வெள்ளி, 15 மார்ச், 2013

பஜ்ஜி-சொஜ்ஜி 15 - கவர்ச்சி உடையும் தடையும்


டெல்லியில் நேர்ந்த பாலியல் வன்முறை சம்பவத்திற்குப் பின் இப்பொழுது தொடர்ந்து பெண்கள் மீதான் தாக்குதல்கள் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பொது மக்களின் மீதும் இந்தப் பிரச்சனையைப் பற்றி ஒவ்வொருவரும் அலச வேண்டிய, கருத்து சொல்ல வேண்டிய நிர்பந்தத்தை சூழலாக ஊடகங்கள் உருவாக்கி விட்டன. பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து பரவலாக எல்லோருமே கருத்து ஒன்றை வைக்கும் அளவிற்கு சூழல் உருவாகிவிட்டது.

இந்தப் பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு பல பிரிவுகள் தங்கள் கொள்கைகளை தங்கள் வழியில் பரப்புகின்றனர். ஒரு பக்கம் நீதி கேட்டு இது போன்ற குற்றச் செயல் புரிவோருக்கு அதிகப் பட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்கிற போராட்டம், இன்னொரு பக்கம் சூழலின் கருவியாகத் தான் சமூகக் குற்றங்கள் நடைபெருகின்றன. ஆதலால், மரண தண்டனையை இவர்களுக்கும் வழங்கக் கூடாது என்று மற்றொரு புறம். பெண்களுக்கான பாதுகாப்பை முன்வைத்து மத்திய அரசும் தனி சட்டம் ஒன்றை உருவாக்கி வருகிறது. இந்தப் பிரச்சனை ஏற்படக் காரணங்களை விவாதிக்கும் பொழுதெல்லாம் மிக முக்கியமாக ஒரு சர்ச்சை வந்து விடுகிறது அது தான் உடைகள். உடைகள் விசயத்தில் வரும் விவாதங்கள் தான் அதிகமான அளவு முக்கியத்துவம் பெருகிறது.

Don't Teach Me How To Dress, Tell your Son Don't Rape" என்கிற அட்டைகளை தாங்கியிருக்கும் பெண்ணிய வாசகங்கள் எவ்வளவு தூரம் சமகாலத்தின் தீர்வு என்று எடுத்துக் கொள்ள முடியும் என்கிற வினாவிற்கு பெண்ணிய வாதிகளிடமிருந்து நடைமுறைக்கு தக்க பதில் இன்னும் வரவில்லை. நாகரிகமடைந்துவிட்ட சமூகம் என்று கல்வி, அறிவியல், விஞ்ஞானம், தொழிற்நுட்பம் என இந்தக் கணினி யுகத்தில் எந்த பெற்றோரும் தம் மகனை பாலியல் வன்முறை செய்ய கற்றுக் கொடுப்பதில்லை.Tell your Son How To Treat Women”- சமூகத்தில் ஒருவன் பெண்களிடம் வன்முறை செய்யத் தூண்ட எத்தனைக் காரணங்கள் வரிசை கட்டிக் கொண்டு நிற்கின்றன?? சினிமா, ஊடகங்கள், மதுக்கடை, போதைப் பொருள், கூடாநட்பு, இந்தப் பட்டியலில் ஆபாசமான உடைகளை மட்டும் சேர்க்கலாமா??

இது போன்ற கேள்விகளுக்கு, இரு தரப்பு பதில்களும் வருமுன்னே பெண்களின் உடைபற்றி பேசுபவர்களை ஆணாதிக்கவாதி, நாகரிமற்ற, கிராமவாசிகளாக, காட்டுமிராண்டிகளாக, பழமைவாதிகளாக சித்தரித்து தடுக்கும் விமர்சனங்கள் வந்து விடுகின்றன. அப்படி தடுக்கும் பொழுது முக்கியமாக மேலை நாட்டு பெண்ணியக் கருத்துகளும், அவர்கள் உடைகளுக்கான சுதந்திரம், அரசியல் பங்களிப்பு என்று கதைகட்டவும் ஆரம்பிக்கின்றனர்.  


பல புள்ளிவிவரங்கள் வாரியாக பெண்கள் அதிகம் சுதந்திரமாக நடமாடும் தேசங்கள் என பெண்ணியவாதிகள் கொண்டாடும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பெண்கள் மீதான வன்முறைப் பட்டியல் மற்றும் புள்ளிவிவரங்களைப் பார்க்கும் பொழுது அவர்கள் கூற்று தவறாகிப் போகிறது.
  1. அமெரிக்காவிலுள்ள மிசௌரி மாகாணத்தில் பெண்களின் மேலாடை கண்ணியமாக இருக்க வேண்டும் என்று.Dress Code வகுத்துள்ளது –பிப்ரவரி -7
  2. இங்கிலாந்தில் உள்ள ஹெர்ட்ஃபோர்ட்சைட் மாஹாணத்தில் மருத்துவமனையில் வேலை பார்க்கும் செவிலியர்கள் உடையில் ஆபாசம் இருந்தால் பணிநீக்கம் செய்யப் படுவர் – டெலிகிராஃப் செய்தி (மேலும் அவர்கள் டாட்டூ, முடிகளை கலரிங் செய்வது போன்றவையும் தடை செய்யப் பட்டது)
  3. சென்ற வருடம் US ஏர்லைனில் லாஸ்வேகஸில் இருந்து நியூயார்க் புறப்பட்ட ஒரு பெண்மணிக்கு விமானத்தில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.- தி சன், இங்கிலாந்து
  4. சென்ற வருடம் நடந்த ஐரோப்பிய செஸ் போட்டியில் கவர்ச்சியாக ஆடை அணிந்து வர தடை விதித்தது
  5. இந்த செய்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, உலகப் புகழ் பெற்ற இசைக்கான விருது வழங்கும் விழாவான கிராமி விருது வழங்கும் விழா இந்த வருடம் ஜெர்மனியில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பெண்களுக்கான ஆடை நிபந்தனைகள் மிகப் பெரிய பட்டியல். அவர்கள் மேலாடை, ஆடைகளின் இறுக்கம், முதுகுப் பகுதி, பின் பகுதி, கால்கள் என ஒவ்வொரு உடைக்கும் வரையறை வகுத்திருக்கிறது – சேனல் 2 (பார்க்க கீழே பெட்டிச் செய்தி)
மேற்கண்ட இந்தப் பட்டியலைக் கொண்டு மேலை நாடுகளில் பெண்களுக்கான பாதுகாப்பின்மையை அடையாளம் காண முடியாது. ஆனால் ஆடைகளால் ஏற்படும் பெண்களுக்கான மரியாதையைக் காணலாம். ஆபாசமாக, பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமாக ஆடை அணிவதை மரியாதை குறைவாகக் கருதும் நிலைமை இன்று உலகம் முழுக்கவும் இருக்கிறது

பெண்களுக்கான புதுப் புது தியரிகளை உருவாக்கி பெண்ணியத்தை மிகவும் கடினமான வேதியல் சமன்பாடு போல் மாற்றுகின்றனர். ஆடைகளைப் பற்றி ஒருவன் குறை கூறும் பொழுது அவர்களிடம் சில கேள்விகள் எழுகின்றன :
1.  “உமக்கும் சகோதரிகள் இருந்து, அவர்கள் ஆடைகளால் கூட நீ காமுறுவாயா?? என்றும்,
2. கிராமத்திலும், நாகரிகமாக – கண்ணியமாக உடையணியும் பெண்கள் கூட பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனரே அதற்கு என்ன காரணம்?? எப்படி நீங்கள் உடைகளைக் காரணம் கேட்கலாம்? என்ற கேள்வியை முன் வைக்கின்றனர்.


உண்மை தான் இப்படிப் பார்க்கும் பொழுது பெண்கள் மீதான வன்முறைக்கு உடைகளை மட்டும் சொல்ல முடியாது தான். அதனால் தான் ஒரு காலத்தில் நம் நாட்டில் வேத பாட சாலைகளில் இருந்து, சங்கங்களிலும், அரசவையிலும் பணிபுரிந்து வந்தப் பெண்களை அந்நியப் படையெடுப்பிற்குப் பின் வீட்டில் பூட்டி வைக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஆனால் இன்றைய காலத்தில் பெண்கள் மீதான வன்முறையை உடல்ரீதியான பலாத்காரம் என்று நினைத்துக் கொண்டால் உடைகளைக் குற்றம் சொல்வதை தவிர்க்கச் சொல்லும் பெண்ணியக் கூற்றுகள் சரியானவையே.

ஆனால் ஒரு பெண் மனதளவில் எத்தனை விதமாக வன்முறைக்கு ஆளாக்கப் படுகிறாள். ஆபாச/கவர்ச்சி உடை அணியும் பெண்களை மிக மோசமாக எப்படியெல்லாம் சித்தரிக்கின்றது இன்றைய ஊடகங்கள், ஒரு ஆணிற்கு சவரம் செய்யும் பிளேடு விளம்பரத்திலிருந்து, டியோடரண்ட், சோப்பு, ஆடை, கார், பைக் என நுகர்வு மாயையை உருவாக்க ஆபாசமாக உடையணிந்த பெண்களை உபயோகப் படுத்துவது எவ்வளவு பெரிய வன்முறை? ஒரு கவர்ச்சியான உடையணிந்த பெண்ணுடன் ஒரு சகோதரனோ, நண்பனோ செல்லும் பொழுது கிடைக்கும் மோசமான கருத்துகள் வன்முறையில்லையா?? உரிமை தான் பிரதானம் என்று கோரும் பெண்களுக்கு மரியாதை தேவையில்லாத ஒன்றா?.

இப்பொழுது உளவியல் ரீதியாக பார்க்க ஆரம்பித்தால், உடைகளுக்கும் பாலியல் தூண்டல்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது என்பதை மறுக்கவே முடியாது. உடல் பாகங்களை தெளிவாக, மெல்லியதான துணி வழியூடே காட்டும் ஆடைகளைத் தேர்வு செய்வதன் உளவியல் என்ன? பெரும்பாலும் வெப்பத்திலேயே வாழும் நம் நிலத்தில் ஜீன்ஸ் துணியின் தேவையென்ன? அதுவும் மிக இறுக்கமான ஆடைகளின் வழியே நாம் தேடும் அங்கீகாரம் என்ன? உயர் அந்தஸ்த்து கொண்ட மக்களைப் பார்த்தும், சினிமா, டீவியின் வழியாகவும் உந்தப்பட்டு அவர்களைப் போலவே நாமும் வலம் வரவேண்டும் என்கிற எண்ணம் வருகிறது. அதாவது இன்றையப் போலி நவநாகரிக உலகில் அழகியல் பற்றியத் தவறான கூற்றுகளும், கற்பிதங்களும் தான் உடைகளில் கவர்ச்சியையும், முகத்திலும்,அகத்திலும் வேஷம் கட்டக் காரணமாகிறது.


ஆபாசக்/கவர்ச்சி உடைகளை பொது இடங்களிலும், சமூக விரோதிகளின் முன்னேயும், குடிகாரர்கள் மத்தியிலும் அணிந்திருக்கும் போது நம் பாதுகாப்புக்கு நாம் தானே கேடு விளைவிக்கும் பிரதானக் காரணம்.எப்படியிருப்பினும் ஒரு பெண்ணுக்கு தொல்லைகள் தரும் அதிகாரத்தை எந்தச் சமூகமும் அங்கீகரிப்பதில்லை தான், ஆனால் அவர்களாகத் தொல்லைகளைத் தேடிச் செல்வதை தடுப்பதில் தவறில்லையே. ஏனென்றால் இன்றைய சூழலில் பெண்களுக்கான பாதுகாப்பை அரசு, சமூகத்தோடு சேர்ந்து அவர்களுக்கும் பங்கு இருக்கிறது என்பதை உணர வேண்டும்


கிராமி விருதுக்கான ஆடை நிபந்தனைகள்:-

Please be sure that buttocks and female breasts are adequately covered. Thong type costumes are problematic. Please avoid exposing bare fleshy under curves of the buttocks and buttock crack. Bare sides or under curvature of the breasts is also problematic. Please avoid sheer see-through clothing that could possibly expose female breast nipples. Please be sure the genital region is adequately covered so that there is no visible "puffy" bare skin exposure. 

Please avoid commercial identification of actual brand name products on T-shirts. Foreign language on wardrobe will need to be cleared. OBSCENITY OR PARTIALLY SEEN OBSCENITY ON WARDROBE IS UNACCEPTABLE FOR BROADCAST. This as well, pertains to audience members that appear on camera. Finally, The Network requests that any organized cause visibly spelled out on talent's wardrobe be avoided. This would include lapel pins or any other form of accessory.

Sources:


ஜீவ கரிகாலன்

நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக