வியாழன், 10 மே, 2012

"நிலாக் காலம் "

தேய்ந்து மறையும் - பின் மீண்டும் வளரும் ... வாழ்வின் இன்ப துன்பங்கள் சரி பாதியாய் உணர்த்தும் இயற்கை தத்துவம் - நிலா.
அது தான் "நிலாக் காலம் "

இன்றிருக்கும் அபார்ட்மென் கலாச்சாரத்தில் நிலவைப் பார்க்கும் வழக்கமே குறைந்து விட்டது, கயிற்றுக் கட்டில்களிலோ, பாய் விரித்தோ இல்லை திண்ணையில் அமர்ந்தோ மனதில் எதுவுமற்று 
வயலில் செய்த வேலை களைப்பு தீர நிலவைப் பார்க்கும் வழக்கம் இன்று கிராமங்களில் கூட பெரும்பாலும் குறைந்துவிட்டது. மனிதன் நிலவில் காலடி எடுத்து வைத்துவிட்டான், ஆனால் நமக்கும் நிலவுக்குமான தூரம் அதிகரித்து விட்டது. நிலாச் சோறு - நம் நாகரிக பர்கர்களோடு போட்டி போட முடியவில்லை.

இரவில் வீட்டு முற்றத்தில் ஆற்று மண் பரப்பி, அதில் அமர்ந்து நிலவுடன் கலந்து சின்ன சின்ன விளையாட்டும், கொஞ்சம் பாட்டும் பாடிய நாட்கள் நினைவுகளில் மட்டுமே இருக்கிறது. காசு கொடுத்து ரிசோர்ட்டுகளில் வாங்கும் கடற்கரை காற்றும், நிலவொளியும் கூட அந்த நிம்மதிக்கு ஈடில்லை .
நிலாக்காலங்களில் வீட்டு முற்றத்தில் தூங்கும் போது வீசும் வேப்ப மரக் காற்றும் இல்லை, வீட்டைத் திறத்து வைத்து தூங்கும் திராணியும் இல்லை.

மீண்டும் வராத அந்நிலாக்காலத்தில் மீண்டு வர மனமில்லை.........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக