வெள்ளி, 25 மார்ச், 2016

அது - 7

அவள் அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டாள் என்கிற உணர்வும், அவள் என்னிடம் ஏதோ மறைக்கப் பார்க்கிறாள் என்கிற உணர்வும் ஒரே நொடியில் கிளர்த்தது. புன்னகைத்தபடி அந்தக் கடிதத்தைக் கையில் கொடுக்கும் போது, அதை அவள் இப்போது படிக்கவில்லை என்றும், தேவைப்படும் பொழுது சொல்கிறேன் என்றும் அவளைப் பொய் சொல்ல வைத்தது. ’அது’ அவளையும் மாற்றியிருக்கிறது. ஆனாலும் அவள் சொல்வதால் அவற்றை ஏற்றுக் கொண்டேன்.

குணப்படுத்த முடியா புற்றுநோய் உலகில் உருவான  கதை பற்றி சாகக்கிடந்த காதல்காரன் ஒருவன் சொன்ன கதையொன்று ஞாபகம் வந்தது.
***
எல்லா உயிர்களுக்குமாக படைக்கப்பட்ட இவ்வுலகு டைனசர்களால் ஆளப்பட்ட போது, சர்வ வல்லமை பொருந்திய சாத்தான் மற்றும் தேவதைகள் ஆகிய இருவரின் தேவையையும் போக்கியது. மற்ற உயிர்கள் டைனசர்களின் ஆட்சியில் நிம்மதியாக தங்கள் வாழ்க்கையை நடத்தின. படைப்பின் அம்சப்படி டைனர்களின் ஆட்சி வியப்பில்லாத ஒன்று தான். ஆனால், கடவுளையோ அல்லது சாத்தானையோ உயிர்கள் மறந்து போனது அதிர்ச்சியான ஒன்று. டைனசர்களை அழிக்கவேண்டிய நிர்பந்தம் சாத்தானுக்கும், கடவுளுக்கும் இருந்ததால். கூட்டு நடவடிக்கையில் அவ்வினத்தை அழித்துவிடலாம் என்று கடவுளுக்கும் சாத்தானுக்கும் ஏகமனதுடன் உடன்படிக்கை ஏற்பட்டது. 

பின்னர் பூமியின் ஈகோ சிஸ்டம் அழிந்துகொண்டிருந்ததால் நாங்கள் அதை அழித்தோம் என்று மேலதிகாரிகளிடம் பொய் சொல்லிக் கொள்ளலாம் என்றும் முன்தீர்மானம் செய்தாயிற்று. அதுவும் முதல் தகவல் அறிக்கையிலேயே இப்படித் தான் எழுத வேண்டும் என்று ஆட்களைத் தயார் செய்துவிட்டு தான். அவர்கள் என்கவுண்டர் ஆப்ரேஷனைத் தொடங்கினார்கள்.

டைனசர்கள் அழித்தொழிக்கப்பட்டன. ஆட்சி பீடம் வெற்றுக்கட்டிலானது. ஆனால், டைனசர்களால் ஆளப்பட்ட உலகத்தில் மற்ற உயிர்கள் மறந்து போன சாத்தானும் கடவுளும், அவ்வுயிர்களுக்கு முன்னே தோன்றினாலும் உலவினாலும் அவர்களும் இவ்வுலகத்தின் மற்றொரு ஜீவனைப் போலவே எடுத்துக் கொள்ளப்பட்டது. மிகுந்தக் கவலைக்குள்ளான அவ்விருவர்களும், டைனசர்களுக்கு பதிலாக இவ்வுலகை ஆளப் போகும் புதிய இனத்தை தோற்றுவிக்க வேண்டும் எனும் முடிவுக்கு வந்தனர்.

சாத்தானும், கடவுளும் கலந்த ஒரு உருவ அமைப்புடன் மனிதன் உருவானான். அதன் வாயிலாக கடவுள் மற்றும் சாத்தான் அவர்களின் திட்டம் வெற்றியானது.

1.   அவன் உலகை ஆளும் பொழுது உலகத்தின் ஈகோ சிஸ்டம் பாதிக்கப்படும்.
2.   மற்ற ஜீவராசிகளுக்கும் மனிதனே தலைவன் ஆவான்.

3.   மனிதன் வாழும் வரை மற்ற ஜீவராசிகள் தங்களைக் காப்பாற்ற ரட்சகர் வருவார் என்று நம்பிக் கொண்டிருக்கும், மனிதனும் நம்புவான்
ஆனால் இதில் ஒரு குழப்பமும் இருந்த, இந்த படைப்பிலும் அதே மானுஃபாக்ச்சரிங் டீஃபால்ட் வந்துவிட்டால் என்ன செய்வது என்கிற சந்தேகம் சாத்தானுக்கு வந்தது. சாத்தான் தான் சந்தேகத்தின் மூலக்கூறு ஆகிறான். ஆனால், அந்த சிருஷ்டியே  சந்தேகத்தின் தர்கத்தில்  தான் உருவாகிறது (அஃப்கோர்ஸ் வித் எக்ஸ்பைரி டேட்).

மனிதன் தங்களில் யாரோ ஒருவரையாவது குறைந்தபட்சம் மறக்காமல் இருக்க வேண்டும் என்றால் அவன் வாழ்நாளில் ஏதாவது ஒரு ஆபத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

”ஆம், மனிதன் தன்னை நினைத்துக் கொண்டே இருக்கும்படி நான் அவனுக்கு ஒன்றை தரப்போகிறேன் அவன் சாகும்வரை அதனால் என்னை நினைத்துக் கொண்டிருப்பான்” என்றது கடவுள்.

சாத்தான் அப்படியேதும் ஒன்றை அறிந்துவிடவில்லை. கடவுள் அளவிற்கு சாத்தானுக்கு புத்தி போறாது. கடவுள் வீட்டிற்கு எத்தனை முறை போய் வந்தாலும் கடவுளின் புத்திசாலித்தனத்தில் கொஞ்சம் கூட சாத்தானுக்கு வரவில்லை. சாத்தான் ஆர்வமுடன் கடவுளிடம் கேட்டான்.

“அப்படியா என்ன விஷயம் அவனை அப்படி பயமுறுத்தச் செய்து வாட்டி வதைக்கும்?”

“அதற்கு மனிதர்கள் கேன்சர் என்று பெயர் வைப்பார்கள்”

கடவுள், அதை சொல்லி முடித்ததும்வெடித்துச் சிரித்ததில், ஏராளமான மின்னல்களும் இடிகளும் பூமியில் தோன்றி மறைந்தன. அந்த வெளிச்சத்தில் கடவுளும், சாத்தானும் கூட்டுக்களவானிகள் என்று உலகமே அறிந்து கொண்டது. தப்பித்த ஒரேயொரு குட்டிடைனசரும், ”சனியனுங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்துட்டாய்ங்க” என்று சொல்லிக் கொண்டே அவர்களைச் சபித்தபடி மலையில் இருந்துக் குதித்துத் தற்கொலை செய்து கொண்டது.

சாத்தானும் இப்போது புன்னைகையோடுஇ ருக்க, புத்திசாலி கடவுளுக்குப் புரிந்து போனது.

“என்ன நீயும் அப்படி ஒரு விஷயத்தை மனிதனுக்குத் தரப்போகிறாயா?, அப்படி என்ன ஒரு அம்சம் கேன்சருக்கு இணையாக மனிதனை வாட்டி வதைக்கப் போகிறது?!!”

“அதற்கு அவர்கள் காதல் என்று பெயர் வைப்பார்கள், கேன்சரெல்லாம் இரண்டாமிடம் தான்”.

ஆனால் சாத்தானுக்கு பெருமிதம் மட்டுமே இருந்தது. கடவுளைப் பரிகசிக்கவில்லை.

”எப்படி இந்த யோசனை எனக்கு வாராமல் போய்விட்டதே!!” 

என்று கடவுள் தன்னைத் தானே திட்டிக் கொண்டது.சாத்தான் கடவுளின் வீட்டிற்கு வந்து செல்வதை நினைத்துப் பார்த்தது.

”காதல் . நிம்மதி ..  ஆவ்சம்”
***
நினைவில் புரண்டோடிய பழைய கதையுடன், வீடு வந்து சேர்ந்தேன். “அது” கால் மேல் கால் போட்டுக் கொண்டு, விசில் அடித்துக் கொண்டிருந்தது. அவள் முகத்தில் அப்பியிருந்த அதே போல் புன்னகை.
வலப்புற வயிற்றில் சிறிது நாட்களாக, வலி இருந்து கொண்டிருந்தது.  இப்போது அங்கே லேசான வலி கொஞ்சம் மிதமாக முன்னேறியது. தடவிப்பார்த்துக் கொண்டேன், அந்த இடத்தில் ஒரு கட்டி தென்பட்டது.

அது
அது என் காதலு
அது என் கடவுளு
அது என் சாத்தானு
அது என் கேன்சரு...

கேவலமான கானா பாடல் ஒன்று, ஆனால் அந்த உண்மை கசந்தும் இருந்தது. ஆடவேண்டும் போல இருந்தது.

சனி, 19 மார்ச், 2016

அறம் வெல்லும் அஞ்சற்க

http://www.piraththiyaal.com/2016/03/blog-post_17.html

சர்ச்சைக்குரிய சாகாள் எனும் அகரமுதல்வனின் கதைக்குரிய இணைப்பு மேலே

இந்த செலக்டிவ் அம்னிஷியா கோதா ஒருபுறம் இருக்கட்டும்.. 

  • கவே மற்ற விஷயங்களையெல்லாம் விட்டுவிட்டு அகரமுதல்வன் எழுதியதாலேயே எதிர்ப்பவர்கள் மற்றொரு புறம் இருக்கட்டும்
  • இது தான்டா வாய்ப்பு என்று தாவிக் குதிச்சு ஒடி வந்திருக்கும் சிவப்பு, கறுப்பு, பச்சை, நீல சில்வண்டுகளின் ‘ஙொய்’சப்தங்களையும் விட்டுவிடலாம். 
  • பழிவாங்குதற்காக கவிதைகளை முன்வைத்து ஏற்கனவே சீண்டிவிட்டு வாங்கிக்கட்டிக்கொண்ட பருத்திவீரர்களையும் தவிர்த்து விடுவோம்.

புலம்பெயர்ந்து வாழும் அநீதியிழைக்கப்பட்ட வாழ்வில், ஏதோ அறியப்பட்ட அந்த இளைஞனை கண்டணம் என்று சப்பைக்கட்டு சொன்னாலும், தனிமைப்படுத்திய நண்பர்களை நினைத்து வருந்திதான் இப்பதிவினை இடுகிறேன்.

 தவிர இவர்களில் பெரும்பாலானோர் தம்மை இலக்கியப் பிரதிநிதிகளாக அறிவித்துக் கொண்டவர்கள். அகரமுதல்வனின் சிறுகதையை  விமர்சிப்பதற்கான விஷயமாக எடுத்துக் கொண்ட இடம் தான் உண்மையில் கண்டனத்திற்குரியது.

  1.          . ஒரு பெண் புலியாக இருந்தவரைப் பற்றிய உண்மைத் தகவல்களை வெளியிடுதல் அல்லது உண்மையாக இருந்ததென நம்பப்படும் தகவலை வெளியிடுதல்.
  2.    சித்ரவதை முகாம்களில் பெண்களுக்கு நேர்ந்த பாலியல் சித்ரவதைகளை இவர் சொல்லியிருக்கும் விதம்
  3.         ஆச்சரியமான விஷயமாக – இராணுவம் மீது அகரமுதல்வன் வைத்திருக்கும் அபாண்டக் குற்றச்சாட்டு
இப்படியான வகையில் ஏதோ ஒன்றை முன்வைத்து தான் அகரமுதல்வனுக்கு கண்டனங்கள் எழுகின்றன. மிகத் தந்திரமான முறையில் அகரமுதல்வனின் நண்பர்களும் கண்டனம் தெரிவிக்குமளவு ஒரு நெருக்கடியும் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று உணர முடிகிறது.
*
இப்போது கேள்வியை மிகவும் பொதுப்படையாக வாசிப்பு, எழுத்து என இயங்கும் எல்லோர் முன்னும் வைக்கிறேன்: அகரமுதல்வன் எழுதியக் கதையில் வரும் பாத்திரம் உண்மையாக வாழ்ந்த ஒருவரின் சாயலுடையதாக இருப்பதால் ஆசிரியரின் கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் கண்டனங்களை எழுப்புகின்றனர். இதற்கு உரிமையில்லை என்று இவர்கள் முன்வைக்கும் காரணங்களை மதிப்பீடு செய்வதற்கு முன் கருத்துச் சுதந்திரம் தடைபடுவது நெருடலாய் இருக்கிறதா? இல்லையா!!
                        *
இலக்கியத்தில், தன் படைப்புகள் மூலம் போரின் வலிகளைப் பேசும் சயந்தன் இராணுவத்தினரின் மீது கோபத்தைக் கிளறும் என வலிந்து நினைத்து எழுதப்பட்ட அக்கதை, எழுதியவர் மீதே மிகச் சினத்தையும், கோபத்தையும் உருவாக்கிவிட்டிருந்தது. அக்கதையில் வரும் சிவகாமிஎவராயும் இருக்கட்டும், ஆனால் பெண் போராளிகள் எனில் அவர்கள் நிச்சயமாகப் பாலியல் வன்புணர்விற்கு ட்பட்டேயிருப்பார்கள் என உறுதியாக நம்புகின்றஎழுதியவரின் குரூரமனநிலையை அதிர்ச்சியோடே எதிர்கொண்டேன்” இப்படிச் சொல்கிறார்.

(கருத்துச் சுதந்திரம் பற்றிய கேள்வியை இங்கே எழுப்ப வேண்டிய அவசியமில்லாதிருந்தாலும்)

1.   இராணுவத்தினரின் மீது கோபத்தைக் கிளறும் என வலிந்து நினைத்து
ஆஹா, போரினால் பாதிக்கப்பட்டவனும், சித்தரவதையை அனுபவித்தவனும், உறவுகளையும், ஊரையும் இழந்தவனும் செய்யக் கூடாத மாபாவம் அதற்கு காரணமாயிருந்த இராணுவத்தின் மீது இவ்வாறு கோபத்தைக் கிளறுவது. அல்ல?
2.   ஆனால் பெண் போராளிகள் எனில் அவர்கள் நிச்சயமாகப் பாலியல் வன்புணர்விற்கு ட்பட்டேயிருப்பார்கள் என உறுதியாக நம்புகின்ற” … -
என்னே தவறு, உலக வரலாற்றில் எந்த போருக்குப் பின்னும், வெற்றி கொண்ட இராணுவப் படை எவ்வாறு எதிரிநாட்டு குடிமக்களை கண்ணியமாக நடத்தியதோ அவ்வாறு தான் இலங்கை இராணுவமும் நடத்தியது என்று அகரமுதல்வன் சொல்லவேண்டுமென்று விரும்புகிறார். அல்ல?

இதில் பெருமையிலும் பெருமை… கருணாகரனின் அக்கறையுள்ள பதிவு தான்.
//சாகாள்என்ற கதையை அகரமுதல்வன் எழுதியதற்கான காரணம் என்ன? அவருடைய அரசியல் தெரிவே. அதுவே அவரை இப்படி எழுத வைத்துள்ளது. இப்படிச் சிந்திக்க வைத்துள்ளது. பெண்ணுடலை எப்படிப் படையினர் பார்ப்பார்கள், பயன்படுத்துவார்கள் என்ற அனுமானத்தை அவர் தன்னுடைய கற்பனையினால் வளர்த்தெடுத்திருக்கிறார். இந்த இடத்தில் அகரமுதல்வன் சித்தரிக்கின்ற படையினர் செய்கின்ற வேலையை விடக் கேவலான முறையில் செயற்பட்டிருக்கிறார். //

பெண்ணுடலை எப்படிப் படையினர் பார்ப்பார்கள், பயன்படுத்துவார்கள் என்ற அனுமானத்தை அவர் தன்னுடைய கற்பனையினால் வளர்த்தெடுத்திருக்கிறார்.

ஆக, அகரமுதல்வனின் அரசியல் தேர்வு தான் இராணுவத்தினர்களின் செயல்பாட்டைத் திரித்து கொச்சைப்படுத்தியதாக கருணாகரன் முன்வைக்கிறார். ஆக கருணாகரனின் அரசியல் தெரிவு எது என்று விளங்கிக் கொள்ள முடிகிறது

·         இதில் விபச்சார எழுத்து என்று ஒரு குரல்,

·         ஏற்கனவே கவிதை குறித்த உரையாடலில், வாய்க்கால் தகராறு ஒன்றை உருவாக்கிய விமர்சகர்/கவிஞர் தன் எச்சரிக்கையைப் பதிவு செய்கிறார்.

·       (தமிழ்நதியின் கண்டனப் பதிவில் கருத்தாக வந்த )  //  புலி எதிர்ப்பாளர்கள் நம்மை அவமானப்படுத்தியதைவிட இக்கதை நம் பெண்களை மிக குரூர வக்கிர மனநிலையில் அவமதிக்கிறது. அகர முதல்வனுக்கு என் வன்மையான கண்டனங்கள். அவர் இதற்கு மன்னிப்பு கேட்பது நல்லது.//  ஆமாம் இது அகரமுதல்வன் தன் கற்பனைத்திறனைக் கொண்டோ அல்லது உலகத் திரைப்படங்களைப் பார்த்தோ இப்படி சித்தரித்திருக்கிறான் அதனால் தானே அவனிடம் மன்னிப்பைக் கோருகிறோம். இதுவே, உண்மையென்றால் பெண்களை அவமதித்த இலங்கை இராணுவத்தை அல்லவா மன்னிப்புக் கேட்கச் சொல்லி பதிவு போட்டிருப்போம்.. ஆனால் தவறு இழைத்தது அகரமுதல்வனாயிற்றே!! என்று முழுமையாகச் சொல்லியிருக்கலாம் பதிப்பகத்தார்

(ஆனாலும் இவ்விடத்தில் ஆணாதிக்க சமூகம் தன் பங்குக்கு ஏதாவது சொல்லாதா? ஈழத்தின் போர்ச்சூழலிலிருந்து அகரனைப் போல் புலம்பெயர்ந்த எத்தனையோ ஆண்களின் குறிகளில் இரத்தம் கசிந்த செய்தியகளுக்காக ஆண் சமூகமே பொங்குங்கள்!!  ஏன், அகரனே நாளை ஆண் குறிகளில் சிங்கள இராணுவத்தினர்கள் செய்திராத சித்ரவதையைப் பற்றி ஒரு புனைவு எழுதக்கூடும். ஆண்களின் சார்பாகவும் கண்டனம் தெரிவியுங்கள் அதை அட்வான்ஸ் புக்கிங்காக வைத்துக் கொள்ளலாம்.)

·         இதில் மற்றொரு காழ்ப்புணர்வில் சிறந்த விமர்சனம் :  லிவின் எழுதியது (நேரடித் தாக்குதல்)
அகரமுதல்வனைத் தமிழகத்தின் எழுத்தாளர்கள் கண்டிக்காதது ஏனென்றால், அகரமுதல்வன் ஒரு கடைச்சரக்காகத் தென்படுகிறான் என்பது தான். //சயந்தனோ, சோபாசக்தியோ அவ்வாறுத் தெரிவதில்லை பதிப்பகத்தார் கண்களில் என்று சொல்கின்றாரா
//அவன் எழுதும் குப்பையையும் இங்கு பதிப்பிக்க தயாராக இருக்கிறார்கள்..// அறம் வெல்லும் அஞ்சற்க எனும் கவிதைத் தொகுப்பை வாசித்தவர் தானே நீங்கள் // உன் இரண்டாம் கவிதை தொகுப்பில் இருந்து அறம் வெல்லும் அஞ்சற்ககவிதை மொழியின் பாய்ச்சல் நான் சற்றும் எதிர்பாராத ஒன்று. உனக்கு நவீன கவிதை கைகூடுகிறது. உன்னுடைய முயற்சியும் அன்று விமர்சனங்களை நீ காது கொடுத்து கேட்டதுமே உன்னை இந்த இடத்திற்கு நகர்த்தியிருக்கிறது. // என்ன செய்ய இரண்டு நாக்கு இருப்பவர்கள் அடிக்கடி வாய் திறக்கக் கூடாது தான்.

//அவன் எழுதும் குப்பையையும் இங்கு பதிப்பிக்க தயாராக இருக்கிறார்கள்.. அவனுக்கும் நேர்மையான அரசியலைவிட அதை விற்கும் கடைச்சரக்காகவே அணுகுகிறான்..// புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் என்று வந்தாலே பதிப்பிக்கத் தயாராகத்தான் இருப்பார்கள் என்ற கூற்றில் உண்மை இருக்கிறது , நானும் ஒத்துக்கொள்வேன். மற்றபடி புலிகள் மீது விமர்சனம் செய்தால் தான் இன்றைய சந்தை நிலவரப்படி நீங்கள் விற்கும் பண்டம் ஆவீர்கள் தெரியுமா.. 

அகரமுதல்வன் போல் இருந்தால் போனியாகாது//அவன் எழுதும் குப்பையையும் இங்கு பதிப்பிக்க தயாராக இருக்கிறார்கள்.. அவனுக்கும் நேர்மையான அரசியலைவிட அதை விற்கும் கடைச்சரக்காகவே அணுகுகிறான்..// புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் என்று வந்தாலே பதிப்பிக்கத் தயாராகத்தான் இருப்பார்கள் என்ற கூற்றில் உண்மை இருக்கிறது , நானும் ஒத்துக்கொள்வேன். மற்றபடி புலிகள் மீது விமர்சனம் செய்தால் தான் இன்றைய சந்தை நிலவரப்படி நீங்கள் விற்கும் பண்டம் ஆவீர்கள் தெரியுமா.. அகரமுதல்வன் போல் இருந்தால் போனியாகாது

*


சமீபத்தில் யாழிடி எனும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த நதியா எனும் பெண் ஐரோப்பிய யூனியனில் ஐ.எஸ்.ஐ.எஸ்-கு எதிரான தன் உரையைப் பேசும் போது, பெண்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு பற்றி பேசினார். ஒரு பெண்ணாக இருந்தும் சக பெண்களின் வாழ்வை அவமதித்த நதியாவுக்கு ஒரு கண்டனம் என்று போடவேண்டியிருக்கிறது போராளிகளே. அதற்கும் முன்னர், நெப்போலியன் காலத்திலிருந்து, மங்கோலிய மன்னர்களிலிருந்து, சிலுவைப் போர், உலகப்போர் என வரலாறு குறித்துவைத்துள்ள, வெற்றியடைந்ததும் போருக்குப் பின்பான இராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து கொஞ்சம் கூட பொருத்தமேயில்லாத அபாண்டமானக் குற்றச்சாட்டை அகரமுதல்வன் சொல்லிவிட்டான் என்பதால் அவனுக்கு எதிராகக் கண்டனத்தை எழுப்புங்கள்



இந்தக் கதைகளில் சொன்னவற்றைத் தான் உலகம் முழுக்க சேனல் 4 இதை வைத்து தான் இன்ஸ்டால்மெண்டில் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. சீமான், இராமதாஸ், வைகோ முதற்கொண்டு திருமாவளவன் வரை எல்லோரும் ஒரு காலத்தில் இதையும் சொல்லி தான் ஓட்டு கேட்டனர்.

அதை ஒற்றைச் சிறுகதையாகப் பார்த்தால், சிவகாமியைத் தமிழினி என்று மட்டுந்தான் பார்க்கச் சொல்லும். முடிவடைந்துவிட்ட ஒரு போருக்குப் பின்பான சூழலின் பயங்கரத்தின் உச்சபட்சக் குறியீடு தான் சிவகாமி.

அகரன் இந்தக் கதையை எப்போது எழுதினான் என்று அறிந்திலேன், அது எனக்குத் தேவையானதும் அல்ல.

ஆனால், தமிழினி எனும் இறந்துபட்ட ஒரு போராளி. ஒரு பக்கம் சுயசரிதை எனும் கட்டுரைகளால் பிரச்சாரத்திற்குப் பயன்படுகிறாள் எனில், மற்றொரு பக்கம் ஏன் புனைவாக எழுதப்பட்டு பிரச்சாரப்படுத்தக் கூடாது.

வேடிக்கை என்னவென்றால் சர்ச்சைகள், அபுனைவுகளை புனைவு என்று சந்தேகிக்க வைப்பதும், புனைவுகளை உண்மை என்று நம்பவைப்பதுமாக நடந்தேறிட. இறுதியில் நிற்பது எது என்பது காலம் எடுத்துக் கொள்ளும் சுதந்திரம்.


இது அகரமுதல்வனுக்கு எதிரான கருத்துச் சுதந்திர உரிமைக்கான பதிவு என்று மட்டும் முடித்துவிடவில்லை.

சிலுவையில் அறையப்பட்ட இயேசு "தந்தையே ஏன் எம்மை கைவிட்டீர்" எனப் புலம்புவதைப் போல "ஏன் அண்ணா எங்களை இப்படி விட்டிட்டுப் போனவர்?" என்றொரு பெண் போராளி கேட்கிறாள். இக்கதை குறித்து பாலசுப்ரமணியன் பொன்ராஜின் ஃபேஸ்புக் விமர்சனம்

எந்த ஒரு பெரிய நிறுவனத்தின் கடின உழைப்பில், சரியானத் திட்டமிடலில் உருவானபொய் வரலாற்று நூல் உருவாக்கும் பிம்பத்தையும், ஒரு கதை மிஞ்சிப் போனால், நான்கே நான்கு பக்கங்கள் தான். ஆனால் அந்த பிம்பத்தைத் தகர்த்தெறிய முடியும் என்றால் ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். அது தான் “உண்மைத் தன்மை”

ஏனென்றால்                         
“அறம் வெல்லும் அஞ்சற்க”





திங்கள், 14 மார்ச், 2016

அது - 06

14/03/2016 திங்கட்கிழமை இரவு -10.53

வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு வெளியேறும் வரை எந்த சத்தமும் இன்றி வெளியேறியதால், ‘அதுதூங்கிக்கொண்டிருப்பதை கலைத்துவிடாமல் வந்துவிட்ட சந்தோசம் எனக்கு. அவள் என்னைச் சந்திக்க ஒப்புக்கொண்ட நாளொன்றின் நிபந்தனையாகக் காலண்டரில் நான் குறித்து வைத்தது அது தான்.

அது உன் கூட வரக்கூடாது, நீ மட்டும் தான் வரனும்

அவள் வந்துகொண்டிருக்கின்றாள், எப்பொழுதும் போல எனக்கு படபடப்பு வரவில்லை இயல்பாய் இருக்கிறேன் என்பதே, எனது இப்போதைய ஆச்சரியம். என் இயல்பு அவளையும் சந்தேகிக்க வைக்கிறது. அவள் முகத்தில் பல கேள்விகள் பளிச்சிட்டன. அவைகளும் அவளைப் போலவே அழகாக இருந்தன..

அவளை உற்றுப் பார்த்தவுடன்,  ’அதுவின் ஞாபகம் வந்தது. எழுந்துவிடுமா??.. வேண்டாம் வேண்டாம். மீண்டும் இயல்புக்குத் திரும்பினேன்.

அவள் எனக்குள்ளே நான் பேசிக்கொண்டிருப்பதை கவனித்துக் கொண்டே என்னிடம் கேட்டாள்.

எப்படி நீ மட்டும் வந்தாய்அதுவரவில்லை?”

ஆஹா அவளே எழுப்பிவிடுகிறாளே, அவளையும் ஞாபகப்படுத்தி எழுப்பிவிடாதே என்று சொன்னேன். எத்தனை நாள் தான் அவஸ்தைகளை அனுபவிக்கப்போகிறாய் என்று அவள் எனக்குக் கேட்கும்போது, அவள் பேசுவதில் உள்ள நியாயங்கள் தெரிந்தது. ஆம் எத்தனை நாள் தான் இப்படியே இருப்பது. என் முகத்தின் மாற்றங்களை, அவ்வளவு எளிதாக ஸ்கேன் செய்துவிடுகிறாள் என்று அது என்னிடம் எச்சரித்தவைகள் ஞாபகத்திற்கு வந்து தொலைத்தன. ஆம் அவள் ஸ்கேன் தான் செய்கிறாள்

ஆம் எத்தனை நாள் தான் இப்படியே இருக்கமுடியும்.. வாழ்க்கைய ஓட்டித்தான ஆகனும். கடமைகள்னு உனக்கும் சில இருக்குல்ல?

என்ன தான் செய்யனும்என்று தீவிரமாக யோசித்தேன்நித்தமும் இப்படி யோசிப்பது தான், இன்று அவளோடும் சேர்ந்து இதை யோசிக்கிறேன் என்பதில் தான் கூடுதல் லைட்டிங் எஃபக்ட் வந்துவிடுகிறது, நான் என்ன செய்யட்டும்?

கரிசனமிக்க அந்த கண்கள், இப்படி சொற்களை உதிர்க்க தயாராகி இருக்கிறாள் என்று காட்டிக் கொடுக்காமல் இருந்திருந்தால், ஒருவேளை நான் கேட்காமல் இருந்திருப்பேன். ஆனால் சொல்லிவிட்டாள். நானும் இசைந்துவிட்டேன்.

தோள்களில் தட்டிக் கொடுத்தாள்…. தீர்கமாய் செயல்படவேண்டும்.

1.   அது கொல்லப்பட வேண்டும்
2.   அதற்கு காரணம் அவளில்லை நான் தான்என்று உலக்குக்கு அறிவிக்க வேண்டும்
3.   அவ்வளவு தான்.. முதல் இரண்டு நடந்தாலே வெற்றி தான்

வெற்றி, ’வெற்றி தான்’. ’ஆனால் யாருக்கு?’ பதில் தெரியாது. ஆனால் அவள் சொன்ன ஆலோசனை, நான் கேட்க வேண்டும். “அதுஇருக்கும் வரை அவள் சொன்னதைக் கேட்க வேண்டும் என்று உனக்குத் தெரியாதா?

’அதான் இப்பொதும் கேட்கிறேனே..’ 

எல்லாக் கட்டளைகளிடமிருந்தும் என்னை விடுவிக்க வேண்டும். விடுதலையின் தெவிட்டாத ருசி எனக்கு வேண்டும். கொல்வதற்கு யத்தனிக்கும் என் மனது, உடலின் ஸ்திரத்தை, கழுத்தை நெறிப்பதற்கு ஏதுவாய் கரங்களுக்கே கடத்திக்கொண்டிருக்கிறது.
*
அதிர்ச்சி, வீட்டை நெருங்கவும் தான் தெரிகிறது. வீடு திறந்திருக்கிறது என்று. கைகளைப் பின்னே கட்டிக் கொண்டு என் படுக்கையறையில் இங்கேயும் அங்கேயுமாக நடந்துக் கொண்டிருக்கிறது. நான் ஒளிந்து கொண்டே, இப்போது உள்ளே சென்றவுடன். அதை எப்படி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். வேர்த்திருக்கும் என் உடலில் யாரோ ஊதுவது போல் இருக்கத் திரும்பிப் பார்க்கலானேன். அது தான் ஊதிவிட்டிருக்கிறது.

சத்தமில்லாமல் அதன் பின்னேயே நடந்து சென்றேன். தூங்குவது பாவ்லா செய்தேன். போர்வையைப் பிடுங்கியது. ‘அதுதான் அசலானத் தூக்கத்தையே பலிகேட்கும். இப்போது நடிப்பது தெரியாமலா போய்விடும். எதற்கு எழுப்புகிறாய் என்று கேட்ட போது தான். நான் ரகசியமாய் சென்று வந்ததை தெரிவித்தேன். எப்பவும் தலை கவிழ்ந்தே பேசுவது எரிச்சலாக இருந்தது, அவள் சொல்வது போல அதனைக் கொல்வது தான் சரியென்று மனசு ஒப்புக்கொள்கிறது. அவளை விட வேகமாக என் மனதைப் படிக்கும் திறன்பெற்றதுஅது’.

உன்னால் என்னைக் கொல்ல முடியாது

என்ன முழிக்கறே!! உன்னால் என்னைக் கொல்லவே முடியாது முட்டாள்

நான் சாக வேண்டும் என்று விரும்புகிறாயா?”

ஆம்என்று சொல்லும் போது இதயம் துடிக்கும் ஓசை உடலுக்கு வெளியேயும் கேட்குமளவுக்கு தாறுமாறாக மாறிக்கொண்டிருந்தது. கொஞ்சம் பெருமூச்சு இழுத்துவிட்டுக் கொண்டிருந்தேன்.

ஆமாம் நீ சாக வேண்டும்

அப்படியென்றால் இந்தக் கடிதத்தை கொடுத்துவிடு, இதை அவள் வாசித்து நடந்து கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை இன்னும் 7 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படி அவள் செய்தால் நானே என்னை மாய்த்துக் கொள்வேன். எந்த மானிடப் பதர்களாலும் என்னைக் கொல்ல முடியாது முட்டாளே!!”

கடிதத்தை என் தலையணைக்கு அடியில் தான் அது ஒளித்து வைத்திருக்கின்றது இதுநாள் வரை. இல்லை ஒருவேளை இன்று தான் எழுதியதா. திறந்து பார்க்கலாமா என்று தோன்றிய மனதோடு அதனை நோக்க, அது கூடாது என்று தலையாட்டி மறுத்தது.

நீட்டிய கரங்களிலிருந்து தென்பட்ட கடிதச்சுருளினை எடுத்துக் கொண்டு, அவள் வீட்டை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன். வியர்த்தொழுகும் போதோ, திடீர் மழையோ இக்கடிதத்தை அழித்துவிடும் முன், நான் அவளிடம் இதனைக் கொடுத்து விட வேண்டும் என்று விரைந்துக் கொண்டிருக்கின்றேன். கடிதம் எனும் ரகசியம் என் கையில் தான் சுருண்டுக் கிடக்கிறது, விதி எனும் கயிறு கண்களுக்குத் தெரிவதில்லை, ஆனாலும் கட்டுண்டதாகவும், கட்டுப்பட்டதாகவும் மனதை எங்கோ நிலை நிறுத்தியிருக்கிறது. தொலைந்து போகட்டும்.

இதோ வந்துவிட்டேன்

இந்நேரம் விழித்திருப்பாளா? என்றபடி கதவருகில் நின்றுக் கொண்டு கதவைத் தட்ட யோசித்துக் கொண்டிருந்தேன்..

கதவைத் தட்ட கைகளை நீட்டும் முன்னே, கதவுத் திறக்கப்பட்டது. சிவப்பு நிற ஆடையில் அவள்.

அந்தச் சிவப்பு நிற ஆடையில் ஆச்சரியப்படும் விதத்தில் நீல வாசமும், வெள்ளை வாசமும் நறுமணமாய் திகழ்ந்தன. ஓடிவந்த மூச்சிரைப்பும் அவளைப் பாத்த பிரமிப்பும் குறைவதற்குள். அவள் மிக இயல்பாய் பேசினா:ள்.

ம்ம் கொண்டு வந்துட்டாயா அந்தக் கடிதத்தை?

ம் ? என்ன இப்படி ஈரமாக இருக்கின்றது

என் கைகளில் இருந்து அவளுக்கு அக்கடிதச் சுருள் இடமாறியது
*

பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு துணுக்கு கோள் எதிர்பாராத விதமாகப் பற்றியெரியத் தொடங்கியதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று இன்னிக்கு சாமக் கோடங்கி சகுனம் சொல்லுவானாக்கும்

அது - 05

08/03/2016.     12:56 pm..    செவ்வாய்க் கிழமை:

இந்த வெயிலில்… உன்னோடு பேசிக் கொண்டிருக்கும்போது… யாரோ பேஸ் கிட்டார் கொண்டு வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்… அதன் நோட்ஸ்களைப் பற்றி வேறெதுவும் எனக்குச் சொல்லத் தெரியாது.
சூழ்ந்துள்ள சப்தங்களை விழுங்கிவிட்டு மற்றவற்றை எழுதிப்பார்க்கும் துர்பாக்கியம் தான் என் முயற்சி என்றாலும்… நான் அதிர்ஷடசாலியும் தான். ஏனென்றால் அதில் நீயும் இருக்கிறாய் அல்லவா?
ஆமாம் நீ என்ன அமானுஷ்யமா?  பூக்கள் பற்றி எழுதினாலும், புயல் பற்றி எழுதினாலும் வந்துவிடுகிறாயே நீ.
நல்லவேளை இங்க் கேட்ரிட்ஜ்களைக் கொண்ட பேனாக்களை நான் உபயோகிப்பதில்லை, எழுதும் முன் தெளித்துப் பார்த்தாலும், அதில் நீ வந்துவிடுவாய் என்று அஞ்சியதால் சொல்கிறேன்.
அவலங்களுக்கு மத்தியில் வாழும் வாழ்க்கை பற்றிய சிந்தனைகள், உன்னோடு பேசிக்கொண்டிருக்கும்போதும் வருவது துரதிர்ஷடத்தின் நிழல் தான். ஆனால் அந்த அவலங்களும் என்னைப் போலவே இளைப்பாறத் துடிக்கின்றன. உன்னிடத்தில்.
After all, என்னைச் சுற்றியிருக்கும் அவலங்கள் என்னை விட பருமனானது தெரியுமா? இதுவும் எனக்கு ஓர் ஆறுதல் தான்.
நீ கேட்கிறாய்.. நான் தேடியது அந்த மூன்று வார்த்தைகளையா என்று?? இல்லை நான் தேடுவது நான்கு வார்த்தைகளை.
மூன்று, காலத்தால் சமைக்கப்பட்டு நான்காகிவிட்டது.. வேடிக்கையாய் இருக்கிறது அல்லவா?
“………………….”
இங்கே என்ன அபத்தமாய் இருக்கிறது என்கிறாயா?
காதலைச் சொல்வது கூட ஒரு காலத்தில் அபத்தமாய் இருந்திருக்கவேண்டும் என்று என் நண்பர் சொல்லியிருக்கிறார்.
ஆம். அது காதல் .. அது அரூபம்.. அது காற்று.. அது… அது தான்
அது இப்போது நான்கு வார்த்தைகளாக..
நான்கு வார்த்தைகளாக மாறும்பொழுது, காதல் தன்னை பரிணமித்திருக்கிறது.. அது தன்னைத் தானே ஜீவிக்கத் தெரிந்திருக்கிறது.
பிரிவுகளுக்கு அங்கீகாரமும், முன்னுரிமையும், வாழ்த்தும் கொடுக்கும் அதிகாரப் பீடங்களாக ஜனநாயகம் என்ற பெயரில்…. மாசாகும் சூழலைக் கண்டு மூக்கைப் பொத்திக்கொள்ள மட்டுமே சட்டம் பிறப்பிக்கின்றது.
காதல் எனும் உணர்வை, உணர்த்த இயலாமல், மொழியின் உதவியை நாடுவதே முதலில் காதலுக்கு காலம் கொடுத்த இறங்குமுகம் தான்.
சொல்லித்தான் புரிய வேண்டும்..
புரியும்படி சொல்ல வேண்டும்
சொல்லத் தெரிய வேண்டும்
புரியும்படி சொல்ல வேண்டும்
சொல்ல வேண்டும்
புரிய வேண்டும்
ஏனென்றால் வேண்டும். அது வேண்டும்.
அதற்கும் அது வேண்டும்
இப்போது அது
ஐந்து வார்த்தைகளாகவும் ஆகிறது
”AM IN LOVE WITH YOU” … It’s purely unconditional state.

