புதன், 9 மே, 2012

யார் அந்த நிலவு ??




பரிதி வெயிலில் சருகாகி 
எஞ்சிய உடம்பின் வெப்பம் ,
அவளில்லாத மாலையை 
தகிக்க முடியாமல் போனது !

இறைவன் அளித்த பரிசாய் 
நகரத்தில் எஞ்சியிருக்கும் 
ஒரே நிம்மதி 
நிலாவைப் பார்ப்பது தான்!!

அன்று -
எனக்கான நிலவு ஒன்று 
முழு முகம் காட்டிக் கொண்டு ,
தென்னை மரக் காற்றோடு 
சரசரவெனப் புணர்ந்து 
சன்னல் வழியே 
பச்சை வாசத்துடன் 
என்னை வெள்ளிப் பாலால்
நனைத்தது.


பால் நிலவொளி கொடுத்த 
பாலுணர்வு நரம்புகளின் 
வழியே -அவள் முகம் 
தெரிந்தது என் மூளையில்!!

நிலவை என்னுள்ளிருந்து
வெளியெடுத்து வீசி ,
மிஞ்சியிருக்கும் மங்கிய 
ஒளியில் அவள் அங்கம் 
புலனாகிட , 
குளிர் தென்றலும் 
வெப்பத் தனல் மூட்டியது 

நினைவுகளில் அவளிருப்பதால் 
சுகிக்க முடியாத நிலவு ..
இன்றும் என் 
கவிதை எழுதாதப் பக்கங்களின் 
பாடு பொருளானது :(


2 கருத்துகள்: