றுக்கு அறிமுகப் படுத்திய நம் முகத்தில், இன்று நாமே கரியைத் தான் பூசிக் கொள்கிறோம் என்று உணர்கிறேன். நூறு வருடங்களுக்கு பிந்தைய உலகு நமக்கு போதுமென்றால் இது போன்ற ஆலைகளை முற்றிலுமாக மூடிவிடலாம்


என் பழைய பதிவு இதே தலைப்பில் :





கூடங்குளம் மட்டுமா வேண்டாம் நமக்கு ??


மன்னித்துக் கொள்ளுங்கள் ..... இப்பொழுது நான் வசை பாடுவது என்னையும் சேர்த்துத் தான் அடிப்படையில் எந்த ஒரு பெரும் தொழிற்சாலையும் மனித இனத்திற்கு விரோதமானது என்பதை முன் வைத்து தான் எழுதுகிறேன், ஜடுகோடா மாவட்டத்தில் ஏற்பட்டு வரும் அணுக்கழிவினால் பாதிக்கப் பட்டு வரும் நம் மக்களை பற்றி நான் கிட்ட தட்ட ஐந்து வருடங்களாகவே பேசி வருவதை என்னோடு தனிப்பட்ட முறையில் பழகியவருக்கு நன்கு தெரியும்.



இங்கு கூடங்குளம் பிரச்சனையை அணுகும் முறை குறித்து நான் உங்களிடம் முக்கியமான விவாதம் எடுத்து வைக்கிறேன் ...


கூடங்குளம் அணுவுலை , இன்று நம்முள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் உளவியல் ரீதியாக வீரியம் கொண்டதாய் தோன்றும் அதே வேளையில் இதுவும் ஒரு விளம்பர மாயைக்குள் சிக்கியத் தந்திரமாய் பாவிக்க நமக்கு இடம் தருகிறது என்பதைத் தான் இந்த கட்டுரை வழியாக சொல்ல விளைகிறேன்.......



இரண்டுப் பெரிய அறிவார்ந்தோர் கூட்டம் கூடங்குளம் வேண்டாம் என்றும், வேண்டும் என்றும் வாதம் செய்து வருகின்றனர். பொதுமக்களோ இந்த அணியில் ஏதோ ஒன்றில் பலவந்தமாகவாவது தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியே வருகின்றனர்..உளவியல் ரீதியாக இதை எடுத்துக் கொள்ளும் பொழுது, இந்த பிரச்னையில் நாம் அணுகும் முறை மீது மிக முக்கியமான கேள்விகளை சிலவற்றைக் கேட்க வேண்டும் என்றுத் தோன்றுகிறது. இன்று இந்த பிரச்னை சுற்றுச் சூழல், மற்றும் தனி மனிதனின் பாதுகாப்பு என்ற நிலைப்பாட்டில் எடுத்துக் கொள்ளப் படும் போது கீழே வரும் செய்தியுடன் ஒப்பிடுதல் அவசியமாகிறது.



தினமலர் பிப்ரவரி 22 ஆம் தேதி காரைக்கால் கடல் பகுதியில் கூட்டம் கூட்டமாய் செத்து ஒதுங்கிய மீன்கள் பற்றிய செய்தி ஒன்று தான். அநேகமாக, இந்த செய்தி மற்ற செய்தித்தாள்களிலோ, மற்ற ஊடகங்களிலோ வராமல் போயிருக்கலாம், இந்த செய்தி அதே நாளிதழில் கூட மறுபடியும் வராமல் போயிருக்கலாம்.



sensational பகுதிக்கு வராமல் போனதற்கு என்ன காரணம் என்று புலனாய்வு செய்யத் தேவையில்லை, அதே சமயம் பன்னாட்டு குளிர்பானக் கம்பெனியில் அடிக்கடி வரும் ரெய்டுகள் போல இது மூடி மறைக்கப்படும் அளவிற்கு மக்களுக்கு இன்றியமையாத பானங்களாக இல்லாதபடியால் கவனிப்பாரற்றுப் போய்விட்டது என்று சொன்னால் வெட்கக் கேடு.