நீ மறுத்தாலும், பிரிந்தாலும்… “AM IN LOVE” ஆக இருக்கும். மொழி தோற்கும் இடங்கள் உனக்குத் தெரியுமா?
·         பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்குவது
·         கடவுளைப் பற்றி புரிய வைப்பது
·         உணர்கின்ற காதலை மொழியாக சொல்லிப் பார்ப்பது
என்ன செய்ய முடியும் இந்த அற்ப உயிரியால்.. அவனுக்கு மொழி மட்டுமே ஏதோ கொஞ்சம் கிடைத்திருக்கிறது.
பால்யத்தில் நம்மோடு நெருங்கி இருந்தவர்களோடு மொழியாலா வாழ்ந்தோம்?
மொழியாலா ஸ்நேகித்தோம்?
விளையாடினோம்?
சண்டையிட்டோம்?
முத்தங்கள் கொடுத்தோம்?
திரும்பப் பெற்றோம்?
ஆனால், அவையெல்லாமே காதல் தான்.. மொழி பிறந்ததும்.. எல்லாவாற்றுக்கும் அந்தந்தப் பெயர் வைக்கத் தெரிந்ததும் விலக ஆரம்பிக்கிறோம். மனிதர்களாகிய நாம் பிரிந்துக் கிடக்கிறோம். சேர்ந்திருக்க வேண்டிய நாம், இத்தனை ஆண்டுகளாய் பார்த்திருக்கவில்லை என்பதே உலகம் எத்தனை மாசுபட்டிருக்கிறது என்பதற்கு உதாரணம்.
உலகம் மாசுபட்டிருக்கிறது.. மனிதம் மாசுபட்டிருக்கிறது.
அமானுஷ்யமே மீட்க இயன்ற ஒரே சக்தி.
காதலே அமானுஷ்யம்
நீயே என் அமானுஷ்யம்
அதுவும் அமானுஷ்யம்….
உன் பாதங்களை எனக்குக் காட்டாதே. இரண்டு பிரச்சனைகள் வரக்கூடும்..
கவிதை எழுதுவேனா என்று கேட்கிறது வேறு பிரச்சனை…. அது சுவாரஸ்யமற்ற இரக்கமற்ற இலக்கிய உலகத்திற்காக வெட்டப்படப்போகும் காகிதக்கூழ் சூல்கொண்ட மரத்தின் வேதனை.
உன் பாதங்களை எனக்குக் காட்டினால், இருவருக்குப் பிரச்சினை. எனக்கும் ”அது’-க்கும்
நான் பாதங்களை நைஸாக ஸ்பரிஸித்து விடுவேன்
’அது’ உன் இருப்பைக் கண்டுவிடும்… துரத்த ஆரம்பிக்கும்..
ஆகவே நீ அமானுஷ்யமாக இரு..
நான் அமானுஷ்யமாக மாறி உன்னைக் கெஞ்சும் வரை, நீ திமிர்ப் பிடித்தவளாகவாவது நடி!!
ஏனென்றால், நாம் இக்காலத்தின் விதைகள். உன் உணர்வுகளை என்னால் புரிந்துக்கொள்ள முடியாத அளவுக்கு இறுக்கமானவளாய் இருக்க வேண்டும்.
*
டெடி பியர், ஆட்டுக்குட்டியாக மாறியதன் பெயர் ரசவாதமா.

“………………….”

!! அது தான் காதலா.. மீண்டும் சொல்கிறேன் கேள்!
*

டெடிபியர் ஆட்டுக்குட்டியாக மாறியது.
இந்தப் பிரபஞ்சத்தில் புதிய நடுகற்களை நட்டு வைத்திருக்கிறாள் நிமினி..
இப்போது பேஸ் கிட்டாரோடு சேர்ந்து, லீட் கிட்டார், ட்ரம்ஸ், சிந்தஸைசர் எல்லாம் ஒலிக்க ஆரம்பித்துவிட்டன.. எல்.ஈ.டி விளக்குகள், பல வண்ணங்களில் ஒளிரும் ஃபவுண்டெயின் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கின்றது.
போதை வஸ்து நிரம்பியிருக்கும் பாட்டிலை வேண்டாமென, ஒரு கிட்டாரிஸ்ட் சுவற்றில் வீசி எறிகிறான். பட்டுத் தெறிக்கிறது அது.. பாட்டும் தெறிக்கின்றது..
He is weird.. just like me..
அந்தக் கலைஞனும் காதலிக்கிறான்… மொழி தேவையில்லை.


*

சனி, 5 மார்ச், 2016

ஆம் இந்த முறை சீமானுக்கு தான்



இந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்காமல், நீ சீமானை ஆதரிக்கிறாயா என்று என்னைக் கேட்டால்..

சட்டென ஒரு பதில் சொல்லி தானே ஆகவேண்டும்.
ஆம் ஆதரிக்கின்றேன் என்று சொல்கிறேன். பிடிக்காதவர்கள் இங்கிருந்து கழண்டு கொள்ளலாம்.

ஏனென்றால் நாம் ஓட்டுப் போடும் கட்சி இந்த தேர்தலில் இல்லாவிட்டால் அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் என்கிற எளிய கணக்கு சலூனிலும், டீக்கடையிலும் அரசியல் பேசும் மக்களின் எளிய நம்பிக்கை.. ஐம்பது ஆண்டுகளில் இரண்டு கட்சிகளைத் தாண்டி வேறு எதுவும் பொது மக்களின் பிரதான எதிர்பார்ப்பாக இருந்தது இல்லை. கொள்கை அளவில் பார்த்தால், 1960களுக்குப் பிறகு, இந்தி எதிர்ப்பு - ஆரிய எதிர்ப்பு தவிற வேறேதும் பெரிதாக மக்களை பாதிக்கவில்லை. ஈழமும் தான், ஈழம் பயன்படுத்தப்பட்டிருக்கிறதை விட, ஏற்படுத்திய பாதிப்புகளை விட, அவ்வுணர்வு முடக்கப்பட்டிருக்கது. நிறைய சந்தர்ப்பங்களில், அதுவும் முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு நம் காதுகளையும், கவனத்தையும் ஊடகங்கள் திசை திருப்பின.

ஊடகங்கள் என்றால் எல்லா ஊடகங்களும் தான். புன்னகை மன்னன் திரைப்படத்திலிருந்து, அண்மையில் வெளிவந்த பாக்ஸ் நாவல் வரை OVER RATED ஆக ஈழம் குறித்த பார்வைகள் மற்றும் போதனைகள். இவ்வுணர்வை தேர்தலின்போது வாக்களிக்கும் காரணியாக மாற்றவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நுண்ணரசியலில் தான் தமிழ் தேசிய உணர்வின் அடிப்படையிலிருந்தே நசுக்க ஒரு பெரும் முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ் தேசிய உணர்வு என்பது, அடிப்படையில் ஈராயிரமாண்டுகட்கும் முன்பான நம் வரலாற்றிலிருந்து நீள்கின்ற ஒரு தொடர் சிந்தனை… அசோகனை, மௌரிய அரசினை தடுத்து நிறுத்துய “தமிழ் தேசிய சங்காதம்”, மூவேந்தர்களால் உருவாக்கப்பட்டது. ஆனால் பின்காலனியத்தில் பரிணமித்த திராவிடக் கோட்பாட்டில் அந்த தொடர்ச்சி அறுந்துவிட்டது என்றும் சொல்லமுடியும்.

இனவாதியென்று அருவருப்பாகப் பார்க்கப் பழகிக்கொண்டிருக்கும் கணவான்களே.. நீங்கள் இன்னும் இந்தக் கட்டுரையை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தால், முக்கியமாக ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள். உங்களுக்கு என்று பிரத்யேகமாக இருந்து கொண்டிருக்கும் உங்கள் மதத்தினையோ, தேசியத்தையோ அல்லது சித்தாந்தத்தையோ (வலதோ/இடதோ) முன்வைத்து இந்த மொழியுணர்வை பரிகசித்தால் அது பரிதாபத்திற்குரியது. ஏனென்றால் மொழியுணர்வு மேற்சொன்ன அனைத்தையும் அடக்கியிருப்பது, மொழி ஒரு சமுதாயத்தின், பண்பாட்டின், கலாச்சாரத்தின் ஒட்டுமொத்த அடையாளம்.
தொடர்பறுந்து 50 ஆண்டுகள் வரை ஆகிவிட்ட நிலையில், அதனை வரையறுப்பது அத்தனை எளிதான ஒன்றல்ல.. மொழிக்குள் ஒரு பன்மைத்துவம் இருக்கின்றது, பன்மைத்துவம் இருக்கின்ற சமூகத்தின், கலாச்சாரத்தின் தோல் தான் மொழி. 

மொழியை முன்னெடுத்து ஒரு அரசியலைப் பேசுவது என்பது பன்முக பரிமாணங்களோடு அணுகவேண்டிய செயல்.

சீமான் அப்படியான அணுகுமுறையைக் கையாள்கிறார். அவரைத் தலைவராக நான் ஏற்றுக்கொண்டு எழுதவில்லை, பெரியாரியவாதியாக தன்னைக் காட்டிக் கொண்டிருந்த போது, பிராமணர்கள் மீதும் , இந்துத்வர்கள் மீதும் துவேசம் காட்டினார், கம்யுனிஸ்டாக தன்னைக் காட்டிய இடங்களில் எதிர் அரசியல் பேசுவோர்களிடம் துவேசம் காட்டினார், ஈழத்தை முன்வைத்த போது துரோகக் கும்பல்களிடம் எதிர் அரசியலை முன்வைத்தார். அப்போது அவர் சீமானாக மட்டுமே இருந்தார்
நாம் தமிழர் கட்சி அரசியல் கட்சியாகின்றது – கொள்கையாக தமிழ் தேசியம்.
இப்போது நாம் தமிழர் கட்சி – தேர்தலுக்கான அவர்களது உழைப்பு, திட்டங்கள், முன்னெடுப்பு எனப் பார்க்கும் பொழுது. அவர்களது அனுகுமுறையில், அந்தப் போக்கில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இவருக்கு மாற்றாக இருக்கும் கட்சிகளாக இருக்கும் .. அதிமுக, திமுக, ம.ந.கூ, பா.ஜ.க ஆகிய கட்சிகள் எடுத்துள்ள அல்லது முன்வைக்கும் கொள்கைகளைக் காட்டிலும் தமிழ் தேசியம் எனக்கு அர்த்தமுள்ள உணர்வாக எனக்குத் தோன்றுகிறது.

யாரையும் வெளியேற்றுவது நோக்கமாகத் தெரியவில்லை, யார் ஆள்வது, ஆள வேண்டியது என்பதைப் பேசும் அரசியல் தான்.
மொத்தக் கட்டுரையின் சாராம்சமாக கொள்கைகளாகப் பிரித்துப் பார்க்கிறேன்.

தலித் என்றாலோ, சிறுபான்மை என்றாலோ ஒடுக்கப்படும்போது எழும் குரல்களில்… நிலம், தொழில், வாழ்வாதாரம், பண்பாடு, கலாச்சாரம், தனிமனித உரிமைகள் என எல்லாவகையிலும் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது தமிழன், தமிழ் இன உணர்வு என்றால் மட்டும் உங்களுக்கு கசக்கிறது இல்லையா??

ஆப்பிரிக்க, தென்னமெரிக்க, அரபுப் புரட்சிக் கவிகள் மட்டும் படைப்புகள், தமிழ் தேசியம் பேசினால் அருவருப்பு?

இந்திய அளவில் பேசும் கருத்தியல் புரட்சிவாதிகளைத் தலைவனென்று கொண்டாடலாம், மே17, இளந்தமிழகம், கலகம் அமைப்புகளில் இருந்து ஒலிக்கும் குரல்கள் இனவாதக் குரல்கள்?

விஷயம் இது தான் – எந்த தலைவனோ, கட்சியோ முக்கியம் இல்லை.
தமிழ் தேசியம் ஒரு கருத்தியலாக முன்னெடுத்து வைக்கும் கட்சியை… நான் ஆதரிக்கின்றேன். குறிப்பாக, ஆர்.கே. நகர் தொகுதியின் வேட்பாளருக்காக நான் ஆதரிக்கின்றேன். மற்ற சித்தாந்தங்களை வெறுப்பதற்கான காரணங்கள் தேவையில்லை, தற்பொதைய தேவையை உணர்கிறேன். 

தமிழ் தேசியம் என்பது கனவாகவே இருக்கட்டும்… முதலில் கனவு வரவேண்டும் என்பது தான் என் விருப்பம்….  இந்தக் கனவுக்கான அவசியம் இருக்கிறது.. இப்போதைக்கு நாம் தமிழர் கட்சி அதற்கான மாத்திரைகளைக் கொடுக்கிறது என்று நம்புகிறேன்.
நான் மனிதனாக மட்டுமல்ல, வெறும் உயிரியாக இருக்கவே ஆசைப்படுகின்றேன்.. ஆனால், நான் எந்தப் பெயர் கொண்டு ஒடுக்கப்படுகின்றேனோ, அதைக் கொண்டே தான் எழவேண்டும் என்று நம்புகிறேன்...

ிகாலன்