வியாழன், 10 மே, 2012

புறம்


காமம் முற்றிய மூளையின் 
ஒவ்வொரு நியூரான்களும் 
நீர்த்துப் போகின்றன......
பூவாசம் வீசும் பட்டுடல்
கண் முன்னிருந்தும் ;
கண்ணியம் என்ற பெயர் வைத்து
கண் பார்த்து பேசச் சொல்லும்
சமூக ஒழுக்கத்தில் ....

நரம்புகளை இழுக்கும் புளித்துப்
போன ஒரு கோப்பை போதைக்கும்;
ஆழ்ந்த சுவாசங்களால் நெளிந்து
போன உயிர் முடிச்சுகளுக்கும்
இடையே உள்ள -

ஒரு கணத்தில் மரிக்கிறேன்,
மறு கணத்தில் பிறக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக