வியாழன், 1 டிசம்பர், 2016

TN 47

ஒரு பைக் ஸ்டோரி

இந்த குளிரும் மழையும் காக்டெயிலாகப் பொழியும் மழையில், அலுவலகம் செல்லும் வழியில் ஒரு லாரியைக் கடந்து வேகமாக ஓவர்டேக் செய்துக்கொண்டிருக்கும் போது தான் அது என் நினைவுக்கு வந்தது நான் ஓட்டிக்கொண்டிருப்பது சுரேஷை அல்ல ரமேஷை என்று. (இப்போதே footnoteஐப் படித்துவிடுங்கள்). வேகமாக எதிரில் வந்துக்கொண்டிருந்த வாகனம் கொஞ்சம் கூட வேகத்தைக் குறைக்காமல், மாறாக ஹெட்லைட்டைப் போட்டு பயமுறுத்தினான்.

ரமேஷ் அதுக்குமேல முறுக்கினா ஆக்ஸிலேட்டர் கம்பி தான் அறுந்துபோகும் எனத்தோன்றியது. சுரேஷை வீட்டிற்கு அழைத்து வந்து சில மாதங்கள் தான் ஆகிறது.

சுரேஷ் என் தம்பியின் வாகனம். கொஞ்ச நாளைக்கு நீ ஓட்டுன்னு சொன்ன நாள்லயிருந்து தொடர்ந்து பத்து பதினைந்து நாட்களாக அதைத் தான் ஓட்டிக் கொண்டிருக்கிறேன். சுரேஷ் புதியவன் மற்றும் திறமைசாலி என்பதால் எடுத்த எடுப்பில் யாரையும் ஓவர் டேக் செய்துவிடலாம். ஆனால் ரமேஷ் நவதுவாரங்கள் வழியாகவும் சப்தம் எழுப்பும் கட்டெரும்பாய் தேய்ந்து போய்விட்டான். இதெல்லாம் முன்னரே தெரிந்தவன் தான் எனினும் இந்த பத்து பதினைந்து நாள் சுரேஷ் சகவாசம் என்னை, என் ஆட்டிட்யூடை மாற்றிவிட்டது எனலாம், ஏனென்றால் சில் ஆண்டுகட்கு முன்னர் என்னைக் கடந்து சென்ற ஒரு ஸ்கூட்டியை ஓவர்டேக் செய்யவில்லை என்றால் இறக்கிவிடுமாறு என்று என் அம்மாவே என்னிடம் செய்திருக்கிறார் என்றால் என் வண்டியின் வேகம் என்னவாக இருக்கும் என்று யோசியுங்கள்.

வேகம் எனக்குப் பொருந்தாத ஒன்று என்று நினைத்திருந்தேன். அர்விந்த் யுவ்ராஜுடன் பேசிக்கொண்டிருந்த போது ஒகே கண்மனியின் வேம்ப் ஷாட்டின் அவசியம் பற்றிக் கொண்டிருந்தார். அது ஒரு காலத்தின் குறியீடு, வேகம் எல்லோருக்குமே அவசியமாகிறது. அதற்குத் தகுதியானவர்களாவதில் தான் பிரச்சினை. மிகவும் நெருங்கி வருகிறது. வலது புறம் கட் பண்ணினால் கடைத்தெரு. இடது புறம் கட் பண்ணினால் லாரி தான். எப்படியோ சுரேஷின் வேகத்திற்குப் பழகியதால். ரமேஷிடம் அதை எதிர்ப்பார்த்தது என் தவறு தான். வாழ்க்கை முழுதும் அதே தவறைத் தான் திரும்பித் திரும்பி செய்கிறேன்.

அப்போது எனக்கு இன்னொரு விஷயம் கண்ணில் பட்டது என் வண்டி ஒரு லட்சம் கிலோமீட்டர் பயணம் அஃபிசியலாக போயிருப்பதையே நான் கவனிக்காமல் இருந்திருக்கிறேன்.

எப்படியோ என்னுடன் 2007ல் இருந்து இன்று வரை என்னோடு இருந்து வரும் ரமேஷ் பற்றி நான் கொஞ்சம் கூட அக்கறை கொண்டதே இல்லை. என்னடா 2007க்குப் போகிறேன் காலையில் நடந்த நிகழ்வினைப் பற்றி பேசாமல் ஏதேதோ பேசுகிறேன் என்று நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது. ஒரு லட்டத்திற்கும் அதிகமான கிலோமீட்டர் என்னோடு பயணித்த இந்த வண்டியுடன் ஒரு ஃபிளாஷ்பேக் போகலாம் என்று தோன்றுகிறது. இந்த பத்துவருடங்களின் எல்லாவற்றையும் என்னோடு இருந்து பார்த்துவருகிறது அது. நமக்காகவே என்று நாம் எழுதுவது அலாதியான உணர்வு தான். இந்த ரீவைண்டிங் கிரைண்டரைத்தான் அடிக்கடி நக்கலடித்து வந்தாலும். இது ஒரு ஆனந்தச் சொறிதல்.

முடிந்த அளவு குட்டி குட்டியாகப் பார்க்கலாம்…… ஒரு பைக்கின் கதை TN47

(தொடரும்)

*சுரேஷ் 2016 வெளியீடான 150 CC விக்ராந்த் பைக் – ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்பு.

ரமேஷ் 2006 வெளியீடான 100 CC ஸ்டார் சிட்டி – டீவீஎஸ் நிறுவனத் தயாரிப்பு

வெள்ளி, 25 நவம்பர், 2016

பஜ்ஜி-சொஜ்ஜி 102

உலகில் ஒருத்தி
*****************

உலகில் ஒருவன் நாவல்,
குணா கந்தசாமியுடன் புத்தக உருவாக்கத்திலிருந்து உடனிருந்து வருகிறேன். அந்த நாவல் குறித்து எழுந்த விமர்சனங்கள் இன்று நினைவுக்கு வந்தது. (இன்று குணா கந்தசாமியின் புத்தகத்திற்கு ஜெயந்தன் விருது அளிக்கப்பட இருக்கிறது) பால்யத்தில் தன் இறுக்கமான நினைவுகளை, பால்யத்தில் ஒருவனுக்கு இருக்கின்ற பார்வையுடன் மட்டுமே எழுதியிருப்பார். ஓரான் பாமூக்கை மொழிபெயர்க்கும் உலக இலக்கியங்களை விரும்பி வாசிக்கும் ஒருவன், அந்த அறிவின் வாசிப்பனுபவத்தை செயல்திறனாக மட்டும் கொண்டு, அந்த பால்யம் குறித்த இன்றைய எழுத்தாளனாய் தன் தரிசனத்தைச் சொல்லாமல். அந்த வாழ்க்கையைப் பதிந்த விதமும் சில , அந்த வடிவம் தான் அதிகம் விமர்சிக்கப்பட்டிருந்தது என் நண்பர்கள் வட்டாரத்தில். எனக்குத் தெரியும் அது தான் இந்த நாவலைக் கொண்டாடவும் சொல்லும் என்பது.

அந்தக் கதையில் வரும் சிறுவனின் பார்வையில் சில சம்பவங்கள் எத்தனையோ கேள்விகளுக்கு விடை இல்லாமல் அங்கங்கே நின்று விடும். அதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார் குணா. திடீரென்று ஊரை விட்டு ஓடி விடும் பக்கத்து வீட்டு அக்கா, ஒரு சிறுவனுக்கு அவளைப் பற்றி எத்தனை தூரம் தெரிந்து கொள்ள முடியுமோ அவ்வளவு தான் எழுதப்பட்டிருக்கும். அதே சமூகத்திலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடத்தை அந்த நாவலில் பொருத்திப் பார்த்து நான் கதைகளை நீட்டிக்கலாம்.


இதை எழுதுவதற்கு மற்றுமொரு காரணம், யதார்த்தவாதம் குறித்து என் மனநிலையில் இருந்த ஒரு பிம்பம் அறுபட்டது அந்த நாவலில் தான். எதார்த்தவாதம் என்பது காலாவதியானது என்கிற நம்பிக்கை என் மனதில் இருந்து வந்தது. ஆனால் எதார்த்தவாதிகள் தான் பெரும்பாலும் இந்த நாவலை விமர்சித்தார்கள் என்றும் ஞாபகம். இந்த நாவல் பொதுவாக எதார்த்தவாதம் அல்லது ரியலிச கட்டுமானங்களை குலைக்கும் வடிவமாகத் தான் உருவாக்கப்பட்டிருப்பதாக எடுத்துக்கொள்ள முடிந்தது. ரியலிஸ்டிக்கான வடிவம் என்று நாம் நம்பும் அநேகக்கதைகள் கதைகளுக்கும் மேலே ஒன்றை அது அந்தக் கதை எழுதியவரின் சித்தாந்த, அரசியல், தரிசன என ஏதோ ஒன்றைப் பற்றி அரிதாரம் பூசி தான் கிடைக்கிறது.


கருவிற்கு மேல் வெள்ளைப் பாகம் அவற்றை மாவில் முக்கி எடுத்துப் பொறித்துப் பார்க்கும் முட்டை போண்டா தான் இங்கே பெரும்பாலும் சொல்லப்பட்டு வரும் ரியலிச படைப்புகள் என்கிற முடிவுக்கு வர உலகில் ஒருவன் எனக்கு மிகவும் உதவினான்.

இந்த நாவலைப் பற்றி மீண்டும் பேசுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்த நாவலின் மையக் கதாப்பாத்திரமான அந்த சிறுவனின் அத்தை. அவனுக்கு இரண்டு அத்தைகள் இருக்கின்றனர். ஒரு அத்தை விதவையாக வீட்டில் இருக்கிறாள். உண்மையில் வீட்டை ஆள்கிறாள். அவன் நல்ல பள்ளியில் படிக்க வேண்டும் என்பதற்காக இன்னொரு அத்தை வீட்டிற்கு அனுப்பப்படுகிறான். அங்கு அவனது வாழ்க்கை தான் நாவலாகிறது. உறவுகள் காலாவதி ஆகிக் கொண்டிருக்கும் காலத்தில் ஆண்டிக்களிடமிருந்து அத்தைகளை வித்தியாசப்படுத்தி உணர அடுத்த தலைமுறை எப்படிக் கொடுத்துவைத்திருக்கிறதோ தெரியாது.


எனக்கு இந்த நாவலை மறுபடியும் புரட்டிய போது என் அத்தை ஞாபகமே வந்தது, ஆச்சரியமாக என் பெரிய அத்தையை பல மாதங்களுக்குப் பிறகு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். ஏதோ ஒரு ஊரிலிருந்து அல்ல, வில்லிவாக்கத்திலிருந்து தான் வந்திருந்தார். பல மாத இடைவெளி என்பதை, சில வருடங்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம். அத்தையின் பெயர் சரோஜினி, நான் என் பால்யத்தில் அவர்களை மெட்ராஸ் அத்தை என்று தான் சொல்வேன், ஆனால் எனக்குத் தெரியாது மெட்ராஸ் என்பது சென்னை என மாறும் என்றும், எங்கள் எல்லோரின் குடும்பமும் இந்த ஊரில் தான் பிழைக்கப் போகிறோம் என்றும், இப்போது பெரிய அத்தை என்றே அழைக்கிறேன். இப்போது அப்பாவைப் பற்றிச் சொல்ல வேண்டும், அப்பாவுடன் பிறந்தவர்கள் மொத்தம் ஏழு பேர், இதில் என் அப்பாவிற்கு மட்டும் தான் சரியாக எல்லா உறவுகளும் அமைந்திருக்கும். ஒருவருக்கு அக்கா இருக்காது, இன்னொருவருக்கு தம்பி இருக்காது, மற்றவருக்கு அண்ணனோ, தங்கையோ இருக்காது. அந்த எட்டுபேரில் என் தந்தைக்கு மட்டுமே அது அமைந்திருப்பதாலோ என்னவோ. உறவுகளோடு ஒரு DEPENDENCY இருக்கும் வாழ்க்கைச் சூழலே எங்கள் குடும்பத்திற்கு என்று சொல்ல வருவது இந்தப் பதிவின் நோக்கமல்ல என்பதால் இதை இப்படியே விட்டு விடுவோம்.

சரோஜினி அத்தை, எங்க அப்பாவிற்கு மூத்தவள். பெரிய அத்தைக்கும், என் அப்பாவிற்கும் இடையில் தான் எங்கள் வீட்டின் அரசியல் விதி மாறியிருக்கிறது.

சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில் தாத்தா காங்கிரஸ் கட்சியில் தான் இருந்திருக்கிறார், தன் மூத்த மகளுக்கு சரோஜினி என்று பெயர் வைத்திருக்கிறார். தன் மூத்த மகனுக்கு சுபாஷ் சந்திர போஸ் என்றும் பெயர் வைத்திருப்பதால் அவர் (காங்கிரஸில் இருந்து கழட்டிவிடப்பட்டோ அல்லது புறக்கணிக்கவோ கூடும் அல்லவா), என் அத்தைக்குப் பிறகு பிறந்த என் தந்தைக்கு ஜீவா என்று பெயர் (அடைப்புக்குறிக்குள் எந்த கட்சி என்று போடுமளவுக்கு நாடு மோசமாகப் போகவில்லை என்று நம்புகிறேன்). அடுத்தடுத்து கம்யூனிச பெயர் தான் (லெனின், ரோஸி, கல்யாணசுந்தரம்). இந்த பெயர் வரிசையில் ஏழாவது குழந்தைக்கு ஆச்சியின் உடல்நிலைக்கான வேண்டுதலின் கதை பதியப்பட்டிருக்கும். சதுரகிரி மஹாலிங்க மலைக்கு அவ்வளவு தீவிரமான கம்யூனிஸ்டாக இருந்த காலத்திலும் சென்றுவந்திருக்கிறார் என்றும் அறிய வந்தேன். ஆனால் இந்த சுவாரஸ்யமும் இப்போது நீட்டிக்கத் தேவையில்லை.


அத்தை 66 வயது இருக்கும்,  இந்த வயதிலும் அத்தைக்கு இருக்கும் எனர்ஜியைப் பார்க்கும் பொழுது அவ்வளவு ஆச்சரியமாக இருக்கின்றது. ஒரு காலத்தில் சென்னைக்கு வந்த பொழுது வார இறுதியென்றாலே வில்லிவாக்கத்திற்கு செல்லத் தோன்றும், ஏனென்றால் அந்த வீட்டில் மட்டுந்தான், கூழ்வடகத்திற்குத் தொட்டுக்கொள்ள நிறைய சோறு கிடைக்கும் :p.

“அவ கை ரொம்ப பெருசு”
“அவ பெரிய கைங்காரி”

பெண்களைப் பொதுவாக மற்ற பெண்கள் விமர்சிப்பதை இவ்வாறு இரண்டாகப் பிரிக்கலாம். என் அத்தையை எல்லோரும் முதல் ரகத்தில் வைப்பார்கள். மோப்பக் குழையும் மலர்நீச்சம் குரலை மனதில் நினைத்துக் கொள்வேன், அந்த முகம் வாடவே வாடாத வாடாமல்லியைப் போன்றது. தன் சிறுவயதிலிருந்து ஓயாமல் உழைப்பவள், என் அப்பா முதற்கொண்டு, எல்லா அத்தைமார்களையும் அவள் தான் வளத்திருக்கிறாள். இப்போதும் பேரப்பிள்ளைகளோடு ஷிஃப்ட் போட்டு வளர்த்து வருகிறாள். உழைப்பு, உழைப்பு என்றாள் அப்படி ஒரு உழைப்பு. என் பால்ய நினைவுகளில், அவர் வீட்டிற்குப் பின்புறம் அவர்கள் மாடு வளர்த்த ஞாபகம் இருக்கிறது, பின்னர் அமுல் ஐஸ்க்ரீம் பார்லர் நடத்திய ஞாபகம், ஆம்வேயில் அவர் முகவராகத் தீவிரமாக இயங்கியதும் ஞாபகமாக இருக்கிறது.


நாங்கள் கரூரில் இருக்கும் பொழுது, 90களின் மத்தியில் நிறைய மில்கள் மூடப்பட்ட காலம். அத்தையைப் பற்றி சில ஆண்டுகள் மறந்துவிட்டிருந்த காலம், ஒரு பெரிய தொகையுடன் வீட்டிற்கு வந்து என் அப்பாவிற்கு கொடுத்துவிட்டுப் போனார். தம்பிக்கு வீடியோ கேம்ஸ் உட்பட கைநிறைய ஏதோ வாங்கிக் கொடுத்துவிட்டுப் போனார். அத்தனைப் பாசக்காரியாக அவர் அன்று முதல் தான் கவனிக்க ஆரம்பித்தேன்.


அந்த ஆண்டு பரிட்சை லீவிற்கு அவர் வீட்டிற்கு தான் சென்றோம். குடும்பத்தில் சூறாவளி தாக்கிய காலக்கட்டம், என் பால்யத்தின் ஒன்று ஏற்கனவே இன்னும் நினைவில் இருக்கிறது, ஆனால் அந்த ஆண்டு நான் எட்டாவது முடித்திருந்தேன். ஒன்பதாம் வகுப்பிற்கு செல்வது என்பதே கேள்விக் குறியான காலக்கட்டம், ஏன் என்ற கேள்வியை வானத்து நட்சத்திரங்களிடமிருந்து விடுத்து மனிதர்களிடம் பார்க்க ஆரம்பித்த காலம். அப்போது தான் அத்தையை நன்கு அறிந்து கொண்டேன். அவள் சிறுக சிறுக சேமிக்கும் பணமெல்லாம் தன் தம்பி தங்கைகளுக்காக தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்து வந்தாள். நேற்று வரை, நாளையும் கூட. சகோதர உணர்வுகள் தாய்மையோடே பார்த்துக்கொள்ளப்பட்ட கடைசி தலைமுறை அதுவாகவே இருக்கும். இப்போதெல்லாம் பார்த்தால், சண்டை போடாமல் பிரிஞ்சுக்கிட்டா தேவலை என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

அத்தை – இப்போது மனவளக்கலை மன்றத்தில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். எத்தனையோ மனிதர்கள் அவரிடம் ஆலோசனை பெறுகிறார்கள். நிறைய இடங்களுக்குச் செல்கிறார், யோகா வகுப்புகள் எடுக்கிறார். யோகம் பற்றி சொற்பொழிவு நடத்துகிறார். யோகப்பயிற்சியில் முதுகலைப் பட்டம் வாங்கிவிட்டார். இப்போதும் வர்மக்கலை பயின்று வருகிறேன் என்று சொல்லும் போது. நான் அதிர்ந்துதான் போய்விட்டேன். இவர்களது வாழ்க்கைக்கு முன்னர் நாமெல்லாம் என்ன பெரிதாகச் சாதித்து விட முடியும் என்று தான்.

அவர் மாமியார் திரைப்படங்களில் காட்டப்படும் மாமியார் எம்.என்.ராஜம் போன்று சற்றுக் கடுமையானவரென்று கேள்விப்பட்டிருக்கிறேன். இத்தனை இக்கட்டிலும் கடுமையாக உழைத்து, சேமிப்பில் இருந்து தன் தம்பி, தங்கைகளுக்கு உதவுவதுடன், தன் இரண்டு மகளுகளையுமே நன்கு படிக்க வைத்திருக்கிறார். இருவரும் இன்று professionals ஆக வெவ்வேறு துறைகளில் நிற்கின்றனர். இப்போது அவர் தன்னை சமூகப் பணியில் ஆன்மீகப் பணியென பாவித்து நிறைய செய்து வருகிறார் எனத் தெரிந்து கொண்டேன். இத்தனைக்கும் மாமாவுக்கு அவர் செய்யும் பணிவிடைகளும் லேசுப்பட்டதல்ல, 70 வயதுக்குப் பின்னர் தன் கணவருக்கு STROKE வந்தபோதும். அவரை இப்பவும் sophisticated posh gentleman ஆக நடமாட வைத்திருக்க முடிகிறது என்றாள் அத்தையின் மனதைரியமும் ஆன்மீக பலமும் சாதாரணமானது அல்ல.


ஆனால் அத்தைச் சாதாரணமானவள் தான், எளிமையானவள் தான். எப்போதும் யாரைப் பார்த்தவுடனும் “வாழ்க வளமுடன்” என்று சொல்லும் பொழுது அவள் தன்னை பேரண்டத்தின் சக்திகளை வாங்கிக் கடத்தும் TRANSMITTORஆகவே தன்னை தினமும் தக்கவைத்து வருகிறாள். சம்மணமிட்டு, நேராக அமர்ந்திருக்கும் கம்பீரம் தனி அழகு தான். அந்த வயதிற்கான அழகு ஒவ்வொரு வயதிலுமே இருக்கிறது. அது அவளுக்கு நிறையவே இருக்கிறது. நேற்றைக்கு வீட்டிற்கு வந்ததும், சில பிராதுகளுக்கு பஞ்சாயத்து நடந்து கொண்டிருந்தது. பிரச்சினைகளை அவள் அணுகும் முறை வெகுவாக மாறியிருக்கிறது.

அவள் இப்போது அக்காவாக மட்டும் பேசவில்லை, சகவுயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்று தினமும் தியானிப்பவளாக மாறியிருக்கிறாள். இன்று வரை ஆண்களின் அடக்குமுறையில் இருள் கவிழ்ந்திருக்கும் அந்த கூட்டுக் குடும்ப வீட்டில் தான் என் அத்தையான இந்த ஆனந்த ஜோதி.

இதில் வாழ்க்கையை மறுத்து, எதைத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன், எதைத் தேடுகிறேன் என்பதெல்லாம், இன்னும் ஏதோ தெரிந்துகொள்ள வேண்டும் என்று பயணிக்கிற, தன் கடமைகளென எல்லாவற்றையும்  கடந்து  இன்னமும் உழைத்துக்கொண்டிருக்கிற என் அத்தையைப் பார்க்கும் போது என் தேடலெல்லாமும் கடுகளவு தான்.

இலக்கியத்தைப் பற்றி பேசவந்த, எழுத வந்த, சாதிக்க வேண்டும் என்கிற கற்பிதங்கள் சில நாட்களாகக் கரைந்துக் கொண்டிருக்கிறது. இலக்கியம் என்ற ஒன்று தனியாக இருக்கிறதா என்ன?  எத்தனையோ பேரின் வாழ்க்கையில் இருந்து கிடைக்கின்ற தரிசனங்களைக் காட்டிலும் இலக்கியம் எப்போதாவது தான் சிந்திக்க வைக்கிறது. ஆக இந்த பஜ்ஜி-சொஜ்ஜியில் நான் கடந்து வந்த சில மனிதர்களைப் பார்க்கலாமே என்று தோன்றுகிறது.

ஆனாலும் என்ன அத்தை மீது எனக்குத் தீராத கோபம் ஒன்றிரண்டு இருக்கவே செய்கிறது.

1. இரண்டு பெண்களுடன் நிறுத்தி விட்டாள்.
2. இரண்டுமே என்னை விட மூத்தவளாகி, நான் சுதாரிப்பதற்குள் திருமணமும் நடந்து விட்டது.

:p








வியாழன், 17 நவம்பர், 2016

பஜ்ஜி - சொஜ்ஜி 101. புரட்சிகர மாதத்தில் ஒருநாளானது...



    வழக்கம்போல நேற்று அலுவகலத்திற்குச் செல்லும் போது ஆலந்தூர் நீதிமன்றம் அருகில் திடீரென்று போக்குவரத்து நெரிசல் அதிகமானது. வாடகை மகிழுந்து ஓட்டுனர்கள் சங்கம் அறிவித்திருக்கும் கண்டன ஆர்ப்பாட்டமாம். ஓலா மற்றும் ஊபர் எனும் நிறுவனங்களைக் கண்டித்து ஓரளவுக்க நல்ல கூட்டம் கூடியிருந்தது. ஏற்கனவே பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த, இந்த கூட்டத்தைப் பற்றி அறியாத மற்ற மஞ்சள் போர்டு மகிழுந்து ஓட்டுனர்களை வலுக்கட்டாயமாக மறியல் செய்து போராட்டத்தில் இறங்கச் சொல்லியபடி போக்குவரத்தை தடை செய்து கொண்டிருந்தனர்.


அலுவலகத்திற்கு தாமதமாகச் செல்வதற்கு தான் தினமும் எத்தனைக் காரணங்கள் கிடைக்கின்றன இம்மாநகரத்தில். ஆவின், கோ ஆப்டெக்ஸ் போன்ற நிறுவனங்கள் போல் சில மாதங்களாக சென்னையில் போக்குவரத்து நெரிசலை பெருமளவு கட்டுக்குள் வைத்திருக்கிறது காவல்துறை. அதைப் பற்றித் தனியாகவே ஒரு பதிவிடலாம்.

 என் இருசக்கரவாகனத்தை ஓரங்கட்டி ஆவின் பால் பூத்தில் ஒரு பால் வாங்கியபடி, போராட்டத்திற்கு வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டும் அதே சமயம் கைதாவதை விரும்பாத ஓட்டுநர்களும் அங்கே ஒதுங்கிக் கொண்டிருந்தனர். அவர்களைப் போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி ஒரு முகவர் வற்புறுத்தியபடி இருந்தார். ஒரு நபரை மட்டும் ஒதுக்கினேன். உண்மையில் ஓலா, ஊபர் மீது உங்களுக்கு என்ன கோபம் என்றேன்.

“எங்களுக்கு இன்னா ப்ரச்சன, அடுத்த வர்ஷம் நம்மளே சொந்த கார் வாங்கலாம்னு நான் யோசிக்கிறேன்ல அதான் எங்க மொதலாளிக்குப் பிரச்சனை”

‘மொதலாளிக்காக நீங்க ஏன் பயப்படுறிங்க, போலீஸ்கிட்ட சொல்லலாமே’

“என்னைக் கைது பண்ணப்போறதே என் மொதலாளி தான்” என்றபடி சிரித்துக்கொண்டே கைதாகிக் கொண்டிருந்த ஓட்டுனர்களோடு கலந்து கொண்டார்.

உண்மையில் அரிவாள் யாரை அறுக்கிறது, யார் தலையில் சுத்தியல் விழுகிறது.

 காவல்துறை உள்ளிட்ட பல அரசாங்க அதிகாரிகளுன் ஊழல்/லஞ்சப் பணத்தை முதலீடு செய்யும் துறைகளில் முக்கியமான துறை தான் மஞ்சள் போர்டு கார்கள். ஊபரும், ஓலாவும் மிகப்பெரிய முதலைகள் தான், இவர்கள் பல சின்ன முதலைகளின் தொழிலில் கைவைத்து விட்டு, ஓட்டுநர்களாக இருக்கும் பலரை முதலாளிகளாக்கி விடுகிறார்கள்.

 எனக்குத் தெரிந்து கரூர், நாமக்கலிலிருந்தே நிறைய ஓட்டுநர்களைச் சந்தித்திருக்கிறேன். மாதம் எளிமையாக நாற்பதாயிரத்திலிருந்து அறுபதனாயிரம் வருமானம் வருகிறது என்று இங்கே வந்துவிட்டவர்கள் ஏகப்பட்டவர்களைச் சந்தித்திருக்கிறேன். என் அலுவலகத்தில் கூட ஒரு நபர் தான் பகுதிநேரமாகச் சம்பாதித்திட கார் ஓட்டிப் பழகிக்கொண்டிருக்கிறார்.

 ஊபரையும், ஓலாவையும் இவர்களால் (சிறு முதலாளிகளால்) ஒன்றுமே செய்யமுடியாது என்பது தான் நிதர்சனம். கூடுதலாக ஷேர் டாக்ஸி வந்தபிறகு பெருமளவு பொதுமக்களின் ஆதரவு வந்துவிட்டது. அதனால் எத்தனை சட்டம் போட்டும் மீட்டர்போடாத ஆட்டோமேன்கள், இப்போது அவர்களாகவே மாறிக்கொண்டார்கள். ஆனால் இப்படியானப் போராட்டங்களில் பங்கெடுக்க வைத்து ஓட்டுனர்களுக்குப் போலியான அச்சத்தை உருவாக்கிய அரசாங்க அதிகாரிகளின் முகவர்கள் ஒரு கட்சியின் சங்கமாக அதற்கு ஒரு குறியீட்டை வழங்கி அந்த கட்சியின் மீதும் சலிப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

மேலே சொன்ன ஒரு சம்பவம் என் நாளை ஆட்கொள்ளும் என்று தப்புக்கணக்கு போட்டேன். எத்தனை விஷயங்கள் குடைச்சல் கொடுக்கின்றன ஒரேநாளில்…

  அம்முவின் பிளாஸ்திரி போட்டு குளுகோஸ் ஏறிக்கொண்டிருக்கும் வெளிறிய கைகளைப் பார்த்துவிட்டும், அவளிடம் நீங்கள் அணிந்திருக்கும் உடை மிகப்பொருத்தமாய் உங்களுக்கு இருக்கிறது என்றேன். ரமேஷ் ஒரு மாதம் ஆகியும் தன் அறையில் வாங்கி வைத்திருக்கும் தக்காளி கெடாமல் இருக்கிறது என்றான். ஃபேஸ்புக்கில் ஜடாயு என்கிற நண்பர் தான் இந்தியா முழுக்கச் சுற்றியவன் என்றும் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிக அதிகமாக ஜாதித் தீண்டாமைகள் இருப்பதாகவும் அறிவிக்கிறார். ரஜினிகாந்த் இந்தியாவை ஒரே நாளில் மோடி மாற்றிவிட்டார் என்று சொல்கிறார்.

PRIME MEDIAக்கள் தான் TRENDINGஐ தீர்மானிக்கிறது என்பதை அறியாமல் நாம் சமூக ஊடகத்தைப் புரட்சியின் விளைநிலமாக பாவிக்கிறோம். அவ்வப்போது இரயில் சரியான நேரத்திற்கு வருகிறது, அதை விட ஆச்சரியமாக வார இறுதியில் பயணிக்க டிக்கட்கள் கிடைக்கின்றன.

ஏழைகள் பணக்காரர்களுடைய கருப்புப் பணத்தை க்யூவில் நின்று மாற்றுவதைத் தடுப்பதற்காகத் தான் வங்கியில் பணம் மாற்றுபவர்களின் விரலில் மை வைக்கப்படுகிறது என்று ஒரு பீ.ஜே.பி பிரச்சாரகர் சொல்கிறார். அவர்களிடமிருந்து தான் சில சிறந்த கவிதைகள் எழுதப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களால் மட்டுந்தான் சில முக்கிய தொகுப்புகள் வந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. யாரோ ஒருவரை வைத்து எழுதினாலும் அது சுயசரிதை தான் எனச் சொல்லப்படுகிறது. ஓவியர் சிவக்குமார் இளைஞர் சிவக்குமாராக இருந்த போது வரைந்த ஓவியங்களை அகழ்ந்தெடுத்த மீடியாக்களும், சில ரிட்டையர்டு ஓவியர்களும் அவரை EMINENT ARTIST என்று ஸ்டிக்கர் ஒட்டின. ஸ்காலர்கள் தங்களைத் தாங்களே அறிவித்துக் கொள்கிறார்கள். இலக்கியவாதிகள் தங்கள் மனைவி மக்களுக்கு நெபோடிஸ அப்பத்தையும் திராட்சையும் கொடுத்ததை உலகுக்கு அறிவிக்கிறார்கள்

***
இப்போது வாடகைக்கார்களை உபயோகிக்கும் மத்தியத்தர வர்கத்தின் எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பது மறுக்கமுடியாத உண்மை. மோடியின் தப்புக்கணக்கு போன்று மத்தியத்தர வர்கத்தை முட்டாளாக்க முயன்றால் அது தோல்வியில் தான் முடியும் ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே முட்டாள்கள் தான். (நானுந்தான்).

ஜீவ கரிகாலன்

புதன், 9 நவம்பர், 2016

பேலியோ வொர்க் ஆகுதா?



பெற்றோர்களில் இருந்து நண்பர்கள், கடந்து செல்பவர்கள் என்று பலரிடமும் இலவச அட்வைஸ் சொல்லும்போதும், குறிப்பாக யுவதிகள்களின் ’அங்கிள்’களைக் கேட்கும் போது இப்படி போலியாக சிரித்தபடி தப்பித்துக்கொள்ளும் வழக்கம் கொண்டிருந்தேன்.

பேலியோ எல்லாவற்றையும் மாற்றிவிட்டது, இத்தனைக்கும் எனது மெடிக்கல் ரிப்போர்ட் மிகவும் மோசமான பல விளைவுகளுக்கு எச்சரிக்கை விடுத்ததை அறிந்த, சில நண்பர்கள் பயமுறுத்தியபோதும், டீமோட்டிவேட் செய்தபோதும். அது என்னைக் கட்டுப்படுத்தியது, அதன் மீதுள்ள நம்பிக்கையை மட்டும் முதலீடு செய்தேன். நவம்பர் மாதம் 2013ல் எனது எடை 117 கிலோ இருந்தது, அதற்குப் பின்னர் பார்க்கவேயில்லை. பேலியோ ஆரம்பித்தது ஆகஸ்ட் மாதத்தில் தான். மற்றவர்களைப் போல விடாப்பிடியான வைராக்கியத்தோடு இருக்கவில்லை, 32 ஆண்டுகளாக இருந்த பழக்கத்தை ஆயினும் பெருமளவு கட்டுப்படுத்தினேன். வெளியூர் பயணங்கள், வார இறுதியில் சீட்டிங் செய்தாலும் எண்ணெய் பலகாரம் போன்றவற்றை விட்டுவிட்டாலும், இனிப்புகளை அவ்வப்போது எடுத்துவந்தேன். கோர்ஸ் ஆரம்பிக்கும் பொழுது 116 கிலோவும், இன்றைக்கு காலை 99.9 என்றும் வந்தது.

மரக்கறி(சைவம் என்றெல்லாம் மதச்சாயம் வேண்டாம்) பேலியோ உணவுவகைகளுடன் முட்டையும் தினசரி எடுத்து வந்தேன். முன்பு போல் முதுகு வலியோ, அசதியோ எனக்கு வருவதில்லை. டயட்டிங்கில் கூட ஒன்றிரண்டு முறை தலைவலியைத் தவிர வேரெந்த பாதிப்பும் நான் உணரவில்லை. உடல் முன்பை விட வலிமையாக இருக்கிறது.
46 சைஸ் சட்டையும் பேண்டும் என சமமாக இருந்த எனக்கு, இடுப்பளவில், சட்டை அளவில் இரண்டு சைஸ்களுக்கு குறைத்திருக்கிறேன். டபுள் எக்ஸ் எல்லில் (XXL) இருந்து எக்ஸ் எல் (XL). 



உலக அளவில் எல்லாத்துறைகளைப் போலவே மருத்துவத்துறையிலும் நிறைய அசூரர்கள் இருக்கிறார்கள். சக்கரை, இரத்தக் கொதிப்பிற்கான வரைமுறை அளவுகளைத் திருத்திய உலக சுகாதார நிறுவனத்தின் (2013 GUIDELINES) செயல்பாடுகளைப் பார்க்கும் பொழுது பன்னாட்டு வியாபாரமாக உலகமயமாக்களினால் பெரிய சந்தையாகிவிட்ட PHARMATEULS துறை, இந்தியா போன்ற நாடுகளில் பெரிய தாக்கத்தையும், அதிகாரத்தையும் கொண்டிருப்பார்கள் என்பது எளிய யூகமே. அவர்கள் மூலம் பிரச்சினைகள் வருவது எதிர்ப்பார்ப்பிற்குரியது தான். அதுவும் இத்தனை அமைதியான புரட்சி ஒன்றைக் காணும் போது.

ஆனால் இது போன்ற மிரட்டல்கள் வரும்பொழுது பலனை அனுபவிப்பவர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்கிறவகையில் தான் இந்தப் பதிவு இல்லாவிட்டால் இன்னும் நிறைய எதிர்பார்ப்புகள் வைத்திருக்கிறேன்.

தினமும் பேலியோவால் மாற்றமடைந்து வரும் நபர்களின் டெஸ்டிமோனியல்களைப் பார்க்கையில், அதில் நானும் ஒருவனாக அங்கம் வகிக்கையில், இதுவரை திரு.செல்வன், திரு.விஜய் உள்ளிட்ட அனைத்து மெம்பர்களுக்கும் எனது நன்றியையும் வாழ்த்துகளையும் ஆதரவு நிலைப்பாடாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரொம்ப காலமாகவே எனக்கு இந்த டயட்டிங்கை பரிந்துரைத்து வந்த நண்பர்களுக்கும், என்னை இங்குத் திருப்பிவிட்ட தோழமைக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


என்னிடமே வெயிட் லாஸ் டிப்ஸ் கேட்கும் போது எனக்கு சிரிப்பு தான் வருகிறது. அவர்களிடம் “ஆரோக்கியம் & நல்வாழ்வு” என்று பாந்தமாக ஒரு பாதிரியாராக இந்தக் குழுமத்தைப் பரிந்துரைத்தபடி செல்கிறேன்.

மதமாற்றத்தை போலல்லாது மனமாற்றத்தை விரும்பும் ஜீவ கரிகாலனாகிய நான்.

09/11/2016

வியாழன், 27 அக்டோபர், 2016

ஒரு கோடரியின் கூர்பிளவில்

ஒரு கோடரியின் கூர்பிளவில்
(வரலாற்றினைப் பொய்களாக்கி வணிகம் செய்பவனின் உபவரலாறு)



ஞாயிறு அதிகாலை வரை சனியின் இரவாகவே நீண்டிருந்ததை ஹரி அழகனின் கண்களில் தெரிந்து கொள்ள முடிந்தது. கொச்சியில் நடைபெற இருக்கும் சந்திப்பு ஒன்றில் கலந்துக் கொள்வதற்கான முஸ்தீபுகளில் இருக்கும் போதும் ஃபேஸ்புக்கில் நிலவரம் எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதையும் பார்க்க ஆரம்பித்தான்.

கவுச்சில் அமர்ந்தபடி லெமன் டீயும் ஆப்பிளும் ஒவ்வொரு விடியலுக்குப் பின்பும் வழக்கமான ஒன்று தான். ஆப்பிள் கடிப்பதற்கல்ல, கொறிப்பதற்கு. ஐபேடில் செய்திகளைக் கொறிப்பதற்கு முழுவதுமாக மாறியிருந்தாலும், அதற்காகச் செய்தித்தாள்கள் வாங்கப்படுவது நிறுத்தப்படவில்லை. தனது விசுவாசிகளை அதிகமாக நேசிக்கும் ஹரி, தன் விசுவாசிகளின் நிறுவனங்களையும் நேசித்துக் கொண்டிருப்பதன் குறியீடு அது.

சென்ற ஆண்டுக் கண்காட்சியில் பரிசோதனை முயற்சிக்கே கிடைத்த பிரம்மாண்ட வெற்றியை இந்த வருடமும் பெற வேண்டிய ஆசை வயிற்றில் கட்டியாக உருண்டுக் கொண்டு இருந்தது. இரண்டு ஹிமாலயா கேஸெக்ஸை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். வளி செல்வதற்கு வழிவிட்டு சோஃபாவின் கைப்பிடிமானத்தில் கால்களைப் போட்டுக் கொண்டான். ஐபேடினை கண்ணாடி மேஜையில் வைத்துவிட்டு, சார்ஜில் இருந்த மடிக்கணிணியை விடுவித்துத் தொடைகளில் வைத்துக் கொண்டான்.

இன்பாக்ஸில் கூடுதலான நோட்டிஃபிகேஷன்கள் இருந்தன. எம்.கே.மாயவனின் சுட்டியை மட்டும் திறந்தான்.

“அவா ரியாக்‌ஷன் இன்னும் பத்தலடா!!”

“ம்ம்”

“ஏதாச்சும் ஸ்பேஸ் வாங்கிக் கொடுக்கிறியா, இல்லாட்டி நானே நம்ம ஏரியால எழுதட்டுமா”

“Please wait. But I need your English Version Only”

“எப்படியும் என்னைத் தமிழன்னு ஒருத்தனும் ஏத்துக்கப்போறதில்ல ” 
வன்மத்தை மறைத்து வைத்திருந்த ஸ்மைலிகள் ஒன்றுடன் ஒன்று பரிமாறிக் கொண்டன.

மடிக்கணிணியின் சூடு அவன் சாய்ந்திருக்கும் கோணத்தை மாற்ற வைத்தது, எதிரேயிருந்த கண்ணாடி மேஜையில் அதனை வைத்தான். மடிக்கணிணிக்கு கீழே இரண்டு அழைப்பிதழ்கள் இருந்தன. அடுத்த மாதம் நடக்கவிருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான அமைப்பு ஒன்றினை நிறுவும் விழாவில் இந்தியாவின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற குழுவில் இவனும் அங்கத்தினராக இணைவதற்கான அழைப்பு அது. மற்றொன்று இந்திய அளவில் பதிப்பாளர்களை ஒருங்கிணைத்துப் பதிப்புத்துறையில் அடுத்தக் கட்டங்களை நோக்கி நகர்வதற்கான வருடாந்திர கூட்டத்திற்கான அழைப்பு.

மடிக்கணிணிக்கு அருகில் அருகில் அந்தக் கன்னடத்தமிழ் கவிஞரின் பழைய கவிதைத் தொகுப்பு ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில் மஞ்சள் ஸ்டிக்கரில் “JAN’17 - ஹரிஹரன்” என்று ஒட்டப்பட்டிருந்தது. கணிணியின் திரையில் ஸ்டிக்கி நோட்ஸ்களில் தான் செய்ய வேண்டிய பல்வேறு வேலைகளும் குறிப்பிடப்பட்டிருந்தன.

கொச்சி கலந்தாய்வில் தமிழகத்தில் உள்ள பதிப்புத்துறையின் சவால்கள் என்கிற தலைப்பில் பேசவிருந்த தலைப்பிற்கு இவனது உரை பாதியளவு தயாராகிக் கொண்ருந்தது. மீதத்தை தட்டச்சு செய்ய ஏதும் தோன்றாததால் தனது உரையில் உள்ள பிழைகளைத் திருத்தம் செய்துக் கொண்டிருந்தான். பேராசிரியருக்கு நேர்ந்த அவலங்களைச் சொல்லி அந்த உரையின் பெரும்பகுதி தயாரிக்கப்பட்டிருந்தது. இடையிடையே தன் தந்தையின் பெரும்பகுதி எழுத்துகள் மொழிபெயர்க்கப்பட்டு இருந்தன. தன் சொந்த கருத்து சிலவற்றிலும் தன் தந்தையின் பெயரைச் சொல்லியிருந்தான். அவனது தந்தை இறந்த பின்னும் எழுதிக்கொண்டிருக்கும் சிலுவையைச் சுமக்காத ரட்சகர். தன் தந்தைக்குப் பின்பு கொள்ளை மகசூல் பேராசிரியர் நிலத்தில் தான் என்பது ஹரி அழகனின் கணக்கு. தற்பொழுது தான் வெள்ளாமை விதைக்கப்பட்டுள்ளது அறுவடைக்கு இன்னும் ஒரு வருடமேனும் காத்திருக்க வேண்டும். கணிணியின் முகப்பில் பேராசிரியர் பெயர் போட்டிருந்த ஃபோல்டர் இருந்தது, அதில் சப் ஃபோல்டர்களாக எம்.கே.மாயவனின் கட்டுரைகள், அண்மையில் தொடங்கப்பட்ட ஆங்கில நாளிதழின் பெயரில் ஒன்றும், தமிழ் பதிப்பில் ஒன்றும் சப்ஃபோல்டர்களாக இருந்தன, மற்றொரு ஃபோல்டரில் இந்தச் சர்ச்சைகள் குறித்துப் பிரசுரமாகியிருந்த வெவ்வேறு கட்டுரைகள்.

தொடர்ச்சியாக அடித்துக் கொண்டேயிருந்த அலைப்பேசியை எடுத்துப் பார்த்தான். அழைப்பில் இருந்தது, அந்த நாளிதழின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் கிருதாகரன்.

சற்று நேரம் பார்த்துவிட்டு அந்த அழைப்பை எடுத்துப் பேச ஆரம்பித்தான்.

"சொல்லுங்க க்ருதா, எப்படி இருக்கிங்க”

“இந்த வருஷம் எத்தனை புக் கொண்டு வரப்போறிங்க, இருக்குற எல்லா விருதும் வாங்கிருவிங்க போலருக்கு.”
மிகச் சௌகரியமான நிலையில் சிரித்துக் கொண்டான்.

“பின்ன தென்னாட்டின் பீ.சாய்நாத் நீங்க தான. ம்ம் ”
“அப்படி இல்லன்னுலாம் சொல்ல முடியாது. அவாகிட்டயும் நாங்க ரைட்ஸ் வாங்க முடியல, நீங்களும் சொந்தமாத்தானே கொண்டு வற்ரீங்க”
“ஜஸ்ட் ஃபார் ஃபன், இந்த வருஷமும் உங்க புக் நம்ம ஸ்டால்ல தான், டாப் செல்லரா இருக்கும்”
எதிர்முனையின் கேள்விக்கு அவனது முகம் சற்று மாறியது.
“வாஸ்தவம் தான் ஆனா ப்ரொஃபசர்க்கு இந்த வருஷம் ஸ்லாட் கெடையாது அடுத்த வருஷம் தான் கொண்டு வரனும். அதுக்கு முன்ன ரீலாஞ்ச் பண்ண சில இவென்ட்ஸ்லாம் பண்ணனும் அதுக்கு இன்னும் அவர் ரெடியாகல ”
“சே சே… ஸ்கூல் பையன் மாதிரி. சின்ஸியரா வேலை செய்யுறார்”

எதிர்முனையின் சப்தமான சிரிப்பு. ஹரியிடம் கோபத்தைக் கொணர்ந்தது.
“ஒரு முக்கியமான வேலைல இருக்கேன், அப்புறம் பேசலாம்” எனத் துண்டித்தான்.

மலச்சிக்கலுக்காக மருந்து சாப்பிட்டிருந்தும் ஒரு முன்னேற்றமும் தெரியவில்லை, கழிப்பறையில் உட்கார்ந்து பதினைந்து நிமிடங்கள் ஆகியும் எந்த பலனும் இல்லை. போனில் கிருதாகரன் பேசியது ஞாபத்திற்கு வந்தது.

’சே சே… ஸ்கூல் பையன் மாதிரி. சின்ஸியரா வேலை செய்யுறார்’
’நீங்க தான் நாமக்கல் போர்டிங் ஸ்கூல விட ஸ்ட்ரிக்டான ஸ்கூல் நடத்துறிங்களே அப்புறம் கொடுத்த ஹோம்வொர்க்க செய்யலன்னா விடுவியளா’

விழுங்கிய மாத்திரைகளின் அளவிற்கே வெளியேற்றம் ஆனதில். ஆறுதல் கொள்வதா, கோபம் கொள்வதா என்று தெரியவில்லை. ஆனால் வெளியில் தொடர்ந்து அலைப்பேசி அடித்துக்கொண்டிருந்தது எரிச்சலூட்டியது. இன்னும் அரை மணி உட்கார்ந்திருந்தாலும் எதுவும் ஆகப்போவதில்லை, கிளம்பலாம் என்று தோன்றியது. வெளியே சென்று அலைப்பேசியை எடுத்துப் பார்த்தான். மணிமாறன், செல்வம், அர்விந்ராஜ் என எல்லோரும் அழைத்திருந்தார்கள். அர்விந்ராஜ் குறுந்தகவலும் அனுப்பியிருந்தார்.

அன்றைய தினம் எதிர்பார்க்காத திருப்பத்தை உருவாக்கியிருந்தது.
கீழே அலுவலகத்திற்குச் சென்று புதிதாக அச்சடித்து வரப்பட்டிருந்த பிரதிகளை எடுத்து வந்தான். பச்சை வண்ண அட்டையில் ”கோடரியின் பிளவில்” என்கிற நூல். அதற்குள் அமெரிக்காவிலிருந்தும், கனடாவிலிருந்தும் அழைப்புகள் வர ஆரம்பித்திருந்தன. முகநூலினைத் திறந்தால் புல்லுருவிகள் பட்டியலில் இருக்கும் அத்தனைப் பதர்களும் தமது பதிப்பகத்தைக் கேலி செய்து பதிவுகள் போட்டுக் கொண்டிருந்தனர்.

“ஃபக்”

டீச்சரை போனில் அழைத்துக் கண்டபடித் திட்டினான். மணிமாறன், டீச்சர் உட்பட தன் பதிப்பக வேலையாட்கள் அனைவரிடமும் கடுமையாய் நடந்துக் கொண்டான். பேராசிரியரின் அழைப்புக்குப் பதில் சொல்லவும் இல்லை.

எம்.கே.மாயவன் அழைப்பில்..

ஸ்பீக்கரில் போட்டுவிட்டு சோபாவில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.

“சொல்லுங்கோ”

“என்னடா அம்பி.. ப்ளர்ப இப்படியா போடுவா. இதெல்லாம் செக் பண்ண மாட்டானா அந்த மணிமாறன்.”

“ஒரேயொரு ஆள நம்பி என்ன ப்ரயோஜனம். ஹோல் டீம் சக்ஸ்”
“பழைய இதழ்களுக்கு லாகின் வைன்னு சொல்லிண்டே இருந்தேன் பாத்தியா”
“மாமா! அவாட்டா இல்லாத காசா! லாகின் பண்ணிப் படிச்சுட்டுப் பேசுவா.”
“ஆல் தெ க்ரெடிட் கோஸ் டூ ஒன், நவ் ஐ சுட் ப்ளேம் தெ ஆத்தர்”
“அவாள தான் கொன்னுட்டாய்ங்களே”
“மாமா”
“ஐ மீன் செத்துட்டாளே”
“மாமா நான் டீச்சர சொன்னேன்”
“ஹி ஹி அம்பி.. நீயே டீச்சர ஆத்தர்னு சொல்லலாமா, அவுங்களும் அதே தான சொல்றாங்க”
“இட்ஸ் நாட் அ டைம் ஃபார் ஜோகிங்”
“சாரிடா அம்பி, அவாளையே ஏதாச்சும் மறுப்பு எழுதச் சொல்லலாமே”
“நீங்க அந்த ஆர்டிகிள படிச்சிங்களா”
“ம்ம் என்னதான் புலின்னாலே வெறுப்பா இருந்தாலும், அவுங்கள க்ரிட்டிசைஸ் பண்ணா கூட பிடிக்கலடா அம்பி”
“சரி நான் அவா கிட்ட பேசிண்டு வாரேன்.”

கொச்சி அழைப்பிதழைப் பார்த்தான். மீதமிருக்கும் தனது உரையை நிறைவு செய்ய முடியுமா என்றும் அவனுக்கு சந்தேகம் எழும்பியது.
கீழேவந்திருந்த விஸ்வநாதனிடம் அவனது சக ஈழத்து ஆட்கள் யார்யாரெல்லாம் பிரச்சினை பண்ணுகிறார்கள் என்கிற பட்டியலைத் தயாரித்துத் தரும்படி கேட்டான். சென்னை வரை போகலாம் தயாராக இருக்க தன் டிரைவரிடம் சொல்லி வைத்திருந்தான்.

ஆனாலும், தன் மலச்சிக்கல் குணமாகாமல் பயணிக்க முடியாது என்று தெரிந்துருந்தது. சாப்பிட்ட மருந்துகள் பயணத்தின் போது வேலையைக் காண்பித்துவிடக் கூடாது அல்லவா.

அது ஒரு முன்னாள் பெண் விடுதலைப் புலியின் சுயசரிதை நூல். அந்த டீச்சர் எழுதிய நான்காண்டுகளுக்கு முன்னர்த் தன் இதழில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி நூலட்டையின் பின்பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. இணையத்தில்ன் சமூக ஊடகங்களில் அது எப்படியோ அம்பலப்படுத்தப்பட்டுவிட்டன. தனது துதிபாடிகளால் கூட பதில் சொல்லமுடியவில்லை, மற்ற நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தன் விசுவாசிகளும் இந்த விசயத்தில் சரியாக பதில் சொல்லமுடியாது தவித்துக் கொண்டிருந்தனர். கொச்சி பயணத்தை ரத்து செய்துவிட்டு தன் வீட்டிலேயே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தான். அதுவரை மணிமாறன், டீச்சர் ஆகியோரை மவுனம் சாதிக்கச் சொன்னான்.
பேராசிரியர் போல மற்றவர்கள் எல்லோரிடமும் பெர்ஃபெக்‌ஷனை எதிர்பார்த்தது தவறு தான் என்று தோன்றியது. அயல்நாட்டுக் ப்ளாக் கிவி பப்ளிஷர்ஸுடன் இன்னும் சில புத்தகங்கள் மொழிபெயர்த்துப் போடும் திட்டங்களுக்கு இது போன்ற அம்பலங்களால் ஊறுகள் நேருமென அவனது கவலை மலச்சிக்கலுக்கு மேலும் உதவிகள் புரிந்தன.
***
அடுத்த நாள் அலுவலகத்தில் சந்திப்பு:

டீச்சர், மாயவன், பேராசிரியர், மணிமாறன், செல்வம், விஸ்வநாதன் எல்லோரும் அமர்ந்திருந்தார்கள். ஹரியின் வெள்ளை முகம் சிவந்திருந்தது. குளிரூட்டப்பட்டிருந்த அந்த அறையில் அளவுக்கு அதிகமாக வாசனை திரவியம் தெளிக்கப்பட்டிருந்தது முன்னேற்பாடாய். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்களேயொழிய பெரிதாக ஏதும் பேசிக்கொள்ளவில்லை. ஹரியில் குரல் சப்தமாக ஒலித்தது?

 “ப்ளடி, இது என்ன வெறும் புக் சேல்ஸ் மட்டும்னு நெனச்சுக்கிட்டிருக்கீங்களா”

சப்தமாக ஒலித்தது ஹரியின் ஆரம்பப்பேச்சு. தனது கோபத்தில் கிவியுடன் போட்டிருக்கும் பெருத்த திட்டங்கள் பற்றியோ, தமிழ் டயாஸ்போரா அமைப்பு பற்றிய விவரங்களோ, கொழும்பு சந்திப்பில் உடன்பாடாகியிருந்த சில ஏற்பாடுகளின் சுவடுகளும் கலந்திருந்தது எம்.கே.மாயவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. மற்றவர்களுக்கு 58 லட்சம் பெயிட் அப் ஷேர் கேபிடல் உள்ள நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியின் கவலையாக மட்டுமே தெரிந்தது.

 “கவுண்டருங்க மாதிரி கல்வியில் ஃபர்ஸ்ட் ஜெனரேசன், செகண்ட் ஜெனரேஷன் மக்களா இருந்தாங்கன்னா ஏதாச்சும் ரியாக்ட் பண்ணுவாங்க அத நாம யூஸ் பண்ணிக்கலாம். இவுங்க வள்ளலாரையே வம்பிழுத்த கோஷடிங்க.” என்று பேசிக் கொண்டிருந்த எம்.கே.மாயவனைப் பேராசிரியர் முறைத்துக் கொண்டிருந்தார்.

“அதோட நிறுத்துவாங்களா இந்த நாம் தம்ளர் க்ரூப்ஸ், அப்புறம் மே மாசம் காலண்டர், அவுங்கவுங்க வீட்ல தண்ணி வராததுக்கும் பாப்பான் தான் காரணம்னு சொல்ற கருப்புச்சட்டை கும்பல் எல்லாரும் கூடிருவாங்க”

“அப்போ தோழர்கள்லாம்??” பேராசிரியர் அப்பாவி என்று அவ்வப்பொழுது நிரூபிப்பதுண்டு.

“இது ஈழம் ப்ரொஃபஸர், அவா கண்டுக்கமாட்டா. நமக்கு தான் சப்போர்ட். மறுபடியும் ப்ரியாணியோட மாநாடு ஏற்பாடு செய்யனும், ஹரி கருப்பு சட்டை போடனும்” என்று சிரித்தார்.

“எல்லா தோழர்களும் ஒன்று கிடையாது” என்கிற பேராசிரியரின் பதில் யார் காதிலும் விழவில்லை.

ஹரி தனது கருப்பு கலர் பைஜாமாவை இஸ்திரி பண்ணவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

இறுதியாக டீச்சரே வாய் திறந்தார். ”நான் அந்தக் கட்டுரைய அவுங்களே என் சுயசரிதைக்கு பயன்படுத்திக்கறேன்னு சொல்லி என்னிடம் ஒப்புதல் வாங்கிதான் பயன்படுத்துனாங்கன்னு ஃபேஸ்புக்ல போட்டுடுறேன்”

எல்லோருக்கும் அதில் ஒப்புதல் இருந்தது. வேறு வழியேயில்லை.
“சரி, உங்களுக்கு சப்போர்ட்டா யாரப் பேசவைக்கலாம் க்ருதாகரன சொல்லட்டுமா” எனும் போது படபடப்பு மிகுந்திருந்தது அவன் பேச்சில்.

“வேண்டாம் சார். நானே ப்ரொஃபஸ்ர் பாஸ்கரசாமி கிட்ட பேசியிருக்கேன்.”

“குட் அப்போ மெய்மை பத்திரிக்கைல ஆர்டிகிள் ஈஸியா வரும்”

“ம்ம்ம்”

“நல்ல யோசனை அம்பி”

“விஸ்வாகிட்ட சொல்லி ஃபேஸ்புக் சாட்டிங்க்ஸ் மாதிரி ஃபோட்டோஷாப் ஃபைல்ஸ க்ரியேட் பண்ணி அனுப்பச் சொல்லுங்க. ஒரு ஃபேக் ஐடில ஒரு சாட்டிங் கிரியேட் பண்ணி, டேட்ஸ மட்டும் ஆல்டெர் பண்ணிண்டா போதும்”

எல்லோர் முகத்திலும் கொஞ்சம் தெளிவு பிறந்தது.

ஏதோ ஞாபகம் வந்தவனாக ஹரி -
”முக்கியமான ஒரு விஷயம், வேற ப்ளப் போட்டு அட்டை டிசைன் பண்ணி. அடுத்த பதிப்புன்னு சொல்லி ப்ரிண்ட் பண்ணுங்க. இந்த புத்தகங்களெல்லாம் பை பேக் பண்ணுங்க, ஆனா இந்தவாட்டி சத்தமே வராம..”

சட்டென தன் கன்னத்திலேயே அடித்துக் கொண்டார் பேராசிரியர். எல்லோரும் திடுக்கிட்டனர்.

சிரித்தபடி “கொசு” என்றார்..

”ஈழக்கொசு” என்று சன்னமான ஒலியில் எம்.கே.மாயவன் ஹரியின் காதைக் கடித்தார்.

அதே நேரம் மாத்திரை வேலை செய்ய 30 மணிநேரம் ஆகியிருக்க வேண்டும், நசுக்கிவிட்ட வளியைப் பாதியிலேயே நிறுத்திவிட்டான். இப்போது அவன் கழிப்பறைக்கு நம்பிக்கையுடன் தயாராகியிருந்தான். எல்லோர் முகமும் கோணிக் கொண்டிருந்தது.

எம்.கே.மாயவன் சன்னமான குரலில் “ஈழக்குசு” என்றார்.


தற்காலிகமாக ஒரு நிம்மதியுடன் மாடியில் இருந்த கழிப்பறைக்குச் சென்று கொண்டிருந்தான். வழியில் அந்த நாளிதழ் மேஜையில் இருந்தது. ஐபேடில் செய்தி வாசிக்கும் பழக்கத்திற்கு மாறியிருந்த அவன், இன்று அந்த நாளிதழைப் பல மாதங்களுக்குப் பின்னர்க் கையில் எடுத்தான்.

உனக்கு வேலை வந்துருச்சு என்று நாளிதழைப் பார்த்து பேசியபடியே கழிவறைக்குள் எடுத்துச் சென்றான்.

            ****


-ஜீவ கரிகாலன்




புதன், 12 அக்டோபர், 2016

மோன நிலையிலே - 2

தத்தை நெஞ்சம்




இந்த இரண்டு மூன்று வருடங்களில் துருப்பிடித்து முறிந்து விழுமளவு மனம் சோர்ந்து போகும் நேரமெல்லாம் மீட்டெடுப்பு நிகழ்கிறது அம்முவால் தான். 

குறுட்டுக் கற்பிதங்களும், சீழ் பிடித்த வரலாற்று அறிவும், நுனிப்புல் கோட்பாடுகளும், 90 கீமீட்டர் ஆரமே பயண அனுபவமும் கொண்டவனின் துலாபாரத்தில் கொழுப்பு, திமிர் இரண்டும் எடைக்கு சரிநிகர். ஆனால் எல்லாவற்றையும் நொறுக்கித் தள்ளியவள் அவள். அவள் கரிசனமிக்க அன்பு என்பது பாரபட்சமற்றது கீழத்தஞ்சையில் ஏதோ ஒரு பம்புசெட்டில் ஒற்றை நாளில் தன்னுடன் சேர்ந்து குளித்த ஒரு தோஸ்து(தோழி)க்கும் பல நாட்களாக இலக்கியம் குறித்து தீவரமாக தர்கம் புரியும் எந்த மானுடருக்கும் ஒரே அன்பு தான், அதே அளவு தான் பட்டாம்பூச்சிகளும் பறவைகளும் அவளுக்கு. செவ்வியல் இலக்கியங்களிலிருந்து, மேலை நாட்டு, மலையாள, மராட்டிய என ஏதாவது ஒரு இலக்கியத்துடன் தான் ஒரு உரையாடல் நிகழும், ஆனாலும் அவள் தன் சமையலில் மோர்க்குழம்பு வைத்த விதம் பற்றி ஒன்றொன்றாக விவரிக்கும் போதோ, வழக்கமான சுலைமானியை விடுத்து என்றாவது ஒரு ஏலக்காய் தேநீர் குடிக்கும் போதோ என்னிடம் பேசினால் என் நிலைமை உதறல் ஆகிவிடும்.

காக்கைகளற்ற ஊரில் தற்பொழுது வசிக்கிறாள் என்று சென்ற பதிவில் எழுதியிருந்தேன், அடுத்த பதிவிலும் அதே ஊர் தான் இதற்குள் கிடைத்த சில் நாட்கள் ஓய்வில் பல நூறு கி.மீட்டர்கள் அனுபவங்கள் சேர்ந்திருக்கும். காக்கைகளற்ற ஊரில் கிளிகளுக்கு பஞ்சமில்லையாம்.
போனில் பேச ஆரம்பிக்க வந்தாலே, ஒரு தத்தை அவளை பேச விடாமல் தடுக்கிறது. நான் பேசும்போது அவள் கேட்டுக்கொண்டிருக்கையில் எந்த சப்தமும் போடாமலிருக்கும் தத்தை, அவள் பேச ஆரம்பிக்கையில் சத்தம் போடுகிறது. ரொம்ப நேரம் அதே இடைஞ்சல் தான். பின்னர் அந்த தத்தைக்கு அவள் ஒரு பெயரை உச்சரிக்க சொன்னாள்.

ஆஹா டங் டிவிஸ்டரா என்று அலைவரிசையை மாற்றிவிட்டு அமைதியாக இருந்து கொண்டது. (என் பெயர் தான் அந்த டங் ட்விஸ்டர்)

அந்த தத்தைக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம் தான் தத்தை தனக்குப் பரிச்சயமில்லாத மொழியைப் பேச வேண்டும் என்று சொன்னதும் அமைதியாகி விடுகிறது. ஆனால் எனக்கு ஒரு மொழியைத் தவிர வேறொன்றும் தெரியாது என்பதால் சத்தம் போடுகிறேன், தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் நான் கூச்சல் போடுகிறேன். 50 வருடமாக எங்கள் ஊரில் எனக்கு முந்தைவர்களிடமிருந்து கற்றது இது தான், கூச்சல் போட. நான் எழுதினாலும் அது கூச்சலாகத் தான் இருக்கிறது. அந்த கூச்சலை விட உராய்ந்து போன பேனாவை காகிதங்களில் உராய்க்கும் சப்தம் மேலானது. பகுத்தறிவு என்று எழுத ஆரம்பித்த எங்கள் பேனாவின் கூச்சல் எழுத்துப்பிழையாக பார்ப்பனிய எதிர்ப்பை போதிக்க கூச்சலிட்டது.

இந்த இம்பொசிஷன் கூச்சல் ஒரு பக்கமிருக்க, இதற்குப் பழி வாங்கும் கூச்சல் இன்னொரு புறம். இடையில் அல்லேலூயா கூச்சல் வேறு.
இந்த கூச்சல் அருவருப்பாக மாற்றம் பெற்ற வரலாறு, இசையை கவின்கலையை ஒரு சமூகம் தொலைத்த வரலாற்றிட்கு இணையானது. 

ட்ராக்டர்களை எதிர்த்து பண்ணையார்களைக் கொன்றுபோட்டு மற்ற கணவான்களைத் துரத்திவிட்ட அரசியலின் வாரிசுகள் ட்ராக்டர் கடன் தள்ளுபடி கேட்டு அடையாள உண்ணாவிரதம் இருக்கும் மான்பு அரசியல் வரலாறுகளை உள்ளடக்கியது அந்த கூச்சலில் விளைந்தவை - கூச்சலின் மகசூல்களான இரைச்சல்கள். இரைச்சல்களாலும், கூட்டல்களாலும் கட்டியமைக்கப்பட்ட பெருங்குடும்ப கனவுக்கு அதிகாரம் இருந்தாலும் இல்லாவிடினும் எந்த பலகீனமும் ஏற்படவில்லை என்பது தாஜ்மஹால் வரை நீண்ட தூரப்பயணம் சென்று வந்த தத்தையின் கீச்ச் கீச்சு.

இப்போது தத்தைகளை அந்த கிராமம் இடைஞ்சலாகப் பார்க்கிறதாம், விவசாயத்திற்கு பெரும் எதிரியாம். இப்படித்தான் மயிலைக் கொன்று ஒரு கூறு நெல் போனஸாக வாங்கிய கரிசல் காட்டு வாழ்வியல் திரிபினை நான் சேகரித்துக் கொண்டிருந்த கதையில் அழகியலாக நினைத்துக்கொண்டிருந்தேன். உணவுச் சங்கிலியில் மனிதன் செய்கின்ற குளறுபடி தான் தத்தையினையும், மயிலையும் மனிதன் விரோதியாகப் பார்க்க வைத்திருக்கிறது.

மனிதன் முற்றிலும் இயற்கைக்கு எதிராக வாழ் ஆரம்பித்த பொழுதும், சென்னையில் நடந்திருந்த இயற்கைப் பேரிடரில் உண்மையிலேயே அரசு கொஞ்சம் மெத்தனமாய் இருந்திருந்தால் நன்றாகத் தான் இருந்திருக்கும். சே!! ஒரு தொற்று நோய் கூடப் பரவவில்லை.

ஏற்கனவே நசித்துப்போன ஒரு சிறிய இனமாக ஜைனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது, அவர்களின் சுவடுகளைக் கூட அவர்களே மறந்து கொண்டிருக்கும் காலமிதில் ஓணம்பாக்கம் போன்ற தொன்மையான வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து மனிதநடமாட்டமுள்ள பகுதிகளில் பலநூறு அடிகள் குவாரிகள் குடைந்து கொண்டிருக்கப்படுகின்றன.

காவிரியைத் தவிர வேறு விவசாயிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று PRIMEஊடகங்களும், அவர்களது SUB PRIME ஊடகங்களும்(WATSAPP, FACEBOOK,TWITTER) ஏன் ஒரு போதும் கூவவில்லை.
சரி, “இந்த ட்விட்டரைப் பற்றி தத்தையிடமாவது கேட்டுச் சொல்” என்று அம்முவிடம் கேட்டேன். 

பாவம் அந்த தத்தை கீச்சும் ட்வீட்டுகள் உனக்குப் புரியாது போடா என்றாள்

உண்மை தான் எனக்குப் புரியாது தான். 

அவளிருக்கும் ஊருக்கு ஒரு புத்தகத்தை வாசிக்க அனுப்பலாம் என்று முகவரி கேட்டால், அந்த ஊரின் விலாசம் அவளுக்குத் தெரியவில்லை என்றாள், அவளுக்கு மட்டுமல்ல அந்த ஊரில் உள்ள மனிதர்களுக்கே அந்த விலாசம் தெரியவில்லையாம். அந்த அளவுக்கு தொடர்பற்று இருக்கும் கிராமம் என்று சொன்னாள் வெறும் காக்கைகள் இல்லாத, எருமைகள் இல்லாத ஊர் என்று நினைத்திருந்தேன் - கதவு எண், அஞ்சல் எண் கூட இல்லாத ஊராக இருக்கிறது.


ஆனால் அந்த ஊரில் 2ஜி கற்றை அலைவரிசையிலிருந்து அவளுடன் கட்செவி செயலி வழியாக மணிக்கணக்கில் பேச முடிகிறது என்பதில் எத்தனை ஆச்சரியம்? அவளுக்குத் தொலை தொடர்பு வாய்த்திருக்கிறது, ஆனால் கிட்டவே இருந்தாலும் அவள் நினைத்தால் தான் தொடர்பு கொள்ளவே முடியும். எனக்குத் தோன்றும் வியப்பு எல்லாம், அவள் அந்த ஊரை விட்டு சில மாதங்களில் கிளம்பிய பின் அந்த ஊரில் என்னவெல்லாம் மாற்றங்கள் நிகழும் என்று தான், குறிப்பாக அந்த தத்தைகளின் நிலை…


சனி, 17 செப்டம்பர், 2016

மோன நிலையிலே


அம்முவுடன் பேசும் போதெல்லாம் ஒரு நதியின் சலசலப்பு பின்னணியில் ஓடிக்கொண்டிருக்கும்… வெகு சீக்கிரத்தில் அவள் சிரித்துவிடுவாள் இரண்டு நதிகள் ஒன்றுடன் ஒன்று கொஞ்ச ஆரம்பித்தது போல் இருக்கும்.

நதிகள் ஓடாத வன்புணர்வு செய்யப்படும் தடங்களே உள்ள பூமியில் பிறந்தவனுக்கு நதிகள் சங்கமிப்பதாக கற்பனை செய்து கொள்ள முடிகின்றது என்பது ஒரு ஆர்கஸமிக் உணர்வு. பொதுவாக, இப்போதெல்லாம் க்ளோஸ் அப் டூத் பேஸ்டை நினைத்தாலே ஆர்கஸம் உண்டாக்கும் விளம்பரத் தந்திரயுகத்தில். நதிகளையும், மரங்களையும், பறவைகளையும், பூக்களையும், சங்கீதத்துடனும், ஸ்ரிங்காரங்களோடும், ஓவியங்களோடும் பேசுபவள் இவள். இத்தனைக்கும் மேலே கவிதைகள் வேறு தனியாக, (இரண்டாவது நதியைப் போலே, இரண்டாவது கவிதைகளும்) உண்மையில் பேசுபவள் கேட்பவனாகவா நாங்கள் இருக்கிறோம். இல்லை அம்முவின் நர்த்தனம் இது ஆனால் நான் கேட்கிறேன். இதுவும் ஒரு புலன் மயக்கம் தான். இதில் அறிவு கூட கூர்மையடைகிறது.உபொருள்.

இப்போது மூன்றாவது நதியைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறாள்

அவளது செல்பேசியும் அவளைப் போலவே, அவள் தொடர்பு கொள்ள முடியாத தொலைவில் இருக்கிறாள் என்பதை ஒவ்வொரு முறை அழைக்கும் போதும் ஒவ்வொரு மொழியில் என்னிடம் சொல்லும், அவளைப் போலவே.

இப்போது மூன்றாவது நதியைப் பற்றி என்னிடம் ஆரம்பித்தாள், இந்த முறை அவள் ஹரியானாவில் ஒரு பகுதியிலிருந்து, சரஸ்வதி நதியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாள். சரஸ்வதி நதி புண்ணிய நதி என்று வணங்கப்படும் நதி. அந்த நதி பாயும், ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து என்னை அழைத்திருக்கிறாள். அவள் அந்த கிராமத்தின் நிலக்காட்சியை எனக்கு வர்ணித்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு கையில் தூரிகை இருந்திருந்தால் ஒரு ஓவியம் கிட்டியிருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒரு ஓவியம் கித்தானிலோ, ஒரு காகிதத்திலோ , என்ன ஒரு ஊடகத்திலேயோ உருவாகும் போது. அந்த ஊடகம் என்னவாக இருக்கிறது என்பதை உணர முடியுமா.
இதோ நான் உணர்கிறேன். நான் என்னவாக இருக்கிறேனோ அதுவாகவே அந்த ஊடகமும் இருக்கும்.

 “அந்த கிராமத்தில் காக்கைகள் இல்லைப்பா” என்று அவள் சொல்கிறாள்.

ம்ஹ்ஹும் என்ன ஆச்சரியம் வந்து விடப்போகிறது, நாம் வானத்தைப் பார்த்து எத்தனை நாட்களாகியிருக்கின்றது. எத்தனை பறவைகள் பேர் தெரியும். அவள் தினமும் பறவைகளை அதன் சப்தங்களை அனுப்புவது தான் குட் மார்னிங் ஆக இருக்கிறது. அவள் காக்கைகளைக் காணவில்லை எனும் த்வனியில் ஒரு பதட்டம் இருந்தது, ஒரு அக்கறை இருந்தது. எனக்கு வெறும் கேள்வி மட்டுமே இருந்தது “( ? )”.

“இந்த கிராமத்தில் காக்கைகள் இல்லை காளிதாஸ்”
“அப்படியா அம்மு.. ஏன் அவை அங்கு விப்பில்ல

அறிவியல் ரீதியாக எத்தனையோ பேசியிருக்கிறோம். அவள் காக்கைகள் இல்லையென்றவுடன், அவள் அந்த ஊரில் வேறு என்னவெல்ம் இல்லை என்று விசாரித்ததைச் சொன்னாள். அந்த ஊரில் எருமைகள் கூட இல்லையாம்.

 “அப்படியென்றால் கரிய நிறத்தில் எதுவுமே இல்லையா” நான் என்னினத்ுக் கேட்டிருக்கிறேன் என்பு அவுக்கத் ெரியும்.

மூன்றாவது நதியருகில், இரண்டாவது நதியின் சலசலப்பு. நானும் ூட சிரித்தேன்.

“காளிதாஸ் காக்கைகள் இல்லை என்றவுடன் அந்த ஊரில் சடங்குகள் எப்படி செய்யப்படுகின்றன என்று கேட்டேன் ” என்றாள். நக்கஏன் இப்பிக் கேட்கத் ோன்றுவில்லை என்ு என்னானே கேட்டுக்கொண்டு.

காக்கைகளின் மறைவுக்குப் பின்னர், சடங்குகள் பலவற்றைக் கைவிட்டுவிட்டோம் என்று ஊர்மக்கள் சொல்லியிருக்கிறார்கள், அந்த ஊரில் கள் அனுமதி, மது அனுமதி, புலால் அனுமதி கூட கிடையாதாம். இந்து மதத்தில் காக்கைக்கு செய்யும் சடங்குகள் ஒரு முக்கியமான பகுதி, அவ்வூர் மக்கள் காக்கைகளின் இழப்பிற்குப் பின்னர் தங்கள் வாழ்வை பெருமளவுக்குக் கட்டுப்பாட்டுடன் மாற்றியிருக்கிறார்கள் என்றாள்.
இப்பவும் கூட எனக்கு அதில் என்ன எடுத்துக் கொள்ள இருக்கிறது என்று தெரியவில்லை.

சமூகக் கட்டமைப்பில் ஒரு இயற்கையாக நடக்கும் சிறிய இழப்பு அல்லது மாற்றம், எத்தனை பெரிய மாற்றங்களையோ அல்லது பேரிழப்புகளையோ கூட உருவாக்க இயலும் எனப் புரியவில்லையா என்கிறாள். அம்முவக்கு என் மீது கரிசனமிருக்கிறது.  உண்மையில் முழுமையான அறிவு என்ப கரிசனமிக்கது, அரைகுறை தான் மூடி மறைத்துக்கொள்ளும் + கொல்லும்.

ஆம் இது கயாஸ் தியரி போலிருக்கிறது என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். இந்த மாற்றங்களை அவள் தொன்மத்திலிருந்து, அறிவியலிலிருந்து, கலையிலிருந்து என அடிக்கடிப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறாள்.

ஆம் இப்படியான மாற்றங்கள், ஒன்று சாதிக் கொடுமைகள், பிரிவினைவாத, வர்க்க பேதங்கள் போன்றவற்றை அழிப்பதற்கான தந்ரோபாயங்களைச் சொல்லிக் கொடுப்பது போலவும் (உதாரணம் அண்மையில் வந்த சென்னைப் பெரவெள்ளம்), மற்றொன்று அதில் கட்டமைக்கப்படும் சந்தர்ப்பவாத அரசியல் அல்லது பாஸிஸத்தைப் பற்றி புரிந்து கொள்ளவும் கற்றுக் கொடுக்கின்றன (50 ஆண்டுகால திராவிட மனநிலை ) என நான் உள்வாங்கிக் கொண்டதை, இம்ப்ரெஸனிஸ்ட் பாணியில் ஏதாவது ஒன்றாக,ையாகச் செய்துக் காட்ட வேண்டும்.

ஏன் (இன்றைக்கு) பெரியார் பிறந்தநாள் நினைவாக ஏன் இதைப் பார்க்கக் கூடாது, ஹெல்லொ இன்றைக்கு மோடிஜியின் பிறந்தநாள் என்று அவன் சொல்கிறான். நமக்கு எதுக்கு வம்பு??

ஆனாலும் நான் அவளது ஊடகமாக இருப்பதை கௌரவமான உத்தியோகமாகவே நினைக்கிறேன்.

அம்மு இன்று மிகவும் அழகாக இருக்கிறாள். நீ பார்க்கும் நிலவை நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

My hugs on the Air, Kisses on the moon

- ஜீவ கரிகாலன்