* ஆம், மீன் பூமியில் தோன்றிய மனிதனின் முதல் உணவு என்றும், பூமியின் கடைசி மனிதனின் உணவும் இதே மீன் தான் என்றும் சொல்லக் கேட்டுள்ளோம்.
*இன்றைய உலகில் பாமர மக்களுக்கு கிடைக்கவேன்டியப் புரதச் சத்துக்கள் அதிக அளவில், குறைந்த விலையில் மீன்களாலே சாத்தியம்.
*சில கலாச்சாரங்களில் மீன் சைவப் பொருளாகவும், உயர்ந்த உணவாகவும் போற்றப்பட்டு வருகிறது.
*எந்த ஒரு நாட்டிலும் விவசாயம் இன்றி ஏற்படும் பஞ்சம் கூட மீன்களால் மீட்கப் படலாம். ஒரு நாட்டின் மிகப் பெரிய சொத்தே, அந்நாட்டின் கடலில் வாழும் உயிரினங்களும், அதன் பாறைப் படிமங்களும் தான்


இன்று அந்த இடத்தில் தான் நாம் பெரிய அளவில் பிரச்சனையை சந்தித்து வருகிறோம், ஆயிரக்கணக்கில் மீன்கள் செத்துக் கரை ஒதுங்கக் காரணம் என்ன என்று சில கடல் நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்ட பொழுது சொல்லும் தகவல் தான் நெஞ்சை உறைய வைக்கிறது.
நம் கடல் பகுதியில் பெரிய அளவில் மீன்கள் வாழும் நிலையை இழந்துக் கொண்டிருக்கின்றன என்ற செய்தி தான் அது.குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதியில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன என்றும், இந்த முறை காரைக்காலில் ஒதுங்கிய மீன்களில் ஹெவி மெட்டல் என்று சொல்லப் படும் உலோகமான காட்மியம் (cadmium) அளவு அதிகரித்துள்ளதை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.அதுவும் அதிகப்பட்சம் புள்ளி அரை சதவீதம் வரை தான் இருக்கலாம் என்றும், இதில் இரண்டு சதவீதம் வரை இருப்பதாகவும் கூட சொல்கின்றனர், (ஒவ்வொரு வகை மீன்களுக்கும் ஒவ்வொரு அளவீட்டில் இதன் வரையறை இருக்கும்).



இப்படிப்பட்ட உலோகங்கள் மீனின் வாயிலாக நமக்கு உணவாகச் செல்லும் பொழுது அது நடத்தும் விளைவுகளோ மிகப் பயங்கரம். புகை பிடிப்பது , மது அருந்துவது போன்ற எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத மனிதன் கூட இத்தகைய மீன்கள் சாப்பிடுவதன் மூலம் கான்சர் போன்ற நோய்களுக்கு எளிதில் ஆளாகிறான். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் நாம் எப்படிப் பட்ட வலிமையான பாரதத்தை கட்டுமானம் செய்து வருகிறோம் என்று, ஏற்கனவே அரிசியிலிருந்து, தண்ணீர் வரை அவ்வளவும் வணிக ரீதியிலும், கலப்படத்துடனும், ரசாயன தாக்கத்துடனும் நம்மை கெடுத்துக் கொண்டிருக்கின்றன.



காரைக்காலைப் பொறுத்த வரை, பல ரசாயனத் தொழிற்சாலைகள் அமைந்திருப்பதை நாம் அறிவோம். இப்படி ரசாயனத் தொழிற்சாலைகள், சிமென்ட் தொழிற்சாலை ஆகியவற்றுடன் ஒவ்வொரு தனி மனிதனின் மாறிவிட்ட கலாச்சாரமும் இந்த சீர்கேடுகளுக்கு காரணம் எனலாம். நமது நுகர்வுத் தன்மை மாறிவிட்டது, பிளாஸ்டிக் என்றும் அரக்கனை நாம் எல்லோரும் உபசரிக்க ஆரம்பித்துவிட்டோம் , தேவைக்கு அதிகமான, ஆடம்பரமான நுகர்வு போதை நம்மை இந்த சீர்கேட்டினை உருவாக்கும் காரணிகளாய் அமைந்துவிட்டதை நாம் ஒத்துக் கொள்ளும் மனப் பக்குவம்
வந்து விட்டதா?? இல்லையா ??



இந்தப் பிரச்னை வெறும் காரைக்கால் பகுதி கடல் சார்ந்தது என்று நீங்கள் எடுத்துக் கொண்டால், கூடங்குளம் பற்றிப் பேச உங்களுக்குத் தகுதி இல்லை. ஏன் கூடங்குளம் கூட ஒரு பிராந்திய பிரச்னையாக மட்டுமே பல சந்தர்ப்பவாதிகளால் கையாளப் படுவதை மறுக்க முடியுமா ? ஜார்கண்ட் -ஜடுகோடா அணுக்கதிர்வீச்சு பற்றி ஊடங்கங்களில் செய்தி வரும் பொழுது, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தப் பெரும்பான்மைச் சமூகம் என்ன செய்துக் கொண்டிருந்தது?


காரைக்காலிலோ, தூத்துக்குடியிலோ இது போன்ற தனியார் நிறுவனகளுக்கு எதிராக உங்களால் போராட்டம் செய்ய இயலுமா? செய்தித்துறை ஊடகங்கள் கூட கண்டு கொள்ளாத இந்த நிகழ்ச்சிகளில் உங்கள் நேரங்களை அறிவார்ந்தோர் கூட்டங்களிலும், வதனபுத்தக போராட்டங்களிலும் (Facebook Campaigns) செலவிடுவீர்களா?
அணுவுலை கதிர்வீச்சு மற்றும் அதன் கழிவுகளைக் காட்டிலும் இது ஆபத்தானது என்பதை உணர்ந்து, உங்கள் நுகர்வுக் கலாச்சாரத்தை மாற்றுவீர்களா?


காரைக்கால் பிரச்சினை அவர்கள் மாநிலத்திற்குத் தான் என்றும், தூத்துக்குடிக்கு இது போன்ற பிரச்சினை வரும் வரை பொறுத்திருப்போம் என்று சொன்னால் , அது , கடையில் விலை கேட்டு விலை அதிகம் என்பதால் அடுத்தமுறை வாங்கலாம் என்று நினைத்த CFL பல்புகளைப் போல் அல்லவா இருக்கும் ?


"அணுசக்திக்கு" பதிலாக "மாற்று சக்தி " என்று விலை அதிகமான சோலார் முறையையோ, இல்லை உலக சுகாதார நிறுவனத்தால் உலகை மாசுபடுத்தும் நிறுவனம் என்று விருது அளித்த NTPC (மாசுபடுத்துதலில் உலக அளவில் 6ஆம் இடம்) போன்ற வகைகளை ஆதரிப்பது போல், நீங்கள் மீன்கள் வாங்குவதை தவிர்த்து புரதச் சத்திற்காக பன்னாட்டு மார்கெடிங் நிறுவனம் ஒன்று விற்கும் ப்ரோட்டீன் பவுடரை நீங்கள் அந்த ஏழைகளுக்கு வாங்கிக் கொடுப்பீர்களா ??
இல்லை இதில் உங்களது கண்டனங்களை ஊடகங்களுக்குத் தெரிவித்து, கவிதைகள் பாடி இந்தியாவைத் துண்டாடும் ஆருடம் பேசுவீர்களா ??


இதோ தன்மானத் தமிழினத் தலைவர் கலைஞர் ஆதரித்ததால் நீங்களும் கூடங்குளத்தை ஆதரித்துவிட்டு உங்கள் வேலையைப் பார்க்க சென்று விடுவீர்களா ? இல்லை அதை உடனடியாக திறப்பதற்கு அவரையே உண்ணாவிரதம் இருக்க நீங்கள் வேண்டுவீர்களா?



இதில் மிக முக்கியமாய் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால், காரைக்கால் பகுதியில் கடலை ஒட்டிய கிராமங்களில் வாழும் பெரும்பான்மையோர் தங்கள் வீட்டில் வாரத்தில் ஆறு நாட்கள் கட்டாயம் தங்கள் உணவில் மீனைச் சேர்த்து வருகின்றனர். இதற்கு வெறும் மத்திய அரசையும், மாநில அரசையும், தனியார் முதலைகளையும் மட்டும் குறை கூறாதீர்கள், சற்றே கண்ணாடியைப் பாருங்கள் ஒரு முக்கியப் புள்ளியும் அகப்படுவான் ..


சில சுட்டிகள்: அவசியம் பார்க்க வேண்டியது
பாஸ்!அணு ஆற்றல் ரொம்ப அவசியம்



கூடங்குளம் – கிட்டப்பார்வையும் /எட்டபார்வையும்..