திங்கள், 30 செப்டம்பர், 2013

அல்லி பிறந்த கதை




அல்லி....
உன் சிலிர் கரங்கள் பற்றும்
என் உடலின் ஆன்மா
தகித்துக் கொண்டிருக்கிறது.

செய்ய வேண்டிய சாகசங்களை
நியூரான்கள் கட்டுப்படுத்திக்
கொண்டிருக்கின்றன.
மூளைக்கு காய்ச்சல் வருவதற்குள்
உன் நகத்தின் பிறையைத்
தடவிப் பார்க்கவாது அனுமதி

கரை தெரியா நடுக்கடலினுள்
நான்.
என் நீலமாக நீ...
என் தவமெல்லாம்
ஆயுள் முழுக்க
உன் மீது நீந்திக்கொண்டிருக்கும்
வரமே!!

அல்லி...
உன் கோழிமுட்டைக் கண்களில்
என்னை அலட்சியம் செய்து பார்க்கிறாயே
உன் பெயர் சொல்லும் வேளையிலெல்லாம்
கண்ணயர்ந்துவிடுகிறாய்
ஒழுங்காக நடி!!

உப்பு தடவிய மாங்காய் துண்டுகளை
நீ கடிக்கும் போது அல்ல
உன் திருமண அழைப்பை
நீட்டியப் புன்னகை தான்
அஷ்டக்கோணல்...

அல்லி ...
அந்த கணமே
உன்னை அவளிடம் இருந்து தான்
பிரித்து எடுத்துக் கொண்டேன்.
நாம் ஒரு புனைவுலகில்
சாம்ராஜ்யம் செய்கிறோம்
தட்டான்களாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக