சனி, 23 மார்ச், 2013

# tag கதைகள் (part -2)

# tag கதைகள் (part -1)


###07
நள்ளிரவு வரை கடிதம் எழுதியது நீதான்
அவள் கைகள் கிழித்துப் போட்ட துண்டுகளில்
எப்படி என் பெயர் இருக்கின்றது?


###08
ஒற்றை வார்த்தை பேசியதிற்கா அந்தரத்தில் பறக்கிறாய்
விழுந்துவிடாதே எனக்கு நாளையும் அலுவலகம் உண்டு


###09
நான் கிட்டாரை வாசிப்பது போல் நோண்டுவது,
அவளைப் பற்றிய உன் புலம்பல்களைத் தவிர்க்கவே.
ஆனால் எனக்குத் தெரியாது - இன்று
நீ ஒரு முழுப் பாடலை அப்லோடு செய்துவிட்டாய் என்று



###10
கோயிலுக்கு செல்வது எனக்கு பிடிக்கும் தான்
ஆனால் நீ சிற்பங்களைப் பார்த்தால் ஒட்டிக் கொள்கிறாய்
பின்னர் அன்றிரவெல்லாம் உளியின் சத்தமும் அவளுடைய முனகலும்


###11
கடற்கரை மணலில் நான், அலைகளில் நீ, மணற் கோலங்களில் அவள்
யாரும் எதுவும் செய்யவில்லை, எல்லாம் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது,
இன்றும் அப்படியே இருக்கின்றது. நான் மட்டும் வீடு திரும்புகிறேன்


###12
எண்ணிக்கைகள் ஒழுங்காக இருக்கின்றது என்று பெருமிதம் – நான்
ஒழுங்காக இருப்பது தான் சோம்பேறித்தனம் –இது நீ
ஆம். காதல் இதனால் தான் எனக்குக் கைகூடவில்லை

###13
உன்னைக் கொன்றுவிட எண்ணிதான், அவளிடம் என் காதலை சொன்னேன்
அவளோ “கொஞ்சம் அவகாசம் கேட்கிறாள்
 இன்றும் உன் எள்ளலுக்கு நான் தான் ஆளாகிறேன்

###14
கவிதையில் தான் நான் உனை வென்று விட்டேன் என்று நினைத்தேன்
நீயோ என்னைப் பரிதாபமாக பார்க்கிறாய்.. அதுவும் சரிதான்                     
என் பாடுபொருளுக்கு தான் நாளை திருமணமாயிற்றே

- ஜீவ.கரிகாலன்



6 கருத்துகள்: