வியாழன், 10 மே, 2012

புதிய நீதிக் கதைகள் - 1/ஆப்ரேசன் காதல்




ஒரு ஜாலி ஸ்டோரி   


"டேய் எங்கடா போற , நில்லுடா??"- என்று முருகனைப் பார்த்து அதி புத்திசாலி பிரபாகர் கேட்டான்.

மொட்டைமாடியின் விளிம்புச் சுவற்றில் ஏறி தன் இரு அகல கைகளையும் விரித்தான் முருகன்,

" அவ தான் என்னை வேணாம்னு சொல்லிட்டாளே!! ஐ டோன்ட் வான்ட் டு பி அலைவ் மோர் டா , அவ இல்லாத லைஃப என்னால நினைத்துக் கூட பார்க்க முடியாது"
மேலிருந்து குதிக்க யத்தனித்தான்.

"முருகா பட் நான்  நெனைச்சுப் பார்க்கிறேன் டா!!" என்றான் பிரபாகர்  நம்பிக்கையுடன்    , முருகன் பிரபாகரைத் திரும்பிப் பார்த்தான்.  பிரபாகர் அவனிடம்  "பிலீவ் மி நாம் இன்னொரு முறை ட்ரை பண்ணுவோம், அவ என்ன பேரழகியாடா ??" என்றான்...

மேலும் அவன் முருகனுக்கு நம்பிக்கை தரும் விதமாக 
"ப்ளீஸ் கீழே இறங்குடா ",  
"நாளைக்கு எப்படியும் குண்டன் வருவான் அவன்கிட்டே ஐடியா கேட்போம், அவனும் நல்ல ஐடியா தருவான் , தெரியும்ல குண்டன் ரொம்ப புத்திசாலிடா நிச்சயம் வொர்கவுட் ஆகும்" என்று கூற , முருகன் மனதை தேற்றிக் கொண்டு கீழிறங்கினான்..

நீதி : ஒரு முறை தற்கொலையைக் கைவிட்டவன் மறுமுறை செய்ய மாட்டான்.

குண்டன் ஐடியா கொடுக்க, தூது போகும் பிளானை பிரபாகர் எக்சிக்யூட் பண்ண "ஆப்ரேசன் முருகன்" ஆரம்பமானது, ஆபரேசன் பீரியட் ஒரு செமஸ்டர், லோகேசன் தினமும் அக்கவுண்ட்ஸ் டியூசன் சென்டரில், ஆபரேசன்ஆரம்பமானது குண்டனின் ஐடியாப்படி.

அடுத்து செமஸ்டர் லீவு முடிந்து திரும்பிய சமயம், அந்த வகுப்பறையே அதிர்ந்தது, முருகனுடன் சேர்ந்து. அது வெறும் ஆப்ரேசன் அல்ல முருகனுக்கு வைத்த ஆப்பு ரேசன் என்று. 

ஆம் "குண்டன் புத்திசாலி, அவன் சொன்னால் வொர்கவுட் ஆயிடும்" என்று சொன்னேனில்லையா? அப்புறம் என்ன ஆயிற்று என்கிறீர்களா? அதற்கு முன்னரே சொல்லியிருந்தேனே "பிரபாகர் அதிபுத்திசாலி" என்றும் அது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா??

ஒரிஜினல் நீதி :ஒரு முறை தற்கொலையைக் கைவிட்டவன் மறுமுறை செய்ய மாட்டான், ஆனால் கொலை செய்வான் ..


கொலைக்கான டார்கெட் : kundan_romeo@yahoo.co.இன், குண்டனை முருகன் துரத்த ஆரம்பித்தான் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக