வியாழன், 10 மே, 2012

மரணம்

ஒரே ஒரு மரணம் தான்

புரட்சியைத் தூண்டி விடுகிறது, 
சந்தர்ப்பவாதிகளை சம்பாதிக்க 
வைத்து விடுகிறது ,

அரசியலில் காய் நகர்த்துகிறது,
பிறக் கொலைகள், தற்கொலைகள்
நடப்பதற்கும், பின் தடுப்பதற்கும் -
காரணமாகிறது.

வேசிகள், விதவைகள், தலைவர்கள்
மனலம் குன்றிவர்கள், மருத்துவர்கள்
சமூக விரோதிகள்,நாத்திகர்கள்
உருவாகுவதற்கு விடையாகிறது.

ஆட்சி மாறவும், காட்சி மாறவும்
மாநிலம் பிரிவதற்கும், நாடு பிரிவதற்கும்
என் உலகப் போருக்கும்
பின்னால் இருக்கிறது...

அந்தக் கொடூர மரணம் தான்,
எப்படி உருவாக்கியது
என் புத்தரை ??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக